search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாலட்சுமி
    X
    மகாலட்சுமி

    மகாலட்சுமி கோவில்கள்

    மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். சிறப்பு வாய்ந்த சில மகாலட்சுமி கோவில்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உத்திரமேரூர்:- உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்த வல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

    காஞ்சீபுரம்:- காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திரு நாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இது வன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

    சோழிங்கபுரம்:- வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன் களை வழங்கி வருகிறார்.

    திருத்தங்கல்:- விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் என்னும் திருத் தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திரு நாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ண மங்கை:- திரு வாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக் கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

    உத்தமர்கோவில்:- திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப் பெறுகிறார்.

    லால்குடி:- திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு திருத்தவத் துறை என்ற பெயரும் உண்டு. இங்குள்ள தலத்தில் தான் தாயார் தவம் இருந்து எம்பெருமானைத் தலைவராக அடைந் தார். இதே போல் நாமக்கல் திருத் தலத்தின் தாயாரும் தவமிருந்து எம் பெருமானைத் தலைவராகப் பெற்றார் என்று கூறப்படுகிறது. இத்தாயாரின் திரு நாமம் ‘ஹரி’ ஆகும்.

    தலைச்சங்காடு:- மாயவரம் - தரங் கம்பாடி பாதையில் ‘தலைச்சங்காடு’ என்ற திருத்தலத்தில் உள்ள தாயார் செங்கமலவல்லி ஆவார். இந்த நாச் சியார் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ணபுரம்:- தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் எம் பெருமானுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்னும் நான்கு தேவியர்கள் தம் இரு பக்கம் சூழ எம் பெருமான் சௌரிராஜன் அருட்காட்சி நல்கி வருகிறார். அற்புதத் திருத்தலம் இது.

    நாச்சியார்கோவில்:- கும்ப கோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத் தில் நாச்சியார்கோவில் என்ற திருத்தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாரு டன் அருட்காட்சி நல்கி வருவது மிகவும் விசேஷமானது. இங்கு தாயாருக் கெனத் தனிச் சந்நிதி கிடையாது.
    திருவாரூர்:-- திருவாரூரில் ஸ்ரீ லெட்சுமி தேவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இத் திருக்கோவிலின் தலவிருக்ஷமான புன்னை மரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதீகம். இதனால் இப்பிராட்டி யாருக்குப் புன்னைப் பிராட்டி என்பது திருநாமம.

    ஸ்ரீவில்லி புத்தூர்:- பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலத்தில் வடபத்திர சாயியான எம்பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    திருமலை:- திருமலை திருப்பதி யில் ஸ்ரீவிக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்ட லட்சுமிகளான ஸ்ரீஆதி லட்சுமி, ஸ்ரீவீரலட்சுமி, ஸ்ரீகஜ லட்சுமி, ஸ்ரீதான்யலட்சுமி, ஸ்ரீவிஜய லட்சுமி, ஸ்ரீதீபலட்சுமி, ஸ்ரீதன லட்சுமி, ஸ்ரீஐஸ் வர்யலட்சுமி எனும் திருநாமங் களோடு அர்ச்சாவதார மூர்த்தி களாக எழுந் தருளி அருள் பாலிக்கிறார்கள். இம் மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று கூறுகிறார்கள்.

    ஸ்ரீரங்கம்:- ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரகாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப்பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

    திருமழிசை:- சென்னை பூந்த மல்லியை அடுத்த திருமழிசையில் வீற் றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெரு மாளின் தலை கிரீடத்தில் 4 லட்சுமிகள், மார்பில் 2 லட்சுமிகள், பெருமாளின் இரு பிறமும் பக்கத்துக்கு ஒருவர் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். அஷ்டலட்சுமிகள் வீற்றிருக்கும் அந்த பெருமாளை சனிக் கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    மதுரையில் அஷ்டலட்சுமி:- மதுரை மையப்பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் அஷ்டலட்சுமிகளுக்கு என்று தனி சன்னதி உள்ளது. 8 லட்சுமிகளும் வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக உள் ளது. மதுரை நகர மக்கள் லட்சுமி வழிபாட்டுக்கும், பரிகார பூஜை களுக்கு இந்த அஷ்டலட்சுமிகளை ஆராதிக்கிறார்கள்.
    Next Story
    ×