search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பித்ரு வழிபாட்டின் -35 அம்சங்கள்
    X

    பித்ரு வழிபாட்டின் -35 அம்சங்கள்

    • வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.
    • பித்ரு மகிமை பற்றிய பல்வேறு தகவல் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன.

    1. உலக மக்கள் பித்ரு காரியங்கள் செய்வதற்காகவே கங்கை நதி பூமிக்கு வந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    2. பித்ரு மகிமை பற்றிய பல்வேறு தகவல் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன.

    3. கங்கை நதியில் முதன்முதலில் புனித நீராடி பித்ரு காரியங்கள் செய்தவர் பகீரதன். இவர் தான் பல ஆண்டுகள் சிவனை நோக்கி தவம் இருந்து கங்கையில் பித்ரு காரியம் செய்யும் சிறப்பைப் பெற்றார்.

    4. உயிர் நீத்த நம் மூதாதையர்கள் ஆத்ம சாந்தி அடைய மகாளயபட்ச நாட்களில் சிரார்த்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

    5. ஒரு வருடம் நாம் பித்ருபூஜை செய்யா விட்டாலும் மனவருத்தம் ஏற்படும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    6. மகாளய பட்ச 15 நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம், புனித நீராடல், படையல், அன்னதானம் போன்றவை செய்தால் பித்ருக்களின் ஆசியை பெற முடியும்.

    7. மகாளயபட்ச நாட்களில் பித்ருக்கள் பூமியில் உள்ள திருத்தலங்களுக்கு வந்து நாம் அளிக்கும் எள் நீரை ஏற்றுச் செல்கிறார்கள்.

    8. தர்ப்பணங்களை எப்போதும் காலை 7 மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது.

    9. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து அதிகாலைக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது.

    10. தர்ப்பணங்கள் குறித்து கருட புராணத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு விரிவாக கூறியுள்ளார்.

    11. எள்ளுடன் தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாக கருதப்படுகிறது.

    12. பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது. தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம்.

    13. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி, தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம்.

    14. புண்ணிய நதிகளின் கரைகளில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு எப்போதுமே சக்தி அதிகமாகும்.

    15. பித்ரு உலகம் தென் திசையில் உள்ளது. எனவே மறைந்த நம் முன்னோர்கள் "தென் புலத்தார்" என்றழைக்கப்படுகிறார்கள்.

    16. பித்ருக்களுக்கு செய்யப்படும் தர்ப்பணம் தமிழில் நீத்தார் கடன் தீர்த்தல் என்று சொல்லப்படுகிறது.

    17. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம், திதியை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும்.

    18. தர்ப்பணம் செய்யும் போது தாய், தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்தால், அவர்களது ஆசிகளும் கிடைக்கும்.

    19.அமாவாசை, சூரியன் மற்றும் சந்திர கிரகணங் களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு.

    20. மகாளய அமா வாசை தினத்தன்று பித்ருக்கள் அனை வரும் சூரிய சந்திர உலகில் கூடுவதாக ஐதீகம்.

    21. பித்ரு தர்ப்பணம் செய்ய பூமிக்கு வந்த கர்ணன் மீண்டும் மேல் உலகம் செல்லும் போது 14 நாட்களுக்கான உணவு அபரிமிதமாக இருந்தது. அந்த 14 நாட்கள் தான் மகாளயபட்ச தினமாக கருதப்படுகிறது.

    22. மகாளயபட்ச நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டியது மிக, மிக முக்கியமாகும்.

    23. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி, மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள். இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும்.

    24. தர்ப்பணத்தை சரியான நேரத்தில் உரிய முறைப்படி செய்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் என்பதே வராது.

    25. மறைந்த முன்னோர்களின் தேதி, நேரம், திதி போன்றவை தெரியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். மகாளயபட்சத்தில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தாலே போதும் பித்ருக்கள் திருப்தி பெறுவார்கள்.

    26. பித்ரு தேவதைகள் வசு, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் நம்மை காக்கின்றனர்.

    27. மகாளயபட்ச நாட்களில் மறைந்த நம் முன்னோர்கள் ஏதாவது ஒரு உருவத்தில் நம் அருகே வந்து செல்லலாம்.

    28. பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது.

    29. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.

    30. தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாக பிறப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    31. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

    32. புண்ணிய ஆத்மாக்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் அவர்கள் மேலும் இறையருள் பெற உதவும்.

    33. தர்ப்பணம், சிரார்த்தம் செய்யாவிட்டாலும், நம் பித்ருக்கள், நமக்கு உதவுவார்கள். ஆனால் தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.

    34. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்களைத் தவிர்ப்பது நல்லது.

    35. பித்ரு தர்ப்பணங்களை சும்மா, பெருமைக்காக, மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்ககூடாது. முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் நிறுத்தி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    Next Story
    ×