என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம்
Byமாலை மலர்18 Feb 2022 5:38 AM GMT (Updated: 18 Feb 2022 5:38 AM GMT)
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் உற்சவ அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சையை அடுத்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமானது. உள்ளுர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளியூர் பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்த கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.மாசிமகத்தையொட்டி முத்து மாரியம்மன் கோவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் 16-வது ஆண்டாக 1008 பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
பால் குட ஊர்வலம் கைலாச நாதர் கோவிலில் இருந்து தொடங்கியது. பால்குட ஊர்வலத்தை சுக்ரவார வழிபாட்டு குழு தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் 1008 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடையாற்றி விழா மாலையில் நடைபெற்றது.
இதில் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் உற்சவ அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், பிரபு, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பால் குட ஊர்வலம் கைலாச நாதர் கோவிலில் இருந்து தொடங்கியது. பால்குட ஊர்வலத்தை சுக்ரவார வழிபாட்டு குழு தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் 1008 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடையாற்றி விழா மாலையில் நடைபெற்றது.
இதில் விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் உற்சவ அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் சுக்ரவார வழிபாட்டுக்குழு செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், பிரபு, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X