search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன்-அம்பாளுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய லட்டு, பட்டு வஸ்திரம்
    X
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன்-அம்பாளுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய லட்டு, பட்டு வஸ்திரம்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன்-அம்பாளுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய லட்டு, பட்டு வஸ்திரம்

    சிவன்-அம்பாள் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் (ஏழுமலையான் வழங்கிய சீர்) லட்டு, பட்டு வஸ்திரம், மங்கல சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. சிவன்-அம்பாள் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் (ஏழுமலையான் வழங்கிய சீர்) லட்டு, பட்டு வஸ்திரம், மங்கல சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவருடைய மனைவி சொர்ணலதாரெட்டி ஆகியோர் லட்டு, பட்டு வஸ்திரங்கள், மங்கல சீர்வரிசை பொருட்களை மேள தாளம் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள மணிகண்டன் சன்னதி அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்த வேத பண்டிதர்களிடம் சமர்ப்பித்தனர். அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை வழிபட்டனர்.

    முன்னதாக கோவிலுக்கு வந்த அறங்காவலர் குழு தம்பதியரை பியப்பு.மதுசூதன்ரெட்டி எம்.எல்.ஏ, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வரவேற்றனர்.
    Next Story
    ×