என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
புரோட்டீன் நிறைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை
Byமாலை மலர்25 Feb 2020 4:21 AM GMT (Updated: 25 Feb 2020 4:21 AM GMT)
சோயா பீன்ஸ் வைத்து செய்யும் சத்தான புதுமையான இந்தக் கொழுகட்டை எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. இன்று இந்த கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு - ஒரு கப்
சோயா பீன்ஸ் - அரை கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - ஒன்றரை கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
சோயா பீன்ஸை ஊற வைத்து ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து கறிவேப்பிலையை கிள்ளி போட்டு சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
கடாயில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும்.
ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும்.
பச்சரிசி மாவு - ஒரு கப்
சோயா பீன்ஸ் - அரை கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - ஒன்றரை கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சோயா பீன்ஸை ஊற வைத்து ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து கறிவேப்பிலையை கிள்ளி போட்டு சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
கடாயில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும்.
ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும்.
தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புரோட்டீன் நிறைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X