search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரியின் பலவித மாநில வழிபாடுகள்
    X

    நவராத்திரியின் பலவித மாநில வழிபாடுகள்

    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    நவராத்திரி என்பது பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் கொண்டாட்ட முறைகள் என்பது சற்று மாறுபட்டு வருகின்றது. நவராத்திரி திருவிழா என்பது ஒன்பது விதமான முறைகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை ஒன்றுக்கொன்று சற்று மாறுபட்டு இருப்பினும் ஒன்பது இரவுகளில் மட்டுமே கொண்டாட்டம் என்பது மட்டும் ஒரே மாதிரியாகவே உள்ளது.

    தாண்டியா ஆட்டத்துடன் கூடிய குஜராத் நவராத்திரி

    நவராத்திரியின் ஒன்பது நாளும் மாலைநேர வழிபாடு என்பது தாண்டியா ஆட்டத்துடன் தான் மேற்கொள்ளப்படும். மாலை நேரங்களில் மகா சக்தியை வழிபடுவதற்கான புதிய பானை கொண்டு வருவர். அதில் சிறு சிறு ஓட்டை இடப்பட்டு இருக்கும். அதன் உள் ஓர் விளக்கு ஏற்றி மகா சக்தியை வழிபாடு செய்வர். இந்த பானைக்கு பெயர் கர்டி. இந்த தீப நிகழ்வுக்கு பின் ஆண்,பெண் இருபாலரும் கையில் தாண்டியா குச்சிகளுடன் கூடிய தாண்டியா நடனத்தை ஆடுவர்.

    மேற்கு வங்காளத்தின் துர்க்கா பூஜை


    நாட்டின் கிழக்கத்திய பகுதிகளில் அதிகமாகவே துர்க்கா பூஜை என்றவாறு கொண்டாடப்படுகிறது. மகிஷனை கொன்ற துர்க்கைதான் பிரதான தெய்வமாக கொண்டாடப்படுகிறது. இங்கு வீடுகள் மட்டுமின்றி மக்கள் கூடும் இடங்களில், பொது பூங்காக்களில் பெரிய உயரமான துர்க்கா உருவங்கள் இடம் பெற செய்து ஒன்பது நாட்களும் வழிபட்டு பின்னர் துர்க்கா பூஜை முடிந்து அச்சிலைகளை கங்கை ஆற்றிலும் கடல் பகுதிகளிலும் கரைத்து விடுவர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் துர்க்கா பூஜை காலங்களில் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் துர்க்கையின் அருள் வேண்டி பூஜைகள் நடத்தப்படும்.

    பஞ்சாப்பின் நவராத்திரி

    பங்சாப் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏழு நாட்கள் மகா சக்தியின் வடிவங்கள் வணங்கப்படும் அந்த நாட்களில் மாலை நேரங்களில் பூஜை மேற்கொள்ளப்பட்டு இறைபாடல்கள் பாடப்பட்டு கொண்டாடப்படும். பிறகு அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் விரதம் மேற்கொள்ளப்பட்டு அவரவர் வீட்டிற்கும் ஒன்பது கன்னி பெண்களை அழைத்து வந்து பூஜை செய்து பரிசளித்து அனுப்பி வைப்பர். இந்த பெண்களை “கன்ஜக்” என்றவாறு தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றி வணங்குகின்றனர்.

    மலர் பதாகைகளுடன் ஆந்திர நவராத்திரி

    ஆந்திராவில் நவராத்திரி விழா என்பது “பத்தகம்மா பண்டூக” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று போட்டுவிடுவர்.

    செல்வ வளங்களை பெருக்கும் மஹாராஷ்டிரா நவராத்திரி

    மஹாராஷ்டிராவில் நவராத்திரி விழா என்பது ஓர் புதிய தொடக்கத்தை ஆரம்பிக்கும் விழாவாகவே அமைகிறது. இந்நாட்களில் சொத்துக்கள் வாங்குவது, புதிய வியாபார திட்டங்களை மேற்கொள்வது போன்ற செல்வ வளங்களை பெருக்கும் செயல்களை செய்கின்றனர். பெண்கள் திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து நெற்றியில் திலகமிட்டு புதிய பரிசுகளை வழங்கி கவுரவிப்பர். அபோல் குஜராத்தில் நடைபெறும் தாண்டியா நடன நிகழ்வு அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் நடைபெறும்.

    ஹிமாசல பிரதேச நவராத்திரி

    அங்கு நவராத்திரி என்பது மற்ற பகுதிகளில் நவராத்திரி முடியும் காலகட்டத்தில் தான் இங்கு தொடங்கும் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி வந்த நாள் என்பதை “குல்லு துஸ்ரா” என்றவாறு கொண்டாடப்படுகின்றனர். துர்க்கா தேவியையும் பூஜை செய்வர். குடும்பத்தினருடன் விருந்து மேற்கொள்வர். 
    Next Story
    ×