
இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வருகிற 16-ம் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ம்தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.