search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இஞ்சி பிரண்டை துவையல்
    X
    இஞ்சி பிரண்டை துவையல்

    வயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்

    பிரண்டை இலையை துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் ஒழியும். இஞ்சி, பிரண்டை சேர்த்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
    உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    இஞ்சி பிரண்டை துவையல்

    செய்முறை:

    பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும்.

    அடுத்து அதில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.

    வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.

    அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×