
பெரிய வெங்காயம் - 4,
பூண்டுப் பற்கள் - 4,
பச்சைமிளகாய் - 2,
கெட்டியான தேங்காய்ப்பால் - அரை கப்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது - ஒரு டீஸ்பூன்,
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.