என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப்
Byமாலை மலர்2 Nov 2019 4:38 AM GMT (Updated: 2 Nov 2019 4:38 AM GMT)
முருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. இன்று முருங்கைக்காய் சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
முருங்கைக்காய் - 20 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 2
மிளகு - 5 கிராம்
பட்டை - 1
கிராம்பு - 1
தேங்காய் பால் - 100 மி.லி
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
முருங்கைக்காயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.
முருங்கைக்காய் - 20 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 2
மிளகு - 5 கிராம்
பட்டை - 1
கிராம்பு - 1
தேங்காய் பால் - 100 மி.லி
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X