என் மலர்
வழிபாடு

சேலம் அருகே பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனம் ஆடி நேர்த்திக்கடன் செலுத்தும் கிராம இளைஞர்கள்
சேலம் அருகே பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனம் ஆடி நேர்த்திக்கடன் செலுத்தும் கிராம இளைஞர்கள்
இந்த இளைஞர்கள் பெரும்பாலும் 90 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்து பல்வேறு இடங்களில் பணியில் உள்ளனர். இருந்தும் அவர்கள் பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனங்களை தொடர்ந்து பழகி ஆடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளது.
திருவிழாவின்போது தினமும் கோவில் வளா–கத்தில் கிராம இளைஞர்கள் அம்மன் நடனம் ஆடுவது வழக்கம்.
கடந்த காலங்களில் இது போன்ற அம்மன் ஆட்டங்களை வெகு–விமர்சையாக ஆடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடத்த–படமால் இருந்து வந்தது. இதனால் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் அம்மன் ஆட்டம் ஆடுவது குறைய தொடங்கியது.
இந்த நிலையில் பழமை மாறாமல் இருக்க மீண்டும் இந்த பகுதி இளைஞர்கள் அம்மன் நடனங்களை கற்றும் அதை ஆடியும் வருகின்றனர்.
தற்போது சித்திரை திருவிழா அம்மன் கோவில்க–ளில் நடந்து வருகிறது. ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் பெரிய மாரியம்மன் பண்டிகை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் சாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் 2 மணி நேரம் அம்மன் நடனங்களை அடி நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்த இளைஞர்கள் பெரும்பாலும் 90 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்து பல்வேறு இடங்களில் பணியில் உள்ளனர். இருந்தும் அவர்கள் பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனங்களை தொடர்ந்து பழகி ஆடி வருகின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் அம்மன் ஆட்டத்திற்கு ஆர்வம் இருப்பதால் அப்ப–குதி சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Next Story






