என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
15 நிமிடத்தில் ஹோட்டல் ஸ்டைல் தட்டு இட்லி ரெடி
Byமாலை மலர்12 March 2021 5:22 AM GMT (Updated: 12 March 2021 5:22 AM GMT)
தட்டு இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று இந்த தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி செய்ய
உளுந்தம் பருப்பு - அரை கப்
இட்லி அரிசி - 2 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
இட்லி பொடி செய்ய
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைத்த பின்னர் உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.
இட்லி பொடி அரைக்க ஒரு கடையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
வெள்ளை எள்ளு போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
இறுதியாக காய்ந்த மிளகாய் மிளகாயை வறுத்து ஆறவிடவும்.
அனைத்தும் ஆறிய பின், மிஸ்ர் ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
இட்லி செய்ய
உளுந்தம் பருப்பு - அரை கப்
இட்லி அரிசி - 2 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
இட்லி பொடி செய்ய
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைத்த பின்னர் உளுத்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.
இட்லி பொடி அரைக்க ஒரு கடையில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
வெள்ளை எள்ளு போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
இறுதியாக காய்ந்த மிளகாய் மிளகாயை வறுத்து ஆறவிடவும்.
அனைத்தும் ஆறிய பின், மிஸ்ர் ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
தட்டு இட்லி மீது நெய் ஊற்றி செய்த இட்லி பொடியைத் தூவி சூடாக பரிமாறவும் .
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X