என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அடம்பிடிக்கும் குழந்தையை அடிக்கலாமா?
Byமாலை மலர்28 Feb 2019 8:44 AM GMT (Updated: 28 Feb 2019 8:44 AM GMT)
குழந்தைகள் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக, உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக குழந்தையை அடிப்பது மிகவும் தவறு.
இன்றைய குழந்தைகள் முந்தைய தலைமுறையினரிடமிருந்து பல மடங்கு மாறுபட்டவர்கள். எக்கச்சக்க புத்திசாலிகள். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்டு அனுசரித்துப் போவதில் பெற்றோருக்குத்தான் நிறைய குழப்பம். குழந்தைகளைப் படிக்கத் தவறி விடுகிறார்கள். இருவரும் வேலைக்குப் போகிற குடும்பங்களில், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு பல பெற்றோருக்கும் இருக்கிறது.
அதை ஈடுகட்ட, குழந்தைகளின் விருப்பம் எதுவானாலும் நிறைவேற்ற நினைக்கிறார்கள். அது தவறு. எவ்வளவு மணி நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படிச் செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
எதெல்லாம் அவர்கள் கேட்டால் மாற்றக்கூடிய விஷயங்கள், எதெல்லாம் மாற்றக்கூடாதவை என்பதைக் குழந்தைகளுக்குத் தெளிவாகச் சொல்லுங்கள். உதாரணத்துக்கு, ‘பள்ளிக்கூடத்துக்குப் போகலாமா, வேண்டாமா?’, ‘படிக்கலாமா, வேண்டாமா’ என்கிற மாதிரி விஷயங்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்தே வேண்டியதில்லை. என்ன சாப்பிடலாம், விடுமுறையில் எங்கே வெளியே போகலாம் என்கிற மாதிரியானவற்றுக்குக் குழந்தையின் கருத்தைக் கேட்கலாம்.
அம்மா-அப்பா இருவரும் ஒரே மாதிரித் தகவலைக் குழந்தையிடம் பரிமாற வேண்டியது மிக முக்கியம். சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக, உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக குழந்தையை அடிப்பது மிகவும் தவறு. ஆனால், கரண்ட்டை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்லியும், குழந்தை அதைத் தொட முயற்சிக்கிறபோது அடி கொடுத்து, அழுத்தமாக அதைப் புரிய வைக்கலாம். தப்பில்லை.
அதை ஈடுகட்ட, குழந்தைகளின் விருப்பம் எதுவானாலும் நிறைவேற்ற நினைக்கிறார்கள். அது தவறு. எவ்வளவு மணி நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படிச் செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
எதெல்லாம் அவர்கள் கேட்டால் மாற்றக்கூடிய விஷயங்கள், எதெல்லாம் மாற்றக்கூடாதவை என்பதைக் குழந்தைகளுக்குத் தெளிவாகச் சொல்லுங்கள். உதாரணத்துக்கு, ‘பள்ளிக்கூடத்துக்குப் போகலாமா, வேண்டாமா?’, ‘படிக்கலாமா, வேண்டாமா’ என்கிற மாதிரி விஷயங்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்தே வேண்டியதில்லை. என்ன சாப்பிடலாம், விடுமுறையில் எங்கே வெளியே போகலாம் என்கிற மாதிரியானவற்றுக்குக் குழந்தையின் கருத்தைக் கேட்கலாம்.
அம்மா-அப்பா இருவரும் ஒரே மாதிரித் தகவலைக் குழந்தையிடம் பரிமாற வேண்டியது மிக முக்கியம். சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக, உங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக குழந்தையை அடிப்பது மிகவும் தவறு. ஆனால், கரண்ட்டை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்லியும், குழந்தை அதைத் தொட முயற்சிக்கிறபோது அடி கொடுத்து, அழுத்தமாக அதைப் புரிய வைக்கலாம். தப்பில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X