search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத் தில் உள்ள சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத் தில் உள்ள சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி ஏற்கனவே கும்பாபிஷேகம் நடந்து முடிந்தன. ஆனால் ராஜகோபுரம் கட்டு்ம் பணி நடைபெறாமல் இருந்தன. எனவே விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தார். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில், 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

    அதைத் தொடர்ந்து, ராஜகோபுரத்தின் 7 நிலைகளிலும் உள்ள மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற வேண்டி இருந்தது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இதன் காரணமாக வர்ணம் பூசும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் சேகர்பாபு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று கோவில் இணை ஆணையரிம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு தரமான வர்ணம் தீட்ட வேண்டும் என்றும் காலதாமதமின்றி நடைபெறவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணியில்10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?

    தற்போது, இந்த பணி நிறைவு அடையும் தருவாயில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இக்கோவிலில் உள்ள தங்கரதம் கடந்த மாதம் ஓட்டப்பட்டது. இது பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் கோவில் கும்பாபிஷேகத்தையும் விரைவில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். பிப்ரவரி மாத இறுதிக்குள் வர்ணம் தீட்டும் பணி முழுமையாக முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×