search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆட்டு இறைச்சி வாங்கும்போது...
    X

    ஆட்டு இறைச்சி வாங்கும்போது...

    ஆட்டு இறைச்சி வாங்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ஆட்டு இறைச்சி வாங்கும் போது, ஆட்டின் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம். ஆனால் தொடை பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், சாப்பிட சற்று கடினமாக இருக்கும். அதற்குக் காரணம் ஆடு நடக்கிற போது, தொடை பகுதி தசை நன்றாக இறுகி கெட்டித்தன்மையுடன் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். எனவே ஆட்டு இறைச்சி வாங்கும் போது நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்கு பின்புறம் உள்ள முதுகு தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

    இறைச்சி பழையதா அல்லது ஆரோக்கியமான ஆடா? என்பதையெல்லாம் வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்துவிடும். எங்கும் தேங்கியிருக்காது. இதுவே ஏதேனும் நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால் ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கி இருக்கும்.

    இதுவே ஆடு இறந்து போனபின் அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும். ஒரே பருவத்தில் உள்ள இரண்டு ஆடுகள் வெட்டப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் பெட்டை ஆட்டின் கறியைத் தேர்ந்தெடுங்கள். அதுதான் ருசி அதிகமாக இருக்கும். கோழியிலும் வெடைக் கோழி தானே ருசி அதிகம். ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.



    பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கு பலத்தைக் கொடுக்கும். ஆட்டின் கழுத்துப் பகுதியில் உள்ள கறி மிகவும் மென்மையானதாகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மென்று சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் இன்னொரு முக்கியமான வி‌‌ஷயம் என்னவென்றால் இந்த பகுதியில் கொழுப்பே இருக்காது.

    உடல் சூட்டால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த மருந்தாக இருப்பது ஆட்டினுடைய நாக்குப்பகுதி தான். ஆட்டினுடைய கொழுப்பானது இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். உடம்பில் எத்தகைய வலி மற்றும் புண்ணையும் ஆற்றக்கூடிய குணம் கொண்டது. அம்மை நோய், அக்கி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக ஆட்டுக் கொழுப்பை சொல்லலாம்.

    ஆட்டின் மூளை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். ஆண்களுக்கு ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். ஆட்டுக்கால் சூப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? எலும்புக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நெஞ்சு சளியை வெளியேற்றும். கால்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
    Next Story
    ×