search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனியாண்டவர் சிற்றிலக்கியங்கள்
    X

    பழனியாண்டவர் சிற்றிலக்கியங்கள்

    • அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார்.
    • நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    சங்க காலத்தில் கோவில்கள் இலக்கியங்களை தோற்றுவிக்கும் பாடு களங்களாக விளங்கின. கோவிலின் சிறப்பு, வரலாறு போன்றவற்றை விளக்க தல புராணம் இருந்தது. காலப்போக்கில் கோவில்களை மையப்படுத்தி பல சிற்றிலக்கியங்களும் தோன்றியது. தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் பெரும்பாலும் பக்தியை பறைசாற்றுபவையாக உள்ளது. எனவே தான் பக்தி இலக்கிய காலத்தில் சிற்றிலக்கியங்கள் வளர்ந்தோங்கின.

    இறைவனை பாடுபொருளாக கொண்ட பிள்ளைத்தமிழ், உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, கோவை, பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் பக்தி சார்ந்தவைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இதில் எட்டு பாடல்களில் வரும் அட்டமங்கலம், ஒன்பது பாடல்களால் வரும் நவமணிமாலை, பத்துப்பாடல்களால் வரும் பதிகம், இருபது பாடல்களால் வரும் இருபா, முப்பது பாடல்களால் வரும் மும்மணிமாலை, மும்மணி கோவை, நாற்பது பாடல்களால் வரும் நான்மணி மாலை, அறுபது பாடல்களால் வரும் மணிமலை, நூறு பாடல்களால் வரும் இணை மணிமாலை போன்றவை பக்தியை பற்றி பாடப்பட்டு உள்ளது.

    அதன்படி பழனியில் குடிகொண்ட முருகப்பெருமானை பற்றி பதிகம், மாலை, ஒருபா, அந்தாதி, விருத்தம் முதலிய பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்று உள்ளன. இலக்கியத்தில் 3-ம் படைவீடாக குறிப்பிடும் திருஆவினன்குடியின் சிறப்பு பத்துப்பாட்டின் முதல் பாட்டான திருமுருகாற்றுபடை விளக்குகிறது. அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார். இதேபோல் வையாபுரிப்பள்ளு, பழனி பிள்ளைத்தமிழ், பழனியாண்டவர் சமயமாலை போன்றவை பழனியை பற்றி பாடப்பட்டுள்ள சிற்றிலக்கியங்கள் ஆகும்.

    இலக்கிய மரபு மட்டுமல்லாமல் வாய்மொழி மரபும் பழனி முருகன் கோவிலை மையமாக கொண்டு வளர்ந்துள்ளன. இதை கோவில் திருவிழாக்களின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வெளிப்படுத்தும் காவடிப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டம், வழிநடை சிந்து பாடல்கள் போன்றவற்றில் காணலாம். நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    Next Story
    ×