search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையை பிளே ஸ்கூல் அனுப்பலாமா?
    X
    குழந்தையை பிளே ஸ்கூல் அனுப்பலாமா?

    குழந்தையை பிளே ஸ்கூல் அனுப்பலாமா?

    சிறு குழந்தையினை 21/2 வயதில் Pre School, Play School என்ற பெயரில் சில மணி நேரங்கள் அனுப்புவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
    நவீன நாகரீக உலகில் பிள்ளைகள் வளர்க்கப்படும் முறை கூட நிறைய மாறுபட்டுக் கொண்டு வருகிறது. 5 வயது வரை அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டு மடியில் தூங்கிய காலம் மறைந்தே போய்விட்டது. பால் புட்டியுடன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் காலம் ஆகி விட்டது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் காலை முதல் மாலை வரை குழந்தைகள் காப்பகம், பின்னர் Pre School என்று விட்டுச் செல்கின்றனர். இதில் பல குறைபாடுகள், பாதிப்புகள் இருப்பதாக பல அக்கறை நிறைந்த முதியோர்கள் அறிவுறுத்தினாலும் காலத்தின் வேகம் அதனோடு நம்மை ஓடச் செய்கின்றது.

    * கூட்டுக் குடும்பமாய், பெற்றோர்கள் உடன் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் அதிலும் இன்று அநேக சிக்கல்கள் உள்ளன. ஆகவே இந்த முறை பலருக்கு பயன்படுவதில்லை.

    * உறவுகளே இப்படி இருக்கும் பொழுது உதவியாளர்கள் என்ற பெயரில் வேலைக்கு வரும் நபர்களால் பிரச்சினைகள், குழந்தைகள் பாதுகாப்பு இவைகளை சமாளிப்பது மன உளைச்சலையே கொடுத்து விடுகின்றது.

    எனவே Pre School என்பது சில மணி நேரங்கள் என்றாலும் தாய்மார்களுக்கு மற்ற வேலைகளை கவனிக்க சிறிது அவகாசம் தருகின்றது. இருப்பினும் 21/2 வயதில் Pre School , Play School என்ற பெயரில் சில மணி நேரங்கள் சிறு குழந்தையினை அனுப்புவதைப் பற்றி பெரிய ஆய்வுகள் நடந்தன. அந்த ஆய்வுகள் கூறுபவை:

    * தரமான இந்த விளையாட்டு பள்ளிகளுக்கு 2 மணி நேரம் செல்லும் குழந்தைகள் சுய ஒழுக்கம், பல திறமைகள் இவற்றினை எளிதாக கற்றுக்கொள்கின்றதாம்.

    * பேசும் திறன், புத்தகம் படிக்கும் திறன் கூடுகின்றதாம்.

    * முறையாக பள்ளி செல்லும் பொழுது இக்குழந்தைகள் எளிதாக அச்சூழ்நிலைக்கு ஒத்து வருகின்றார்களாம்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன என்றே கூறுகின்றன. ஆனால் 2 முதல் 3 மணி நேர அளவில் இருந்தாலே போதும். இல்லையெனில் குழந்தைகள் சோர்ந்துவிடும்.

    பள்ளி தரமானதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

    ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒரு குழந்தை தானே நல்ல பாதுகாப்போடு, புத்திசாலியாய், பண்புகளோடு வளரும் வாய்ப்புகள் அதிகம். ஒரு தாயோ, தந்தையோ அதிக கவனத்தினை தர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெற்றோரும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். பிள்ளைகளும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். 
    Next Story
    ×