
கடந்த 2 ஆண்டுகளாக கொேரானா பரவல் காரணமாக சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந் தேதி சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் காலை எழுந்தருளும் நிகழ்ச்சியும், இதனை தொடர்ந்து காலை 9.35 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது.
4 ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.