search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காஞ்சிபுரம் இட்லி
    X
    காஞ்சிபுரம் இட்லி

    வீட்டிலேயே செய்யலாம் சுவையான காஞ்சிபுரம் இட்லி

    வீட்டிலேயே எளிய முறையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்:

    இட்லி (புழுங்கல்) அரிசி - 2 கப்
    உளுத்தம் பருப்பு - 1 கப்
    மிளகு - 2 டீஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - 1/2 கப்
    முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன்
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்
    நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
    உப்பு - தேவைக்கேற்றவாறு

    காஞ்சிபுரம் இட்லி

    செய்முறை :

    அரிசியையும், உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி தனித்தனியாக 4 மணிநேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும்.

    மறுநாள், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.

    அதே வாணலியில் நல்லெண்ணையை விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை முழுதாகவும், மற்றொரு டீஸ்பூன் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகவும் பொடித்தும் சேர்க்கவும்.

    இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து இதையும் மாவில் கொட்டவும்.

    தேங்காய் துண்டுகளையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

    இட்லி குக்கர் அல்லது இட்லி பானையை அடுப்பிலேற்றி, தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.  

    ஒரே அளவுள்ள டம்ளர்களை எடுத்து எண்ணெய் தடவி அதில் 3/4 அளவிற்கு மாவை ஊற்றவும்.

    இதை இட்லி குக்கர்/பானை உள்ளே வைத்து மூடி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

    இப்போது சுவையான காஞ்சிபுரம் இட்லி ரெடி.

    குக்கர் பாத்திரம் அல்லது வாயகன்ற பேசின் போன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து, துண்டுகளாகவும் வெட்டி பரிமாறலாம். அல்லது சாதரண இட்லி போல், இட்லி தட்டில் ஊற்றியும் வேக வைக்கலாம்..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×