search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    குலதெய்வம்
    X
    குலதெய்வம்

    இந்த மந்திரத்தை சொன்னால் 48 நாட்களில் உங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்ளலாம்....

    தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
    குலதெய்வ வழிபாடு தான் நம்முடைய குலத்தை காக்கும். குலதெய்வம் நம் வீட்டில் இல்லை என்றால் நம் குடும்பத்தில் சந்தோஷம் நிச்சயமாக இருக்காது. குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யவில்லை, குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வது இல்லை, குறிப்பாக குலதெய்வத்தை மனதில் கூட நினைப்பதில்லை என்றால், கஷ்ட நேரத்தில் மற்ற தெய்வங்களும் நமக்கு நிச்சயமாக துணையாக நிற்காது. குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வத்தை தினமும் மனதார நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை தரும்.

    தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துளசி இலையை போட்டு கொள்ளுங்கள். இந்த டம்ளர் தண்ணீருக்கு முன்பு நீங்கள் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்கவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

    ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
    இஷ்ட தர்ஷய நமஹா

    தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து முடித்த பின்பு, டம்ளரில் இருக்கும் தண்ணீரை குடித்து விட வேண்டும். இதேபோல தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில், மேல் சொன்னபடி இந்த வழிபாட்டு முறையை செய்ய வேண்டும். கட்டாயமாக மந்திரத்தை நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டும். இப்படி செய்தால் தெரியாத உங்கள் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்கு தெரியவரும் என்பது ஒரு நம்பிக்கை.

    நாற்பத்தி எட்டு நாட்களில் குலதெய்வம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றாலும் பரிகாரத்தை விட்டுவிட வேண்டாம். 90 நாட்கள் தொடர்ந்து இப்படி வழிபாட்டை மேற்கொள்ள நிச்சயமாக உங்களுடைய குல தெய்வத்தைப் பற்றிய ஏதாவது ஒரு தகவல், குல தெய்வத்தைப் பற்றிய விபரத்தை யார் மூலமாகவாவது நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
    Next Story
    ×