search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றம்
    X

    அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றம்

    • ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) சூரிய, சந்திர மண்டல காட்சிகளும் 16-ந்தேதி அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், அன்னவாகன காட்சிகள் நடக்கிறது. 17-ந்தேதி கைலாச வாகன புஸ்ப விமானம் நிகழ்ச்சி நடக்கிறது.

    18-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கரிவரதராஜ பெருமாள் கோவில் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    19-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், வெள்ள யானை வாகன காட்சி நடைபெற உள்ளது. 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 21-ந்தேதி சிறிது தொலைவு தேர் இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.

    மீண்டும் 22-ந்தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படுகிறது. 23-ந்தேதி அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்காக பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×