search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறில் கயிலைக் காட்சி
    X

    திருவையாறில் கயிலைக் காட்சி

    ஆடி அமாவாசையன்று திருவையாறு ஐயாறப்பர் சன்னிதியில் கயிலைக்காட்சி விழாவாக அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
    தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சிவபெருமானை தரிசிக்க ஆவல் கொண்டு கயிலைக்கு சென்றார். கயிலைக்கு சென்ற அவர் வயோதிகம் காரணமாக நடக்க முடியாமல் தவழ்ந்து சென்றார். அப்போது சிவபெருமான் அந்தணர் வடிவில் வந்து ‘அப்பரே இங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாறில் எழுந்தருள்வாய்.

    அங்கே உமக்கு யாம் கயிலைகாட்சி தந்தருள்வோம்’ என கூறி அருளினார். உடனே திருநாவுக்கரசர் அங்குள்ள குளத்தில் மூழ்கி, திருவையாறு குட்டையில் எழுந்தார். அங்கே சிவபெருமான், உமாதேவியாருடன் காளை வாகனத்தில் வீற்றிருக்கும் கயிலை காட்சியை காட்டி அருளினார்.

    இந்த அருளாடல் நிகழ்ச்சி ஆடி அமாவாசையன்று நிகழ்ந்தது. இதை நினைவு கூரும் விதத்தில் ஆடி அமாவாசையன்று திருவையாறு ஐயாறப்பர் சன்னிதியில் இந்த நிகழ்ச்சி கயிலைக்காட்சி விழாவாக அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

    தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீட்டர் தூரத்தில் திருவையாறு உள்ளது.
    Next Story
    ×