search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித நூல் பகவத் கீதை
    X

    புனித நூல் பகவத் கீதை

    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது.
    பாண்டவர்களுக்கு குண்டூசி அளவு நிலம் கூட தர முடியாது என்று கூறியதன் விளைவாக, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் மூண்டது. 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரை ‘குருசேத்திரப் போர்’ என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது.

    இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பாக, போர்க்களத்தில் தனது உறவினர்களை எதிர்த்து போரிட அர்ச்சுனன் விரும்பவில்லை. அப்பொழுது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பகவான், கர்ம வினைகளை பற்றி எடுத்துரைத்து அர்ச்சுனனை போருக்கு தயாராக்கினார்.

    அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது. இது 18 பகுதிகளையும், 650 செய்யுள்களையும் கொண்டது.
    Next Story
    ×