என் மலர்

    வழிபாடு

    வேலாயுதபுரம் ஆலயத்தில் 20 அடி உயர திருச்சிலுவை ஆண்டவர் சொரூபம் அர்ச்சிப்பு
    X

    வேலாயுதபுரம் ஆலயத்தில் 20 அடி உயர திருச்சிலுவை ஆண்டவர் சொரூபம் அர்ச்சிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா.
    • திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா.

    நெல்லை:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை ஆலய திருவிழா நடைபெற்றது. இத்திருச்சிலுவை ஆலயத்தில் வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாளையங்கோட்டையில் வசிக்கும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் சார்பில், இந்தியாவிலேயே உயரமான திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபம் 20 அடி உயரத்திலும், திருச்சிலுவை 25 அடி உயரத்திலும் புதிதாக அமைக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.

    பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமை தாங்கி, திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சொரூபத்தை அர்ச்சித்தார். பின்னர் ஆயரை கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக திருச்சிலுவை ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து திருச்சிலுவை ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் இரவில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அசன விருந்து நடைபெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் ஜோமிக்ஸ், ஞானப்பிரகாசம், அம்புரோஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை வ.எட்வின் ஆரோக்கியநாதன் மற்றும் லொயோலா பப்ளிகேஷன் இயக்குனர் இ.பெர்க்மான்ஸ் செய்து இருந்தனர்.

    Next Story
    ×