என் மலர்
இஸ்லாம்
இறை விசுவாசி, இன்னொரு விசுவாசிக்கு தார்மீக ரீதியாகச் செய்யவேண்டிய ஆறு அருங்கடமைகளில் முதற்கடமையாக இந்த சலாமைத்தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது.
‘ஸலாம்’ என்ற அரபுச்சொல்லிற்கு அமைதி, சமாதானம், நிம்மதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இந்த மூலச்சொல்லில் இருந்தே ‘இஸ்லாம்’ என்ற சொல் உருவானது. ஆகவே தான் இஸ்லாம் தன் பெயருக்கு ஏற்ப அமைதியையே எங்கும் கிளைவிரித்துச் செல்கிறது.
இந்த அடிப்படையில் தான் ஒருவரை வரவேற்கும் போது அவரை ‘சலாம்’ சொல்லி அதாவது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களின் மீது அமைதி நிலவட்டும்) என்று கூறி வரவேற்கச் சொல்கிறது இஸ்லாம்.
‘ஒருவரையொருவர் சந்திக்கும் போது சலாம் சொல்லிக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாமிய மரபு. இப்பண்பு குறையும்போது அது கடைசி காலத்தின் அடையாளம் என்று புரிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம்.
அதனால் தான் என்னவோ ‘நீங்கள் சலாமை பரப்புங்கள். அறிந்த அல்லது அறியாத அனைவருக்கும் பாரபட்சமின்றி சலாமை பரப்புங்கள்’ என்றார்கள்.
ஒருமுறை நாயகத்தோழர் ஒருவர் நபிகள் நாயகத்திடம் வந்து ‘நாயகமே! இஸ்லாத்தில் சிறந்த காரியம் எது?’ என்று கேட்க, அதற்கு நபிகளார் ‘முதலில் உணவளிப்பது, பிறகு நீர் உமக்குத் தெரிந்தவருக்கும், உமக்குத் தெரியாதவருக்கும் (சரிசமமாக) சலாம் சொல்வது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: அபூதாவூது)
ஈருலகம் போற்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் இப்படியும் ஒருமுறை சொன்னார்கள்: ‘தெரிந்தவர்களுக்கு மட்டும் சலாம் சொல்வது அது கடைசி (கியாமத்) நாட்களின் அடையாளம்’ என்று. எனவே நாம் சலாம் கூறுவதில் மிகுந்த அக்கறையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும்.
பின்வரும் இன்னொரு வசனம் ‘சலாம் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது; அது பாக்கியம் நிறைந்தது; வீட்டிற்குள் நுழையும் முன் கூறத்தக்கது’ என்று விவரித்துச்செல்கிறது இப்படி:
‘நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான, பாக்கியம் மிக்க பரிசுத்தமான (‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்’. (திருக்குர்ஆன் 24:61)
சலாம் அதுவொரு சாதாரணமான ஒரு வார்த்தையல்ல... அது மதிப்பும், மரியாதையும் மிக்கது. அதை நாம் அவ்வப்போது மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சலாம் நமது உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் சாந்தியை, சமாதானத்தை அந்த விண்ணிலிருந்து இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்யும் ஒரு அற்புதச்சொற்றொடராகும்.
அதுமட்டுமல்ல, அவ்வப்போது நமது உள்ளத்தில் நம்மையும் அறியாமல் ஏற்படும் பெருமை, தற்பெருமை, கர்வம், முகஸ்துதி போன்றவற்றை நமது ஆழ்மனதிலிருந்து அடியோடு நீக்கும் அபார ஆற்றல் இந்த ஒற்றை சலாமுக்கு உண்டு என்பது நபிமொழி காட்டும் நல்வழி.

நபிகளார் நவின்றார்கள், ‘சலாமைக்கொண்டு ஆரம்பிப்பவர் பெருமையை விட்டும் நீங்கியவராவார்’. (நூல்: மிஷ்காத்)
‘எவருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர் சுவனம் நுழையமாட்டார்’ என நபிகளார் எச்சரிக்கை விடுத்திருப்பதில் இருந்தே பெருமையின் கோரமுகத்தை நாம் நன்கு எடைபோட்டுக் கொள்ளலாம்.
அற்புதமான ஆற்றல்மிக்க சலாமை நாம் நம்மவர்களுக்கு, குடும்பத்தார்களுக்கு, அக்கம்பக்கத்தவர்களுக்கு மனம் விட்டு, வாய்திறந்து சொல்வதற்கு ஒன்றுக்கு ஒன்பது முறை யோசிக்கிறோம்? அதுவும் தாய், தந்தை, மனைவி, மக்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. பெரும்பாலும் நாம் இவர்களுக்கு சலாம் சொல்வதேயில்லை. உண்மையில் இவர்களுக்குத்தான் நாம் முதன் முதலில் சலாம் கூற முன்வரவேண்டும்.
ஒருவருக்கு சலாம் கூறுவது விரும்பத்தகுந்தது. ஆனால், ஒருவர் நமக்கு சலாம் கூறினால், அவருக்கு நாம் கட்டாயம் பதில் சலாம் கூறியே ஆகவேண்டும் என்று இஸ்லாம் வரையறை செய்து வகுத்து வைத்திருக்கிறது. இதன் வழியாக பதில் சலாமின் அவசியத்தை நாம் நன்கறிந்து கொள்ளமுடியும்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்’, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு’ என்று ஓரிரு நல்வார்த்தைகளையும் அந்த சலாமுடன் சேர்த்து சொல்லலாம். பதில் சலாம் கூறுபவரும் இவ்வாறே சில வார்த்தைகளை இணைத்துக்கூறுவது கூடும். ஆக சொற்கள் கூடக்கூட நன்மைகளும் கூடிக்கொண்டேயிருக்கும்.
இந்த சலாம் ஆண்களுக்கு மட்டும் குறிப்பானதல்ல. பெண்களும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வார்கள். இதில் சிறியவர்கள் தான் பெரியவர்களுக்கு முதலில் சலாம் சொல்ல வேண்டும் என்றிருந்தாலும் கூட நன்மையை பெற்றுக்கொள்வதிலும், நன்மையை கற்றுத்தருவதிலும் பெரியவர்கள் முந்திக்கொள்வது தவறல்ல.
‘இம்மண்ணிற்குக் கீழே உள்ளவர்களுக்கும், அதாவது இறந்துபோனவர்களுக்கும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்றால் அவர்களுக்கும் நீங்கள் சலாம் சொல்லுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லுரை கூறினார்கள்.
ஒரு இறை விசுவாசி, இன்னொரு விசுவாசிக்கு தார்மீக ரீதியாகச் செய்யவேண்டிய ஆறு அருங்கடமைகளில் முதற்கடமையாக இந்த சலாமைத்தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது. எனவே சலாம் என்பது சர்வ சாதாரணமான ஒரு சொல்லல்ல, அது சர்வ தரங்களும் நிறைந்த ஒரு சொல் என்பது மட்டும் நிச்சயம்.
வாருங்கள்... எங்கும் சலாமைப் பரப்புவோம்... என்றும் சாந்தியை நிரப்புவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
இந்த அடிப்படையில் தான் ஒருவரை வரவேற்கும் போது அவரை ‘சலாம்’ சொல்லி அதாவது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களின் மீது அமைதி நிலவட்டும்) என்று கூறி வரவேற்கச் சொல்கிறது இஸ்லாம்.
‘ஒருவரையொருவர் சந்திக்கும் போது சலாம் சொல்லிக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாமிய மரபு. இப்பண்பு குறையும்போது அது கடைசி காலத்தின் அடையாளம் என்று புரிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம்.
அதனால் தான் என்னவோ ‘நீங்கள் சலாமை பரப்புங்கள். அறிந்த அல்லது அறியாத அனைவருக்கும் பாரபட்சமின்றி சலாமை பரப்புங்கள்’ என்றார்கள்.
ஒருமுறை நாயகத்தோழர் ஒருவர் நபிகள் நாயகத்திடம் வந்து ‘நாயகமே! இஸ்லாத்தில் சிறந்த காரியம் எது?’ என்று கேட்க, அதற்கு நபிகளார் ‘முதலில் உணவளிப்பது, பிறகு நீர் உமக்குத் தெரிந்தவருக்கும், உமக்குத் தெரியாதவருக்கும் (சரிசமமாக) சலாம் சொல்வது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: அபூதாவூது)
ஈருலகம் போற்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் இப்படியும் ஒருமுறை சொன்னார்கள்: ‘தெரிந்தவர்களுக்கு மட்டும் சலாம் சொல்வது அது கடைசி (கியாமத்) நாட்களின் அடையாளம்’ என்று. எனவே நாம் சலாம் கூறுவதில் மிகுந்த அக்கறையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும்.
பின்வரும் இன்னொரு வசனம் ‘சலாம் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது; அது பாக்கியம் நிறைந்தது; வீட்டிற்குள் நுழையும் முன் கூறத்தக்கது’ என்று விவரித்துச்செல்கிறது இப்படி:
‘நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான, பாக்கியம் மிக்க பரிசுத்தமான (‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்’. (திருக்குர்ஆன் 24:61)
சலாம் அதுவொரு சாதாரணமான ஒரு வார்த்தையல்ல... அது மதிப்பும், மரியாதையும் மிக்கது. அதை நாம் அவ்வப்போது மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சலாம் நமது உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் சாந்தியை, சமாதானத்தை அந்த விண்ணிலிருந்து இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்யும் ஒரு அற்புதச்சொற்றொடராகும்.
அதுமட்டுமல்ல, அவ்வப்போது நமது உள்ளத்தில் நம்மையும் அறியாமல் ஏற்படும் பெருமை, தற்பெருமை, கர்வம், முகஸ்துதி போன்றவற்றை நமது ஆழ்மனதிலிருந்து அடியோடு நீக்கும் அபார ஆற்றல் இந்த ஒற்றை சலாமுக்கு உண்டு என்பது நபிமொழி காட்டும் நல்வழி.

நபிகளார் நவின்றார்கள், ‘சலாமைக்கொண்டு ஆரம்பிப்பவர் பெருமையை விட்டும் நீங்கியவராவார்’. (நூல்: மிஷ்காத்)
‘எவருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர் சுவனம் நுழையமாட்டார்’ என நபிகளார் எச்சரிக்கை விடுத்திருப்பதில் இருந்தே பெருமையின் கோரமுகத்தை நாம் நன்கு எடைபோட்டுக் கொள்ளலாம்.
அற்புதமான ஆற்றல்மிக்க சலாமை நாம் நம்மவர்களுக்கு, குடும்பத்தார்களுக்கு, அக்கம்பக்கத்தவர்களுக்கு மனம் விட்டு, வாய்திறந்து சொல்வதற்கு ஒன்றுக்கு ஒன்பது முறை யோசிக்கிறோம்? அதுவும் தாய், தந்தை, மனைவி, மக்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. பெரும்பாலும் நாம் இவர்களுக்கு சலாம் சொல்வதேயில்லை. உண்மையில் இவர்களுக்குத்தான் நாம் முதன் முதலில் சலாம் கூற முன்வரவேண்டும்.
ஒருவருக்கு சலாம் கூறுவது விரும்பத்தகுந்தது. ஆனால், ஒருவர் நமக்கு சலாம் கூறினால், அவருக்கு நாம் கட்டாயம் பதில் சலாம் கூறியே ஆகவேண்டும் என்று இஸ்லாம் வரையறை செய்து வகுத்து வைத்திருக்கிறது. இதன் வழியாக பதில் சலாமின் அவசியத்தை நாம் நன்கறிந்து கொள்ளமுடியும்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்’, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு’ என்று ஓரிரு நல்வார்த்தைகளையும் அந்த சலாமுடன் சேர்த்து சொல்லலாம். பதில் சலாம் கூறுபவரும் இவ்வாறே சில வார்த்தைகளை இணைத்துக்கூறுவது கூடும். ஆக சொற்கள் கூடக்கூட நன்மைகளும் கூடிக்கொண்டேயிருக்கும்.
இந்த சலாம் ஆண்களுக்கு மட்டும் குறிப்பானதல்ல. பெண்களும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வார்கள். இதில் சிறியவர்கள் தான் பெரியவர்களுக்கு முதலில் சலாம் சொல்ல வேண்டும் என்றிருந்தாலும் கூட நன்மையை பெற்றுக்கொள்வதிலும், நன்மையை கற்றுத்தருவதிலும் பெரியவர்கள் முந்திக்கொள்வது தவறல்ல.
‘இம்மண்ணிற்குக் கீழே உள்ளவர்களுக்கும், அதாவது இறந்துபோனவர்களுக்கும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்றால் அவர்களுக்கும் நீங்கள் சலாம் சொல்லுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லுரை கூறினார்கள்.
ஒரு இறை விசுவாசி, இன்னொரு விசுவாசிக்கு தார்மீக ரீதியாகச் செய்யவேண்டிய ஆறு அருங்கடமைகளில் முதற்கடமையாக இந்த சலாமைத்தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது. எனவே சலாம் என்பது சர்வ சாதாரணமான ஒரு சொல்லல்ல, அது சர்வ தரங்களும் நிறைந்த ஒரு சொல் என்பது மட்டும் நிச்சயம்.
வாருங்கள்... எங்கும் சலாமைப் பரப்புவோம்... என்றும் சாந்தியை நிரப்புவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.
படைப்புகள் அனைத்தும் இணைகளாக இருத்தல் என்பது இறைவனின் பொது நியதி ஆகும். இதற்கு மனிதன், விலங்குகள் என்று எதுவும் இதற்கு விதி விலக்கு அல்ல.
‘‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில் இருந்து படிப்பினை பெறக்கூடும்’’ என்கிறது திருக்குர்ஆன் (51:49).
இவ்வாறு படைக்கப்பட்ட மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் சார்ந்தே வாழ வேண்டும்; அவர்கள் சேர்ந்தே வாழ வேண்டும்.
திருமணம் என்பதை அரபி மொழியில் ‘நிகாஹ்’ என்பர். இணைத்தல், சேர்த்தல் என்பது இதன் பொருளாகும். இருமனங்கள் இணைவதே திருமணம். திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.
‘‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்தில் இருந்தே மனைவியரைப் படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’’ என்று திருமறையில் (30:21) இறைவன் கூறுகின்றான்.
திருமணத்தின் அவசியம் குறித்து இறைமறையும், நபிமொழியும் பெரிதும் வலியுறுத்துவதைக் காணலாம்.
‘‘(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாவிட்டால் அவர் களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து விடுங்கள்’’ என்பது திருமறை (24:32) வசனம்.
‘‘இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி பெற்றவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது’’
‘‘திருமணம் என்பது எனது வழிமுறை; இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’
மேற்கண்ட இந்த நபிமொழிகள் திருமணத்தின் மேன்மையைப் பறை சாற்றும் வைர வரிகள்.
இஸ்லாமியத் திருமணம் என்பது ஆண்–பெண் ஆகிய இருவருக்கு இடையே செய்யப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். ஒப்புக்கொள்வதாலேயே அது ஒப்பந்தம். இதை ஆங்கிலத்தில் ‘அக்ரிமெண்ட்’ என்கிறோம். ‘அக்ரி’ என்பதற்கு தமிழில் சம்மதம் என்று அர்த்தம்.
இதைத்தான் திருக்குர்ஆனில், ‘‘சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே; மேலும் அந்த மனைவியர் உங்களிடம் இருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கிறார்களே’’ (4:21) என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
கட்டாயத் திருமணத்தை இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. முறைப்படி மணமகன், மணமகளின் சம்மதம் பெறுவதே இஸ்லாமிய திருமண முறையாகும்.
‘இறை நம்பிக்கையாளர்களே! பெண்களை அவர்கள் விருப்பமின்றி (கட்டாயப்படுத்தி) நீங்கள் உரிமையாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல’ என்று திருமறை (4:9) கூறுகிறது.
இஸ்லாமியத் திருமணங்களில் சடங்குகள் இல்லை. சுருங்கச்சொன்னால் அது ஒரு பதிவுத்திருமணம். திருமணப் பதிவுப்பத்திரத்தில் மணமகனும், மணமகளும் கையெழுத்திட வேண்டும். அதேபோல, மணமகனின் தந்தையும், மணமகளின் தந்தையும் ஒப்புதல் அளித்து ஒப்பமிட வேண்டும். பொதுவான சாட்சிகள் இருவர் முன்னிலையில், இமாம் திருமணத்தை நடத்தி வைப்பார்.
திருமணத்திற்கு முன்பே மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணக்க விரும்பி பெண் பேசினார். அவரிடம் நபிகளார், ‘‘அந்தப் பெண்ணை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களிடையே அன்பு நிலைத்திருக்க உதவும்’’ என்றார்கள்.
இஸ்லாமியத் திருமணங்களில் இன்னொரு சிறப்பும் உண்டு. ‘மஹர்’ கொடுத்து செய்யப்படும் திருமணமே உயர்ந்த திருமணம் என்பது மட்டுமல்ல; முறையான திருமணமும் ஆகும். இதுவே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் திருமணமாகும். ‘மஹர்’ என்பது திரு மணத்தின்போது மணமகன், மணமகளுக்கு அளிக்க வேண்டிய மணக்கொடையாகும்.
‘வசதியுள்ளவன் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவன் தனது சக்திக்கு ஏற்பவும் (மஹரை) நல்ல முறையில் கொடுத்திட வேண்டும்’ (2:236) என்றும், ‘பெண்களுக்கு அவர்களுக்கு உரிய மஹரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்து விடுங்கள்’ (4:4) என்றும் திருமறை தெரிவிக்கிறது.
திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகின்ற வகையிலே அமைந்துள்ள இந்த ‘மஹர்’, தான் கைப்பிடித்த பெண்ணுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளைத் தன்னால் இயன்றளவு செய்து தருவேன் என்று மணமகன் அளிக்கும் ஓர் உத்தரவாதமாகும்.
‘திருமணத்தில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் அவர்களுக்குத் தரும் ‘மஹர்’ தான்’ என்பது நபிகளாரின் கூற்றாகும்.
மஹரைப் பணமாகவோ அல்லது நகையாகவோ, பொருளாகவோ வழங்கலாம். மஹர் எவ்வளவு அதிகமாகவும் செலுத்தலாம். அதற்கு உச்சவரம்பு கிடையாது.
‘நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு செல்வக் குவியலையே (மஹராகக்) கொடுத்திருந்தாலும்கூட அதில் இருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளாதீர்கள்’ (4:20) என்பது இறைமறை வசனம்.
திருமணத்தின்போது கட்டாயம் ‘மஹர்’ வழங்க வேண்டும் என்பதால், இஸ்லாமியத் திருமணங்களில் வரதட்சணைக்கு தானாகவே தடை விதிக்கப்படுகிறது.
‘‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில் இருந்து படிப்பினை பெறக்கூடும்’’ என்கிறது திருக்குர்ஆன் (51:49).
இவ்வாறு படைக்கப்பட்ட மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் சார்ந்தே வாழ வேண்டும்; அவர்கள் சேர்ந்தே வாழ வேண்டும்.
திருமணம் என்பதை அரபி மொழியில் ‘நிகாஹ்’ என்பர். இணைத்தல், சேர்த்தல் என்பது இதன் பொருளாகும். இருமனங்கள் இணைவதே திருமணம். திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.
‘‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்தில் இருந்தே மனைவியரைப் படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’’ என்று திருமறையில் (30:21) இறைவன் கூறுகின்றான்.
திருமணத்தின் அவசியம் குறித்து இறைமறையும், நபிமொழியும் பெரிதும் வலியுறுத்துவதைக் காணலாம்.
‘‘(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாவிட்டால் அவர் களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து விடுங்கள்’’ என்பது திருமறை (24:32) வசனம்.
‘‘இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி பெற்றவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது’’
‘‘திருமணம் என்பது எனது வழிமுறை; இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’
மேற்கண்ட இந்த நபிமொழிகள் திருமணத்தின் மேன்மையைப் பறை சாற்றும் வைர வரிகள்.
இஸ்லாமியத் திருமணம் என்பது ஆண்–பெண் ஆகிய இருவருக்கு இடையே செய்யப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். ஒப்புக்கொள்வதாலேயே அது ஒப்பந்தம். இதை ஆங்கிலத்தில் ‘அக்ரிமெண்ட்’ என்கிறோம். ‘அக்ரி’ என்பதற்கு தமிழில் சம்மதம் என்று அர்த்தம்.
இதைத்தான் திருக்குர்ஆனில், ‘‘சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே; மேலும் அந்த மனைவியர் உங்களிடம் இருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கிறார்களே’’ (4:21) என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
கட்டாயத் திருமணத்தை இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. முறைப்படி மணமகன், மணமகளின் சம்மதம் பெறுவதே இஸ்லாமிய திருமண முறையாகும்.
‘இறை நம்பிக்கையாளர்களே! பெண்களை அவர்கள் விருப்பமின்றி (கட்டாயப்படுத்தி) நீங்கள் உரிமையாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல’ என்று திருமறை (4:9) கூறுகிறது.
இஸ்லாமியத் திருமணங்களில் சடங்குகள் இல்லை. சுருங்கச்சொன்னால் அது ஒரு பதிவுத்திருமணம். திருமணப் பதிவுப்பத்திரத்தில் மணமகனும், மணமகளும் கையெழுத்திட வேண்டும். அதேபோல, மணமகனின் தந்தையும், மணமகளின் தந்தையும் ஒப்புதல் அளித்து ஒப்பமிட வேண்டும். பொதுவான சாட்சிகள் இருவர் முன்னிலையில், இமாம் திருமணத்தை நடத்தி வைப்பார்.
திருமணத்திற்கு முன்பே மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணக்க விரும்பி பெண் பேசினார். அவரிடம் நபிகளார், ‘‘அந்தப் பெண்ணை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களிடையே அன்பு நிலைத்திருக்க உதவும்’’ என்றார்கள்.
இஸ்லாமியத் திருமணங்களில் இன்னொரு சிறப்பும் உண்டு. ‘மஹர்’ கொடுத்து செய்யப்படும் திருமணமே உயர்ந்த திருமணம் என்பது மட்டுமல்ல; முறையான திருமணமும் ஆகும். இதுவே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் திருமணமாகும். ‘மஹர்’ என்பது திரு மணத்தின்போது மணமகன், மணமகளுக்கு அளிக்க வேண்டிய மணக்கொடையாகும்.
‘வசதியுள்ளவன் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவன் தனது சக்திக்கு ஏற்பவும் (மஹரை) நல்ல முறையில் கொடுத்திட வேண்டும்’ (2:236) என்றும், ‘பெண்களுக்கு அவர்களுக்கு உரிய மஹரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்து விடுங்கள்’ (4:4) என்றும் திருமறை தெரிவிக்கிறது.
திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகின்ற வகையிலே அமைந்துள்ள இந்த ‘மஹர்’, தான் கைப்பிடித்த பெண்ணுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளைத் தன்னால் இயன்றளவு செய்து தருவேன் என்று மணமகன் அளிக்கும் ஓர் உத்தரவாதமாகும்.
‘திருமணத்தில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் அவர்களுக்குத் தரும் ‘மஹர்’ தான்’ என்பது நபிகளாரின் கூற்றாகும்.
மஹரைப் பணமாகவோ அல்லது நகையாகவோ, பொருளாகவோ வழங்கலாம். மஹர் எவ்வளவு அதிகமாகவும் செலுத்தலாம். அதற்கு உச்சவரம்பு கிடையாது.
‘நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு செல்வக் குவியலையே (மஹராகக்) கொடுத்திருந்தாலும்கூட அதில் இருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளாதீர்கள்’ (4:20) என்பது இறைமறை வசனம்.
திருமணத்தின்போது கட்டாயம் ‘மஹர்’ வழங்க வேண்டும் என்பதால், இஸ்லாமியத் திருமணங்களில் வரதட்சணைக்கு தானாகவே தடை விதிக்கப்படுகிறது.
சமூகம் நம்மைப் போற்ற வேண்டும் என்றால் அதற்குத் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தனது பாலுணர்வையும், இச்சைகளையும் தீர்த்துக் கொள்வதற்காக இயற்கையோடு இயைந்த வழி முறையே திருமணம் ஆகும். இது தனிப்பட்ட ஒரு மனிதனைப் பொறுத்தவரை கெட்ட செயலில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது; பாவமான மனோபாவங்களில் இருந்து உள்ளங்களைத் திசை திருப்புகிறது.
குழந்தைகளைப் பெறுவதாலும், வம்சாவளி பெருகுவதாலும் குடும்ப பரம்பரை முறை பாதுகாப்புப் பெறுகிறது. இது சமுதாயம் பெறுகின்ற பெறுதற்கரிய பெரும் பேறாகும்.
அன்பு, கருணை, இரக்கம், பாசம், நேசம் ஆகியவை தாய்-தந்தை மூலமே கிடைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவற்றுக்கான மூலமே தாய்-தந்தையரே. இத்தகைய குணங்களே மானிட வர்க்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கேடயங்களாகத் திகழ்கின்றன.
ஒருவர் திருமணம் செய்வதால் அவருக்குத் தனிப்பட்ட முறையிலும், சமுதாயத்தைப் பொறுத்தவரை மொத்தமாகவும், மானிட வர்க்கத்திற்குப் பொதுவாகவும் பலவிதப் பலன்கள் ஏற்படுவதால்தான் திருமணம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது; வற்புறுத்துகிறது.
அதே நேரத்தில் துறவறக் கோட்பாட்டை இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்வணக் கங்களைக் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக மூன்று தோழர்கள் அவர்களது வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்களிடம் நபிகளார், தான் மேற்கொண்டு வரும் வணக்க வழிபாடுகள் பற்றி எடுத்துரைத்தார்கள். தாங்கள் செய்து வரும் நல்வணக்கங்கள் நபிகளாருடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானது என அவர்கள் கருதினர். இதனால் ஒரு தோழர் இரவெல்லாம் கண் விழித்து இறைவனை வணங்கப் போவதாகவும், மற்றொருவர் தாம் பகலெல்லாம் நோன்பு நோற்கப் போவதாகவும், இன்னொரு தோழர் தாம் இனிமேல் மனைவியை நெருங்குவதில்லை என்ற உறுதிமொழியை மொழிந்தனர்.
அப்போது அவர்களிடம் நபிகளார், “நீங்கள்தானா இவ்வாறு கூறியது? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் உங்களில் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும் பயப்படுபவனாகவும் இருக்கின்றேன். ஆயினும் நான் (சில தினங்கள்) நோன்பு நோற்கிறேன். (சில தினங்கள்) நோன்பு நோற்காமல் இருக்கிறேன். (இரவில்) நான் தொழுகிறேன். உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடித்து இல்லற வாழ்வையும் மேற்கொண்டுள்ளேன். யார் என் வழி முறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
எல்லாச் செயல்களிலும் நடுநிலையைப் பேணுகின்ற மார்க்கம், இஸ்லாம். காட்டாற்று வெள்ளம் போல கட்டுப்பாடில்லாமல் மனம் போன போக்கில் செல்லும் வாழ்க்கை முறையை இஸ்லாம் வெறுக்கிறது. அதே நேரத்தில் உலக இச்சைகளை முற்றாகத் துறந்து, துறவு மேற்கொள்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. இரண்டுக்கும் இடையில், முறையான திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டு நெறி தவறாமல் வாழ்வதையே இஸ்லாம் வரவேற்கிறது.
எந்த வகையில் மற்ற மதங்களில் இருந்து இஸ்லாம் முற்றாக வேறுபடுகிறது என்றால், இவ்வுலக வாழ்க்கையை முற்றும் துறக்காமல், உலக இன்பங்களை முறை தவறாமல் நுகர்ந்தபடி இறைவனை அடையலாம் என்கிறது இஸ்லாம்.
இஸ்லாம், மறுமையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது; ஆனால் அது இம்மை வாழ்க்கையை இம்மி அளவுகூட நிராகரிக்கவில்லை.
இந்த உலக வாழ்க்கையை உதறி விடுங்கள்; மறு உலக வாழ்க்கையே மகிழ்ச்சிக்குரிய வழி என்று இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை.
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையை அளிப்பாயாக!” (திருக்குர்ஆன்-2:201) என்ற பிரார்த்தனையே முஸ்லிம்களின் வாழ்க்கையில் பிரதானமாக இருக் கிறது.
இஸ்லாம் ஓர் இயற்கையான மார்க்கம். பசி மற்றும் தாகத்தை எப்படி மனிதனால் கட்டுப்படுத்த முடியாதோ அதை போலவே உடல் இச்சையும் கட்டுப்படுத்த முடியாத இயற்கையின் தேட்டமாக இருக்கிறது. இதனால் இயற்கைக்கு எதிரான எந்தச் செயலையும் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை இஸ்லாம் வரவேற்பதில்லை.
ரத்த பந்த உறவுகள், குடும்பங்களுக்கிடையே இணக்கங்கள், சமூகத் தொடர்புகள் வலுப்பெறுவதற்கு திருமணம் முக்கியக் காரணமாக மட்டுமல்ல; முழு முதற்காரணமாகவும் இருக்கின்றது. துறவறம் மேற்கொள்வதால் மனித உறவுகளில் பிரிவு ஏற்படுகிறது. சொந்தங்கள் துண்டாடப்படுகின்றன. பந்தங்கள் பந்தாடப்படுகின்றன. இது இறைவனும் இயற்கையும் வகுத்துத் தந்த கட்டமைப்புக்கு எதிரானது.
மேலும் மனிதர்களாய் பிறந்தவர்களை கடவுளுக்கு நிகராகவோ அல்லது கடவுளுக்கு இணையாகவோ போற்றிப்புகழ்வதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது. ‘இவர் நடமாடும் தெய்வம்’ ‘வணக்கத்திற்கு மாமனிதர்’ ‘அவருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும்’ என்பன போன்ற வார்த்தைகளுக்கே ‘தடை’ போட்ட மார்க்கம், இஸ்லாம். இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களுக்கு தூபம் போடுகிற துறவறத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.
இஸ்லாம் மார்க்கம் உலக வாழ்க்கையை ‘இழிபிறப்பு’ என்று என்றைக்கும் கூறியதில்லை. உலக வாழ்க்கையை ‘நல்வாய்ப்பு’ என்றும், வாழ்வாங்கு வாழ்ந்து விதிக்கப்பட்ட சமூகக் கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. சமூகக் கடமையில் இருந்து நழுவிச் செல்லும் மார்க்கமல்ல, இஸ்லாம். கடமை உணர்வு மிக்க வாழ்க்கை முறையே இஸ்லாம்.
தன்னலம் இல்லாமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும்; சமூகம் நம்மைப் போற்ற வேண்டும் என்றால் அதற்குத் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. முறையான திருமண உறவில் ஈடுபட்டும் மக்களுக்கு நன்மை செய்யலாம்.
இறைத்தூதர்கள் அனைவருமே இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள்தாம்.
குழந்தைகளைப் பெறுவதாலும், வம்சாவளி பெருகுவதாலும் குடும்ப பரம்பரை முறை பாதுகாப்புப் பெறுகிறது. இது சமுதாயம் பெறுகின்ற பெறுதற்கரிய பெரும் பேறாகும்.
அன்பு, கருணை, இரக்கம், பாசம், நேசம் ஆகியவை தாய்-தந்தை மூலமே கிடைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவற்றுக்கான மூலமே தாய்-தந்தையரே. இத்தகைய குணங்களே மானிட வர்க்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கேடயங்களாகத் திகழ்கின்றன.
ஒருவர் திருமணம் செய்வதால் அவருக்குத் தனிப்பட்ட முறையிலும், சமுதாயத்தைப் பொறுத்தவரை மொத்தமாகவும், மானிட வர்க்கத்திற்குப் பொதுவாகவும் பலவிதப் பலன்கள் ஏற்படுவதால்தான் திருமணம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது; வற்புறுத்துகிறது.
அதே நேரத்தில் துறவறக் கோட்பாட்டை இஸ்லாம் தடை செய்துள்ளது.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்வணக் கங்களைக் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக மூன்று தோழர்கள் அவர்களது வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்களிடம் நபிகளார், தான் மேற்கொண்டு வரும் வணக்க வழிபாடுகள் பற்றி எடுத்துரைத்தார்கள். தாங்கள் செய்து வரும் நல்வணக்கங்கள் நபிகளாருடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானது என அவர்கள் கருதினர். இதனால் ஒரு தோழர் இரவெல்லாம் கண் விழித்து இறைவனை வணங்கப் போவதாகவும், மற்றொருவர் தாம் பகலெல்லாம் நோன்பு நோற்கப் போவதாகவும், இன்னொரு தோழர் தாம் இனிமேல் மனைவியை நெருங்குவதில்லை என்ற உறுதிமொழியை மொழிந்தனர்.
அப்போது அவர்களிடம் நபிகளார், “நீங்கள்தானா இவ்வாறு கூறியது? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் உங்களில் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவும் பயப்படுபவனாகவும் இருக்கின்றேன். ஆயினும் நான் (சில தினங்கள்) நோன்பு நோற்கிறேன். (சில தினங்கள்) நோன்பு நோற்காமல் இருக்கிறேன். (இரவில்) நான் தொழுகிறேன். உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடித்து இல்லற வாழ்வையும் மேற்கொண்டுள்ளேன். யார் என் வழி முறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
எல்லாச் செயல்களிலும் நடுநிலையைப் பேணுகின்ற மார்க்கம், இஸ்லாம். காட்டாற்று வெள்ளம் போல கட்டுப்பாடில்லாமல் மனம் போன போக்கில் செல்லும் வாழ்க்கை முறையை இஸ்லாம் வெறுக்கிறது. அதே நேரத்தில் உலக இச்சைகளை முற்றாகத் துறந்து, துறவு மேற்கொள்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. இரண்டுக்கும் இடையில், முறையான திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டு நெறி தவறாமல் வாழ்வதையே இஸ்லாம் வரவேற்கிறது.
எந்த வகையில் மற்ற மதங்களில் இருந்து இஸ்லாம் முற்றாக வேறுபடுகிறது என்றால், இவ்வுலக வாழ்க்கையை முற்றும் துறக்காமல், உலக இன்பங்களை முறை தவறாமல் நுகர்ந்தபடி இறைவனை அடையலாம் என்கிறது இஸ்லாம்.
இஸ்லாம், மறுமையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது; ஆனால் அது இம்மை வாழ்க்கையை இம்மி அளவுகூட நிராகரிக்கவில்லை.
இந்த உலக வாழ்க்கையை உதறி விடுங்கள்; மறு உலக வாழ்க்கையே மகிழ்ச்சிக்குரிய வழி என்று இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை.
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையை அளிப்பாயாக!” (திருக்குர்ஆன்-2:201) என்ற பிரார்த்தனையே முஸ்லிம்களின் வாழ்க்கையில் பிரதானமாக இருக் கிறது.
இஸ்லாம் ஓர் இயற்கையான மார்க்கம். பசி மற்றும் தாகத்தை எப்படி மனிதனால் கட்டுப்படுத்த முடியாதோ அதை போலவே உடல் இச்சையும் கட்டுப்படுத்த முடியாத இயற்கையின் தேட்டமாக இருக்கிறது. இதனால் இயற்கைக்கு எதிரான எந்தச் செயலையும் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை இஸ்லாம் வரவேற்பதில்லை.
ரத்த பந்த உறவுகள், குடும்பங்களுக்கிடையே இணக்கங்கள், சமூகத் தொடர்புகள் வலுப்பெறுவதற்கு திருமணம் முக்கியக் காரணமாக மட்டுமல்ல; முழு முதற்காரணமாகவும் இருக்கின்றது. துறவறம் மேற்கொள்வதால் மனித உறவுகளில் பிரிவு ஏற்படுகிறது. சொந்தங்கள் துண்டாடப்படுகின்றன. பந்தங்கள் பந்தாடப்படுகின்றன. இது இறைவனும் இயற்கையும் வகுத்துத் தந்த கட்டமைப்புக்கு எதிரானது.
மேலும் மனிதர்களாய் பிறந்தவர்களை கடவுளுக்கு நிகராகவோ அல்லது கடவுளுக்கு இணையாகவோ போற்றிப்புகழ்வதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது. ‘இவர் நடமாடும் தெய்வம்’ ‘வணக்கத்திற்கு மாமனிதர்’ ‘அவருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும்’ என்பன போன்ற வார்த்தைகளுக்கே ‘தடை’ போட்ட மார்க்கம், இஸ்லாம். இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களுக்கு தூபம் போடுகிற துறவறத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.
இஸ்லாம் மார்க்கம் உலக வாழ்க்கையை ‘இழிபிறப்பு’ என்று என்றைக்கும் கூறியதில்லை. உலக வாழ்க்கையை ‘நல்வாய்ப்பு’ என்றும், வாழ்வாங்கு வாழ்ந்து விதிக்கப்பட்ட சமூகக் கடமைகளை ஆற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. சமூகக் கடமையில் இருந்து நழுவிச் செல்லும் மார்க்கமல்ல, இஸ்லாம். கடமை உணர்வு மிக்க வாழ்க்கை முறையே இஸ்லாம்.
தன்னலம் இல்லாமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும்; சமூகம் நம்மைப் போற்ற வேண்டும் என்றால் அதற்குத் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. முறையான திருமண உறவில் ஈடுபட்டும் மக்களுக்கு நன்மை செய்யலாம்.
இறைத்தூதர்கள் அனைவருமே இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்கள்தாம்.
குழந்தை பராமரிப்பு பற்றி பல இடங்களில் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை எனவும் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போதும், தொழும்போதும் அவரது பேரக்குழந்தைகள் ஹஸனும், ஹுசைனும் அவரது கால்களுக்கிடையேயும், கழுத்தில் ஏறியும் விளையாடுவார்கள்.
இதைப்பார்த்த தோழர்கள், ‘இறைத்தூதரே இந்த அளவுக்கா இருவரையும் நீங்கள் விரும்புகிறீர்கள்?’ எனக்கேட்டார்கள்.
அதற்கு நபிகளார், ‘ஏன் இல்லை? இவர்கள் இருவரும் என்னுடைய இவ்வுலக செல்வம் இல்லையா?’ என்றார்கள்.
நபிகள் நாயகம் தனது பேரக்குழந்தைகள் மீது காட்டிய அன்பின் வெளிப்பாடுதான் இச்சம்பவம். இதுபோன்று எத்தனையோ உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குழந்தைகளை அன்பொழுக நேசித்தவர்கள் நபிகள் நாயகம்.
குழந்தைகள் இவ்வுலகத்தில் கிடைத்த எல்லா செல்வங்களை விடவும் மேலானவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்தே தனது பேச்சை, செயலை அமைத்துக்கொள்பவர்கள். குழந்தைகளின் செயல் களுக்கு பொறுப்புதாரியாக பெற்றோர்களே இருக் கிறார்கள். அதனால் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். அவர்களுக்கு எதுமாதிரியான செயல்களை கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற புரிதல், அக்கறை பெற்றோர்களுக்கு இருத்தல் வேண்டும்.
குழந்தை பராமரிப்பு பற்றி பல இடங்களில் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை எனவும் கூறுகிறது. குழந்தைகள் தந்தையைவிட தாயிடமே அதிக நேரத்தை செலவிடுகின்றன. குழந்தை வளர்ப்பில் தந்தையைவிட தாய்க்கு அதிக கடமைகளும், பொறுப்புகளும் இருக்கின்றன.
‘தன் குழந்தையை பராமரிப்பதற்காக ஒரு தாய்க்கு கிடைக்கும் கூலி பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்கும் ஒருவருடைய கூலியை போன்றது’ என்கிறார்கள் நபிகள் நாயகம்.
நோன்பு நோற்பதும், இறைவனை தொழுது வணங்குவதும் இஸ்லாமிய கடமைகளில் ஒன்று. அதற்கு நிகரான நன்மையை தன் குழந்தையை பராமரிப்பதற்கு இஸ்லாம் வழங்குகிறது என்பதிலிருந்தே குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் எவ்வளவு முக்கியத்துவம் தரு கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு படிக்க வேண்டும், நிறைய செல்வங்களை ஈட்ட வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைப்பதுபோல் நல்லொழுக்கம் உள்ளவர்களாக, நற்சிந்தனை நிறைந்தவர்களாக வளர வேண்டும் என்றும் நினைக்க வேண்டும். அதற்கான செயற்காரியங்களிலும் இறங்க வேண்டும்.
‘இரண்டு கைநிறைய (பொருட்களை தினமும்) தர்மம் செய்வதைவிட ஒரு தந்தை தன் மகனுக்கு நல்லொழுக்கம் கற்றுக் கொடுப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது’ என நபிகள் நாயகம் கூறினார்கள்.
‘தர்மம் தலைகாக்கும்’ என்று சொல்வார்கள். ஆனால் தர்மத்தைவிட கூடுதலான சிறப்பை குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் கற்றுத்தருவதற்கு கொடுக் கிறார்கள், நபிகளார். நல்லொழுக்கத்துடன் வளரும் குழந்தைகளால்தான் சிறந்த சமுதாயத்தை கட்டி எழுப்பிட முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள்.

மனிதர்கள் தவறு இழைக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகள் தவறு செய்பவர்கள்தான். அதற்காக அவர்களை அடிப்பதும், திட்டுவதும், அதன்மூலம் அவர்களை திருத்திவிடலாம் என்று நினைப்பதும் தவறானதாகும்.
குழந்தைகளின் வளர்ப்பில் கூடுதல் அக்கறையும், பொறுமையான அறிவுறுத்தலுமே குழந்தைகளுக்கு போதுமானது. கறாராக நடந்துகொண்டால் மட்டுமே அவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற் படுத்தி விடும்.
ஒருவரின் தவறை அழகிய முறையில் சுட்டிக்காட்டு வதற்கும், திருத்துவதற்கும் நபிகள் நாயகம் பல அணுகுமுறைகளை கடைப்பிடித்திருக்கிறார்கள்.
ஒருமுறை பிலால் (ரலி) அவர்கள் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்லும்போது அபுமஸ்தூரா என்பவர் அதை கிண்டல் செய்கிறார். இச்செய்தி நபிகள் நாயகத்திற்கு எட்டுகிறது. இதற்காக கோபப்பட்டு அவரை அழைத்து கண்டிக்கவில்லை. என்ன செய்தார்கள் தெரியுமா?
அபுமஸ்தூரை அழைத்தார்கள், ‘உனது குரல் அழகாக இருக்குமாமே. எங்கே நான் உனக்கு பாங்கு சொல்ல கற்றுத்தரட்டுமா?’ என்று கேட்டார்கள். அதோடு, அவருக்கு மக்கள் முன்னிலையில் பாங்கு எவ்வாறு சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவரின் நெஞ்சிலும், முன்நெற்றியிலும் தடவினார்கள். ‘இனி நீர்தான் மக்காவாசிகள் முஅத்தின்’ என்று அறிவித்தார்கள்.
தனது தவறை உணர்ந்துகொண்ட அபுமஸ்தூரா அன்றுமுதல் அவருடைய 40 வயது வரை மக்காவின் முஅத்தினாக (பாங்கு சொல்பவராக) இருந்தார்கள்.
கிண்டல் செய்தவரிடமே அந்த பொறுப்பை கொடுத்தார்கள். இதுபோன்றதொரு அணுகுமுறையை குழந்தைகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கலாம்.
குழந்தைகளை அனைத்து பெற்றோர்களும் நேசிப்பவர்கள்தாம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களை வளர்ப்பதில் பலர் அக்கறையுடன் செயல் படுவதில்லை.
குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டிட வேண்டும். குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக, நற்சிந்தனையுடையவர்களாக, இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளின்படி வளர்க்க முற்படவேண்டும். அதுதான் சிறந்த சமுதாயத்தை கட்டி யெழுப்புவதற்கு முதற்படியாகும்.
வி.களத்தூர் எம்.பாரூக்.
இதைப்பார்த்த தோழர்கள், ‘இறைத்தூதரே இந்த அளவுக்கா இருவரையும் நீங்கள் விரும்புகிறீர்கள்?’ எனக்கேட்டார்கள்.
அதற்கு நபிகளார், ‘ஏன் இல்லை? இவர்கள் இருவரும் என்னுடைய இவ்வுலக செல்வம் இல்லையா?’ என்றார்கள்.
நபிகள் நாயகம் தனது பேரக்குழந்தைகள் மீது காட்டிய அன்பின் வெளிப்பாடுதான் இச்சம்பவம். இதுபோன்று எத்தனையோ உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குழந்தைகளை அன்பொழுக நேசித்தவர்கள் நபிகள் நாயகம்.
குழந்தைகள் இவ்வுலகத்தில் கிடைத்த எல்லா செல்வங்களை விடவும் மேலானவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்தே தனது பேச்சை, செயலை அமைத்துக்கொள்பவர்கள். குழந்தைகளின் செயல் களுக்கு பொறுப்புதாரியாக பெற்றோர்களே இருக் கிறார்கள். அதனால் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். அவர்களுக்கு எதுமாதிரியான செயல்களை கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற புரிதல், அக்கறை பெற்றோர்களுக்கு இருத்தல் வேண்டும்.
குழந்தை பராமரிப்பு பற்றி பல இடங்களில் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை எனவும் கூறுகிறது. குழந்தைகள் தந்தையைவிட தாயிடமே அதிக நேரத்தை செலவிடுகின்றன. குழந்தை வளர்ப்பில் தந்தையைவிட தாய்க்கு அதிக கடமைகளும், பொறுப்புகளும் இருக்கின்றன.
‘தன் குழந்தையை பராமரிப்பதற்காக ஒரு தாய்க்கு கிடைக்கும் கூலி பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்கும் ஒருவருடைய கூலியை போன்றது’ என்கிறார்கள் நபிகள் நாயகம்.
நோன்பு நோற்பதும், இறைவனை தொழுது வணங்குவதும் இஸ்லாமிய கடமைகளில் ஒன்று. அதற்கு நிகரான நன்மையை தன் குழந்தையை பராமரிப்பதற்கு இஸ்லாம் வழங்குகிறது என்பதிலிருந்தே குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் எவ்வளவு முக்கியத்துவம் தரு கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு படிக்க வேண்டும், நிறைய செல்வங்களை ஈட்ட வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைப்பதுபோல் நல்லொழுக்கம் உள்ளவர்களாக, நற்சிந்தனை நிறைந்தவர்களாக வளர வேண்டும் என்றும் நினைக்க வேண்டும். அதற்கான செயற்காரியங்களிலும் இறங்க வேண்டும்.
‘இரண்டு கைநிறைய (பொருட்களை தினமும்) தர்மம் செய்வதைவிட ஒரு தந்தை தன் மகனுக்கு நல்லொழுக்கம் கற்றுக் கொடுப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது’ என நபிகள் நாயகம் கூறினார்கள்.
‘தர்மம் தலைகாக்கும்’ என்று சொல்வார்கள். ஆனால் தர்மத்தைவிட கூடுதலான சிறப்பை குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் கற்றுத்தருவதற்கு கொடுக் கிறார்கள், நபிகளார். நல்லொழுக்கத்துடன் வளரும் குழந்தைகளால்தான் சிறந்த சமுதாயத்தை கட்டி எழுப்பிட முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள்.

மனிதர்கள் தவறு இழைக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகள் தவறு செய்பவர்கள்தான். அதற்காக அவர்களை அடிப்பதும், திட்டுவதும், அதன்மூலம் அவர்களை திருத்திவிடலாம் என்று நினைப்பதும் தவறானதாகும்.
குழந்தைகளின் வளர்ப்பில் கூடுதல் அக்கறையும், பொறுமையான அறிவுறுத்தலுமே குழந்தைகளுக்கு போதுமானது. கறாராக நடந்துகொண்டால் மட்டுமே அவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற் படுத்தி விடும்.
ஒருவரின் தவறை அழகிய முறையில் சுட்டிக்காட்டு வதற்கும், திருத்துவதற்கும் நபிகள் நாயகம் பல அணுகுமுறைகளை கடைப்பிடித்திருக்கிறார்கள்.
ஒருமுறை பிலால் (ரலி) அவர்கள் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்லும்போது அபுமஸ்தூரா என்பவர் அதை கிண்டல் செய்கிறார். இச்செய்தி நபிகள் நாயகத்திற்கு எட்டுகிறது. இதற்காக கோபப்பட்டு அவரை அழைத்து கண்டிக்கவில்லை. என்ன செய்தார்கள் தெரியுமா?
அபுமஸ்தூரை அழைத்தார்கள், ‘உனது குரல் அழகாக இருக்குமாமே. எங்கே நான் உனக்கு பாங்கு சொல்ல கற்றுத்தரட்டுமா?’ என்று கேட்டார்கள். அதோடு, அவருக்கு மக்கள் முன்னிலையில் பாங்கு எவ்வாறு சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவரின் நெஞ்சிலும், முன்நெற்றியிலும் தடவினார்கள். ‘இனி நீர்தான் மக்காவாசிகள் முஅத்தின்’ என்று அறிவித்தார்கள்.
தனது தவறை உணர்ந்துகொண்ட அபுமஸ்தூரா அன்றுமுதல் அவருடைய 40 வயது வரை மக்காவின் முஅத்தினாக (பாங்கு சொல்பவராக) இருந்தார்கள்.
கிண்டல் செய்தவரிடமே அந்த பொறுப்பை கொடுத்தார்கள். இதுபோன்றதொரு அணுகுமுறையை குழந்தைகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கலாம்.
குழந்தைகளை அனைத்து பெற்றோர்களும் நேசிப்பவர்கள்தாம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களை வளர்ப்பதில் பலர் அக்கறையுடன் செயல் படுவதில்லை.
குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டிட வேண்டும். குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக, நற்சிந்தனையுடையவர்களாக, இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளின்படி வளர்க்க முற்படவேண்டும். அதுதான் சிறந்த சமுதாயத்தை கட்டி யெழுப்புவதற்கு முதற்படியாகும்.
வி.களத்தூர் எம்.பாரூக்.
“நம்பிக்கை கொண்டோர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” (திருக்குர்ஆன் 2:172) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மன அமைதியைப் பெறவும், உடல் நலத்தைப் பேணவும் மனிதனுக்கு இஸ்லாம் உன்னத நெறிகளை வகுத்துள்ளது. உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று போதித்த இஸ்லாம், உண்பதிலும் தூய்மையானவற்றையே உண்ண வேண்டும் என்று வற்புறுத்துகிறது.
“நம்பிக்கை கொண்டோர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” (திருக்குர்ஆன் 2:172) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மனித வாழ்வுக்கு முக்கிய தேவையானவை உணவு, உடை, உறைவிடம். இவற்றை நிறைவேற்ற வழிவகைகள் இருந்தாலும் அதைப் பெற வரைமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. கண்டவற்றை உண்டு வாழவும், கிடைத்தவற்றை அடைந்து மகிழவும் இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி இல்லை.
உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுகிறது. இதையே விதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், விலக்கப்பட்டது ‘ஹராம்’ என்றும் சொல்லலாம்.
“செத்த பிராணியும், ரத்தமும், பன்றி இறைச்சியும் அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவை ஆகும்” (திருக்குர்ஆன்-2:173) என்று திருமறை கூறுகிறது.
பன்றி இறைச்சியும், பன்றியில் இருந்து பெறப்படும் பொருட்களும் (பன்றியின் கொழுப்பு போன்றவை), இரையைக் கொல்வதற்காக நகம், பல் முதலியவற்றைப் பயன்படுத்துகின்ற விலங்குகள், பிற பிராணிகளைக் கூரிய நகத்தின் மூலம் கொன்று தின்னும் பறவைகள், ஊர்வன, புழு, செத்த பிராணிகள், முறைப்படி அறுக்கப்படாத பிராணிகள் மற்றும் பறவைகள் இன்னும் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எல்லாவிதமான ரத்தங்கள் இவை யாவும் மனிதனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
‘விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் கொண்ட ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாது என்று) நபிகளார் தடை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி).
கோரைப் பற்களால் கீறிக்கிழித்து பிராணிகளைத் தின்று வாழும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய், குள்ள நரி போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பது மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கோரை நகங்களைப் பயன்படுத்தி, பிற பிராணிகளைக் கொன்று தின்னும் கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகளின் மாமிசமும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே மனித இயல்புக்கு ஒவ்வாதவை ஆகும். இவற்றின் மாமிசத்தை உண்பதால், மனிதத்துக்கு எதிரான குணங்கள் மனிதனில் பிறக்க இடமுண்டு. தவிர அறிவியல் ரீதியாக இவற்றின் மாமிசம் நோய்களுக்குக் காரணமாகலாம். எனவே இவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது.
மனிதர்கள் இயற்கையாகவே செத்த பிராணியின் உணவை உண்பதை இழிவாகவே கருதுகிறார்கள். மேலும், ஆடு, மாடு போன்றவை உயிரோடு இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதில் இருந்து ரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் ரத்தம் வெளிப்படாது. இதனால் அந்த மாமிசத்துடன் உறைந்துபோன ரத்தத்தையும் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. ரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத கிருமிகள் இருக்கின்றன. அதனால்தான் ரத்தத்தை சாப்பிட இஸ்லாம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இறந்துபோன பிராணியின் இறைச்சியை உறைந்து போன ரத்தத்துடன் சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
பன்றியின் மாமிசம் தடை செய்யப்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. எல்லா விலங்குகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. அந்தக் கால்நடைகளின் உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிக்கிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகிறது. ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 110 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் 29 டிகிரி வெப்பத்திற்கு மேல் பன்றிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால்தான் அவை எப்போதும் சாக்கடையில் புரண்டு வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. எனவே பன்றியின் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதில்லை.
பன்றியின் இறைச்சி உண்பதால் மனிதனுக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. அந்த இறைச்சியில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கின்ற நாடாப்புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. உச்ச வெப்பத்திலும் இந்த புழுக்கள் சாவதில்லை. பன்றி இறைச்சியை உண்பதால் 60-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
அதிலும் குறிப்பாக பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் ‘எச் 1 என் 1’ என்ற வைரஸ் கிருமிகள் ‘ஆர்.என்.ஏ.’ மூலக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு உருமாறி மனிதர்களைத் தொற்றக்கூடியவை. இதைப் ‘பன்றிக்காய்ச்சல்’ என்கிறோம். இது தொடுவதால் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் முதியோர்களை எளிதில் தாக்கும். பலவித நோய்களின் உறைவிடமாகத் திகழ்கின்ற பன்றி இறைச்சியை உண்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.
ஹராம் ஆக்கப்பட்டவைகளில் நான்காவதாக, அல்லாஹ் அல்லாதவைகள் பெயரால் அறுக்கப்பட்ட மற்றும் அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட மாமிசங்களை உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற உயிரினங்களை அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவை இல்லை. செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “அது (கடல் நீர்) தூய்மையானது. அதன் இறந்தவை ஆகுமானவை” என்று நபிமொழி.
மீன் அல்லாத உயிரினங்களை அவசியம் அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீனை அறுக்காமல் உண்ணலாம். இதற்குக் காரணம் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற ரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இருந்து சிறிதளவு ரத்தம் கசியுமே தவிர ரத்தம் வடியாது; ரத்தம் பீறிட்டு ஓடாது. இதனால்தான் மீனை உயிரோடு அறுக்காமலும் உண்ணலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது.
“நம்பிக்கை கொண்டோர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” (திருக்குர்ஆன் 2:172) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மனித வாழ்வுக்கு முக்கிய தேவையானவை உணவு, உடை, உறைவிடம். இவற்றை நிறைவேற்ற வழிவகைகள் இருந்தாலும் அதைப் பெற வரைமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. கண்டவற்றை உண்டு வாழவும், கிடைத்தவற்றை அடைந்து மகிழவும் இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி இல்லை.
உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுகிறது. இதையே விதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், விலக்கப்பட்டது ‘ஹராம்’ என்றும் சொல்லலாம்.
“செத்த பிராணியும், ரத்தமும், பன்றி இறைச்சியும் அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவை ஆகும்” (திருக்குர்ஆன்-2:173) என்று திருமறை கூறுகிறது.
பன்றி இறைச்சியும், பன்றியில் இருந்து பெறப்படும் பொருட்களும் (பன்றியின் கொழுப்பு போன்றவை), இரையைக் கொல்வதற்காக நகம், பல் முதலியவற்றைப் பயன்படுத்துகின்ற விலங்குகள், பிற பிராணிகளைக் கூரிய நகத்தின் மூலம் கொன்று தின்னும் பறவைகள், ஊர்வன, புழு, செத்த பிராணிகள், முறைப்படி அறுக்கப்படாத பிராணிகள் மற்றும் பறவைகள் இன்னும் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எல்லாவிதமான ரத்தங்கள் இவை யாவும் மனிதனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
‘விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் கொண்ட ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாது என்று) நபிகளார் தடை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி).
கோரைப் பற்களால் கீறிக்கிழித்து பிராணிகளைத் தின்று வாழும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய், குள்ள நரி போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பது மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கோரை நகங்களைப் பயன்படுத்தி, பிற பிராணிகளைக் கொன்று தின்னும் கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகளின் மாமிசமும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே மனித இயல்புக்கு ஒவ்வாதவை ஆகும். இவற்றின் மாமிசத்தை உண்பதால், மனிதத்துக்கு எதிரான குணங்கள் மனிதனில் பிறக்க இடமுண்டு. தவிர அறிவியல் ரீதியாக இவற்றின் மாமிசம் நோய்களுக்குக் காரணமாகலாம். எனவே இவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது.
மனிதர்கள் இயற்கையாகவே செத்த பிராணியின் உணவை உண்பதை இழிவாகவே கருதுகிறார்கள். மேலும், ஆடு, மாடு போன்றவை உயிரோடு இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதில் இருந்து ரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் ரத்தம் வெளிப்படாது. இதனால் அந்த மாமிசத்துடன் உறைந்துபோன ரத்தத்தையும் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. ரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத கிருமிகள் இருக்கின்றன. அதனால்தான் ரத்தத்தை சாப்பிட இஸ்லாம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இறந்துபோன பிராணியின் இறைச்சியை உறைந்து போன ரத்தத்துடன் சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
பன்றியின் மாமிசம் தடை செய்யப்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. எல்லா விலங்குகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. அந்தக் கால்நடைகளின் உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிக்கிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகிறது. ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 110 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் 29 டிகிரி வெப்பத்திற்கு மேல் பன்றிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால்தான் அவை எப்போதும் சாக்கடையில் புரண்டு வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. எனவே பன்றியின் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதில்லை.
பன்றியின் இறைச்சி உண்பதால் மனிதனுக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. அந்த இறைச்சியில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கின்ற நாடாப்புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. உச்ச வெப்பத்திலும் இந்த புழுக்கள் சாவதில்லை. பன்றி இறைச்சியை உண்பதால் 60-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
அதிலும் குறிப்பாக பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் ‘எச் 1 என் 1’ என்ற வைரஸ் கிருமிகள் ‘ஆர்.என்.ஏ.’ மூலக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு உருமாறி மனிதர்களைத் தொற்றக்கூடியவை. இதைப் ‘பன்றிக்காய்ச்சல்’ என்கிறோம். இது தொடுவதால் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் முதியோர்களை எளிதில் தாக்கும். பலவித நோய்களின் உறைவிடமாகத் திகழ்கின்ற பன்றி இறைச்சியை உண்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.
ஹராம் ஆக்கப்பட்டவைகளில் நான்காவதாக, அல்லாஹ் அல்லாதவைகள் பெயரால் அறுக்கப்பட்ட மற்றும் அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட மாமிசங்களை உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற உயிரினங்களை அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவை இல்லை. செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “அது (கடல் நீர்) தூய்மையானது. அதன் இறந்தவை ஆகுமானவை” என்று நபிமொழி.
மீன் அல்லாத உயிரினங்களை அவசியம் அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீனை அறுக்காமல் உண்ணலாம். இதற்குக் காரணம் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற ரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இருந்து சிறிதளவு ரத்தம் கசியுமே தவிர ரத்தம் வடியாது; ரத்தம் பீறிட்டு ஓடாது. இதனால்தான் மீனை உயிரோடு அறுக்காமலும் உண்ணலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது.
சிறந்த மனிதாபிமான செயல்களின் மூலம் மிக உன்னதமான சொர்க்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக, ஆமீன்.
மனித வாழ்வின் உன்னதமான லட்சியம் எதுவாக இருக்கும்?.
‘இந்த உலக வாழ்வை விளைநிலமாக பயன்படுத்தி நல்லவைகளை விதைத்து, நன்மைகளை அறுவடை செய்து, மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’.
இது தான் மனித வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.
‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரியவன்’ என்று உறுதியாக நம்ப வேண்டும். அவன் வகுத்து தந்த தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். மேலும் பிற மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பலன் தரும் வகையில் தனது சொல்லையும், செயலையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான்: ‘ஒரு மனிதன் பிறருக்கு செய்த தீங்கை, பாதிப்புக்குள்ளானவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை’. அதே நேரத்தில், ‘சக மனிதர்கள் செய்த தீமையை மன்னித்து விட்டால் அதற்கு பிரதியாக இரட்டிப்பாக கூலியைத் தருகிறேன்’ என்று இறைவன் கூறுகின்றான்.
பிறரின் குறைகளை மறைப்பதும், பிறரின் தீமைகளை மன்னிப்பதும் சொர்க்கம் செல்ல சுலபமான வழி என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
அதுபோல, ‘பிறரை உயர்வாக கருதும் எண்ணம் சொர்க்கத்தை பெற்றுத் தரும்’. இதற்கு உதாரணமாய் ஒரு நிகழ்வு:
ஒருமுறை நபிகள் (ஸல்) தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ‘நான் இப்போது உங்களுக்கு இறைவனால் சொர்க்கவாதி என்று அறிவிக்கப்பட்டவரை அடையாளம் காட்டவா?’ என்று வினவினார்கள். தோழர்கள் ஆவலுடன் தொடர்ந்து கேட்டனர்.
‘இப்போது ஒருவர் நம்மை கடந்து செல்வார், அவர்தான் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர் இடது கையில் தன் காலணிகளை பிடித்தவராக ‘ஒளு’ (அங்க சுத்தம்) செய்த தண்ணீர் தாடியிலிருந்து வழிந்தோடிய வண்ணம் அந்த கூட்டத்தை கடந்து சென்றார்.
நபித்தோழர்களில் ஒருவருக்கு, ‘எந்த நல்ல செயலின் காரணமாக இத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை அவர் பெற்றார்’ என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
அவரிடம் சென்று, ‘உங்களுடன் இரண்டொரு நாட்கள் தங்க வேண்டும் அனுமதி தருவீர்களா?’ என்று கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னர் அவருடன் தங்கி அவரது அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்.
அப்போது அவரிடம் எந்த விதமான சிறப்பான நற்செயல்களையும் அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.
எனவே அவரிடமே கேட்டார், ‘நாங்கள் செய்வது போன்று தான் தொழுகை மற்றும் அன்றாட கடமைகளைத்தான் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீங்கள் சொர்க்கவாதி’ என்பதாக சொன்னார்கள். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவதற்கு நீங்கள் என்ன நற்செயல்களைச் செய்கிறீர்கள்? என்று அறிந்துகொள்ளவே உங்களுடன் தங்கினேன்’ என்றார்.
அதற்கு அவர், ‘நான் எல்லோரையும் போலத்தான் எனது கடமைகளைச் செய்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. எந்த சகோதர மனிதனையும் என் மனதளவில்கூட தாழ்வாக என்றுமே எண்ணுவதில்லை. ஒருவேளை அது தான் எனக்கு சிறப்பை பெற்றுதந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்’ என்று பதில் கூறினார்.

‘பக்கத்து வீட்டுகாரர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிப்பதும் சொர்க்கம் செல்ல சுலபமான வழியாகும்’. இதை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி இது:
ஒரு முறை, நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெண்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லி, நாளை மறுமையில் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்? என்று தோழர்கள் வினவினார்கள்.
‘ஒரு பெண்மணி இஸ்லாமிய கடமைகள் அத்தனையும் மிக சிறப்பாக நிறைவேற்றுகிறார். உபரியான தொழுகை, கூடுதலான நோன்புகளை நோற்கிறார். இறைவனுக்குச் செய்ய வேண்டிய எந்த கடமைகளிலும் சிறு குறை கூட செய்வதில்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சுமுகமான உறவோடு வாழ்வதில்லை’.
‘இன்னொரு பெண்மணியோ இறைகடமைகளை குறிப்பிட்ட அளவிலேயே செய்கிறார். அதிகப்படியான எந்த அமல்களையும் செய்யவில்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பாசத்தோடு வாழ்கிறார்’.
‘இந்த இருவரில் எவர் ஈடேற்றம் பெற்றவராய் இருப்பார்?’ என்பது நபித் தோழர்களின் கேள்வியாகும்.
கண்மணி நாயகம் கவலை தோய்ந்த முகத்தோடு சொன்னார்கள்: ‘முதல் பெண்மணி இறைகட்டளை ஆயிரம் தான் செய்திருந்தாலும், பிற மனிதர்களுடன் இணக்கமாக வாழாத காரணத்தினால், அவள் நரக நெருப்பிற்கு விறகாக மாறிவிடுவாள். இரண்டாவது பெண் இறைகட்டளைகளை அளவோடு செய்த போதிலும், அண்டை வீட்டாரை அன்போடு அரவணைத்ததால், அவள் சொர்க்கத்தின் வாரிசாக மாறிப்போவாள்’ என்றார்கள்.
ஒரு பெண் வெளியூர் சென்றபோது தான் வளர்த்த பூனையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, அதற்குரிய உணவை வழங்காமல் சென்று விட்டாள். இதை அறிந்த போது, ‘அந்தப்பெண் நம்மோடு அண்டி வாழும் அந்த வாயில்லா பிராணியை வஞ்சித்த காரணத்தினால் பெரும் பாவத்திற்கு ஆளாகி விட்டாள்’ என்று அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள்.
தவறான முறையில் வாழ்ந்த ஒரு பெண், கிணற்றை கடந்து சென்றபோது அங்கு ஒரு நாய் மிகுந்த தாகத்தோடு நின்றிருந்ததை கண்டாள். அதன்மீது இரக்கம் கொண்டு தன் காலணியை தன் முந்தானையில் கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அந்த நாயின் தாகம் தீர உதவி செய்தாள். அவளின் அந்த நல்ல செயலை ஏற்றுக் கொண்ட இறைவன் அவளை சொர்க்கவாதி என்று அறிவித்தான்.
‘பிற உயிரினத்தின் மீது அன்பு, பாசம் காட்டுவதும் சொர்க்கம் செல்ல சுலப மான வழி’ என்பதை இதன் மூலம் அறியலாம்.
முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபித்தோழர்களில் ஒருவர் பிலால் (ரலி). நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்தின் போது சொர்க்கத்தில் நுழைந்து செல்லும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்கள் செல்லும் வழியில் ஒருவர் நடந்து செல்லும் காலோசை சப்தத்தை கேட்டார்கள். இதுபற்றி வானவர் தலைவர் ஜிப்ரீலிடம் கேட்டபோது, ‘இது உங்களின் நண்பர் பிலால் (ரலி) அவர் களின் காலோசை’ என்றார்கள்.
விண்ணுலகப்பயணம் முடிந்து வந்த நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர் களிடம் ‘நான் சொர்க்கம் சென்ற போது என்னை முந்தி நீ சென்ற காலோசை சப்தத்தை கேட்டேன். அந்த பாக்கியம் பெற நீ என்ன நற்செயல் செய்கிறாய்?’ என்று வினவினார்கள்.
‘நான் எந்தவிதமான சிறப்பு செயலையும் செய்வதில்லை. ஆனால் நாள் முழுக்க ஒளுவோடு (அங்கசுத்தியுடன்) இருப்பதை கடமையாக்கிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் தொழுவதற்கு தயாராகவே இருப்பேன். ஒருவேளை அது காரணமாக இருக்கலாம்’ என்றார்கள்.
‘தொழுகைக்கு எப்போதும் தயாராக இருப்பதும் கூட சொர்க்கம் செல்லும் சுலபமான வழியைச் சொல்லும்’ என்பது இதன்மூலம் தெரிகிறது.
சொர்க்கம் செல்ல மனித சக்திக்கு அப்பாற்பட்டு மிக கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. மிக சிறந்த மனிதாபிமான செயல்களின் மூலம் மிக உன்னதமான சொர்க்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக, ஆமீன்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
‘இந்த உலக வாழ்வை விளைநிலமாக பயன்படுத்தி நல்லவைகளை விதைத்து, நன்மைகளை அறுவடை செய்து, மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’.
இது தான் மனித வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.
‘அல்லாஹ் ஒருவன் தான் வணக்கத்திற்குரியவன்’ என்று உறுதியாக நம்ப வேண்டும். அவன் வகுத்து தந்த தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். மேலும் பிற மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பலன் தரும் வகையில் தனது சொல்லையும், செயலையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான்: ‘ஒரு மனிதன் பிறருக்கு செய்த தீங்கை, பாதிப்புக்குள்ளானவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை’. அதே நேரத்தில், ‘சக மனிதர்கள் செய்த தீமையை மன்னித்து விட்டால் அதற்கு பிரதியாக இரட்டிப்பாக கூலியைத் தருகிறேன்’ என்று இறைவன் கூறுகின்றான்.
பிறரின் குறைகளை மறைப்பதும், பிறரின் தீமைகளை மன்னிப்பதும் சொர்க்கம் செல்ல சுலபமான வழி என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
அதுபோல, ‘பிறரை உயர்வாக கருதும் எண்ணம் சொர்க்கத்தை பெற்றுத் தரும்’. இதற்கு உதாரணமாய் ஒரு நிகழ்வு:
ஒருமுறை நபிகள் (ஸல்) தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ‘நான் இப்போது உங்களுக்கு இறைவனால் சொர்க்கவாதி என்று அறிவிக்கப்பட்டவரை அடையாளம் காட்டவா?’ என்று வினவினார்கள். தோழர்கள் ஆவலுடன் தொடர்ந்து கேட்டனர்.
‘இப்போது ஒருவர் நம்மை கடந்து செல்வார், அவர்தான் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர் இடது கையில் தன் காலணிகளை பிடித்தவராக ‘ஒளு’ (அங்க சுத்தம்) செய்த தண்ணீர் தாடியிலிருந்து வழிந்தோடிய வண்ணம் அந்த கூட்டத்தை கடந்து சென்றார்.
நபித்தோழர்களில் ஒருவருக்கு, ‘எந்த நல்ல செயலின் காரணமாக இத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை அவர் பெற்றார்’ என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
அவரிடம் சென்று, ‘உங்களுடன் இரண்டொரு நாட்கள் தங்க வேண்டும் அனுமதி தருவீர்களா?’ என்று கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னர் அவருடன் தங்கி அவரது அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்.
அப்போது அவரிடம் எந்த விதமான சிறப்பான நற்செயல்களையும் அவரால் கண்டுகொள்ள முடியவில்லை.
எனவே அவரிடமே கேட்டார், ‘நாங்கள் செய்வது போன்று தான் தொழுகை மற்றும் அன்றாட கடமைகளைத்தான் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீங்கள் சொர்க்கவாதி’ என்பதாக சொன்னார்கள். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவதற்கு நீங்கள் என்ன நற்செயல்களைச் செய்கிறீர்கள்? என்று அறிந்துகொள்ளவே உங்களுடன் தங்கினேன்’ என்றார்.
அதற்கு அவர், ‘நான் எல்லோரையும் போலத்தான் எனது கடமைகளைச் செய்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு குணம் உண்டு. எந்த சகோதர மனிதனையும் என் மனதளவில்கூட தாழ்வாக என்றுமே எண்ணுவதில்லை. ஒருவேளை அது தான் எனக்கு சிறப்பை பெற்றுதந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்’ என்று பதில் கூறினார்.

‘பக்கத்து வீட்டுகாரர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிப்பதும் சொர்க்கம் செல்ல சுலபமான வழியாகும்’. இதை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி இது:
ஒரு முறை, நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெண்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லி, நாளை மறுமையில் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்? என்று தோழர்கள் வினவினார்கள்.
‘ஒரு பெண்மணி இஸ்லாமிய கடமைகள் அத்தனையும் மிக சிறப்பாக நிறைவேற்றுகிறார். உபரியான தொழுகை, கூடுதலான நோன்புகளை நோற்கிறார். இறைவனுக்குச் செய்ய வேண்டிய எந்த கடமைகளிலும் சிறு குறை கூட செய்வதில்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சுமுகமான உறவோடு வாழ்வதில்லை’.
‘இன்னொரு பெண்மணியோ இறைகடமைகளை குறிப்பிட்ட அளவிலேயே செய்கிறார். அதிகப்படியான எந்த அமல்களையும் செய்யவில்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பாசத்தோடு வாழ்கிறார்’.
‘இந்த இருவரில் எவர் ஈடேற்றம் பெற்றவராய் இருப்பார்?’ என்பது நபித் தோழர்களின் கேள்வியாகும்.
கண்மணி நாயகம் கவலை தோய்ந்த முகத்தோடு சொன்னார்கள்: ‘முதல் பெண்மணி இறைகட்டளை ஆயிரம் தான் செய்திருந்தாலும், பிற மனிதர்களுடன் இணக்கமாக வாழாத காரணத்தினால், அவள் நரக நெருப்பிற்கு விறகாக மாறிவிடுவாள். இரண்டாவது பெண் இறைகட்டளைகளை அளவோடு செய்த போதிலும், அண்டை வீட்டாரை அன்போடு அரவணைத்ததால், அவள் சொர்க்கத்தின் வாரிசாக மாறிப்போவாள்’ என்றார்கள்.
ஒரு பெண் வெளியூர் சென்றபோது தான் வளர்த்த பூனையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, அதற்குரிய உணவை வழங்காமல் சென்று விட்டாள். இதை அறிந்த போது, ‘அந்தப்பெண் நம்மோடு அண்டி வாழும் அந்த வாயில்லா பிராணியை வஞ்சித்த காரணத்தினால் பெரும் பாவத்திற்கு ஆளாகி விட்டாள்’ என்று அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள்.
தவறான முறையில் வாழ்ந்த ஒரு பெண், கிணற்றை கடந்து சென்றபோது அங்கு ஒரு நாய் மிகுந்த தாகத்தோடு நின்றிருந்ததை கண்டாள். அதன்மீது இரக்கம் கொண்டு தன் காலணியை தன் முந்தானையில் கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அந்த நாயின் தாகம் தீர உதவி செய்தாள். அவளின் அந்த நல்ல செயலை ஏற்றுக் கொண்ட இறைவன் அவளை சொர்க்கவாதி என்று அறிவித்தான்.
‘பிற உயிரினத்தின் மீது அன்பு, பாசம் காட்டுவதும் சொர்க்கம் செல்ல சுலப மான வழி’ என்பதை இதன் மூலம் அறியலாம்.
முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபித்தோழர்களில் ஒருவர் பிலால் (ரலி). நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்தின் போது சொர்க்கத்தில் நுழைந்து செல்லும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்கள் செல்லும் வழியில் ஒருவர் நடந்து செல்லும் காலோசை சப்தத்தை கேட்டார்கள். இதுபற்றி வானவர் தலைவர் ஜிப்ரீலிடம் கேட்டபோது, ‘இது உங்களின் நண்பர் பிலால் (ரலி) அவர் களின் காலோசை’ என்றார்கள்.
விண்ணுலகப்பயணம் முடிந்து வந்த நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர் களிடம் ‘நான் சொர்க்கம் சென்ற போது என்னை முந்தி நீ சென்ற காலோசை சப்தத்தை கேட்டேன். அந்த பாக்கியம் பெற நீ என்ன நற்செயல் செய்கிறாய்?’ என்று வினவினார்கள்.
‘நான் எந்தவிதமான சிறப்பு செயலையும் செய்வதில்லை. ஆனால் நாள் முழுக்க ஒளுவோடு (அங்கசுத்தியுடன்) இருப்பதை கடமையாக்கிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் தொழுவதற்கு தயாராகவே இருப்பேன். ஒருவேளை அது காரணமாக இருக்கலாம்’ என்றார்கள்.
‘தொழுகைக்கு எப்போதும் தயாராக இருப்பதும் கூட சொர்க்கம் செல்லும் சுலபமான வழியைச் சொல்லும்’ என்பது இதன்மூலம் தெரிகிறது.
சொர்க்கம் செல்ல மனித சக்திக்கு அப்பாற்பட்டு மிக கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. மிக சிறந்த மனிதாபிமான செயல்களின் மூலம் மிக உன்னதமான சொர்க்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக, ஆமீன்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
‘வணங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதனால் ‘எம்மதமும் சம்மதம்’ என்பதை ஏற்க முடியாவிட்டாலும், ‘எம்மதத்தினரும் சம்மதம்’ என்பதற்கு மனப்பூர்வமான சம்மதம்.
‘மனிதர்களே! உங்களை ஓர் ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் படைத்தோம்’ என்ற திருக்குர்ஆன் முன்மொழிந்த இந்த வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது சொற்பொழிவுகளில் அடிக்கடி வழி மொழிந்தார்கள்.
மக்காவை வெற்றி கொண்டபோது இறை இல்லமான கஅபாவை வலம் வந்து ‘தவாப்’ செய்தபிறகு நபிகளார் பேசுகையில், “மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராய்ப் பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர்- இறையச்சம் உள்ளவர். இன்னொருவன் தீயவன்- நற்பேறற்றவன். அன்றி மனிதர்கள் அனைவரும் ஆதமின் மக்களே! என்றார்கள்.
தம் இறுதி ஹஜ் பயணத்தில் நபிகளார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது கூறியதாவது:-
“மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக. உங்கள் அனைவரின் அதிபதி ஒருவனே! அரேபியனுக்கு அரேபியர் அல்லாதவனை விடவோ, அரேபியர் அல்லாதவனுக்கு அரேபியனை விடவோ, கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ, வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தைப் பொறுத்தே தவிர எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே!”
இவ்வாறு நபிகளார் கூறினார்கள்.
ஆன்மிகத் தந்தையாகவும், போர்ப்படைத் தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் விளங்கிய நபிகளார், தன்னைப் பின்பற்றிய அன்பர்களைச் சீடர்கள் என்றோ, மாணவர்கள் என்றோ தொண்டர்கள் என்றோ ஒருபோதும் அழைத்ததில்லை. அவர்கள் அனைவரையும் ஸஹாபிகள் (தோழர்கள்) என்று அழைத்து சமரச நெறிக்கு மெருகூட்டினார்கள். உலக சரித்திரத்தில் நபிகளாருக்கு முன்பு இத்தகைய தோழமை உணர்வை யாரும் தோற்றுவிக்கவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மையாகும். இன்றைக்கு பொதுவுடமைவாதிகள் தங்களை ‘காம்ரேடு’ (தோழர்) என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். இந்தப் பெருமைகளுக்கெல்லாம் முன்னோடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஆவார்.
சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க விரும்பிய நபிகளார், ‘மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப்போல சமமானவர்கள்’ என்று உவமை நயத்தோடு உரைத்தார்கள். சீப்பில் ஒரு பல் உயர்ந்து இன்னொரு பல் தாழ்ந்திருந்தால் அது தலையைக் கிழித்து புண்ணாக்கி விடும். பண்பட்ட சமுதாயம் அமைய வேண்டு மானால் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை வேண்டும் என்பதை இந்த உவமை மூலம் விளக்கினார்கள்.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு யூதரின் இறுதி ஊர்வலம் அந்த வழியாகச் சென்றது. இதைக் கண்ட நபிகளார் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்த தோழர்கள், “இறைத்தூதரே! நமது கொள்கைகளை எதிர்க்கும் ஒரு யூதரின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?” என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நபிகளார், ‘அவர் மனிதராயிற்றே’ என்று பதில் அளித்தார்கள்.
மதங்களைப் பொறுத்தவரை மாறுபாடுகள் இருந்தாலும் மனிதர்கள் என்ற அளவில் நாம் வேறுபாடுகள் இல்லாதவர்கள் என்பதை இந்தச் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு அடிமையாக இருந்தவர். ஏக இறைக் கொள்கையை நபிகளார் எடுத்துரைத்தபோது பிலால் இஸ்லாத்தில் இணைந்தார். இதனால் மதிப்பும் மரியாதையும் கவுரவமும் அவரோடு இணைந்தன. நபிகளாரும் தோழர்களும் சேர்ந்து கட்டிய ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசலில் முதன் முறையாக தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) சொல்லும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு இஸ்லாம் எடுத்துரைத்த சமத்துவமே காரணம்.
மரணத்தின் போதும் இஸ்லாம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மரணம் அடைந்து விட்டால் அவர் களுக்கு தைக்கப்படாத வெள்ளை உடையே அணிவிக்கப்படும். மரண ஊர்வலத்தில் அலங்கார ஊர்திகளைப் பார்க்க முடியாது; ஆரவாரத்தைக் கேட்க முடியாது. மரணம் அடைந்தவரை அடக்கமான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் முறையே உலகெங்கும் உள்ள முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ளது.
அறிவுரைகள் வெறும் பேச்சளவோடு நின்று விடாமல், உலகளாவிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிய உன்னத மார்க்கமாக இஸ்லாம் திகழ் கிறது. இந்த உலகம் முழுவதும் பரவி இருந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களையும், மொழி பேசுபவர்களையும் கொள்கை அடிப்படையில் இணைத்து ஒரே சமுதாயமாக (உம்மத்) உருவாக்கிய பெருமை நபிகளாருக்கு மட்டுமே உண்டு.
‘வணங்கி வாழ்வோம்; பிறரோடு இணங்கி வாழ்வோம்’ என்ற லட்சிய முழக்கத்துடன் இஸ்லாம் செயல்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தபோதிலும் ‘எம்மதமும் சம்மதம்’ என்று சம்மதம் சொல்வதில் முஸ்லிம்களுக்கு சம்மதம் இல்லை. இதற்கு இஸ்லாம் கூறும் ஏகத்துவ கொள்கையே காரணம் ஆகும்.
‘வணங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதனால் ‘எம்மதமும் சம்மதம்’ என்பதை ஏற்க முடியாவிட்டாலும், ‘எம்மதத்தினரும் சம்மதம்’ என்பதற்கு மனப்பூர்வமான சம்மதம்.
“கூறி விடுவீராக! ஓ! நிராகரிப்பாளர்களே! நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்” (திருக்குர்ஆன்-109:1) என்று திருமறை கூறுகிறது.
இந்த இறை வசனம், மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக திகழ்கிறது.
மக்காவை வெற்றி கொண்டபோது இறை இல்லமான கஅபாவை வலம் வந்து ‘தவாப்’ செய்தபிறகு நபிகளார் பேசுகையில், “மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராய்ப் பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர்- இறையச்சம் உள்ளவர். இன்னொருவன் தீயவன்- நற்பேறற்றவன். அன்றி மனிதர்கள் அனைவரும் ஆதமின் மக்களே! என்றார்கள்.
தம் இறுதி ஹஜ் பயணத்தில் நபிகளார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது கூறியதாவது:-
“மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக. உங்கள் அனைவரின் அதிபதி ஒருவனே! அரேபியனுக்கு அரேபியர் அல்லாதவனை விடவோ, அரேபியர் அல்லாதவனுக்கு அரேபியனை விடவோ, கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ, வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தைப் பொறுத்தே தவிர எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே!”
இவ்வாறு நபிகளார் கூறினார்கள்.
ஆன்மிகத் தந்தையாகவும், போர்ப்படைத் தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் விளங்கிய நபிகளார், தன்னைப் பின்பற்றிய அன்பர்களைச் சீடர்கள் என்றோ, மாணவர்கள் என்றோ தொண்டர்கள் என்றோ ஒருபோதும் அழைத்ததில்லை. அவர்கள் அனைவரையும் ஸஹாபிகள் (தோழர்கள்) என்று அழைத்து சமரச நெறிக்கு மெருகூட்டினார்கள். உலக சரித்திரத்தில் நபிகளாருக்கு முன்பு இத்தகைய தோழமை உணர்வை யாரும் தோற்றுவிக்கவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மையாகும். இன்றைக்கு பொதுவுடமைவாதிகள் தங்களை ‘காம்ரேடு’ (தோழர்) என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். இந்தப் பெருமைகளுக்கெல்லாம் முன்னோடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஆவார்.
சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க விரும்பிய நபிகளார், ‘மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப்போல சமமானவர்கள்’ என்று உவமை நயத்தோடு உரைத்தார்கள். சீப்பில் ஒரு பல் உயர்ந்து இன்னொரு பல் தாழ்ந்திருந்தால் அது தலையைக் கிழித்து புண்ணாக்கி விடும். பண்பட்ட சமுதாயம் அமைய வேண்டு மானால் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை வேண்டும் என்பதை இந்த உவமை மூலம் விளக்கினார்கள்.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு யூதரின் இறுதி ஊர்வலம் அந்த வழியாகச் சென்றது. இதைக் கண்ட நபிகளார் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்த தோழர்கள், “இறைத்தூதரே! நமது கொள்கைகளை எதிர்க்கும் ஒரு யூதரின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?” என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நபிகளார், ‘அவர் மனிதராயிற்றே’ என்று பதில் அளித்தார்கள்.
மதங்களைப் பொறுத்தவரை மாறுபாடுகள் இருந்தாலும் மனிதர்கள் என்ற அளவில் நாம் வேறுபாடுகள் இல்லாதவர்கள் என்பதை இந்தச் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு அடிமையாக இருந்தவர். ஏக இறைக் கொள்கையை நபிகளார் எடுத்துரைத்தபோது பிலால் இஸ்லாத்தில் இணைந்தார். இதனால் மதிப்பும் மரியாதையும் கவுரவமும் அவரோடு இணைந்தன. நபிகளாரும் தோழர்களும் சேர்ந்து கட்டிய ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசலில் முதன் முறையாக தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) சொல்லும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு இஸ்லாம் எடுத்துரைத்த சமத்துவமே காரணம்.
மரணத்தின் போதும் இஸ்லாம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மரணம் அடைந்து விட்டால் அவர் களுக்கு தைக்கப்படாத வெள்ளை உடையே அணிவிக்கப்படும். மரண ஊர்வலத்தில் அலங்கார ஊர்திகளைப் பார்க்க முடியாது; ஆரவாரத்தைக் கேட்க முடியாது. மரணம் அடைந்தவரை அடக்கமான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் முறையே உலகெங்கும் உள்ள முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ளது.
அறிவுரைகள் வெறும் பேச்சளவோடு நின்று விடாமல், உலகளாவிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிய உன்னத மார்க்கமாக இஸ்லாம் திகழ் கிறது. இந்த உலகம் முழுவதும் பரவி இருந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களையும், மொழி பேசுபவர்களையும் கொள்கை அடிப்படையில் இணைத்து ஒரே சமுதாயமாக (உம்மத்) உருவாக்கிய பெருமை நபிகளாருக்கு மட்டுமே உண்டு.
‘வணங்கி வாழ்வோம்; பிறரோடு இணங்கி வாழ்வோம்’ என்ற லட்சிய முழக்கத்துடன் இஸ்லாம் செயல்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தபோதிலும் ‘எம்மதமும் சம்மதம்’ என்று சம்மதம் சொல்வதில் முஸ்லிம்களுக்கு சம்மதம் இல்லை. இதற்கு இஸ்லாம் கூறும் ஏகத்துவ கொள்கையே காரணம் ஆகும்.
‘வணங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதனால் ‘எம்மதமும் சம்மதம்’ என்பதை ஏற்க முடியாவிட்டாலும், ‘எம்மதத்தினரும் சம்மதம்’ என்பதற்கு மனப்பூர்வமான சம்மதம்.
“கூறி விடுவீராக! ஓ! நிராகரிப்பாளர்களே! நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்” (திருக்குர்ஆன்-109:1) என்று திருமறை கூறுகிறது.
இந்த இறை வசனம், மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக திகழ்கிறது.
நபி(ஸல்) அவர்கள் வழக்கம் போல் தம் துணைவியரின் அறைகளை நோக்கி அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் தாயார் உம்மு சுலைம்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகப் பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை வைத்து ‘ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தைத் தயாரித்து அதை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், தனது மணவிருந்தில் ரொட்டியுடனும், ஆட்டு இறைச்சியுடனும் அந்தப் பண்டத்தையும் வைத்து மக்களை அழைத்து விருந்து வைத்தார்கள். நபிகளாரின் இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது.
உமர்(ரலி) அவர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம், “தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் இறை நம்பிக்கையாளர்களான தங்களின் துணைவியரான அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி சென்றார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்துப் பிரார்த்தனை சொற்களை மொழிந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்து பத்து பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், 'அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!'' என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லாத நிலையில், அனஸ்(ரலி) அவர்களிடம் 'உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள் நபிகளார். விருந்து முடிந்தும் மூன்று பேர் மட்டும் அங்கேயே வீட்டில் பேசிக்கொண்டே இருந்தனர்.
பிறகு, நபி(ஸல்) அவர்கள் வழக்கம் போல் தம் துணைவியரின் அறைகளை நோக்கி அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அனஸ்(ரலி) அவர்களும் போனார்கள். எல்லாருக்கும் சலாம் கூறினார்கள், அதற்கு அவருடைய மனைவிமார்களும் பிரதி முகமனும் 'பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்!)' என்று மணவாழ்த்தும் கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் புதுமணப் பெண் ஸைனப்(ரலி) அவர்களிடம் திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்களோ அதிக வெட்க சுபாவம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, அவர்களைச் சீக்கிரம் போகச் சொல்லாமல், மீண்டும் வேறு அறைக்குச் சென்றார்கள். அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள். அவர்கள் போய்விட்டதை அனஸ்(ரலி) கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். அப்போது அனஸ்(ரலி) அந்த அறையிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்: “இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் அழைப்பின்றி நுழையாதீர்கள். அவ்வாறு நபியின் இல்லத்தில் நடக்கும் விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து அங்கே காத்து இராதீர்கள்.
மாறாக, ‘உணவு தயார், வாருங்கள்’ என நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடித்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை அவசியப்பட்டுக் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இதயங்களையும் அவர்களின் இதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும். அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்குத் தகுமானதல்ல” என்ற இறைவசனத்தைக் கேட்டபோது அனஸ்(ரலி) அங்கிருந்து வெளியேறினார்கள்.
பர்தா சட்டம் இத்தருணத்தில்தான் தோன்றியது.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 67:5163, 5:65:4790, 4792, 4793, 5:67:5154,5163,5171 திருக்குர்ஆன் 33:53-55
- ஜெஸிலா பானு.
நபி(ஸல்) அவர்கள், தனது மணவிருந்தில் ரொட்டியுடனும், ஆட்டு இறைச்சியுடனும் அந்தப் பண்டத்தையும் வைத்து மக்களை அழைத்து விருந்து வைத்தார்கள். நபிகளாரின் இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது.
உமர்(ரலி) அவர்கள், முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம், “தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் இறை நம்பிக்கையாளர்களான தங்களின் துணைவியரான அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி சென்றார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்துப் பிரார்த்தனை சொற்களை மொழிந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்து பத்து பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், 'அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர் கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!'' என்று கூறினார்கள். அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லாத நிலையில், அனஸ்(ரலி) அவர்களிடம் 'உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள் நபிகளார். விருந்து முடிந்தும் மூன்று பேர் மட்டும் அங்கேயே வீட்டில் பேசிக்கொண்டே இருந்தனர்.
பிறகு, நபி(ஸல்) அவர்கள் வழக்கம் போல் தம் துணைவியரின் அறைகளை நோக்கி அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அனஸ்(ரலி) அவர்களும் போனார்கள். எல்லாருக்கும் சலாம் கூறினார்கள், அதற்கு அவருடைய மனைவிமார்களும் பிரதி முகமனும் 'பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்!)' என்று மணவாழ்த்தும் கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் புதுமணப் பெண் ஸைனப்(ரலி) அவர்களிடம் திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்களோ அதிக வெட்க சுபாவம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, அவர்களைச் சீக்கிரம் போகச் சொல்லாமல், மீண்டும் வேறு அறைக்குச் சென்றார்கள். அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள். அவர்கள் போய்விட்டதை அனஸ்(ரலி) கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். அப்போது அனஸ்(ரலி) அந்த அறையிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்: “இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் அழைப்பின்றி நுழையாதீர்கள். அவ்வாறு நபியின் இல்லத்தில் நடக்கும் விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து அங்கே காத்து இராதீர்கள்.
மாறாக, ‘உணவு தயார், வாருங்கள்’ என நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடித்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை அவசியப்பட்டுக் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இதயங்களையும் அவர்களின் இதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும். அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்குத் தகுமானதல்ல” என்ற இறைவசனத்தைக் கேட்டபோது அனஸ்(ரலி) அங்கிருந்து வெளியேறினார்கள்.
பர்தா சட்டம் இத்தருணத்தில்தான் தோன்றியது.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 67:5163, 5:65:4790, 4792, 4793, 5:67:5154,5163,5171 திருக்குர்ஆன் 33:53-55
- ஜெஸிலா பானு.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்று இஸ்லாம் கூறுகிறது.
இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர். பண்டைய அரபு மக்கள் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை உயிரோடு புதைத்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகைக்குப் பிறகு இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
மேலும் வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்லும் பழக்கமும் இருந்தது. இது குறித்து ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்’ (17:31) என்று இறைவன் திருமறையின் பிரகடனப்படுத்தினான்.
வறுமையைத் தவிர மடமையின் காரணமாகவும் அக்கால மக்கள் குழந்தைகளைக் கொல்பவர்களாக இருந்தனர். அதை இறைவன் தடை செய்த வசனம் இதோ: ‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் அல்லாஹ் அவர்களுக்கு (உண்பதற்கு ஆகுமாக்கி)க் கொடுத்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்கள். அவர்கள் வழி கெட்டு விட்டனர்’. (6:140)
தெய்வங்களின் பெயராலும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்று இருந்தது. இதை திருக்குர்ஆனில், ‘இவ்வாறே இணைவைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன’ (6:137) என்று இறைவன் கூறுகின்றான்.
இவ்வாறு வறுமை, மடமை, மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளைக் கொல்லக்கூடாது என்று இறைவன் தனது வசனங்களை இறக்கி தடை செய்தான். மேலும் நபிகளார், ‘எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’ என்று அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை விதைத்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘இரு பெண் மக்கள் இருந்தாலுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்’ என்று பதில் கூறினார்கள்.
பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கி இருக்கிறது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது மயக்க நிலையில் இருக்கும் போதோ அல்லது வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றோ தாலி கட்டினால் அந்தத் திருமணம் செல்லாது. திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் அவசியம்.
‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை’ (4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான். மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது பெண்ணின் உரிமை என்பதை விளங்கலாம்.

திருமணத்திற்கு முன்பு கணவன் மணக்கப் போகும் தன் மனைவிக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். கணவனிடமிருந்து திருமணம் செய்யும் மனைவி மஹர் எனும் மணக்கொடை பெறுவதை இறைவன் உரிமையாக ஆக்கி இருக்கிறான். இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்: ‘நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்’. (4:4)
தொழில் செய்ய விரும்பும் இரண்டு பேர் சேர்ந்து ஒப்பந்தம் போட்டு தொழில் தொடங்குகிறார்கள். அது போன்ற வாழ்க்கை ஒப்பந்தம் தான் திருமணம். இல்லற வாழ்வில் இணைந்து வாழ முடியாத நிலை வரும்போது விவாகரத்து பெறும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது.
‘அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலை நிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்’ (2:229) என்ற வசனத்தின் மூலம் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை மனைவிக்கு உண்டு என்பதை அறியலாம்.
விவாகரத்து செய்த கணவனின் வீட்டில் ‘இத்தா’ காலத்தில் மனைவி வசிப்பது பெண்ணுக்கு இறைவன் அளித்த உரிமையாகும். இது குறித்து திருக்குர்ஆன் பேசுவதைப் பாருங்கள்: ‘நீங்கள் பெண்களைத் ‘தலாக்’ சொல்வீர்களானால் அவர்களின் ‘இத்தா’வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) ‘தலாக்’ கூறுங்கள். இன்னும் ‘இத்தா’வைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். பகிரங்கமான வெட்கக் கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டனர்’ (65:1). மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் ‘இத்தா’ காலத்தில் கணவன் வீட்டில் மனைவி வசிப்பது பெண்களுக்கு இறைவன் அளித்த உரிமை என்பதை அறியலாம்.
பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிய மார்க்கம், இஸ்லாம். ‘பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு’ (4:7) என்ற இறை வசனத்தின் மூலம் அறியலாம். சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த கட்டளையாகும்.
மேலும் வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்லும் பழக்கமும் இருந்தது. இது குறித்து ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்’ (17:31) என்று இறைவன் திருமறையின் பிரகடனப்படுத்தினான்.
வறுமையைத் தவிர மடமையின் காரணமாகவும் அக்கால மக்கள் குழந்தைகளைக் கொல்பவர்களாக இருந்தனர். அதை இறைவன் தடை செய்த வசனம் இதோ: ‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும் அல்லாஹ் அவர்களுக்கு (உண்பதற்கு ஆகுமாக்கி)க் கொடுத்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்கள். அவர்கள் வழி கெட்டு விட்டனர்’. (6:140)
தெய்வங்களின் பெயராலும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்று இருந்தது. இதை திருக்குர்ஆனில், ‘இவ்வாறே இணைவைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன’ (6:137) என்று இறைவன் கூறுகின்றான்.
இவ்வாறு வறுமை, மடமை, மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளைக் கொல்லக்கூடாது என்று இறைவன் தனது வசனங்களை இறக்கி தடை செய்தான். மேலும் நபிகளார், ‘எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’ என்று அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை விதைத்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘இரு பெண் மக்கள் இருந்தாலுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்’ என்று பதில் கூறினார்கள்.
பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கி இருக்கிறது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போதோ அல்லது மயக்க நிலையில் இருக்கும் போதோ அல்லது வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றோ தாலி கட்டினால் அந்தத் திருமணம் செல்லாது. திருமணத்திற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் அவசியம்.
‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை’ (4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான். மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது பெண்ணின் உரிமை என்பதை விளங்கலாம்.

திருமணத்திற்கு முன்பு கணவன் மணக்கப் போகும் தன் மனைவிக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். கணவனிடமிருந்து திருமணம் செய்யும் மனைவி மஹர் எனும் மணக்கொடை பெறுவதை இறைவன் உரிமையாக ஆக்கி இருக்கிறான். இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்: ‘நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்’. (4:4)
தொழில் செய்ய விரும்பும் இரண்டு பேர் சேர்ந்து ஒப்பந்தம் போட்டு தொழில் தொடங்குகிறார்கள். அது போன்ற வாழ்க்கை ஒப்பந்தம் தான் திருமணம். இல்லற வாழ்வில் இணைந்து வாழ முடியாத நிலை வரும்போது விவாகரத்து பெறும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது.
‘அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலை நிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்’ (2:229) என்ற வசனத்தின் மூலம் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை மனைவிக்கு உண்டு என்பதை அறியலாம்.
விவாகரத்து செய்த கணவனின் வீட்டில் ‘இத்தா’ காலத்தில் மனைவி வசிப்பது பெண்ணுக்கு இறைவன் அளித்த உரிமையாகும். இது குறித்து திருக்குர்ஆன் பேசுவதைப் பாருங்கள்: ‘நீங்கள் பெண்களைத் ‘தலாக்’ சொல்வீர்களானால் அவர்களின் ‘இத்தா’வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) ‘தலாக்’ கூறுங்கள். இன்னும் ‘இத்தா’வைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். பகிரங்கமான வெட்கக் கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டனர்’ (65:1). மேற்காணும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் ‘இத்தா’ காலத்தில் கணவன் வீட்டில் மனைவி வசிப்பது பெண்களுக்கு இறைவன் அளித்த உரிமை என்பதை அறியலாம்.
பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிய மார்க்கம், இஸ்லாம். ‘பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பாகமுண்டு’ (4:7) என்ற இறை வசனத்தின் மூலம் அறியலாம். சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த கட்டளையாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபியர்களிடம் விசித்திரமான குழந்தை வளர்ப்பு முறை இருந்து வந்தது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபியர்களிடம் விசித்திரமான குழந்தை வளர்ப்பு முறை இருந்து வந்தது. தங்களுக்கு குழந்தைகள் இருக்கும் போதே வேறொருவரின் குழந்தையை வளர்ப்பு குழந்தையாக்கிக் கொண்டு, அவர்களுக்கு முழு உரிமையையும் தந்து தமது சொந்தக் குழந்தைகளைப் பழி வாங்குதல் நடைமுறையில் இருந்தது. இது உண்மையான பெற்றோர்களின் அடையாளத்தை மாற்றிக் கொள்வதாக அமைந்ததோடு, ரத்த உறவுகளைத் தகர்ப்பதாகவும் அமைந்தது. அது ஆண் குழந்தைகள் பெரும் சொத்தாகக் கருதப்பட்ட காலம். இருப்பினும் அபசகுனத்தைக் காரணம் காட்டியும், வறுமைக்குப் பயந்தும் குழந்தைகளைக் கொலை செய்து கொண்டிருந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி எதிரி குலத்தவரின் குழந்தைகள் கடத்தப்பட்டு சந்தையில் அடிமைகளாக விற்கப்படவும் செய்தனர். இப்படியாக கடத்தப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்தவர் ஸைத்(ரலி). இவரை ஹகீம் என்பவர் வாங்கி தனக்குப் பிரியமான அத்தை கதீஜாவுக்கு பரிசளித்தார்.
கதீஜா(ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தபோது முஹம்மது நபி (ஸல்) அரபியர்களிடம் நிலவிய ஏற்றத் தாழ்வைத் தகர்க்க நினைத்தவர்களாக அடிமையாக இருந்த ஸைதை விடுதலை செய்து வளர்ப்பு மகனாகவே பாவித்தார்கள். அதனால் மக்களும் ஸைதை ‘ஸைத் இப்னு முஹம்மத்’ அதாவது முஹம்மதின் புதல்வர் என்றே அழைத்து வந்தனர்.
இடைப்பட்ட காலத்தில் ஸைத்தின் சொந்தத் தந்தை தனது மகனைக் கண்டுபிடித்து வந்தபோது முஹம்மது நபியின் மீதான பிரியத்தால், ஸைத் தன் தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார்.
இனக்குழுக்களை ஒன்றிணைப்பதற்காகவும், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவும், பாகுபாடுகளைத் தகர்ப்பதற்காகவும் பாடுபட்ட நபிகளார் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்வதற்காகவே தம் மகள் ஃபாத்திமாவை அலி(ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தது போல அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக ஸைத் இப்னு ஹாரிஸாவை தனது அத்தை மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணம் முடித்து வைத்தார்கள். ஆனால் திருமணமாகி சில காலத்திலேயே தம்பதியரிடையே சுமுகமான உறவு நிகழவில்லை.
வளர்ப்பு மகன் தொடர்பான இறை வசனம் அருளப்பட்டது. அதில் “நீங்கள் எடுத்து வளர்த்தவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; முன்னர் இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் உங்கள் மீது குற்றமாகும்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டபோது ஸைதை அனைவரும் ஸைத் இப்னு ஹாரிஸா என்று அழைக்கலானார்கள்.
தாம்பத்திய உறவில் சுமூகமான உறவு இல்லாததால் ஸைத்(ரலி) தம் மனைவியின் போக்கு குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட சென்றபோது, நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள். உன் மனைவியை மண விலக்குச் செய்துவிடாதே” என்று கூறிவிட்டார்கள். காரணம் ஸைது(ரலி) தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவரை, தானே மணக்க நேரிடும் என அல்லாஹ்வின் அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், இத்திருமணம் நடந்தால் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பழிப்பார்கள். நயவஞ்சகர்களும் யூதர்களும் முஷ்ரிக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக குழப்பங்களையும் தவறானக் குற்றச்சாட்டுகளையும் பரப்புவார்கள். அதனால், பலவீனமான நம்பிக்கையுடைய முஸ்லிம்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் ஏற்படலாம் என்று நபிகளார் பயந்தார்கள்.
அப்போது அல்லாஹ் இந்த இறைவசனத்தை அருளினான் “நபியே! எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை விவாக விலக்குச் செய்து விடாமல் உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஸைத் அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்” என்ற தெளிவான இறைவசனம் அருளப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில் எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் மேலே குறிப்பிட்ட (33:37) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை நபி(ஸல்) அவர்களுக்கு உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 5:65:4782, 97:7420, திருக்குர்ஆன் 33:5, 33:37
-ஜெஸிலா பானு
அது மட்டுமின்றி எதிரி குலத்தவரின் குழந்தைகள் கடத்தப்பட்டு சந்தையில் அடிமைகளாக விற்கப்படவும் செய்தனர். இப்படியாக கடத்தப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்தவர் ஸைத்(ரலி). இவரை ஹகீம் என்பவர் வாங்கி தனக்குப் பிரியமான அத்தை கதீஜாவுக்கு பரிசளித்தார்.
கதீஜா(ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தபோது முஹம்மது நபி (ஸல்) அரபியர்களிடம் நிலவிய ஏற்றத் தாழ்வைத் தகர்க்க நினைத்தவர்களாக அடிமையாக இருந்த ஸைதை விடுதலை செய்து வளர்ப்பு மகனாகவே பாவித்தார்கள். அதனால் மக்களும் ஸைதை ‘ஸைத் இப்னு முஹம்மத்’ அதாவது முஹம்மதின் புதல்வர் என்றே அழைத்து வந்தனர்.
இடைப்பட்ட காலத்தில் ஸைத்தின் சொந்தத் தந்தை தனது மகனைக் கண்டுபிடித்து வந்தபோது முஹம்மது நபியின் மீதான பிரியத்தால், ஸைத் தன் தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார்.
இனக்குழுக்களை ஒன்றிணைப்பதற்காகவும், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவும், பாகுபாடுகளைத் தகர்ப்பதற்காகவும் பாடுபட்ட நபிகளார் உறவுகளை செம்மைப்படுத்திக் கொள்வதற்காகவே தம் மகள் ஃபாத்திமாவை அலி(ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தது போல அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக ஸைத் இப்னு ஹாரிஸாவை தனது அத்தை மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணம் முடித்து வைத்தார்கள். ஆனால் திருமணமாகி சில காலத்திலேயே தம்பதியரிடையே சுமுகமான உறவு நிகழவில்லை.
வளர்ப்பு மகன் தொடர்பான இறை வசனம் அருளப்பட்டது. அதில் “நீங்கள் எடுத்து வளர்த்தவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; முன்னர் இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் உங்கள் மீது குற்றமாகும்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டபோது ஸைதை அனைவரும் ஸைத் இப்னு ஹாரிஸா என்று அழைக்கலானார்கள்.
தாம்பத்திய உறவில் சுமூகமான உறவு இல்லாததால் ஸைத்(ரலி) தம் மனைவியின் போக்கு குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட சென்றபோது, நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள். உன் மனைவியை மண விலக்குச் செய்துவிடாதே” என்று கூறிவிட்டார்கள். காரணம் ஸைது(ரலி) தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவரை, தானே மணக்க நேரிடும் என அல்லாஹ்வின் அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், இத்திருமணம் நடந்தால் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பழிப்பார்கள். நயவஞ்சகர்களும் யூதர்களும் முஷ்ரிக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக குழப்பங்களையும் தவறானக் குற்றச்சாட்டுகளையும் பரப்புவார்கள். அதனால், பலவீனமான நம்பிக்கையுடைய முஸ்லிம்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் ஏற்படலாம் என்று நபிகளார் பயந்தார்கள்.
அப்போது அல்லாஹ் இந்த இறைவசனத்தை அருளினான் “நபியே! எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை விவாக விலக்குச் செய்து விடாமல் உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஸைத் அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்” என்ற தெளிவான இறைவசனம் அருளப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில் எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் மேலே குறிப்பிட்ட (33:37) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை நபி(ஸல்) அவர்களுக்கு உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 5:65:4782, 97:7420, திருக்குர்ஆன் 33:5, 33:37
-ஜெஸிலா பானு
சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்கிற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், ஒரு மனிதனுக்கான சகல சம உரிமைகளையும் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
உலகில் உள்ள பல மதங்கள் அதை நிறுவியவரின் பெயரைத் தாங்கி செயல்படுகின்றன. இன்னும் சில மதங்களுக்கு அது எந்தச் சமுதாயத்தில் தோன்றியதோ அந்தச் சமுதாயத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ அல்லது ஒரு தனிப்பட்ட சமுதாயத்துடனோ தொடர்புடையதல்ல. பொதுவாக மனித குலம் முழுமைக்கும் இறைவன் (அல்லாஹ்) தேர்ந்தெடுத்த மார்க்கம் இஸ்லாம் ஆகும். இது எல்லா மொழியினருக்கும் எல்லாச் சமுதாயத்திற்கும் பொருத்தமானது; பொதுவானது.
ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக் கொடை), ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்ட மார்க்கம், இஸ்லாம்.
“லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை- அல்லாஹ்வைத் தவிர! முகமது நபி அவனுடைய திருத்தூதர்) என்ற ‘கலிமா’வை சொன்னவுடன், அவர் முஸ்லிம் ஆகி விடு கிறார் என்பது மட்டுமல்ல; அவர் சமத்துவ பாதையில் நடைபோடத் தொடங்குகிறார். உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டைக் களைகின்ற களமாக தொழுகை அமைந்துள்ளது.
நோன்பு திறக்கும்போது பணக்காரரும், ஏழையும் பாகுபாடின்றி கஞ்சி அருந்துவது சமத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. ‘ஜகாத்’ என்கிற கட்டாயக் கொடை சமுதாயத்தில் நிலவும் பொருளாதார பாகுபாட்டைப் போக்குகிற வழிமுறையாக உள்ளது. நாடு, மொழி, நிறத்தால் வேறுபட்ட லட்சக்கணக்கான மக்கள், ஒரே உடையில், ஒரே குரலில் ஒரே சிந்தனையில் சந்திக்கும் சமத்துவ மாநாடு, ஹஜ். இப்படி இஸ்லாம் கூறும் ஐந்து கடமைகளின் செயல்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், அவற்றின் பின்னணியில் ‘சமத்துவம்’ பின்னிப் பிணைந் திருப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்தக் கட்டாயக் கடமைகளில் ஒழுங்கும், நேரக் கட்டுப்பாடும் பேணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட நேரங்களில் இறைவனை கட்டாயம் வணங்க வேண்டும் என்று ஐவேளைத் தொழுகைக்கு வரையறை செய்துள்ளது, இஸ்லாம். தொழுகையைத் தலைமை தாங்கி நடத்த வேண்டிய ‘இமாம்’ குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அவருக்காக யாரும் காத்திருப்பதில்லை. அவருக்குப் பதிலாக வேறொருவரைக் கொண்டு தொழுகை நடைபெறும். தாமதமாக வந்த ‘இமாம்’ கடைசி வரிசையில் காணப்படுவார்.
குறிப்பிட்ட நேரத்தில் உணவருந்தி நோன்பு இருக்க வேண்டும். அதைப்போல குறிப்பிட்ட நேரத்தில் நோன்பைத் திறக்க வேண்டும். ஹஜ் வழிபாடுகளும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிவடையும். திரளான மக்கள் திரண்டாலும் அங்கே நேரமும், ஒழுங்கும், கட்டுப்பாடும் பேணப்படும்.

இஸ்லாம் ஓர் ஆதாரபூர்வமான மார்க்கம். இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலேயே, அருளப்பட்ட மொழியிலேயே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வேத நூல்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கான அறிவுரைகளே அதில் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் ஒவ்வொரு இடத்திலும், ‘மனிதர்களே!’ ‘ஆதமுடைய மக்களே!’ ‘இறை நம்பிக்கையாளர்களே!’ என்று அழைத்து அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கும். இது அகில உலக மக்களுக்காக அருளப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. இந்த உலகில் உள்ள அதிக மக்களால் மனனம் செய்யக் கூடிய- ஓதக்கூடிய ஒரே வேத நூலாக விளங்குகிறது, திருக்குர்ஆன்.
இன்று மனித உரிமைகள் குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் உரத்த குரலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பிரெஞ்சுப் புரட்சி என்பது மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது. சமூகத்தில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை மாறி சமத்துவம், மனித உரிமைகள் போன்ற கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கியதாகக் கருதப்பட்டது. 1789-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி பிரெஞ்சு மானுடப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
தாமஸ் ஜெபர்சன் உருவாக்கிய அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் 1776-ம் ஆண்டு வெளியானது. இதில், “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும் முழு உரிமை உண்டு” என்று கூறப்பட்டிருந்தது.
பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திர பிரகடனம் காரணமாக சுதந்திரம், சமத்துவம், சக வாழ்வு கிடைத்ததாகக் கருதுகிறார்கள். ஆனால் இந்த இரண்டுக்கும் மூலமாக இருப்பது 1,400 ஆண்டுகளுக்கும் முன்பு இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனே ஆகும். மனித உரிமைகளின் பாதுகாவலனாகவும், பாதுகாப்பு அரணாகவும் இஸ்லாம் விளங்குகிறது. அது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வலிமை மிக்க கொள்கைகளை வகுத்துத் தந்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து மனித குலத்திற்கான உரிமைகளை பாதுகாப்பதற்கு என்று 30 அம்ச கொள்கைகளை ஐ.நா.சபை அறிவித்தது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளும், சுதந்திரமும் வரையறுக்கப்பட்டன. ஐ.நா. சபை ஆவணப்படுத்திய உரிமைகளோடு, இஸ்லாம் வழங்கிய உரிமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இஸ்லாம் மார்க்கத்தின் உயர்வை-உன்னதத்தை- அதன் தனிச் சிறப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
“மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண் மற்றும் பெண்ணில் இருந்துதான் படைத்தோம்... உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமானவர் ஆவார்” (திருக்குர்ஆன்-49:13) என்பது இறைமறை வசனம்.
சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்கிற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், சமத்துவத்தை நிலை நிறுத்தி, ஒரு மனிதனுக்கான சகல சம உரிமைகளையும் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக் கொடை), ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்ட மார்க்கம், இஸ்லாம்.
“லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை- அல்லாஹ்வைத் தவிர! முகமது நபி அவனுடைய திருத்தூதர்) என்ற ‘கலிமா’வை சொன்னவுடன், அவர் முஸ்லிம் ஆகி விடு கிறார் என்பது மட்டுமல்ல; அவர் சமத்துவ பாதையில் நடைபோடத் தொடங்குகிறார். உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாட்டைக் களைகின்ற களமாக தொழுகை அமைந்துள்ளது.
நோன்பு திறக்கும்போது பணக்காரரும், ஏழையும் பாகுபாடின்றி கஞ்சி அருந்துவது சமத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. ‘ஜகாத்’ என்கிற கட்டாயக் கொடை சமுதாயத்தில் நிலவும் பொருளாதார பாகுபாட்டைப் போக்குகிற வழிமுறையாக உள்ளது. நாடு, மொழி, நிறத்தால் வேறுபட்ட லட்சக்கணக்கான மக்கள், ஒரே உடையில், ஒரே குரலில் ஒரே சிந்தனையில் சந்திக்கும் சமத்துவ மாநாடு, ஹஜ். இப்படி இஸ்லாம் கூறும் ஐந்து கடமைகளின் செயல்பாடுகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், அவற்றின் பின்னணியில் ‘சமத்துவம்’ பின்னிப் பிணைந் திருப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்தக் கட்டாயக் கடமைகளில் ஒழுங்கும், நேரக் கட்டுப்பாடும் பேணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட நேரங்களில் இறைவனை கட்டாயம் வணங்க வேண்டும் என்று ஐவேளைத் தொழுகைக்கு வரையறை செய்துள்ளது, இஸ்லாம். தொழுகையைத் தலைமை தாங்கி நடத்த வேண்டிய ‘இமாம்’ குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அவருக்காக யாரும் காத்திருப்பதில்லை. அவருக்குப் பதிலாக வேறொருவரைக் கொண்டு தொழுகை நடைபெறும். தாமதமாக வந்த ‘இமாம்’ கடைசி வரிசையில் காணப்படுவார்.
குறிப்பிட்ட நேரத்தில் உணவருந்தி நோன்பு இருக்க வேண்டும். அதைப்போல குறிப்பிட்ட நேரத்தில் நோன்பைத் திறக்க வேண்டும். ஹஜ் வழிபாடுகளும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிவடையும். திரளான மக்கள் திரண்டாலும் அங்கே நேரமும், ஒழுங்கும், கட்டுப்பாடும் பேணப்படும்.

இஸ்லாம் ஓர் ஆதாரபூர்வமான மார்க்கம். இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலேயே, அருளப்பட்ட மொழியிலேயே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வேத நூல்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கான அறிவுரைகளே அதில் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் ஒவ்வொரு இடத்திலும், ‘மனிதர்களே!’ ‘ஆதமுடைய மக்களே!’ ‘இறை நம்பிக்கையாளர்களே!’ என்று அழைத்து அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கும். இது அகில உலக மக்களுக்காக அருளப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. இந்த உலகில் உள்ள அதிக மக்களால் மனனம் செய்யக் கூடிய- ஓதக்கூடிய ஒரே வேத நூலாக விளங்குகிறது, திருக்குர்ஆன்.
இன்று மனித உரிமைகள் குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் உரத்த குரலில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பிரெஞ்சுப் புரட்சி என்பது மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது. சமூகத்தில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை மாறி சமத்துவம், மனித உரிமைகள் போன்ற கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கியதாகக் கருதப்பட்டது. 1789-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி பிரெஞ்சு மானுடப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
தாமஸ் ஜெபர்சன் உருவாக்கிய அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் 1776-ம் ஆண்டு வெளியானது. இதில், “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும் முழு உரிமை உண்டு” என்று கூறப்பட்டிருந்தது.
பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திர பிரகடனம் காரணமாக சுதந்திரம், சமத்துவம், சக வாழ்வு கிடைத்ததாகக் கருதுகிறார்கள். ஆனால் இந்த இரண்டுக்கும் மூலமாக இருப்பது 1,400 ஆண்டுகளுக்கும் முன்பு இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனே ஆகும். மனித உரிமைகளின் பாதுகாவலனாகவும், பாதுகாப்பு அரணாகவும் இஸ்லாம் விளங்குகிறது. அது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வலிமை மிக்க கொள்கைகளை வகுத்துத் தந்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து மனித குலத்திற்கான உரிமைகளை பாதுகாப்பதற்கு என்று 30 அம்ச கொள்கைகளை ஐ.நா.சபை அறிவித்தது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளும், சுதந்திரமும் வரையறுக்கப்பட்டன. ஐ.நா. சபை ஆவணப்படுத்திய உரிமைகளோடு, இஸ்லாம் வழங்கிய உரிமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இஸ்லாம் மார்க்கத்தின் உயர்வை-உன்னதத்தை- அதன் தனிச் சிறப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
“மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண் மற்றும் பெண்ணில் இருந்துதான் படைத்தோம்... உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமானவர் ஆவார்” (திருக்குர்ஆன்-49:13) என்பது இறைமறை வசனம்.
சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்கிற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், சமத்துவத்தை நிலை நிறுத்தி, ஒரு மனிதனுக்கான சகல சம உரிமைகளையும் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மெய்யான பெருநாளும், நன்மையைத் தரும் நாளும் நாம் தொழும் அன்றாட அதிகாலை பஜ்ர் தொழுகையில் இருந்து தான் தொடங்குகிறது என்பதை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம்.
அடடே... அதற்குள் நோன்பு முடிந்து விட்டதே...’ என்று வருத்தப்படுவோர் ஒரு புறம். ‘அப்பாடா.... ஒருவழியாய் நோன்பு முடிந்து விட்டது...’ என்று மனதுக்குள் மகிழ்ச்சிப்படுவோர் மறுபுறம். இவற்றில் நீங்கள் எந்தப்புறம் என்பதை உங்கள் செயல்களே தீர்மானிக்கும்.
புனித ரமலான் மாதம் வந்தது நாமும் மசூதிக்கு ஐவேளையும் விடாது தொழுது வந்தோம். நோன்புப்பெருநாள் பண்டிகைத் தொழுகை முடிந்தது, நாமும் ஐவேளைத் தொழுகைகளை முடித்துக் கொண்டோம் என்று ரமலான் முடிந்தவுடன் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது என்பது நமக்கு நல்லதா?
அவசியத் தேவை ஏற்படும் போது மட்டும் அல்லாஹ்வை நாம் தொடர்பு கொள்வதும், தேவை முடிந்தவுடன் அவனது தொடர்பை துண்டித்துக்கொள்வதும் நமது மனசாட்சிப்படி நாம் செய்வது சரிதானா?
அல்லாஹ் திருக்குர்ஆனில் (17:84) எச்சரிக்கிறான்: ‘(நபியே!) நீர் கூறுவீராக: ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல்படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார்? என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்’.
நாம் நமது மனோஇச்சைப்படி நடக்கக்கூடாது என்பதைத்தான் இவ்வசனம் தெள்ளத்தெளிவாக சொல்லிக்காட்டு கிறது. இதை இன்னொரு இறைமறை வசனம் (45:23) மிகத் தெளிவாகவே சொல்லிக்காட்டுகிறது இப்படி:
‘(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழி கேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரை யிட்டு; இன்னும்,அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
நம்மை எப்போதும் கண்காணித்து. நமக்குத் தேவையான வற்றை தந்தருள்பவன் அல்லாஹ் ஒருவனே. அவனை விட்டுவிட்டு மனம்போன போக்கில் செல்வது ‘நமது மனதை ஆண்டவனாக எடுத்துக்கொண்டோம்’ என்பதற்கு சாட்சி.

மனம் நமக்கு கட்டுப்பட வேண்டுமே தவிர, நாம் மனதுக்கு கட்டுப்படுவது என்பது, நாம் நமது வீட்டு வேலைக்காரனுக்கு கட்டுப்படுவது போன்றதுதான். இதை யாருமே விரும்புவதில்லை. அதிகாரம் செய்து வாழ்வதையே எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால், மனதிற்கு மட்டும் எப்படி அடிமைப்பட்டு வாழ விரும்புகின்றனர்? இது முற்றிலும் விந்தையாகத்தான் இருக்கிறது என்று இமாம் கஸாலி (ரஹ்) அவர்கள் கேட்பது நியாயம் தானே.
நோன்பு, முன் வாழ்ந்த சமூகத்தினர்களுக்கு கடமையாக்கப்பட்டது போன்று தான் நமக்கும் கடமையாக்கப்பட்டது. காரணம், இதன் மூலம் பயபக்தியுடையவர்களாக நாம் மாறலாம் என்பது தான். நமது ஐம்புலன்கள் பசித்திருக்கும் போது தான் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நோன்பு அதை நமக்கு மிகச்சரியாகவே கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், நோன்பு முடிந்தவுடன் மீண்டும் நம் மனதை நாமே வழிகெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
ரமலானில் நம்மை அறியாமலேயே கடைப்பிடித்த நல்ல அமல்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் அவையெல்லாம் இன்று நம்மை விட்டும் எங்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டன?. பொதுவாக பயிற்சி என்பது ஓரிரு மாதங்கள் தான். பிறகு நாம் தான் இதர மாதங்களில் அப்பயிற்சியை விடாது கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
இறைவசனம் ஒன்று கூறுகிறது:
‘இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி (யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்’. (திருக்குர் ஆன் : 53:39-40)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எவர் தன்னை சரிசெய்து கொண்டு, மரணத்துக்குப் பின்னாலுள்ள ஒரு வாழ்க்கைக்கு பயன்படும்படியான அமலை யார் செய்கிறாரோ அவரே மகாபுத்திசாலி’. (நூல் : மிஷ்காத்)
இன்றைக்கு பணம், பட்டம், பதவி, வீடு, சொத்து, கார், பங்களா என்று ஏதாவது ஒன்று இருந்தால், அவர் தான் அறிவாளி என்று இவ்வுலகம் போற்றுகிறது.
ஆனால், நபிகளார் ‘மறுமைக்காக அமல் செய்பவரே நல் அறிவாளி’ என்கிறார்கள். நம்மைநாமே அறிவாளி என்று சொல்லிக்கொள்ள வேண்டும் என்றால் இதர பதினோரு மாதங்களிலும் ரமலானைப் போலவே நாம் நல்ல அமல்கள் செய்ய முன்வர வேண்டும்.
ஆனால் அதற்கு நாம் முன்வருவதில்லை. அனைத்துச் சோதனைகளும் அந்த ஒற்றை 27-ம் இரவிலேயே முடிந்து போய் விட்டது இனி நமக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் இல்லை என்று எண்ணி விடுகிறோம். அன்று முதல் ஒவ்வொரு நாளையும் பெருநாளாய் கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.
மெய்யான பெருநாளும், நன்மையைத் தரும் நாளும் நாம் தொழும் அன்றாட அதிகாலை பஜ்ர் தொழுகையில் இருந்து தான் தொடங்குகிறது என்பதை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம்.
வாருங்கள்... இறை வணக்கத்தை தொடருவோம், குறைகளை அகற்றுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
புனித ரமலான் மாதம் வந்தது நாமும் மசூதிக்கு ஐவேளையும் விடாது தொழுது வந்தோம். நோன்புப்பெருநாள் பண்டிகைத் தொழுகை முடிந்தது, நாமும் ஐவேளைத் தொழுகைகளை முடித்துக் கொண்டோம் என்று ரமலான் முடிந்தவுடன் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது என்பது நமக்கு நல்லதா?
அவசியத் தேவை ஏற்படும் போது மட்டும் அல்லாஹ்வை நாம் தொடர்பு கொள்வதும், தேவை முடிந்தவுடன் அவனது தொடர்பை துண்டித்துக்கொள்வதும் நமது மனசாட்சிப்படி நாம் செய்வது சரிதானா?
அல்லாஹ் திருக்குர்ஆனில் (17:84) எச்சரிக்கிறான்: ‘(நபியே!) நீர் கூறுவீராக: ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல்படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார்? என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்’.
நாம் நமது மனோஇச்சைப்படி நடக்கக்கூடாது என்பதைத்தான் இவ்வசனம் தெள்ளத்தெளிவாக சொல்லிக்காட்டு கிறது. இதை இன்னொரு இறைமறை வசனம் (45:23) மிகத் தெளிவாகவே சொல்லிக்காட்டுகிறது இப்படி:
‘(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழி கேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரை யிட்டு; இன்னும்,அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
நம்மை எப்போதும் கண்காணித்து. நமக்குத் தேவையான வற்றை தந்தருள்பவன் அல்லாஹ் ஒருவனே. அவனை விட்டுவிட்டு மனம்போன போக்கில் செல்வது ‘நமது மனதை ஆண்டவனாக எடுத்துக்கொண்டோம்’ என்பதற்கு சாட்சி.

மனம் நமக்கு கட்டுப்பட வேண்டுமே தவிர, நாம் மனதுக்கு கட்டுப்படுவது என்பது, நாம் நமது வீட்டு வேலைக்காரனுக்கு கட்டுப்படுவது போன்றதுதான். இதை யாருமே விரும்புவதில்லை. அதிகாரம் செய்து வாழ்வதையே எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால், மனதிற்கு மட்டும் எப்படி அடிமைப்பட்டு வாழ விரும்புகின்றனர்? இது முற்றிலும் விந்தையாகத்தான் இருக்கிறது என்று இமாம் கஸாலி (ரஹ்) அவர்கள் கேட்பது நியாயம் தானே.
நோன்பு, முன் வாழ்ந்த சமூகத்தினர்களுக்கு கடமையாக்கப்பட்டது போன்று தான் நமக்கும் கடமையாக்கப்பட்டது. காரணம், இதன் மூலம் பயபக்தியுடையவர்களாக நாம் மாறலாம் என்பது தான். நமது ஐம்புலன்கள் பசித்திருக்கும் போது தான் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நோன்பு அதை நமக்கு மிகச்சரியாகவே கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், நோன்பு முடிந்தவுடன் மீண்டும் நம் மனதை நாமே வழிகெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
ரமலானில் நம்மை அறியாமலேயே கடைப்பிடித்த நல்ல அமல்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் அவையெல்லாம் இன்று நம்மை விட்டும் எங்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டன?. பொதுவாக பயிற்சி என்பது ஓரிரு மாதங்கள் தான். பிறகு நாம் தான் இதர மாதங்களில் அப்பயிற்சியை விடாது கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
இறைவசனம் ஒன்று கூறுகிறது:
‘இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி (யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்’. (திருக்குர் ஆன் : 53:39-40)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எவர் தன்னை சரிசெய்து கொண்டு, மரணத்துக்குப் பின்னாலுள்ள ஒரு வாழ்க்கைக்கு பயன்படும்படியான அமலை யார் செய்கிறாரோ அவரே மகாபுத்திசாலி’. (நூல் : மிஷ்காத்)
இன்றைக்கு பணம், பட்டம், பதவி, வீடு, சொத்து, கார், பங்களா என்று ஏதாவது ஒன்று இருந்தால், அவர் தான் அறிவாளி என்று இவ்வுலகம் போற்றுகிறது.
ஆனால், நபிகளார் ‘மறுமைக்காக அமல் செய்பவரே நல் அறிவாளி’ என்கிறார்கள். நம்மைநாமே அறிவாளி என்று சொல்லிக்கொள்ள வேண்டும் என்றால் இதர பதினோரு மாதங்களிலும் ரமலானைப் போலவே நாம் நல்ல அமல்கள் செய்ய முன்வர வேண்டும்.
ஆனால் அதற்கு நாம் முன்வருவதில்லை. அனைத்துச் சோதனைகளும் அந்த ஒற்றை 27-ம் இரவிலேயே முடிந்து போய் விட்டது இனி நமக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் இல்லை என்று எண்ணி விடுகிறோம். அன்று முதல் ஒவ்வொரு நாளையும் பெருநாளாய் கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.
மெய்யான பெருநாளும், நன்மையைத் தரும் நாளும் நாம் தொழும் அன்றாட அதிகாலை பஜ்ர் தொழுகையில் இருந்து தான் தொடங்குகிறது என்பதை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம்.
வாருங்கள்... இறை வணக்கத்தை தொடருவோம், குறைகளை அகற்றுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3






