search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளைக் குறிவைக்கும் ஃப்ளு வைரஸ்... எப்படி பரவுகிறது?
    X

    குழந்தைகளைக் குறிவைக்கும் ஃப்ளு வைரஸ்... எப்படி பரவுகிறது?

    • ஃப்ளு வைரஸ் சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும்.
    • இந்த வகை காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

    * குழந்தைகளை அதிகமாக பாதிக்கக்கூடிய ஃப்ளு வைரஸ் காய்ச்சல் சென்னையில் பரவி வருவதால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    * பல பள்ளிகளில் குழந்தைகளின் 'ஆப்சென்ட்' எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுவதாகவும், பள்ளிக்கு வந்திருக்கும் குழந்தைகளில் கூட பலர் தொடர்ந்து இருமிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    * அதே சமயம் இந்தக் காய்ச்சலால் பெரியவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருக்கும் என்பதால், அவர்களை இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் தொற்றுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    அறிகுறிகள்:

    * ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை ஃப்ளு வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாகும். இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.

    என்றாலும், ப்ளு வைரஸ் பாதிக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    * ஃப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அது சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும்.

    * இதனால் இருமல் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி, வயிற்று வலி போன்றவையும் ஏற்படக் கூடும்.

    * ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் 2 முதல் 4 நாட்களில் குணமாகிவிடும். சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    எப்படி பரவுகிறது?

    * ஃப்ளு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவிவிடும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளிப்படும் துளிகள் மூலம் மற்றவர்களைப் பாதிக்கும்.

    இந்த வகை காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

    * எனவே காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பக்கத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றால் ஃப்ளு வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    பரவல் ஏன்?

    வைரஸ் காய்ச்சல்களில் ஃப்ளு வகை வைரஸ் காய்ச்சல் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகளவு பரவுவது உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாலும், முகக் கவசம் அணிந்ததாலும் இத்தகைய வைரஸ்கள் தாக்கம் இல்லாமல் இருந்தது.

    ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் விலகி உள்ள நிலையில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொது மக்கள் கைவிட்டு இருப்பதால் மீண்டும் வைரஸ் காய்ச்சல்கள் தலையெடுக்கத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் தற்போது சென்னையில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில், சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×