search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பவுர்ணமியையொட்டி திருப்பதியில் நாளை கருடசேவை
    X

    பவுர்ணமியையொட்டி திருப்பதியில் நாளை கருடசேவை

    திருப்பதி கோவிலில் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருட சேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறுகிறது.
    திருப்பதி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருட சேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறுகிறது.

    அதில் உற்சவர் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 14-ந்தேதி கருடசேவை நடந்தது.

    இதையடுத்து இதே மாதத்தில் வந்த பவுர்ணமியையொட்டி நாளை இரவு மீண்டும் மற்றொரு கருடசேவை நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் தேவஸ்தானம் செய்து வருகிறது.
    Next Story
    ×