என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா 3-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்1 Jun 2022 7:18 AM GMT (Updated: 1 Jun 2022 7:18 AM GMT)
திருச்சியை அடுத்த வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3-ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் 3-ம் தேதி தொடங்கும் வைகாசி விசாகப் பெருவிழா 14-ந்தேதி வரை நடக்கிறது.
விழாவின் தொடக்கமாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு கொடியேற்றம், நாள்தோறும் இரவு 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா, ஒன்பதாம் திருநாளான ஜூன்.11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்கள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணிய சுவாமியின் ரதாரோகணம் மாலை 4 மணிக்கு மேல் தேரோட்ட விழா, ஜூன் 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஜூன் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், ஜூன்.14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறும்.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.
விழாவின் தொடக்கமாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு கொடியேற்றம், நாள்தோறும் இரவு 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா, ஒன்பதாம் திருநாளான ஜூன்.11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்கள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணிய சுவாமியின் ரதாரோகணம் மாலை 4 மணிக்கு மேல் தேரோட்ட விழா, ஜூன் 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஜூன் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், ஜூன்.14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறும்.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X