search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நாட்டு சோள அடை
    X
    நாட்டு சோள அடை

    ஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை

    நாட்டு சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று நாட்டு சோளம் சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நாட்டு சோளம் - 1 கப்
    உளுத்தம்பருப்பு  - கால் கப்
    துவரம் பருப்பு - ½ கப்
    கடலைப்பருப்பு - ½  கப்
    காய்ந்த மிளகாய் - 10
    சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காயம் - 1 டீஸ்பூன் 
    மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன் 
    கறிவேப்பிலை -சிறிதளவு
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்    
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோளம், உளுத்தம்பருப்பு சேர்த்துக்  கழுவி, களைந்து நான்கு மணி நேரம் தன்ணீரில் ஊற வைக்கவும். 

    அதே போல், மற்ற பருப்புகளையும் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 

    பிறகு சோளம், உளுந்தை காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

    ஊற வைத்த பருப்புகளை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 

    இரண்டு மாவுக்கலவையையும் ஒன்றாகச் சேர்த்து, மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, கெட்டியான இட்லி மாவுப் பதத்திற்கு கலக்கவும்.

    அடுப்பில் தோசை தவாவை காய வைத்து, அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய் விட்டு, இரு புறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

    சத்தான சோள அடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×