என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் - ப்ரோக்கோலி சூப்
Byமாலை மலர்9 Nov 2019 4:45 AM GMT (Updated: 9 Nov 2019 4:45 AM GMT)
ப்ரோக்கோலியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ஓட்ஸ், ப்ரோக்கோலி சேர்த்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - அரை கப்,
ப்ரோக்கோலி - கால் கப்,
ஓமம் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பிரிஞ்சி இலை - ஒன்று,
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு (தட்டியது),
பால் - ஒரு கப்,
மல்லித்தூள் (தனியாத்தூள்),
மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
செய்முறை :
குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, ப்ரோக்கோலிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, ஒரு கப் பால், ஓட்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
பிறகு இஞ்சி, மிளகாயை நீக்கிவிட்டு (இல்லையென்றால் மிகவும் காரமாக இருக்கும்), கலவையை மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.
வடிகட்டிய கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, ஓமம், தேவையெனில் பால் (அ) தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு கொதிக்க விடவும்.
பரிமாறுவதற்கு முன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் தூவவும்.
ஓட்ஸ் - அரை கப்,
ப்ரோக்கோலி - கால் கப்,
ஓமம் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பிரிஞ்சி இலை - ஒன்று,
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு (தட்டியது),
பால் - ஒரு கப்,
மல்லித்தூள் (தனியாத்தூள்),
மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, ப்ரோக்கோலிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, ஒரு கப் பால், ஓட்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
பிறகு இஞ்சி, மிளகாயை நீக்கிவிட்டு (இல்லையென்றால் மிகவும் காரமாக இருக்கும்), கலவையை மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.
வடிகட்டிய கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, ஓமம், தேவையெனில் பால் (அ) தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு கொதிக்க விடவும்.
பரிமாறுவதற்கு முன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் தூவவும்.
சத்தான ஓட்ஸ் - ப்ரோக்கோலி சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X