என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
By
மாலை மலர்23 May 2018 8:12 AM GMT (Updated: 23 May 2018 8:12 AM GMT)

கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. டைம் ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கடைவீதிகளில் சுற்றித்திரிகிறார்கள்.
பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.
திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது. ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.
பக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்டும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.
திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது. ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.
பக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்டும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
