என் மலர்
இஸ்லாம்
நாகை மாவட்டம் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 462-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி முன்னதாக நாகையில் இருந்து கொடி ஊர்வலம் நடந்தது. அப்போது சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வைத்து நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது.
பின்னர் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகிய 5 கொடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற அலங்கார வடிவங்கள் கொடி ஊர்வலத்தில் அணிவகுத்து சென்றன.
நாகை புதுப்பள்ளிதெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா கீழவீதி, தெற்கு, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட 40 தெருக்களில் கொடி ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை ரதங்கள் சென்றடைந்தன.
கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கொடி ஊர்வலத்தில் வந்த அலங்கார பல்லக்குகள் மற்றும் ரதங்களை கண்டு மகிழ்ந்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். கொடி ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர்.
பக்தர்களுக்கு அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. கொடி ஊர்வலம் நாகூர் எல்லையில் இருந்து நாகூர் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரெயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. பின்னர் தர்காவில் துவா ஓதப்பட்டு விழா கொடிகள் தர்கா ஊழியர்களால் மினராக்களின் உச்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு பாத்திகா ஓதியதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து என்னும் இந்த சந்தனக்கூடு புறப்பட்டு 16-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக தர்காவில் வாணவேடிக்கை, பீர்வைக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
விழாவையொட்டி முன்னதாக நாகையில் இருந்து கொடி ஊர்வலம் நடந்தது. அப்போது சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடி அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வைத்து நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது.
பின்னர் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகிய 5 கொடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற அலங்கார வடிவங்கள் கொடி ஊர்வலத்தில் அணிவகுத்து சென்றன.
நாகை புதுப்பள்ளிதெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா கீழவீதி, தெற்கு, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட 40 தெருக்களில் கொடி ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை ரதங்கள் சென்றடைந்தன.
கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று கொடி ஊர்வலத்தில் வந்த அலங்கார பல்லக்குகள் மற்றும் ரதங்களை கண்டு மகிழ்ந்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். கொடி ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர்.
பக்தர்களுக்கு அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. கொடி ஊர்வலம் நாகூர் எல்லையில் இருந்து நாகூர் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரெயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. பின்னர் தர்காவில் துவா ஓதப்பட்டு விழா கொடிகள் தர்கா ஊழியர்களால் மினராக்களின் உச்சிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு பாத்திகா ஓதியதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து என்னும் இந்த சந்தனக்கூடு புறப்பட்டு 16-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக தர்காவில் வாணவேடிக்கை, பீர்வைக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார்.
எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். ‘பொய் ஒரு குற்றமே அல்ல’ எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.
ஆட்சியாளர் முதல் அடிமட்டக் குடி மகன் வரை, நாடாளும் தலைவர் முதல் நடைபாதை வியாபாரி வரை, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பொய் நீக்கமற நிறைந்து நிற்கிறது.
‘பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது’ என்பதெல்லாம் பொய்யான தகவல் என்பது போன்றும், இதுபோன்ற சொலவடைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் காலம் தள்ள முடியாது என்பது போன்றும் சமூகம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது.
பொய்களால் கட்டமைக்கப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொலைக்காட்சி விளம்பரங்கள் பொய் சொல்கின்றன. திரைக்காவிய நாயகர்கள் பொய் சொல்கின்றனர். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் பொய் சொல்கின்றனர். அதிகாரத்தை அடைய விரும்புகின்றவர்களும் பொய் சொல்கின்றனர்.
புன்னகையிலும் பொய் ஒளிந்திருக்கிறது, கண்ணீரிலும் பொய் கலந்திருக்கிறது. யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. பொய்சூழ் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உண்மை மகத்தானது என்பதைக்கூட பொய்யாகவே கூறிக்கொண்டிருக்கின்றோம்.
உண்மை என்பது தந்திரமோ மந்திரமோ அல்ல, அதுதான் வாழ்வின் ஆதாரம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த ஆதாரம் தான் ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை. இந்த இறைநம்பிக்கை எவ்வளவு தூரம் மனதில் வலுவாக உள்ளதோ அவ்வளவு தூரம் ஒருவர் உண்மை பேசுவார். நம்பிக்கையின் சதவீதத்தைப் பொறுத்து வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் அவ்வளவுதான்.
உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார்.
‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பது நமது தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம். அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பலராலும் கடைப்பிடிக்க முடியாமல் போன வாசகம் என்றும் இதனைக்கூறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ என்று அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். இதைப் போன்றே பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்படுவார்”. (புகாரி, முஸ்லிம்)
‘இதயங்களின் மருத்துவர்’ என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை ‘மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா’ என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்.
ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன வெட்டுக்கிளியின் இறக்கை ஒன்று கிடந்தது.
அதைத் தூக்கிச் செல்வதற்காக பலமுறை அந்த எறும்பு முயன்றது. பாரமாக இருந்த காரணத்தால் அதனால் தூக்க இயலவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாகத் திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை இறக்கையைத் தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டுமே அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது)
உடனே நான் அந்த இறக்கையை கீழே போட்டேன். அந்த எறும்பு மீண்டும் அதனைத் தூக்க முயற்சித்தது, முடியவில்லை. மீண்டும் தன் படைகளைக் கூட்டிவரச் சென்றது.
முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வெளியே வந்தது. அவை அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது மீண்டும் வசிப்பிடம் நோக்கித் திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம் முறையும் அது தனது படையை அழைத்துவரச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவான எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வசிப்பிடத்திலிருந்து வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன்.
அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். ஆம்.. அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களைத் துண்டித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்துத் துண்டு துண்டாக உடைத்துப் போட்டன. அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கை சேதப்பட்டிருக்கும். ஆயினும் காலம் கடந்துவிட்டது.
உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர் களைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.
அவர் சொன்னார்: “அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பானாக, மீண்டும் இவ்வாறு செய்யாதே. பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன். பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்பு களின் உணர்வில் கலந்துள்ளது”.
எறும்புகளுக்குத் தெரிகிறது பொய் சொல்வது கொலைக்குற்றம் போன்ற பெரும் பாவம் என்று. ஆயினும் மனிதர்கள்..? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
நல்லவேளை எறும்பின் குணம் மனிதர் களுக்கு வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால்.. நம்மில் அனேகமானவர்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்.
ஆட்சியாளர் முதல் அடிமட்டக் குடி மகன் வரை, நாடாளும் தலைவர் முதல் நடைபாதை வியாபாரி வரை, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பொய் நீக்கமற நிறைந்து நிற்கிறது.
‘பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் கிடைக்காது’ என்பதெல்லாம் பொய்யான தகவல் என்பது போன்றும், இதுபோன்ற சொலவடைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் காலம் தள்ள முடியாது என்பது போன்றும் சமூகம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது.
பொய்களால் கட்டமைக்கப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொலைக்காட்சி விளம்பரங்கள் பொய் சொல்கின்றன. திரைக்காவிய நாயகர்கள் பொய் சொல்கின்றனர். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் பொய் சொல்கின்றனர். அதிகாரத்தை அடைய விரும்புகின்றவர்களும் பொய் சொல்கின்றனர்.
புன்னகையிலும் பொய் ஒளிந்திருக்கிறது, கண்ணீரிலும் பொய் கலந்திருக்கிறது. யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. பொய்சூழ் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உண்மை மகத்தானது என்பதைக்கூட பொய்யாகவே கூறிக்கொண்டிருக்கின்றோம்.
உண்மை என்பது தந்திரமோ மந்திரமோ அல்ல, அதுதான் வாழ்வின் ஆதாரம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த ஆதாரம் தான் ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை. இந்த இறைநம்பிக்கை எவ்வளவு தூரம் மனதில் வலுவாக உள்ளதோ அவ்வளவு தூரம் ஒருவர் உண்மை பேசுவார். நம்பிக்கையின் சதவீதத்தைப் பொறுத்து வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் அவ்வளவுதான்.
உண்மையான இறைநம்பிக்கை கொண்டிருப்பவர் (முஃமின்) உள்ளும் புறமும் ஏக இறையை நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவார். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் அவர் மாறு செய்யமாட்டார்.
‘சத்யமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பது நமது தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம். அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, பலராலும் கடைப்பிடிக்க முடியாமல் போன வாசகம் என்றும் இதனைக்கூறலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ என்று அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். இதைப் போன்றே பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்படுவார்”. (புகாரி, முஸ்லிம்)
‘இதயங்களின் மருத்துவர்’ என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை ‘மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா’ என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்.
ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன வெட்டுக்கிளியின் இறக்கை ஒன்று கிடந்தது.
அதைத் தூக்கிச் செல்வதற்காக பலமுறை அந்த எறும்பு முயன்றது. பாரமாக இருந்த காரணத்தால் அதனால் தூக்க இயலவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாகத் திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை இறக்கையைத் தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டுமே அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது)
உடனே நான் அந்த இறக்கையை கீழே போட்டேன். அந்த எறும்பு மீண்டும் அதனைத் தூக்க முயற்சித்தது, முடியவில்லை. மீண்டும் தன் படைகளைக் கூட்டிவரச் சென்றது.
முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வெளியே வந்தது. அவை அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது மீண்டும் வசிப்பிடம் நோக்கித் திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம் முறையும் அது தனது படையை அழைத்துவரச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவான எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வசிப்பிடத்திலிருந்து வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன்.
அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். ஆம்.. அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களைத் துண்டித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்துத் துண்டு துண்டாக உடைத்துப் போட்டன. அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கை சேதப்பட்டிருக்கும். ஆயினும் காலம் கடந்துவிட்டது.
உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர் களைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.
அவர் சொன்னார்: “அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பானாக, மீண்டும் இவ்வாறு செய்யாதே. பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன். பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்பு களின் உணர்வில் கலந்துள்ளது”.
எறும்புகளுக்குத் தெரிகிறது பொய் சொல்வது கொலைக்குற்றம் போன்ற பெரும் பாவம் என்று. ஆயினும் மனிதர்கள்..? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
நல்லவேளை எறும்பின் குணம் மனிதர் களுக்கு வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால்.. நம்மில் அனேகமானவர்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்.
‘தப்பித்தோம்’ என்று தற்போது வேண்டுமென்றால் கூறிக்கொள்ளலாம். ஆனால் மறுமை என்று ஒன்று இருக்கின்றதே.. பொய்யர்களின் நிலை அங்கு என்னவாகுமோ.. யார் அறிவார்..?
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
“திண்ணமாக அல்லாஹ் என்னை (மக்களுக்கு) கஷ்டம் கொடுப்பவராகவோ அல்லது குறை காண்பவராகவோ அனுப்பவில்லை; மாறாக (மக்களுக்கு எதையும்) இலகுவாக்கித் தரும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்)
ஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே சற்று சிரமம் நிறைந்த பணி என்பது எமது தாழ்மையான கருத்து. வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் பொறுப்பு என்பது சாதாரணமானதல்ல. அதற்குப் பெரும் பொறுமையும் நிதானமும் தேவை.
பாடங்களைத் திறம்பட சொல்லிக் கொடுத்தால் மட்டுமே போதாது, மாணவர்களின் தராதரம் அறிந்து, அவர்களின் அறிவுக்கு ஏற்றார்போல் கற்றுக்கொடுக்கும்போதுதான் ஆசிரியர்-மாணவர் பந்தம் உயிரோட்டமாக இருக்கும்.
இல்லையேல், ‘வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன்’ என்று ஆசிரியரும்; ‘பெற்றோர் விருப்பத்திற்காக படிக்கிறேன்’ என்று மாணவரும் தனித்தனிப் பாதையில் இருப்பார்கள்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வி என்பது ஓர் அமானிதம். அதைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றால் மறுமை விசாரணையில் இருந்து ஆசிரியர்களும் தப்பிக்க முடியாது.
இது ஓர் அமானிதம் என்ற சிந்தனை இல்லாததால் தான், கல்வி கடைச்சரக்காக இன்று மாறிவிட்டது. பணம் பண்ணும் மரமாக கல்வி மாறிவிட்டதால், இன்றைய கல்வி ஏழைக்கு எட்டாக்கனியாகவும் மாறிவிட்டது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மை அறிமுகம் செய்யும்போது ஓர் ஆசிரியர் என்றே தன்னை அறிமுகம் செய்கின்றார்கள்:
“திண்ணமாக அல்லாஹ் என்னை (மக்களுக்கு) கஷ்டம் கொடுப்பவராகவோ அல்லது குறை காண்பவராகவோ அனுப்பவில்லை; மாறாக (மக்களுக்கு எதையும்) இலகுவாக்கித் தரும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்)
இறைத்தூதர் (ஸல்) அவர்களே தன்னை ஓர் ஆசிரியர் என்று அறிவிக்கின்றார்கள் என்றால் ஆசிரியப்பணி எத்தகையப் புனிதப்பணி, எத்தகைய மகத்தான பணி என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
மறுமையில் அல்லாஹ்வின் சன்னிதியில் ஓர் ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும் மாட்டமாட்டார். ‘கற்ற கல்வியை வைத்து என்ன செய்தாய்?’ என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட எவராலும் நகர முடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுக்கம் வரும்.
முன்மாதிரி ஆசிரியர் ஒருவர் குறித்து சமீபத்தில் படித்த நிகழ்வு நெகிழச் செய்துவிட்டது. இப்படியும் ஆசிரியர்கள் இருந்துள்ளனரே என்பதை எண்ணும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.
பிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் (மலையாளம்) ‘குற்றமும் தண்டனையும்’ எனும் பகுதியில், மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்து இவ்வாறு கூறுகின்றார்:
அது ஒரு தேர்வுக் காலம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.
ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார்.
தண்டனை என்ன தெரியுமா? பள்ளிக்கூட அசெம்ப்ளி ஒன்றுகூட்டப்பட்டு, அனைவர் முன்னிலையிலும் குச்சியால் ஆறு அடிகள் அடிப்பது. அதுதான் அன்றைய பெரும் தண்டனை.
ஆனால், இந்த முடிவுக்கு ஆசிரியர் தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்ப்பு தெரிவித்தார். ‘மாணவனுக்குத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும்’ என்ற தமது முடிவில் தலைமை ஆசிரியரும் உறுதியுடன் இருந்தார்.
அசெம்ப்ளி ஒன்றுகூட்டப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்றனர். நடப்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். வகுப்பாசிரியர் தோமஸ் மாஸ்டரும் வருகை தந்தார். தண்டனை தொடங்குவதற்கு முன் அனைவர் முன்னிலையிலும் தோமஸ் மாஸ்டர் இவ்வாறு கூறினார்:
“அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும், கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்கமாட்டான் அல்லவா. ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.
தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தார். ஆயினும் மாணவனுக்குத் தண்டனை கொடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் வகுப்பாசிரியரின் நிர்பந்தத்திற்கு தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தார்.
தவறு செய்த அந்த மாணவனைச் சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: “இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.
உடனே தோமஸ் மாஸ்டர் கூறினார்: “இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல.. மாறாக, நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாகச் செய்திருந்தால் இவன் காப்பி அடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.
தலைமை ஆசிரியர் குச்சியை எடுத்தார். ஆசிரியருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது. மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். அடிகொண்டது ஆசிரியர், அழுதது மாணவர்கள்.
உடனே காப்பி அடித்த அந்த மாணவன் அழுத வண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் மண்டியிட்டு நின்றவாறு, “இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.
பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: “நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக் காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே.. இனி ஒருபோதும் நான் தேர்வில் காப்பி அடிக்கமாட்டேன் மாஸ்டர்..! என்னை மன்னித்துவிடுங்கள்”.
இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஒரு புதிய பாடத்தை அன்றுதான் அந்தப் பள்ளிக் கூடமே கற்றுக்கொண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்கேபெற்ற ஓர் ஒப்பற்ற நிகழ்வு அது.
இன்றைய ஆசிரியர்களையும் மாணவர்களையும் தயவு செய்து இத்துடன் ஒப்பிட்டு நோக்க வேண்டாம். ஏனெனில் அது ஒரு கனாக்காலம்.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
பாடங்களைத் திறம்பட சொல்லிக் கொடுத்தால் மட்டுமே போதாது, மாணவர்களின் தராதரம் அறிந்து, அவர்களின் அறிவுக்கு ஏற்றார்போல் கற்றுக்கொடுக்கும்போதுதான் ஆசிரியர்-மாணவர் பந்தம் உயிரோட்டமாக இருக்கும்.
இல்லையேல், ‘வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன்’ என்று ஆசிரியரும்; ‘பெற்றோர் விருப்பத்திற்காக படிக்கிறேன்’ என்று மாணவரும் தனித்தனிப் பாதையில் இருப்பார்கள்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வி என்பது ஓர் அமானிதம். அதைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றால் மறுமை விசாரணையில் இருந்து ஆசிரியர்களும் தப்பிக்க முடியாது.
இது ஓர் அமானிதம் என்ற சிந்தனை இல்லாததால் தான், கல்வி கடைச்சரக்காக இன்று மாறிவிட்டது. பணம் பண்ணும் மரமாக கல்வி மாறிவிட்டதால், இன்றைய கல்வி ஏழைக்கு எட்டாக்கனியாகவும் மாறிவிட்டது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மை அறிமுகம் செய்யும்போது ஓர் ஆசிரியர் என்றே தன்னை அறிமுகம் செய்கின்றார்கள்:
“திண்ணமாக அல்லாஹ் என்னை (மக்களுக்கு) கஷ்டம் கொடுப்பவராகவோ அல்லது குறை காண்பவராகவோ அனுப்பவில்லை; மாறாக (மக்களுக்கு எதையும்) இலகுவாக்கித் தரும் ஓர் ஆசிரியராகவே அனுப்பியுள்ளான்.” (முஸ்லிம்)
இறைத்தூதர் (ஸல்) அவர்களே தன்னை ஓர் ஆசிரியர் என்று அறிவிக்கின்றார்கள் என்றால் ஆசிரியப்பணி எத்தகையப் புனிதப்பணி, எத்தகைய மகத்தான பணி என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
மறுமையில் அல்லாஹ்வின் சன்னிதியில் ஓர் ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும் மாட்டமாட்டார். ‘கற்ற கல்வியை வைத்து என்ன செய்தாய்?’ என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட எவராலும் நகர முடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுக்கம் வரும்.
முன்மாதிரி ஆசிரியர் ஒருவர் குறித்து சமீபத்தில் படித்த நிகழ்வு நெகிழச் செய்துவிட்டது. இப்படியும் ஆசிரியர்கள் இருந்துள்ளனரே என்பதை எண்ணும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.
பிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் (மலையாளம்) ‘குற்றமும் தண்டனையும்’ எனும் பகுதியில், மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்து இவ்வாறு கூறுகின்றார்:
அது ஒரு தேர்வுக் காலம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.
ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார்.
தண்டனை என்ன தெரியுமா? பள்ளிக்கூட அசெம்ப்ளி ஒன்றுகூட்டப்பட்டு, அனைவர் முன்னிலையிலும் குச்சியால் ஆறு அடிகள் அடிப்பது. அதுதான் அன்றைய பெரும் தண்டனை.
ஆனால், இந்த முடிவுக்கு ஆசிரியர் தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்ப்பு தெரிவித்தார். ‘மாணவனுக்குத் தண்டனை கொடுத்தே தீர வேண்டும்’ என்ற தமது முடிவில் தலைமை ஆசிரியரும் உறுதியுடன் இருந்தார்.
அசெம்ப்ளி ஒன்றுகூட்டப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்றனர். நடப்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். வகுப்பாசிரியர் தோமஸ் மாஸ்டரும் வருகை தந்தார். தண்டனை தொடங்குவதற்கு முன் அனைவர் முன்னிலையிலும் தோமஸ் மாஸ்டர் இவ்வாறு கூறினார்:
“அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும், கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்கமாட்டான் அல்லவா. ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.
தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தார். ஆயினும் மாணவனுக்குத் தண்டனை கொடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் வகுப்பாசிரியரின் நிர்பந்தத்திற்கு தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தார்.
தவறு செய்த அந்த மாணவனைச் சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: “இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.
உடனே தோமஸ் மாஸ்டர் கூறினார்: “இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல.. மாறாக, நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாகச் செய்திருந்தால் இவன் காப்பி அடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.
தலைமை ஆசிரியர் குச்சியை எடுத்தார். ஆசிரியருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது. மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். அடிகொண்டது ஆசிரியர், அழுதது மாணவர்கள்.
உடனே காப்பி அடித்த அந்த மாணவன் அழுத வண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் மண்டியிட்டு நின்றவாறு, “இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.
பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: “நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக் காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே.. இனி ஒருபோதும் நான் தேர்வில் காப்பி அடிக்கமாட்டேன் மாஸ்டர்..! என்னை மன்னித்துவிடுங்கள்”.
இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஒரு புதிய பாடத்தை அன்றுதான் அந்தப் பள்ளிக் கூடமே கற்றுக்கொண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்கேபெற்ற ஓர் ஒப்பற்ற நிகழ்வு அது.
இன்றைய ஆசிரியர்களையும் மாணவர்களையும் தயவு செய்து இத்துடன் ஒப்பிட்டு நோக்க வேண்டாம். ஏனெனில் அது ஒரு கனாக்காலம்.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு இடம் பெயர்ந்து (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தடைந்து ஆறு ஆண்டு காலம் நிறைவு பெற்றிருந்தது. அப்போது, யூதர்களைத் தவிர ஏனைய மதீனாவாசிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவியவர்களாக இருந்தார்கள்.
இந்த சமாதான சூழ்நிலையில் நபிகள் பெருமானாருக்கு மக்கா நகரின் நினைவும், இறை இல்லமான கஅபாவை காண வேண்டும் என்ற ஆவலும் மேலோங்கி நின்றது. இதையடுத்து மக்காவிற்கு ‘உம்ரா’ செய்ய முடிவு செய்தார். நபிகளாருடன் சேர்ந்து மக்கா செல்ல அவரது தோழர்களும் ஆயத்தமானார்கள்.
முதன்மையான நபித்தோழர்களான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோருடன் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் நபிகள் நாதருடன் ஒன்று சேர்ந்து புறப்பட்டனர்.
அரேபிய குரைஷியர்கள் இந்த செய்தியை அறிந்தனர். நபிகள் தலைமையில் வரும் கூட்டம் போர் செய்யும் எண்ணத்தில் வரவில்லை என்றாலும், அவர்களை மக்கா நகருக்குள் அனுமதித்தால் அது நமக்கு பின்னடைவைத் தரும். இங்கிருக்கும் பாதி சொந்தங்கள் அவர்களோடு சென்று விடுவார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை செய்தார்கள்.
இதன் அடிப்படையில் பேச்சாற்றல் மிக்க ஸஹது இப்னு அம்ர் என்பவரை நபிகளாரிடம் அனுப்பி சமாதான உடன்படிக்கை செய்ய திட்டமிட்டனர்.
ஸஹது இப்னு அம்ர், ஹூதைபிய்யா என்ற இடத்தில் நபிகளாரையும், அவரது கூட்டத்தையும் சந்தித்தார். இதற்கு மேல் தொடர்ந்து செல்ல நபிகளாரின் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என்று தடுத்தார். போர் புரிய வரவில்லை, கஅபாவை காணவே வருகிறோம் என்று நபிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் இதை ஏற்க ஸஹது இப்னு அம்ர் மறுத்தார்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. உடன்படிக்கையின் அத்தனை விதிகளையும் நானே சொல்வேன் என்று ஸஹது இப்னு அம்ர் அடம் பிடித்ததையும் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒப்புக்கொண்டார்கள். ஹூதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தானது.
சமாதான உடன்படிக்கையின் அத்தனை ஷரத்துகளுமே மக்கா குரைஷியருக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. உமர் (ரலி) போன்ற வேகம் மிகுந்த சஹாபாக்கள், ‘நாமோ தலைசிறந்த வீரர்களாய் இருக்கிறோம். ஆனால் இந்த உடன்படிக்கையோ நமக்கு முழுவதும் பாதகமாக உள்ளது. இதனை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். போருக்கு ஆணையிடுங்கள். ஸஹது இப்னு அம்ரின் தலையை கொய்து மக்காவை கைப்பற்றுவோம். உம்ரா செய்வோம்’ என்று சூளுரைத்தார்கள்.
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) புன்னகை பூத்தவர்களாக அவர்களை அமைதிப்படுத்தினார்கள். “மக்காவில் நம் சொந்தங்கள் இருக்கிறார்கள். இன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நாளை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவலாம். அவர்களை இழக்க நான் தயாரில்லை. மேலும் ரத்தம் சிந்தி மக்காவை வெற்றி கொள்ள என் மனம் மறுக்கிறது” என்றார்கள்.
சஹாபா பெருமக்கள் உள் மனதில் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று அறிந்த அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:
“(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்”. (திருக்குர்ஆன் 48:1)
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் மக்காவில் இருந்த சொந்தங்களும் பந்தங்களும், போரில்லாத சமாதான காலத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருத்துகள் பரிமாறிக் கொண்டனர். சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகமாயின. மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பலரும் ஏகத்துவ கொள்கையை முழுமையாக அறிந்து இஸ்லாத்தை தழுவினர். மக்கத்து குரைஷிகளின் பலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
உடன்படிக்கையின் காலக்கெடுவும் முடிவடைந்தது. மீண்டும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ‘உம்ரா’ செய்ய எண்ணினார்கள். இப்போது நபித்தோழர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரமாக பெருகி இருந்தது. ஒட்டகங்கள், குதிரைகள் மீது பயணித்தும், நடந்தும் அந்த பெருங்கூட்டம் மக்காவை நோக்கி புறப்பட்டது. நபிகளாரின் இந்த பெரும்படை வருவதை அறிந்து எதிரிகள் பயந்து ஓடி ஒளிந்து கொண்டனர்.
அண்ணலாரின் பேரணி அமைதியாய் மக்கா நகரில் நுழைந்தது. ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை, போர் முரசு கொட்டப்படவில்லை. அகிம்சையாய் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது.
ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது இறக்கிய வசனத்தின் மூலம் உறுதி செய்த வெற்றியை அல்லாஹ் அருளினான். மேலும் இதற்கு நன்றி செலுத்தும்படியும் திருக்குர்ஆன் வசனம் இறங்கியது:
“(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான்” (திருக்குர்ஆன் 48:2)
இப்படி ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால்,
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக. நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 110:1-3)
மக்காவில் நுழைந்ததும் கஅபாவில் உள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டு கஅபா சுத்தம் செய்யப்பட்டது.
பிலால் (ரலி) அவர்களை அழைத்து கஅபாவின் மேல் ஏறி “பாங்கு” சொல்லி அனைவரையும் தொழுகைக்காக அழைப்பு விடுக்குமாறு சொன்னார்கள்.
அடுத்து மக்கத்துவாசிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. யார் யார் என்னென்ன தீமைகளை முஸ்லிம்களுக்கு செய்திருந்தாலும் அனைவரும் இன்று முதல் மன்னிக்கப்பட்டு விட்டனர் என்ற முதல் அறிவிப்பு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
குரைஷியர் தலைவர் அபூசுபியானும் அவன் மனைவி ஹிந்தா, ஹம்ஸா (அலை) அவர்களை கொலை செய்த வம்சி மற்றும் அங்கு அடைக்கலமாய் இருந்த அனைவரும் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்து அண்ணலார் கரம் பற்றி பாவமன்னிப்பு பெற்று இஸ்லாத்தைத் தழுவினர். அன்று நபிகள் நாதர் சொன்னார்களே, நாளை இவர்களும் இஸ்லாத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உண்மையானது.
அடுத்து கஅபாவின் சாவியை யாரிடம் ஒப்படைப்பது என்ற பெரும் கேள்வி எழுந்தது. நபி பெருமானார் (ஸல்) கஅபாவை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் போது, ‘கஅபாவின் சாவியைக் கொடுங்கள். நான் இரண்டு ரக்காத் தொழுது விட்டு செல்கிறேன்’ என்று கேட்டபோது, ஆணவமாய் மறுத்த உஸ்மா பின் தல்ஹாவை அழைத்து அவர் கையில் சாவியை ஒப்படைத்து, ‘உலகம் உள்ளளவும் இவரது சந்ததியினரே கஅபாவின் சாவியை வைத்திருப்பார்கள்’ என்று நன்மாராயம் சொன்னார்கள். இதன் மூலம் அவரின் சந்ததி, உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் என்ற முன்னறிவிப்பையும் சொன்னார்கள். இன்று வரை அந்த குடும்பத்தினரிடமே அந்த சாவி உள்ளது என்பது நபிகளாரின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்துகிறது.
அன்று ஏற்றப்பட்ட ஏகத்துவ கொள்கைக்கொடி இன்று வரை பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது. வெற்றியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- மு. முஹம்மது யூசுப். உடன்குடி.
இந்த சமாதான சூழ்நிலையில் நபிகள் பெருமானாருக்கு மக்கா நகரின் நினைவும், இறை இல்லமான கஅபாவை காண வேண்டும் என்ற ஆவலும் மேலோங்கி நின்றது. இதையடுத்து மக்காவிற்கு ‘உம்ரா’ செய்ய முடிவு செய்தார். நபிகளாருடன் சேர்ந்து மக்கா செல்ல அவரது தோழர்களும் ஆயத்தமானார்கள்.
முதன்மையான நபித்தோழர்களான அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோருடன் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் நபிகள் நாதருடன் ஒன்று சேர்ந்து புறப்பட்டனர்.
அரேபிய குரைஷியர்கள் இந்த செய்தியை அறிந்தனர். நபிகள் தலைமையில் வரும் கூட்டம் போர் செய்யும் எண்ணத்தில் வரவில்லை என்றாலும், அவர்களை மக்கா நகருக்குள் அனுமதித்தால் அது நமக்கு பின்னடைவைத் தரும். இங்கிருக்கும் பாதி சொந்தங்கள் அவர்களோடு சென்று விடுவார்கள். எனவே அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை செய்தார்கள்.
இதன் அடிப்படையில் பேச்சாற்றல் மிக்க ஸஹது இப்னு அம்ர் என்பவரை நபிகளாரிடம் அனுப்பி சமாதான உடன்படிக்கை செய்ய திட்டமிட்டனர்.
ஸஹது இப்னு அம்ர், ஹூதைபிய்யா என்ற இடத்தில் நபிகளாரையும், அவரது கூட்டத்தையும் சந்தித்தார். இதற்கு மேல் தொடர்ந்து செல்ல நபிகளாரின் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என்று தடுத்தார். போர் புரிய வரவில்லை, கஅபாவை காணவே வருகிறோம் என்று நபிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் இதை ஏற்க ஸஹது இப்னு அம்ர் மறுத்தார்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. உடன்படிக்கையின் அத்தனை விதிகளையும் நானே சொல்வேன் என்று ஸஹது இப்னு அம்ர் அடம் பிடித்ததையும் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒப்புக்கொண்டார்கள். ஹூதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தானது.
சமாதான உடன்படிக்கையின் அத்தனை ஷரத்துகளுமே மக்கா குரைஷியருக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. உமர் (ரலி) போன்ற வேகம் மிகுந்த சஹாபாக்கள், ‘நாமோ தலைசிறந்த வீரர்களாய் இருக்கிறோம். ஆனால் இந்த உடன்படிக்கையோ நமக்கு முழுவதும் பாதகமாக உள்ளது. இதனை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். போருக்கு ஆணையிடுங்கள். ஸஹது இப்னு அம்ரின் தலையை கொய்து மக்காவை கைப்பற்றுவோம். உம்ரா செய்வோம்’ என்று சூளுரைத்தார்கள்.
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) புன்னகை பூத்தவர்களாக அவர்களை அமைதிப்படுத்தினார்கள். “மக்காவில் நம் சொந்தங்கள் இருக்கிறார்கள். இன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நாளை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவலாம். அவர்களை இழக்க நான் தயாரில்லை. மேலும் ரத்தம் சிந்தி மக்காவை வெற்றி கொள்ள என் மனம் மறுக்கிறது” என்றார்கள்.
சஹாபா பெருமக்கள் உள் மனதில் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று அறிந்த அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:
“(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்”. (திருக்குர்ஆன் 48:1)
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு, இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் மக்காவில் இருந்த சொந்தங்களும் பந்தங்களும், போரில்லாத சமாதான காலத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருத்துகள் பரிமாறிக் கொண்டனர். சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகமாயின. மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பலரும் ஏகத்துவ கொள்கையை முழுமையாக அறிந்து இஸ்லாத்தை தழுவினர். மக்கத்து குரைஷிகளின் பலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
உடன்படிக்கையின் காலக்கெடுவும் முடிவடைந்தது. மீண்டும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ‘உம்ரா’ செய்ய எண்ணினார்கள். இப்போது நபித்தோழர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரமாக பெருகி இருந்தது. ஒட்டகங்கள், குதிரைகள் மீது பயணித்தும், நடந்தும் அந்த பெருங்கூட்டம் மக்காவை நோக்கி புறப்பட்டது. நபிகளாரின் இந்த பெரும்படை வருவதை அறிந்து எதிரிகள் பயந்து ஓடி ஒளிந்து கொண்டனர்.
அண்ணலாரின் பேரணி அமைதியாய் மக்கா நகரில் நுழைந்தது. ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை, போர் முரசு கொட்டப்படவில்லை. அகிம்சையாய் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது.
ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது இறக்கிய வசனத்தின் மூலம் உறுதி செய்த வெற்றியை அல்லாஹ் அருளினான். மேலும் இதற்கு நன்றி செலுத்தும்படியும் திருக்குர்ஆன் வசனம் இறங்கியது:
“(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான்” (திருக்குர்ஆன் 48:2)
இப்படி ஒரு மகத்தான வெற்றியைத் தந்து விட்டு, பலமிகுந்து விட்டதால் அகம்பாவம் உள்ளத்தில் குடி கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்கின்றான் இறைவன். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால்,
(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக. நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 110:1-3)
மக்காவில் நுழைந்ததும் கஅபாவில் உள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டு கஅபா சுத்தம் செய்யப்பட்டது.
பிலால் (ரலி) அவர்களை அழைத்து கஅபாவின் மேல் ஏறி “பாங்கு” சொல்லி அனைவரையும் தொழுகைக்காக அழைப்பு விடுக்குமாறு சொன்னார்கள்.
அடுத்து மக்கத்துவாசிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. யார் யார் என்னென்ன தீமைகளை முஸ்லிம்களுக்கு செய்திருந்தாலும் அனைவரும் இன்று முதல் மன்னிக்கப்பட்டு விட்டனர் என்ற முதல் அறிவிப்பு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
குரைஷியர் தலைவர் அபூசுபியானும் அவன் மனைவி ஹிந்தா, ஹம்ஸா (அலை) அவர்களை கொலை செய்த வம்சி மற்றும் அங்கு அடைக்கலமாய் இருந்த அனைவரும் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்து அண்ணலார் கரம் பற்றி பாவமன்னிப்பு பெற்று இஸ்லாத்தைத் தழுவினர். அன்று நபிகள் நாதர் சொன்னார்களே, நாளை இவர்களும் இஸ்லாத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உண்மையானது.
அடுத்து கஅபாவின் சாவியை யாரிடம் ஒப்படைப்பது என்ற பெரும் கேள்வி எழுந்தது. நபி பெருமானார் (ஸல்) கஅபாவை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் போது, ‘கஅபாவின் சாவியைக் கொடுங்கள். நான் இரண்டு ரக்காத் தொழுது விட்டு செல்கிறேன்’ என்று கேட்டபோது, ஆணவமாய் மறுத்த உஸ்மா பின் தல்ஹாவை அழைத்து அவர் கையில் சாவியை ஒப்படைத்து, ‘உலகம் உள்ளளவும் இவரது சந்ததியினரே கஅபாவின் சாவியை வைத்திருப்பார்கள்’ என்று நன்மாராயம் சொன்னார்கள். இதன் மூலம் அவரின் சந்ததி, உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் என்ற முன்னறிவிப்பையும் சொன்னார்கள். இன்று வரை அந்த குடும்பத்தினரிடமே அந்த சாவி உள்ளது என்பது நபிகளாரின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்துகிறது.
அன்று ஏற்றப்பட்ட ஏகத்துவ கொள்கைக்கொடி இன்று வரை பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது. வெற்றியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- மு. முஹம்மது யூசுப். உடன்குடி.
இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும்.
நமது தேசத்தின் அடையாளங்களில் நமது குடும்பமும் ஒன்று. இதர நாடுகளில் பெரும்பாலும் குடும்பம் என்பது சிதைந்து போன நிலையில் தான் இருக்கிறது. அதிலும் கூட்டுக்குடும்பத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூட்டுறவே நாட்டுயர்வு, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், யாதும் ஊரே, யாவரும் கேளிர், ஒன்றே குலம், ஒருவனே தேவன்... என்பதெல்லாம் தமிழகத்தின் தாரக மந்திரச் சொற்கள்.
இஸ்லாமிய மார்க்கமும், குடும்பம் என்பது என்ன, குடும்பத்துடன் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலமும், நபி மொழிகள் மூலமும் தௌிவாக தெரிவிக்கின்றன.
‘மனிதர்களே, உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச்செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்)- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
‘மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)
ஒரு மனிதன் குடும்பம் என்ற வளையத்தை விட்டு வேறு வழியில் சென்று விடக்கூடாது. நாம் குடும்பத்தைப் பாதுகாத்தால் நமது குடும்பம் நிச்சயம் நம்மை பாதுகாக்கும்.
இதனால் தான் நீங்கள் உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள், உங்கள் உறவுகளை துண்டிக்காதீர்கள். உங்கள் உறவுகளை ஆதரியுங்கள், உங்களது ஆயுள் அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான சகல வாழ்வாதாரங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என்றெல்லாம் சொல்லி, நமது உறவுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.
குடும்பம் தான் மனிதனை மனிதனாகவே வாழவைக்கிறது. நல்லொழுக்கங்களை கற்றுத்தருகிறது. உறவுகளை மதிக்கச்சொல்கிறது, ஒற்றுமையோடு வாழ வழிகாட்டுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துவாழக் கற்றுக்கொடுக்கிறது என ஏகப்பட்ட நன்மைகள் ஒரு குடும்பத்தில் உண்டு.
“ஒருவர் செலவு செய்யும் தொகைகளிலேயே ஆக மிகச் சிறந்தது அவர் தனது குடும்பத்திற்காக செலவு செய்வதே ஆகும்” என்பது நபிமொழியாகும். (நூல் : முஸ்லிம்)
“ஒருவர் தமது குடும்பத்திற்காக செலவு செய்யும் போது இறைவனின் திருப்தியை நாடி செலவு செய்தால், அவர் செய்யும் ஒவ்வொரு செலவும் அது அவருக்கு தர்மமாக ஆகும்” என்பது மற்றொரு நபிமொழியாகும். (நூல்: புகாரி).
இந்த நபிமொழிகள் நமக்கு உணர்த்துவது என்ன..? செல்வம் அது சேர்த்து வைக்கப்படுவதற்கல்ல. அது செலவு செய்யப்படுவதற்குத்தான். அதுவும் அவரவர் தமது குடும்பங்களுக்காக செலவு செய்வது தான் சிறந்தது.
அதற்கு இரண்டு விதமான நன்மைகள் உண்டு. ஒன்று குடும்பத்தை கவனித்த நன்மை. மற்றொன்று தர்மம் செய்த நன்மை. இதுதவிர ஒருவன் தன் குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்றால் அது ஒரு பாவச்செயல். அந்தப் பாவம் ஒன்றே போதும் அவனை நரகத்தில் கொண்டு போய் தள்ளுவதற்கு.
குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ளவர்களை கவனித்துக் கொள்வது கட்டாயக் கடமையாகும். குடும்பம் என்பது கதவும், ஜன்னலும் கொண்ட வெறும் வீடல்ல. அன்பும், இரக்கமும், பாசமும் கொண்ட ஒரு பெரும்கூடு’ என்பதை முதலில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனையோ வகை மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி அவர்களது குடும்பம் தான். இதனால் தான் “உங்கள் பிள்ளைகளுக்கு உங்களது குடும்பப் பாரம்பரியத்தை கற்றுக்கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.
உறவு என்பது ஒரு தனிப்பிரிவல்ல. அது ஒரு உயிரின் குடும்ப இணைப்பு. உறவற்ற குடும்பம் உயிரற்ற உடலைப் போன்றது. எனவே நமது குடும்பம் நம்மைப் போலவே உயிருடனும், உயிர்ப்புடனும் இருக்க வேண்டும். “படைப்பினங்கள் யாவும் ஒரே குடும்பம்” என்று பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைக்கத்தக்கது.
இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும். அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து வாழும் போது தான் அந்த வாழ்க்கை நிச்சயம் அர்த்தமுள்ளதாய் அமையும்.
என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூட்டுறவே நாட்டுயர்வு, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், யாதும் ஊரே, யாவரும் கேளிர், ஒன்றே குலம், ஒருவனே தேவன்... என்பதெல்லாம் தமிழகத்தின் தாரக மந்திரச் சொற்கள்.
இஸ்லாமிய மார்க்கமும், குடும்பம் என்பது என்ன, குடும்பத்துடன் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலமும், நபி மொழிகள் மூலமும் தௌிவாக தெரிவிக்கின்றன.
‘மனிதர்களே, உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப் படுத்தி உலகில்) பரவச்செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக்கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்)- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
‘மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)
ஒரு மனிதன் குடும்பம் என்ற வளையத்தை விட்டு வேறு வழியில் சென்று விடக்கூடாது. நாம் குடும்பத்தைப் பாதுகாத்தால் நமது குடும்பம் நிச்சயம் நம்மை பாதுகாக்கும்.
இதனால் தான் நீங்கள் உறவுகளோடு சேர்ந்து வாழுங்கள், உங்கள் உறவுகளை துண்டிக்காதீர்கள். உங்கள் உறவுகளை ஆதரியுங்கள், உங்களது ஆயுள் அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான சகல வாழ்வாதாரங்களிலும் அபிவிருத்தி செய்யப்படும் என்றெல்லாம் சொல்லி, நமது உறவுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.
குடும்பம் தான் மனிதனை மனிதனாகவே வாழவைக்கிறது. நல்லொழுக்கங்களை கற்றுத்தருகிறது. உறவுகளை மதிக்கச்சொல்கிறது, ஒற்றுமையோடு வாழ வழிகாட்டுகிறது. ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துவாழக் கற்றுக்கொடுக்கிறது என ஏகப்பட்ட நன்மைகள் ஒரு குடும்பத்தில் உண்டு.
“ஒருவர் செலவு செய்யும் தொகைகளிலேயே ஆக மிகச் சிறந்தது அவர் தனது குடும்பத்திற்காக செலவு செய்வதே ஆகும்” என்பது நபிமொழியாகும். (நூல் : முஸ்லிம்)
“ஒருவர் தமது குடும்பத்திற்காக செலவு செய்யும் போது இறைவனின் திருப்தியை நாடி செலவு செய்தால், அவர் செய்யும் ஒவ்வொரு செலவும் அது அவருக்கு தர்மமாக ஆகும்” என்பது மற்றொரு நபிமொழியாகும். (நூல்: புகாரி).
இந்த நபிமொழிகள் நமக்கு உணர்த்துவது என்ன..? செல்வம் அது சேர்த்து வைக்கப்படுவதற்கல்ல. அது செலவு செய்யப்படுவதற்குத்தான். அதுவும் அவரவர் தமது குடும்பங்களுக்காக செலவு செய்வது தான் சிறந்தது.
அதற்கு இரண்டு விதமான நன்மைகள் உண்டு. ஒன்று குடும்பத்தை கவனித்த நன்மை. மற்றொன்று தர்மம் செய்த நன்மை. இதுதவிர ஒருவன் தன் குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்றால் அது ஒரு பாவச்செயல். அந்தப் பாவம் ஒன்றே போதும் அவனை நரகத்தில் கொண்டு போய் தள்ளுவதற்கு.
குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றியுள்ளவர்களை கவனித்துக் கொள்வது கட்டாயக் கடமையாகும். குடும்பம் என்பது கதவும், ஜன்னலும் கொண்ட வெறும் வீடல்ல. அன்பும், இரக்கமும், பாசமும் கொண்ட ஒரு பெரும்கூடு’ என்பதை முதலில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனையோ வகை மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி அவர்களது குடும்பம் தான். இதனால் தான் “உங்கள் பிள்ளைகளுக்கு உங்களது குடும்பப் பாரம்பரியத்தை கற்றுக்கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.
உறவு என்பது ஒரு தனிப்பிரிவல்ல. அது ஒரு உயிரின் குடும்ப இணைப்பு. உறவற்ற குடும்பம் உயிரற்ற உடலைப் போன்றது. எனவே நமது குடும்பம் நம்மைப் போலவே உயிருடனும், உயிர்ப்புடனும் இருக்க வேண்டும். “படைப்பினங்கள் யாவும் ஒரே குடும்பம்” என்று பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைக்கத்தக்கது.
இங்கு படைப்பினங்கள் என்று பொதுவாகக் கூறி இருப்பதின் வழியாக உயிரினங்கள் யாவுமே அவற்றில் உள்ளடங்கும் என்பதையும் இங்கு நாம் நன்கு நினைவு கூரவேண்டும். அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து வாழும் போது தான் அந்த வாழ்க்கை நிச்சயம் அர்த்தமுள்ளதாய் அமையும்.
என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் சின்னசூரியூரில் உள்ள சையத் ரஹ்மானி பாபா கலந்தர் தர்காவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி தர்காவில் உரூஸ் பாத்திகாவும், தொடர்ந்து இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
மறுநாள் திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்காவில் இருந்து நிர்வாக அறங்காவலர் ஹாஜா மொய்தீன் தலைமையில் ஜமாத்தார்கள் ஊர்வலமாக சின்னசூரியூருக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திருச்சி, மைசூரு, பெங்களூரு, கோலார், சின்னசூரியூர், மாத்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மதபோதகர்கள், குருமார்கள், ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பீர்பாபா சையத் நயீம் கலந்தர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
மறுநாள் திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்காவில் இருந்து நிர்வாக அறங்காவலர் ஹாஜா மொய்தீன் தலைமையில் ஜமாத்தார்கள் ஊர்வலமாக சின்னசூரியூருக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திருச்சி, மைசூரு, பெங்களூரு, கோலார், சின்னசூரியூர், மாத்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மதபோதகர்கள், குருமார்கள், ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பீர்பாபா சையத் நயீம் கலந்தர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இறைவன் ஒருவனே, அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’, என்ற ஓரிறைக்கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். அதையே மக்களிடமும் வலியுறுத்தினார்கள். இதில் இருந்த உண்மையையும், அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர்.
இதை அரபு தேசத்தில் உள்ள குரைஷி இன மக்கள் எதிர்த்தனர். அதோடு நபிகளாருக்கு எதிராக போர் தொடுத்தனர். பத்ர், உஹது ஆகிய இரு போர்களில் குரைஷிகள் தோல்வியைத் தழுவினார்கள். ஆனாலும் அவர்களின் வெறி தணியவில்லை.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டில், நபிகளுக்கு எதிராக இருக்கின்ற யூதர்களுடன் அரபுத்தலைவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள். அனைவரும் ஒன்று திரண்டு பெரும்படையுடன் மதினாவை தாக்கி அழிப்பதுடன், நபிகளாரை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.
இந்த செய்தி ஒற்றர்கள் மூலமாக நபி பெருமானாருக்கு தெரிய வந்தது. நபிகளார் தமது தோழர்களை அழைத்து, இந்த இக்கட்டான தருணத்தில் நாம் எப்படி போர்த்தந்திரங்களை வடிவமைத்து கொள்வது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது, பாரசீக நாட்டைச் சேர்ந்த நபித்தோழர், சல்மான் பாரிஸ் (ரலி) இவ்வாறு கூறினார்:
“மதினாவில் நாம் எண்ணிக்கையில் குறைவாக உள்ளோம். அதன் எல்லைகளும் பாதுகாப்பற்ற நிலையில் விரிந்து உள்ளது. ஒரு சிறு இடைவெளியின் மூலம் கூட மதினாவில் எதிரிகளால் ஊடுருவி விட முடியும். நாம் மதினாவையும் அங்கு இருக்கும் பெண்கள், பெரியவர்களையும் பாதுகாக்க வேண்டும். எதிரிகளை எதிர்த்து போரிடவும் வேண்டும். எனவே முதலில் மதினாவை பாதுகாத்து கொண்டு பின்பு போர் புரியலாம். இது போன்ற சமயங்களில் பாரசீகத்தில் நகரைச் சுற்றி பெரும் அகழிகளைத் தோண்டி விடுவோம். அதனால் எதிரிகள் நகரை நெருங்கி வருவதை தடை செய்து விடுவோம். பின்னர் சற்று தொலைவில் இருந்து அம்பெய்து போரிடுவோம். வாள் வீரர்களை விட அம்பெய்தும் வீரர்களைத் தான் அதிகம் இங்கே பயன்படுத்த வேண்டும். எனவே மதினாவைச்சுற்றி அகழி தோண்ட வேண்டும். அதிக ஆழமும் அகலமும் கொண்டதாக அது அமைய வேண்டும். அப்போது தான் எதிரிகளை கட்டுப்படுத்த முடியும்”.
இவ்வாறு அவர் ஆலோசனை சொன்னார்.
அனைவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர். எதிரிகள் மதினா வருவதற்குள் அகழி தோண்ட முடிவு செய்தனர்.
அது கடும் கோடை காலம். நபித்தோழர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். காலையில் வந்து அகழி தோண்ட ஆரம்பித்தால் மாலை வரை அந்த பணியைச் செய்தனர். பசிக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. தங்கள் வீட்டில் இருந்து உணவு எதுவும் கொண்டு வர முடியாத வறுமை நிலை. இருந்தாலும், அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டனர்.
நபிகள் நாயகம் இந்தப்பணியில் தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டு அகழி தோண்டும் பணியில் ஈடுபட்டார்கள். பலர் பசியின் காரணமாக ஒட்டிய வயிற்றில் கற் களைக் கட்டி, முதுகை நிமிர்த்தி வேலை செய்தார்கள்.
அப்போது ஒரு தோழர், நபிகளிடம் தன் வயிற்றுப் பசியைச் சொல்லி, அதை சமாளிக்க தன் வயிற்றில் கற்களை கட்டி இருப்பதை காட்டினார். அப்போது, அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தன் வயிற்றில் இரண்டு கற்களை கட்டி இருப்பதை அந்த தோழரிடம் காட்டினார்கள்.
இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர்” (திருக்குர்ஆன் 33:11).
நபிகளார் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்ட தோழர்கள் கூட்டத்தில் சிலர் நம்பிக்கையின்றியும் இருந்தனர். இதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு சதி செய்வதற்காகவே, ‘வெற்றி நமக்கே கிடைக்கும் என்று வாக்களித்தார்கள்’ என்று எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருந்ததோ, அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதை நினைத்துப் பாருங்கள்” (திருக்குர்ஆன் 33:12).
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் அகழி தோண்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். குதிரைகள் தாண்ட முடியாத அளவு அகலமும், குழிக்குள் குதிரைகள் விழுந்தால் எழுந்து வர முடியாத அளவு ஆழமும், 27 ஆயிரம் அடி நீளமும் கொண்ட அகழி மதினாவைச் சுற்றித் தோண்டப்பட்டது. சிறிய இடைவெளி கூட இல்லாமல் முழுவதுமாய் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது.
இந்த பணியின் போது நபிகள் நாயகம் இரண்டு அதிசயங்கள் நடத்திக்காட்டினார்கள். நபிகளார் பல நாட்கள் உணவருந்த வில்லை என்பதை அறிந்த அர்க்கம் (ரலி) என்ற தோழர், தன் வீட்டில் இருந்த சிறிதளவு உணவை கொண்டுவந்து கொடுத்தார்கள். இறைவன் திருப்பெயரை உச்சரித்து அந்த உணவை தன் கைகளால் கொஞ்சம் எடுத்து ஒவ்வொரு தோழருக்கும் நபிகளார் கொடுத் தார்கள். அத்தனை தோழர்களுக்கும் வயிறு நிரம்பும் அளவுக்கு அந்த உணவு இருந்தது.
இரண்டாவதாக, அகழி தோண்டும் போது யாராலும் உடைக்க முடியாத பெரும் பாறை தடையாக இருந்தது. அப்போது, தனி ஒருவராக அதை சம்மட்டியால் மூன்று முறை அடித்து உடைத்தார்கள். முதல் அடியின் போது, ‘ரோம் பேரரசை நாம் கைப்பற்றுவோம்’, இரண்டாவது அடியின்போது, ‘பாரசீகத்தை கைப்பற்றுவோம்’, மூன்றாவது அடியில் ‘சிரியாவை கைப்பற்றுவோம்’ என்று நபிகளார் முன்னறிவிப்பு செய்தார்கள்.
அன்றைய சூழ்நிலையில், பெரும் வல்லரசாக திகழ்ந்த அந்த நகரங்களை பலவீனமான நமது படை வெல்லுமா? என்று பலர் சந்தேகித்த போதும், பின்னாளில் கலிபா உமர் ஹத்தாப் (ரலி) காலத்தில் இந்த மூன்று நாடுகளும் வென்றெடுக்கப்பட்டன, நபிகளாரின் வாக்கும் உண்மையானது.
அகழி போர் ஆரம்பம் ஆனது. அபுசுபியான் தலைமையில் யூதர்களும், அத்தனை அரபு குல கோத்திரங்களும் இணைந்த 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட கூட்டு படை மக்கா நகரில் இருந்து புறப்பட்டது. அவர்களை எதிர்க்க நபிகளாரின் தலைமையில் 3 ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறிய படை மதினாவில் திரண்டது.
மதினத்து எல்லையை அடைந்ததும் அரபு படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆழமான, அகலமான அகழிகளைப் பார்த்ததும் திகைத்து நின்றனர். மதினத்து எல்லையைக் கூட அவர்கள் நெருங்க முடியவில்லை. துணிந்து நெருங்கினாலும் நபிகளார் தலைமையில் உள்ள படைகள் எய்த அம்பு மழையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இருந்தாலும் மதினத்துப் படையை பலவீனப்படுத்தும் வகையில் அரேபியர்கள் முற்றுகையை மாதக் கணக்கில் தொடர்ந்தனர். பசியினால் ஏற்பட்ட சோர்வு, போர் செய்ததால் ஏற்பட்ட களைப்பு ஆகியவை மதினத்து படையினர் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அப்போது இறைவன் இந்த திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான்:
“எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகிய முன்மாதிரி உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் அவரைப் பின்பற்றி நடந்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்” (திருக்குர்ஆன் 33:21)
யுத்தம் பல நாட்கள் தொடர்ந்தது. எதிரிப்படைகளிடம் உணவுப் பொருள் தீர்ந்தது. அவர்களுக்கும் சோர்வு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மீது அல்லாஹ்வின் சோதனையும் இறங்கியது.
பெரும் புயல் காற்றும், மழையும் அவர்களது கூடாரங்களை அழித்து புரட்டிப் போட்டது. காற்று பலமாக வீசியதால், போர் வீரர்கள் நிற்க முடியாமல் தடுமாறி விழுந்தனர். திரும்பிச் செல்வதை தவிர வழியில்லை என்ற நிலை உருவானது. அதேநேரத்தில், நபிகளாரின் தலைமையிலான படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரபு படை தோற்று சிதறி ஓடியது. நபிகளார் வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.
அந்த நிலைமையை திருக்குர்ஆன் இப்படி விவரிக்கின்றது:
“நம்பிக்கையாளர்களே, உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது எதிரிகளின் படைகள் அணி அணியாக வந்த சமயத்தில் புயல் காற்றையும், உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். அச்சமயம் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்” (33:9).
இதை அரபு தேசத்தில் உள்ள குரைஷி இன மக்கள் எதிர்த்தனர். அதோடு நபிகளாருக்கு எதிராக போர் தொடுத்தனர். பத்ர், உஹது ஆகிய இரு போர்களில் குரைஷிகள் தோல்வியைத் தழுவினார்கள். ஆனாலும் அவர்களின் வெறி தணியவில்லை.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டில், நபிகளுக்கு எதிராக இருக்கின்ற யூதர்களுடன் அரபுத்தலைவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள். அனைவரும் ஒன்று திரண்டு பெரும்படையுடன் மதினாவை தாக்கி அழிப்பதுடன், நபிகளாரை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.
இந்த செய்தி ஒற்றர்கள் மூலமாக நபி பெருமானாருக்கு தெரிய வந்தது. நபிகளார் தமது தோழர்களை அழைத்து, இந்த இக்கட்டான தருணத்தில் நாம் எப்படி போர்த்தந்திரங்களை வடிவமைத்து கொள்வது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது, பாரசீக நாட்டைச் சேர்ந்த நபித்தோழர், சல்மான் பாரிஸ் (ரலி) இவ்வாறு கூறினார்:
“மதினாவில் நாம் எண்ணிக்கையில் குறைவாக உள்ளோம். அதன் எல்லைகளும் பாதுகாப்பற்ற நிலையில் விரிந்து உள்ளது. ஒரு சிறு இடைவெளியின் மூலம் கூட மதினாவில் எதிரிகளால் ஊடுருவி விட முடியும். நாம் மதினாவையும் அங்கு இருக்கும் பெண்கள், பெரியவர்களையும் பாதுகாக்க வேண்டும். எதிரிகளை எதிர்த்து போரிடவும் வேண்டும். எனவே முதலில் மதினாவை பாதுகாத்து கொண்டு பின்பு போர் புரியலாம். இது போன்ற சமயங்களில் பாரசீகத்தில் நகரைச் சுற்றி பெரும் அகழிகளைத் தோண்டி விடுவோம். அதனால் எதிரிகள் நகரை நெருங்கி வருவதை தடை செய்து விடுவோம். பின்னர் சற்று தொலைவில் இருந்து அம்பெய்து போரிடுவோம். வாள் வீரர்களை விட அம்பெய்தும் வீரர்களைத் தான் அதிகம் இங்கே பயன்படுத்த வேண்டும். எனவே மதினாவைச்சுற்றி அகழி தோண்ட வேண்டும். அதிக ஆழமும் அகலமும் கொண்டதாக அது அமைய வேண்டும். அப்போது தான் எதிரிகளை கட்டுப்படுத்த முடியும்”.
இவ்வாறு அவர் ஆலோசனை சொன்னார்.
அனைவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர். எதிரிகள் மதினா வருவதற்குள் அகழி தோண்ட முடிவு செய்தனர்.
அது கடும் கோடை காலம். நபித்தோழர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். காலையில் வந்து அகழி தோண்ட ஆரம்பித்தால் மாலை வரை அந்த பணியைச் செய்தனர். பசிக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. தங்கள் வீட்டில் இருந்து உணவு எதுவும் கொண்டு வர முடியாத வறுமை நிலை. இருந்தாலும், அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டனர்.
நபிகள் நாயகம் இந்தப்பணியில் தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டு அகழி தோண்டும் பணியில் ஈடுபட்டார்கள். பலர் பசியின் காரணமாக ஒட்டிய வயிற்றில் கற் களைக் கட்டி, முதுகை நிமிர்த்தி வேலை செய்தார்கள்.
அப்போது ஒரு தோழர், நபிகளிடம் தன் வயிற்றுப் பசியைச் சொல்லி, அதை சமாளிக்க தன் வயிற்றில் கற்களை கட்டி இருப்பதை காட்டினார். அப்போது, அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் தன் வயிற்றில் இரண்டு கற்களை கட்டி இருப்பதை அந்த தோழரிடம் காட்டினார்கள்.
இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர்” (திருக்குர்ஆன் 33:11).
நபிகளார் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்ட தோழர்கள் கூட்டத்தில் சிலர் நம்பிக்கையின்றியும் இருந்தனர். இதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு சதி செய்வதற்காகவே, ‘வெற்றி நமக்கே கிடைக்கும் என்று வாக்களித்தார்கள்’ என்று எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருந்ததோ, அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதை நினைத்துப் பாருங்கள்” (திருக்குர்ஆன் 33:12).
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் அகழி தோண்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். குதிரைகள் தாண்ட முடியாத அளவு அகலமும், குழிக்குள் குதிரைகள் விழுந்தால் எழுந்து வர முடியாத அளவு ஆழமும், 27 ஆயிரம் அடி நீளமும் கொண்ட அகழி மதினாவைச் சுற்றித் தோண்டப்பட்டது. சிறிய இடைவெளி கூட இல்லாமல் முழுவதுமாய் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது.
இந்த பணியின் போது நபிகள் நாயகம் இரண்டு அதிசயங்கள் நடத்திக்காட்டினார்கள். நபிகளார் பல நாட்கள் உணவருந்த வில்லை என்பதை அறிந்த அர்க்கம் (ரலி) என்ற தோழர், தன் வீட்டில் இருந்த சிறிதளவு உணவை கொண்டுவந்து கொடுத்தார்கள். இறைவன் திருப்பெயரை உச்சரித்து அந்த உணவை தன் கைகளால் கொஞ்சம் எடுத்து ஒவ்வொரு தோழருக்கும் நபிகளார் கொடுத் தார்கள். அத்தனை தோழர்களுக்கும் வயிறு நிரம்பும் அளவுக்கு அந்த உணவு இருந்தது.
இரண்டாவதாக, அகழி தோண்டும் போது யாராலும் உடைக்க முடியாத பெரும் பாறை தடையாக இருந்தது. அப்போது, தனி ஒருவராக அதை சம்மட்டியால் மூன்று முறை அடித்து உடைத்தார்கள். முதல் அடியின் போது, ‘ரோம் பேரரசை நாம் கைப்பற்றுவோம்’, இரண்டாவது அடியின்போது, ‘பாரசீகத்தை கைப்பற்றுவோம்’, மூன்றாவது அடியில் ‘சிரியாவை கைப்பற்றுவோம்’ என்று நபிகளார் முன்னறிவிப்பு செய்தார்கள்.
அன்றைய சூழ்நிலையில், பெரும் வல்லரசாக திகழ்ந்த அந்த நகரங்களை பலவீனமான நமது படை வெல்லுமா? என்று பலர் சந்தேகித்த போதும், பின்னாளில் கலிபா உமர் ஹத்தாப் (ரலி) காலத்தில் இந்த மூன்று நாடுகளும் வென்றெடுக்கப்பட்டன, நபிகளாரின் வாக்கும் உண்மையானது.
அகழி போர் ஆரம்பம் ஆனது. அபுசுபியான் தலைமையில் யூதர்களும், அத்தனை அரபு குல கோத்திரங்களும் இணைந்த 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட கூட்டு படை மக்கா நகரில் இருந்து புறப்பட்டது. அவர்களை எதிர்க்க நபிகளாரின் தலைமையில் 3 ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறிய படை மதினாவில் திரண்டது.
மதினத்து எல்லையை அடைந்ததும் அரபு படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆழமான, அகலமான அகழிகளைப் பார்த்ததும் திகைத்து நின்றனர். மதினத்து எல்லையைக் கூட அவர்கள் நெருங்க முடியவில்லை. துணிந்து நெருங்கினாலும் நபிகளார் தலைமையில் உள்ள படைகள் எய்த அம்பு மழையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இருந்தாலும் மதினத்துப் படையை பலவீனப்படுத்தும் வகையில் அரேபியர்கள் முற்றுகையை மாதக் கணக்கில் தொடர்ந்தனர். பசியினால் ஏற்பட்ட சோர்வு, போர் செய்ததால் ஏற்பட்ட களைப்பு ஆகியவை மதினத்து படையினர் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அப்போது இறைவன் இந்த திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான்:
“எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகிய முன்மாதிரி உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் அவரைப் பின்பற்றி நடந்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்” (திருக்குர்ஆன் 33:21)
யுத்தம் பல நாட்கள் தொடர்ந்தது. எதிரிப்படைகளிடம் உணவுப் பொருள் தீர்ந்தது. அவர்களுக்கும் சோர்வு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மீது அல்லாஹ்வின் சோதனையும் இறங்கியது.
பெரும் புயல் காற்றும், மழையும் அவர்களது கூடாரங்களை அழித்து புரட்டிப் போட்டது. காற்று பலமாக வீசியதால், போர் வீரர்கள் நிற்க முடியாமல் தடுமாறி விழுந்தனர். திரும்பிச் செல்வதை தவிர வழியில்லை என்ற நிலை உருவானது. அதேநேரத்தில், நபிகளாரின் தலைமையிலான படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரபு படை தோற்று சிதறி ஓடியது. நபிகளார் வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.
அந்த நிலைமையை திருக்குர்ஆன் இப்படி விவரிக்கின்றது:
“நம்பிக்கையாளர்களே, உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் மீது எதிரிகளின் படைகள் அணி அணியாக வந்த சமயத்தில் புயல் காற்றையும், உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். அச்சமயம் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்” (33:9).
அல்லாஹ் வெற்றியைத் தர நாடினால் படைபலமோ, எந்த போர் தந்திரங்களோ தேவையில்லை. அவன் நாடியது நடந்தே தீரும். எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.
மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது.
இறைவன், மனிதர்களின் நலனுக்காக பல மகத்தான மனிதர்களை உலகில் தோன்றச் செய்துள்ளான். அவர்களில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் அடைந்த இடம் மிகவும் உயர்வானது, எவராலும் எட்டிப் பிடிக்க முடியாதது.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வருகையானது உலகை நன்மையின் பக்கம் புரட்டிப் போடப்பட்டது. தீய செயல்கள் அழிந்து நன்மைகள் பெருகியது. மக்களும் நேர்வழி பெற்றனர்.
நபிகள் நாயகம் அவர்கள் குழந்தையாக, தாயின் வயிற்றில் இருந்த போது தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள். பிறந்த பின்னர், தனது 6-வது வயதில் தாய் ஆமீனாவையும் இழந்து நின்றார்கள். பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்த நபிகளாரின் இதயம், இறைவனின் நினைவின் மீது என்றும் நிலைத்து நின்றது.
அன்றைய மக்கள், வணக்க வழிபாடு செய்வதில் இன ரீதியாக பல்வேறு பிரிவினர்களாக பிரிந்து கிடந்தார்கள். பொய், களவு, புறம்பேசுவது, ஜோசியம் பார்ப்பது. அவ்வப்போது கலகம் விளைவிப்பது, விபச்சாரம், மதுப்பழக்கம், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பது போன்ற எண்ணற்ற மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தனர்.
ஓர் இறைக்கொள்கை மூலம் அந்த மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை நேர்வழியின்பால் நபிகள் நாயகம் (ஸல்) மீட்டெடுத்தார்கள். எதிர்ப்பாளர்களின் சொல்லடிகளுக்கும், கல்லடிகளுக்கும் மத்தியில் இறைவனின் துணை கொண்டு வெற்றி பெற்றார்கள்.
ஆண்டான் அடிமை, மேலோன், கீழோன், வலியவன், எளியவன் கருப்பானவன், வெளுப்பானவன் என எவராய் இருப்பினும் அனைவரும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவத்தை உலகில் நபிகளார் செயல்படுத்தி காட்டினார்கள்.
இறையச்சம் ஒன்றே மனித உயர்வுக்கான உரைகல் என்று கூறிய அண்ணலார், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவது கூடாது என்றார்கள்.
அற்ப உலக ஆசாபாசம் என்ற மன அழுக்கை மனித இதயங்களில் இருந்து துடைத்து எறிந்து, மனிதர்களை ஒழுக்கமுடையவராக மாற்றிக் காட்டினார்கள்.
இத்தகைய தூய கொள்கையுடைய இஸ்லாம் மார்க்கத்தை அழித்திட நினைத்து, போர் புரிய துணிந்தவர்களை, இறையருளால், எதிர்த்து போராடி வெற்றி கண்டார்கள்.
இவர்களுக்கு இறைவன் ஏற்படுத்தித் தந்த வரலாற்று பதிவை போன்று வேறு எவருக்கும் வரலாற்று பதிவுகளை உலகில் காணமுடியாது.
ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களது வாழ்வு முறைகள் யாவும் திறந்த புத்தகமாகவும், தெளிவான சான்றுகளுடன் பிரகாசம் நிறைந்ததாகவே விளங்குகின்றது.
இவர்களது எதிரிகள் கூட இவரது நற்குணத்தினால் பின் நாட்களில் நபிகளாரின் உயிர் நண்பர்களாக மாறினார்கள்.
உலகை செதுக்கி செப்பனிடுவதற்காக, இவர்கள் ஏற்றுக் கொண்ட சுமைகளும், தியாகங்களும் ஏராளம். இவர்களது வாழ்வு என்பது உலகில் கடைசியாக பிறக்கப்போகும் மனிதனுக்கும் நேர்வழி காட்டத்தக்க பொதுத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றது.
அனாதைகளை ஆதரிப்பது, நிர்கதியானவர்களுக்கு உதவி புரிவது, தன்னிடம் கொடுத்து வைக்கப்படும் பிறரது பொருட்களை பாதுகாத்து அதனை உரியவரிடம் ஒப்படைப்பது, இன்முகத்துடனும், நட்புடனும் அனைவரிடமும் பழகுவது, பிறர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்வது, பொது அமைதிக்காகவும், நன்மைக்காகவும் அயராது பாடுபடுவது போன்ற மகத்தான நற்குணங்கள் தான் நபிகளாரை மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடிக்கச் செய்தது.
எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது. ‘இறைவனே இவர்களுக்கு அனைத்தையும் கற்பித்துக்கொடுத்தான்’ என்பதற்கு இந்த உயர் பண்புகளே சான்றாக இருக்கிறது.
‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே, (நபியே) நீர் எழுந்து நின்று (மனிதர்களை தீமையில் விழுந்துவிடாமல்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ (74:1,2) என்ற இறைவசனம் எப்போது இறங்கியதோ அந்நாளிலிருந்து 23 ஆண்டுகள், மனித குல மேன்மைக்காக நபிகளார் ஆற்றிய இறைசேவையை மனித உள்ளம் படைத்த யாரும் மறக்கவே முடியாது. இறுதி நாள் வரை அவர்கள் மக்கள் மனங்களில் நிலைத்து நின்று நேர்வழி காட்டுவார்கள்.
மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வருகையானது உலகை நன்மையின் பக்கம் புரட்டிப் போடப்பட்டது. தீய செயல்கள் அழிந்து நன்மைகள் பெருகியது. மக்களும் நேர்வழி பெற்றனர்.
நபிகள் நாயகம் அவர்கள் குழந்தையாக, தாயின் வயிற்றில் இருந்த போது தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள். பிறந்த பின்னர், தனது 6-வது வயதில் தாய் ஆமீனாவையும் இழந்து நின்றார்கள். பாட்டனாரின் அரவணைப்பில் வளர்ந்த நபிகளாரின் இதயம், இறைவனின் நினைவின் மீது என்றும் நிலைத்து நின்றது.
அன்றைய மக்கள், வணக்க வழிபாடு செய்வதில் இன ரீதியாக பல்வேறு பிரிவினர்களாக பிரிந்து கிடந்தார்கள். பொய், களவு, புறம்பேசுவது, ஜோசியம் பார்ப்பது. அவ்வப்போது கலகம் விளைவிப்பது, விபச்சாரம், மதுப்பழக்கம், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பது போன்ற எண்ணற்ற மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தனர்.
ஓர் இறைக்கொள்கை மூலம் அந்த மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களை நேர்வழியின்பால் நபிகள் நாயகம் (ஸல்) மீட்டெடுத்தார்கள். எதிர்ப்பாளர்களின் சொல்லடிகளுக்கும், கல்லடிகளுக்கும் மத்தியில் இறைவனின் துணை கொண்டு வெற்றி பெற்றார்கள்.
ஆண்டான் அடிமை, மேலோன், கீழோன், வலியவன், எளியவன் கருப்பானவன், வெளுப்பானவன் என எவராய் இருப்பினும் அனைவரும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவத்தை உலகில் நபிகளார் செயல்படுத்தி காட்டினார்கள்.
இறையச்சம் ஒன்றே மனித உயர்வுக்கான உரைகல் என்று கூறிய அண்ணலார், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவது கூடாது என்றார்கள்.
அற்ப உலக ஆசாபாசம் என்ற மன அழுக்கை மனித இதயங்களில் இருந்து துடைத்து எறிந்து, மனிதர்களை ஒழுக்கமுடையவராக மாற்றிக் காட்டினார்கள்.
இத்தகைய தூய கொள்கையுடைய இஸ்லாம் மார்க்கத்தை அழித்திட நினைத்து, போர் புரிய துணிந்தவர்களை, இறையருளால், எதிர்த்து போராடி வெற்றி கண்டார்கள்.
இவர்களுக்கு இறைவன் ஏற்படுத்தித் தந்த வரலாற்று பதிவை போன்று வேறு எவருக்கும் வரலாற்று பதிவுகளை உலகில் காணமுடியாது.
ஆரம்பம் முதல் இறுதிவரை இவர்களது வாழ்வு முறைகள் யாவும் திறந்த புத்தகமாகவும், தெளிவான சான்றுகளுடன் பிரகாசம் நிறைந்ததாகவே விளங்குகின்றது.
இவர்களது எதிரிகள் கூட இவரது நற்குணத்தினால் பின் நாட்களில் நபிகளாரின் உயிர் நண்பர்களாக மாறினார்கள்.
உலகை செதுக்கி செப்பனிடுவதற்காக, இவர்கள் ஏற்றுக் கொண்ட சுமைகளும், தியாகங்களும் ஏராளம். இவர்களது வாழ்வு என்பது உலகில் கடைசியாக பிறக்கப்போகும் மனிதனுக்கும் நேர்வழி காட்டத்தக்க பொதுத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றது.
அனாதைகளை ஆதரிப்பது, நிர்கதியானவர்களுக்கு உதவி புரிவது, தன்னிடம் கொடுத்து வைக்கப்படும் பிறரது பொருட்களை பாதுகாத்து அதனை உரியவரிடம் ஒப்படைப்பது, இன்முகத்துடனும், நட்புடனும் அனைவரிடமும் பழகுவது, பிறர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்வது, பொது அமைதிக்காகவும், நன்மைக்காகவும் அயராது பாடுபடுவது போன்ற மகத்தான நற்குணங்கள் தான் நபிகளாரை மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடிக்கச் செய்தது.
எழுதப்படிக்க பழகாத நபிகளாரிடம் இருந்த அறிவும், ஆற்றலும், நிர்வாக ஆளுமையும், பேரறிஞர்களையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது. ‘இறைவனே இவர்களுக்கு அனைத்தையும் கற்பித்துக்கொடுத்தான்’ என்பதற்கு இந்த உயர் பண்புகளே சான்றாக இருக்கிறது.
‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே, (நபியே) நீர் எழுந்து நின்று (மனிதர்களை தீமையில் விழுந்துவிடாமல்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக’ (74:1,2) என்ற இறைவசனம் எப்போது இறங்கியதோ அந்நாளிலிருந்து 23 ஆண்டுகள், மனித குல மேன்மைக்காக நபிகளார் ஆற்றிய இறைசேவையை மனித உள்ளம் படைத்த யாரும் மறக்கவே முடியாது. இறுதி நாள் வரை அவர்கள் மக்கள் மனங்களில் நிலைத்து நின்று நேர்வழி காட்டுவார்கள்.
மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
“அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து விட்டதால், ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோர் மண்ணுலகில் தனித்தனி இடத்துக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டதால், அரபு மண்ணில் ஒன்றாய் இணைந்தனர். மனித வாழ்வின் நியதியில் இல்லறத்தை நல்லறமாய் கொண்டு வாழ்ந்தனர். உயிரினம் ஒன்றுமே இல்லாத சூனியமான உலகில் முதன் முதலில் மனித கரு உருப்பெற்றது.
அல்லாஹ்வின் நியதிப்படி உயிரினங்கள் அனைத்தும், ஆதியில் ஜோடி ஜோடிகளாகவே படைக்கப்பட்டனர். ஆதம் (அலை) அவர்களுக்கு முதல் பிள்ளைகள் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர். அதற்கு அடுத்து பிறந்த பிள்ளைகளும் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர்.
முதலில் பிறந்த ஆண் ‘காபீல்’ என்றும், இரண்டாவதாக பிறந்த ஆண் ‘ஹாபீல்’ என்றும் பெயர் சூட்டப்பட்டனர். காபீலுடன் பிறந்த பெண் அழகில் சிறந்தவர், ஹாபீலுடன் பிறந்தவர் அழகில் சற்று குறைந்தவர். காபீல் விவசாயம் செய்து வந்தார். ஹாபீல் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழில் செய்தார்.
இறைவனின் நியதிப்படி, முதல் கருவில் உருவான ஆணிற்கு இரண்டாவது கருவில் உருவான பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும். அதுபோன்று, இரண்டாவது கருவில் உருவானவர் முதல் கருவில் உருவான பெண்ணை மணமுடிக்க வேண்டும்.
இந்த நியதிக்கு இடைஞ்சல் செய்ய சைத்தான் திட்டமிட்டான்.
காபீலை அணுகி அவரது மனதை கெடுத்து, தன்னுடன் பிறந்த அழகிய பெண் இக்யுலிமா என்பவரையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்குமாறு மாற்றி விட்டான். ஆனால் அவரது தம்பியோ சைத்தானின் ஊசலாட்டத்திற்கு அடிபணியாமல் இறைவனின் எந்த முடிவிற்கும் தான் தயார் என்பதாகச் சொன்னார்.
இந்த செய்தி ஆதம் (அலை) அவர்களுக்கு எட்டியது. இருவரையும் அழைத்து விசாரித்தார். காபீல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஆதம் (அலை) இதுகுறித்து தன் மகன்களிடம் கூறியதாவது:-
‘யார் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதி. இதற்கு மாற்றம் செய்ய நீங்கள் நினைத்தால், இதற்கு இறைவனே தீர்ப்பு வழங்கட்டும். நீங்கள் இருவரும் உங்களுக்கு பிடித்தமான காணிக்கையை மலையின் மீது வைத்து விடுங்கள். வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து அதனை பொசுக்கி விடும். யார் காணிக்கையை நெருப்பு பொசுக்குகிறதோ அவரது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதவேண்டும். மேலும், அவரது விருப்பம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்டு காபீல், ஹாபீல் இருவரும் தங்களுக்குரிய காணிக்கையை தயார் செய்தார்கள். காபீல் தன் விளைநிலத்தில் உள்ள வேண்டாத பொருட்களை ஒன்று திரட்டி அவனது காணிக்கையாக கொண்டு வைத்தான். ஹாபீல் தன் மந்தையில் உள்ள அழகுள்ள, நல்ல கொழுத்த ஆட்டை காணிக்கை ஆக்கினான்.
வானில் இருந்து வந்த நெருப்பு ஹாபீலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“நபியே! ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இருமகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. இருவரும் குர்பானி (பலி) கொடுத்த போது, அவ்விருவரில் ஒருத்தருடையது ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றவருடையது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த காபீல், ஹாபீலை நோக்கி ‘நான் உன்னைக் கொன்று விடுவேன்’ என்றார். அதற்கு பதிலளித்த ஹாபீல், ‘இதில் என்ன தவறிருக்கிறது, அல்லாஹ் குர்பானியை ஏற்றுக்கொள்வதெல்லாம் இறை அச்சமுள்ளவர்களிடமிருந்து தான்’ என்றார்”. (திருக்குர்ஆன் 5:27)
“நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினால், அந்நேரத்திலும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால் நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்” (திருக்குர்ஆன் 5:28).
“இதன் பின்னரும் அவர் தன் சகோதரரை வெட்டும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே அவர் அவரை வெட்டி விட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்” (திருக்குர்ஆன் 5:30)
உலகின் முதல் கொலை நிகழ்ந்து விட்டது. காபீலுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் வரை நம் முன் பேசிக் கொண்டிருந்த தம்பி ஹாபீல் எதுவும் பேசாமல், எந்த அசைவும் இல்லாமல் அப்படியே கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். இது என்ன நிலை, இதன் பின் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். இது தான் இறப்பு என்ற நிலையா? என்று புரியாதவராக அங்கேயே அமர்ந்திருந்தார்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ். அவன் திட்டப்படியே காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது, இறைவன் கட்டளைப்படி இரண்டு காகங்கள் அந்த இடத்திற்கு வந்தன. இரண்டும் ஒன்றோடொன்று சண்டையிட்டதில் ஒரு காகம் இறந்து விட்டது. காபீல் அதனை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார். ஹாபீலுக்கு நேர்ந்த கதி ஒரு காகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
சண்டையில் வென்ற காகம் தன் அலகால் பூமியை கொத்திக் கொத்தி தோண்டியது. அந்த பள்ளத்தில் இறந்த காகத்தை போட்டு மீண்டும் மண்ணால் மூடியது. தன் சகோதரன் ஹாபீலின் பிணத்தை எப்படி புதைக்க வேண்டும் என்பதை காபீலுக்கு தெரியப்படுத்த இறைவன் செய்த ஏற்பாடு இது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“பின்னர் தன் சகோதரர் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிப்பதற்காகப் பூமியை தோண்டிற்று” (திருக்குர்ஆன் 5:31).
பெண்ணாசையின் காரணமாகத்தான் உலகில் முதல் கொலைக்குற்றம் நிகழ்ந்தது. தன்னை விட தன் தம்பிக்கு அழகான மனைவி அமைந்து விடக்கூடாது என்ற பொறாமையும் அதோடு சேர்ந்து கொண்டது. சைத்தானின் தூண்டுதலால் கெட்ட எண்ணம் மேலோங்கியது. இந்த மூன்று குணங்கள் தான் முதல் பாவத்திற்கு காரணமாய் அமைந்தன. இன்றும் பெரும்பாலான பாவங்களுக்கு அவை தான் காரணமாக உள்ளன.
எனவே நம்முடைய மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பி, பொறாமை என்ற தீய குணத்தை அறவே தவிர்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணாசையில் வீழ்ந்து தன் கண்ணியத்தையும், அந்தஸ்த்தையும் பாழ்படுத்தாமல் வாழ முயன்றால் நிச்சயமாக நம் முயற்சிக்கு இறைவனின் அருள் கிட்டும்.
“அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.
எனவே, தீய எண்ணங்களை களைந்து நல்ல வாழ்க்கைக்கு முயற்சி செய்தால், இறைவன் அருளால் வெற்றி பெறலாம்.
அல்லாஹ்வின் நியதிப்படி உயிரினங்கள் அனைத்தும், ஆதியில் ஜோடி ஜோடிகளாகவே படைக்கப்பட்டனர். ஆதம் (அலை) அவர்களுக்கு முதல் பிள்ளைகள் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர். அதற்கு அடுத்து பிறந்த பிள்ளைகளும் ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக பிறந்தனர்.
முதலில் பிறந்த ஆண் ‘காபீல்’ என்றும், இரண்டாவதாக பிறந்த ஆண் ‘ஹாபீல்’ என்றும் பெயர் சூட்டப்பட்டனர். காபீலுடன் பிறந்த பெண் அழகில் சிறந்தவர், ஹாபீலுடன் பிறந்தவர் அழகில் சற்று குறைந்தவர். காபீல் விவசாயம் செய்து வந்தார். ஹாபீல் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழில் செய்தார்.
இறைவனின் நியதிப்படி, முதல் கருவில் உருவான ஆணிற்கு இரண்டாவது கருவில் உருவான பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும். அதுபோன்று, இரண்டாவது கருவில் உருவானவர் முதல் கருவில் உருவான பெண்ணை மணமுடிக்க வேண்டும்.
இந்த நியதிக்கு இடைஞ்சல் செய்ய சைத்தான் திட்டமிட்டான்.
காபீலை அணுகி அவரது மனதை கெடுத்து, தன்னுடன் பிறந்த அழகிய பெண் இக்யுலிமா என்பவரையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்குமாறு மாற்றி விட்டான். ஆனால் அவரது தம்பியோ சைத்தானின் ஊசலாட்டத்திற்கு அடிபணியாமல் இறைவனின் எந்த முடிவிற்கும் தான் தயார் என்பதாகச் சொன்னார்.
இந்த செய்தி ஆதம் (அலை) அவர்களுக்கு எட்டியது. இருவரையும் அழைத்து விசாரித்தார். காபீல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ஆதம் (அலை) இதுகுறித்து தன் மகன்களிடம் கூறியதாவது:-
‘யார் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதி. இதற்கு மாற்றம் செய்ய நீங்கள் நினைத்தால், இதற்கு இறைவனே தீர்ப்பு வழங்கட்டும். நீங்கள் இருவரும் உங்களுக்கு பிடித்தமான காணிக்கையை மலையின் மீது வைத்து விடுங்கள். வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து அதனை பொசுக்கி விடும். யார் காணிக்கையை நெருப்பு பொசுக்குகிறதோ அவரது காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதவேண்டும். மேலும், அவரது விருப்பம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்டு காபீல், ஹாபீல் இருவரும் தங்களுக்குரிய காணிக்கையை தயார் செய்தார்கள். காபீல் தன் விளைநிலத்தில் உள்ள வேண்டாத பொருட்களை ஒன்று திரட்டி அவனது காணிக்கையாக கொண்டு வைத்தான். ஹாபீல் தன் மந்தையில் உள்ள அழகுள்ள, நல்ல கொழுத்த ஆட்டை காணிக்கை ஆக்கினான்.
வானில் இருந்து வந்த நெருப்பு ஹாபீலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“நபியே! ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இருமகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. இருவரும் குர்பானி (பலி) கொடுத்த போது, அவ்விருவரில் ஒருத்தருடையது ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றவருடையது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த காபீல், ஹாபீலை நோக்கி ‘நான் உன்னைக் கொன்று விடுவேன்’ என்றார். அதற்கு பதிலளித்த ஹாபீல், ‘இதில் என்ன தவறிருக்கிறது, அல்லாஹ் குர்பானியை ஏற்றுக்கொள்வதெல்லாம் இறை அச்சமுள்ளவர்களிடமிருந்து தான்’ என்றார்”. (திருக்குர்ஆன் 5:27)
“நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினால், அந்நேரத்திலும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால் நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்” (திருக்குர்ஆன் 5:28).
“இதன் பின்னரும் அவர் தன் சகோதரரை வெட்டும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே அவர் அவரை வெட்டி விட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்” (திருக்குர்ஆன் 5:30)
உலகின் முதல் கொலை நிகழ்ந்து விட்டது. காபீலுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் வரை நம் முன் பேசிக் கொண்டிருந்த தம்பி ஹாபீல் எதுவும் பேசாமல், எந்த அசைவும் இல்லாமல் அப்படியே கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். இது என்ன நிலை, இதன் பின் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். இது தான் இறப்பு என்ற நிலையா? என்று புரியாதவராக அங்கேயே அமர்ந்திருந்தார்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ். அவன் திட்டப்படியே காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது, இறைவன் கட்டளைப்படி இரண்டு காகங்கள் அந்த இடத்திற்கு வந்தன. இரண்டும் ஒன்றோடொன்று சண்டையிட்டதில் ஒரு காகம் இறந்து விட்டது. காபீல் அதனை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார். ஹாபீலுக்கு நேர்ந்த கதி ஒரு காகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
சண்டையில் வென்ற காகம் தன் அலகால் பூமியை கொத்திக் கொத்தி தோண்டியது. அந்த பள்ளத்தில் இறந்த காகத்தை போட்டு மீண்டும் மண்ணால் மூடியது. தன் சகோதரன் ஹாபீலின் பிணத்தை எப்படி புதைக்க வேண்டும் என்பதை காபீலுக்கு தெரியப்படுத்த இறைவன் செய்த ஏற்பாடு இது. இந்த நிகழ்வை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“பின்னர் தன் சகோதரர் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிப்பதற்காகப் பூமியை தோண்டிற்று” (திருக்குர்ஆன் 5:31).
பெண்ணாசையின் காரணமாகத்தான் உலகில் முதல் கொலைக்குற்றம் நிகழ்ந்தது. தன்னை விட தன் தம்பிக்கு அழகான மனைவி அமைந்து விடக்கூடாது என்ற பொறாமையும் அதோடு சேர்ந்து கொண்டது. சைத்தானின் தூண்டுதலால் கெட்ட எண்ணம் மேலோங்கியது. இந்த மூன்று குணங்கள் தான் முதல் பாவத்திற்கு காரணமாய் அமைந்தன. இன்றும் பெரும்பாலான பாவங்களுக்கு அவை தான் காரணமாக உள்ளன.
எனவே நம்முடைய மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பி, பொறாமை என்ற தீய குணத்தை அறவே தவிர்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணாசையில் வீழ்ந்து தன் கண்ணியத்தையும், அந்தஸ்த்தையும் பாழ்படுத்தாமல் வாழ முயன்றால் நிச்சயமாக நம் முயற்சிக்கு இறைவனின் அருள் கிட்டும்.
“அல்லாஹ்வுடைய வழியில் எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால் நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் உதவி தேவையற்றவன்”, என்று திருக்குர்ஆன் (29:6) தெளிவாக கூறுகிறது.
எனவே, தீய எண்ணங்களை களைந்து நல்ல வாழ்க்கைக்கு முயற்சி செய்தால், இறைவன் அருளால் வெற்றி பெறலாம்.
நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களில் இரண்டாவதாக வருவது தொழுகை. மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமே படைத்தவனை வணங்குவதற்காகத்தான்.
இது பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை’. (51:56)
கட்டாயக் கடமை என்பதாலும், தொழாதவர்களுக்கு இறைவன் தருவதாகச் சொல்லியுள்ள தண்டனைகளுக்குப் பயந்தும், தொழுவதால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்காகவும் நம்மில் பெரும்பாலானோர் தொழக்கூடியவர்களாகவே இருக்கிறோம். தொழுகையைப் பொறுத்தவரை, எந்த ஒரு வேளையையும் விடாமல் தொழுவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழுவது, கவனம் சிதறாமல் தொழுவது ஆகிய மூன்று விஷயங்களும் முக்கியமானவை.
அளவிட முடியாத வேகத்தில், இறக்கைகள் இல்லாமலேயே பறக்கும் மனதை கடிவாளம் கொண்டு அடக்குவதுதான் நமக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதனை நன்கு அறிந்து வைத்திருக்கும் சைத்தான் நம்முடைய பலவீனத்தை தனக்கு சாதகமாக்கி, நம் தொழுகையை வீணாக்குவதற்கு பெரும் முயற்சி செய்வான். ஆனால் நம் மனக் கட்டுப்பாட்டினால், சைத்தானை வெற்றி கொள்ள முடியும்.
‘தொழுகையின் போது அல்லாஹ்வின் முன் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்’ (2:238) என்ற திருக்குர்ஆன் வசனத்தை நினைவில் கொள்ள வேண்டும். பெயருக்குத் தொழுவதால் அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்வதுடன், அப்படிப்பட்ட தொழுகையால் நமக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் நினைவில் கொண்டு கவனம் சிதறாமல் தொழ வேண்டும்.
‘கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடுதான் என்றும், அப்படிப்பட்டவர்கள் பிறருக்கு காண்பிப்பதற்காகவே தொழுகிறார்கள்’ (107:4,5,6) என்றும் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
பள்ளிவாசல் தவிர்த்து பிற இடங்களை தொழுகை நடத்தும் போது, சிரிப்பும், பேச்சுமாக இருக்கும் இடத்தை தொழுகைக்குத் தேர்வு செய்யக்கூடாது. இன்னும், தனிமையில் இறைவனிடம் கண்ணீர் விட்டு அழுது பிரார்த்தனை செய்வது நமக்கு ஆறுதலைத் தருகிறது. மற்றவர்கள் பார்க்கும்படியாக தொழும் பொழுது பிறர் ஏதாவது நினைப்பார்களோ என்ற தயக்கம் சிலருக்கு ஏற்படுகிறது. எனவே கூடுமான வரை சப்தம் இல்லாத, ஒதுக்குப்புறமான இடமாக இருப்பது நல்லது.
தொழுகையில் நாம் ஒரே நிலையில் இருப்பதில்லை. தொழ ஆரம்பிக்கும் முன் இறைவனைத் தவிர மற்ற சிந்தனைகளை ஒதுக்கி மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். ‘என் இறைவனுக்கு முன் நிற்கிறேன், அவன் முன் அடி பணியப்போகிறேன்’ என்ற எண்ணத்தைக் கொண்டு மனதை நிரப்ப வேண்டும்.
தலை குனிந்து, பார்வை கீழ் நோக்க வேண்டும். ஒரு திசையில் மட்டுமே பார்க்கும் படியாக கண்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், ‘எதையும் கேட்காதே’ என்று செவிகளைக் கட்டுப்படுத்த முடியாது. செவிகள் திறந்தே இருக்கும். இருந்தாலும், தொழுகையில் ஓத வேண்டியவற்றை மனதிற்குள் ஓதாமல் மென்மையான குரலில் நமக்கு மட்டும் கேட்கும் வகையில் ஓதும்பொழுது செவிப்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
நம்மைப் படைத்த இறைவன் மீது அளவு கடந்த அன்பு, பணிவு, மரியாதை, நன்றியுணர்வு, அவனின் மீதான மிகுந்த அச்சம் ஆகிய அனைத்தையும் ஒருசேர மனதில் நிரப்புவது பயிற்சியின் மூலம் சாத்தியமே. எந்த இடத்தில் நின்று தொழுதாலும், இறையில்லமான காபதுல்லாவில் நாம் நின்று தொழுவதாக நினைத்துக் கொள்வது தொழுகையில் நம்முடைய நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
முதல் நிலையில் இரு கைகளையும் உயர்த்துகிறோம். மனிதர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில், ‘என்னிடம் ஒன்றுமில்லை, நான் நிராயுதபாணி, நான் சரணடைகிறேன்’ என்று இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நிற்பதை நாம் பார்த்திருப்போம். இது அந்த மாதிரியான நிலை.
‘என் இறைவா, நான் உன் அடிமை, என்னால் ஆகக்கூடியதென்று எதுவும் இல்லை, நான் உன்னிடமே சரணடைகிறேன், என்னை உன்னிடமே ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலை இதுதான்.
பின்னர் இரண்டாவது நிலை மாறுகிறது. இரு கைகளையும் நெஞ்சிற்கு கீழே கட்டுகிறோம். நம் நெஞ்சத்தை இறைவனோடு பிணைக்கும் நிலை இது. தன்னைப் படைத்து, பரிபாலிக்கும், இவ்வுலகத்தின் அதிபதி, ஆசான் முன் கை கட்டி நிற்கும் ஒரு அடியானின் நிலை இது. பின்னர் திருக்குர்ஆன் வசனங்களை முறைப்படி ஓத ஆரம்பிக்கிறோம்.
அடுத்த நிலை உடல் வளைத்து, குனிந்து, முழங்கால்களைப் பிடித்தபடி நிற்கும் நிலை. இறைவனுக்கு முன் நம் பணிவை இன்னும் அதிகமாகக் காட்டுவதுடன், ‘அவனைத் தவிர வேறு எவர் முன்னும் தலை குனிந்து நிற்க மாட்டேன்’ என்றும் கூறும் நிலை இது.
அடுத்த நிலை, எண் சாண் உடலை குறுக்கி, சிரம் பணிந்து வணங்கும் நிலை. நம்மைப் படைத்த இறைவனின் காலடியில் விழுந்து கிடைக்கும் ஒரு தூசியைப் போல் நம்மை எண்ணிக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் அடியானுக்கு இறைவனின் நெருக்கம் கிடைக்கிறது. அத்துடன் இந்நிலையில் இருக்கும் ஒரு அடியானின் படித்தரம் சுவனத்தில் உயர்த்தப்படுவதாகவும், அவரின் ஏட்டில் இருந்து ஒரு பாவம் அழிக்கப்படுவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
கண்களில் ஈரம் கசிய, நம்முடைய இறைவனுக்கு முற்றிலும் பணியும் நிலை இது. ‘உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லை, உன்னைத் தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேன், நீயே, நீ மட்டுமே எனக்குப் போதுமானவன்’ என்று மனம் உருகி நிற்கும் இந்த நிலை மிகவும் உன்னதமானது.
பின்னர் தலை குனிந்த வண்ணம் அமரும் நிலை. ஒரு விதமான நிம்மதி மனதில் நிறைந்திருக்கும் நிலை. நம்முடைய எல்லாக் காரியங்களையும் நமக்கு பொறுப்பேற்றுக் கொண்டவனிடம் ஒப்படைத்து விட்டோம் என்பதால் ஏற்படும் நிம்மதி அது. அமர்ந்திருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறோம். தொழுகையை முடிக்கும் முன்பாக அமர்ந்திருக்கும் நிலையில் வலது, இடது தோள்களை நோக்கி தலையைத் திருப்பி நம்முடைய நன்மை, தீமைகளை ஏட்டில் பதிவு செய்யும், வானவர்களுக்கு ஸலாம் கூறி தொழுகையை முடிக்கிறோம்.
உடனே எழுந்திருக்காமல் கைகளை உயர்த்தி நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு நம்முடைய தேவைகளைக் கேட்டு, திக்ரு (நினைவு கூருதல்) செய்து தொழுகையை நிறைவு செய்கிறோம்.தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும், அரபியில் வசனங்களை ஓதினாலும், அவற்றின் பொருளை அவரவர் தாய்மொழியில் புரிந்து ஓதுவதால், ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் நம்மால் தொழ முடியும்.
ஆனால் நம்முடைய தொழுகை ஒப்புக்கொள்ளப்பட்ட தொழுகையா என்பதை இறைவனே மிக அறிந்தவன். நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. இன்னும் அவனின் கட்டளைபடியும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழி முறைப்படியும் தொழுவதற்கு அறிவையும், வழிகாட்டுதலையும் வல்ல இறைவன் நமக்குத் தந்தருள்வானாக, ஆமின்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், புரசைவாக்கம், சென்னை-84.
இது பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை’. (51:56)
கட்டாயக் கடமை என்பதாலும், தொழாதவர்களுக்கு இறைவன் தருவதாகச் சொல்லியுள்ள தண்டனைகளுக்குப் பயந்தும், தொழுவதால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்காகவும் நம்மில் பெரும்பாலானோர் தொழக்கூடியவர்களாகவே இருக்கிறோம். தொழுகையைப் பொறுத்தவரை, எந்த ஒரு வேளையையும் விடாமல் தொழுவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழுவது, கவனம் சிதறாமல் தொழுவது ஆகிய மூன்று விஷயங்களும் முக்கியமானவை.
அளவிட முடியாத வேகத்தில், இறக்கைகள் இல்லாமலேயே பறக்கும் மனதை கடிவாளம் கொண்டு அடக்குவதுதான் நமக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதனை நன்கு அறிந்து வைத்திருக்கும் சைத்தான் நம்முடைய பலவீனத்தை தனக்கு சாதகமாக்கி, நம் தொழுகையை வீணாக்குவதற்கு பெரும் முயற்சி செய்வான். ஆனால் நம் மனக் கட்டுப்பாட்டினால், சைத்தானை வெற்றி கொள்ள முடியும்.
‘தொழுகையின் போது அல்லாஹ்வின் முன் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்’ (2:238) என்ற திருக்குர்ஆன் வசனத்தை நினைவில் கொள்ள வேண்டும். பெயருக்குத் தொழுவதால் அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்வதுடன், அப்படிப்பட்ட தொழுகையால் நமக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் நினைவில் கொண்டு கவனம் சிதறாமல் தொழ வேண்டும்.
‘கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடுதான் என்றும், அப்படிப்பட்டவர்கள் பிறருக்கு காண்பிப்பதற்காகவே தொழுகிறார்கள்’ (107:4,5,6) என்றும் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
பள்ளிவாசல் தவிர்த்து பிற இடங்களை தொழுகை நடத்தும் போது, சிரிப்பும், பேச்சுமாக இருக்கும் இடத்தை தொழுகைக்குத் தேர்வு செய்யக்கூடாது. இன்னும், தனிமையில் இறைவனிடம் கண்ணீர் விட்டு அழுது பிரார்த்தனை செய்வது நமக்கு ஆறுதலைத் தருகிறது. மற்றவர்கள் பார்க்கும்படியாக தொழும் பொழுது பிறர் ஏதாவது நினைப்பார்களோ என்ற தயக்கம் சிலருக்கு ஏற்படுகிறது. எனவே கூடுமான வரை சப்தம் இல்லாத, ஒதுக்குப்புறமான இடமாக இருப்பது நல்லது.
தொழுகையில் நாம் ஒரே நிலையில் இருப்பதில்லை. தொழ ஆரம்பிக்கும் முன் இறைவனைத் தவிர மற்ற சிந்தனைகளை ஒதுக்கி மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். ‘என் இறைவனுக்கு முன் நிற்கிறேன், அவன் முன் அடி பணியப்போகிறேன்’ என்ற எண்ணத்தைக் கொண்டு மனதை நிரப்ப வேண்டும்.
தலை குனிந்து, பார்வை கீழ் நோக்க வேண்டும். ஒரு திசையில் மட்டுமே பார்க்கும் படியாக கண்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், ‘எதையும் கேட்காதே’ என்று செவிகளைக் கட்டுப்படுத்த முடியாது. செவிகள் திறந்தே இருக்கும். இருந்தாலும், தொழுகையில் ஓத வேண்டியவற்றை மனதிற்குள் ஓதாமல் மென்மையான குரலில் நமக்கு மட்டும் கேட்கும் வகையில் ஓதும்பொழுது செவிப்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
நம்மைப் படைத்த இறைவன் மீது அளவு கடந்த அன்பு, பணிவு, மரியாதை, நன்றியுணர்வு, அவனின் மீதான மிகுந்த அச்சம் ஆகிய அனைத்தையும் ஒருசேர மனதில் நிரப்புவது பயிற்சியின் மூலம் சாத்தியமே. எந்த இடத்தில் நின்று தொழுதாலும், இறையில்லமான காபதுல்லாவில் நாம் நின்று தொழுவதாக நினைத்துக் கொள்வது தொழுகையில் நம்முடைய நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
முதல் நிலையில் இரு கைகளையும் உயர்த்துகிறோம். மனிதர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில், ‘என்னிடம் ஒன்றுமில்லை, நான் நிராயுதபாணி, நான் சரணடைகிறேன்’ என்று இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நிற்பதை நாம் பார்த்திருப்போம். இது அந்த மாதிரியான நிலை.
‘என் இறைவா, நான் உன் அடிமை, என்னால் ஆகக்கூடியதென்று எதுவும் இல்லை, நான் உன்னிடமே சரணடைகிறேன், என்னை உன்னிடமே ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலை இதுதான்.
பின்னர் இரண்டாவது நிலை மாறுகிறது. இரு கைகளையும் நெஞ்சிற்கு கீழே கட்டுகிறோம். நம் நெஞ்சத்தை இறைவனோடு பிணைக்கும் நிலை இது. தன்னைப் படைத்து, பரிபாலிக்கும், இவ்வுலகத்தின் அதிபதி, ஆசான் முன் கை கட்டி நிற்கும் ஒரு அடியானின் நிலை இது. பின்னர் திருக்குர்ஆன் வசனங்களை முறைப்படி ஓத ஆரம்பிக்கிறோம்.
அடுத்த நிலை உடல் வளைத்து, குனிந்து, முழங்கால்களைப் பிடித்தபடி நிற்கும் நிலை. இறைவனுக்கு முன் நம் பணிவை இன்னும் அதிகமாகக் காட்டுவதுடன், ‘அவனைத் தவிர வேறு எவர் முன்னும் தலை குனிந்து நிற்க மாட்டேன்’ என்றும் கூறும் நிலை இது.
அடுத்த நிலை, எண் சாண் உடலை குறுக்கி, சிரம் பணிந்து வணங்கும் நிலை. நம்மைப் படைத்த இறைவனின் காலடியில் விழுந்து கிடைக்கும் ஒரு தூசியைப் போல் நம்மை எண்ணிக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் அடியானுக்கு இறைவனின் நெருக்கம் கிடைக்கிறது. அத்துடன் இந்நிலையில் இருக்கும் ஒரு அடியானின் படித்தரம் சுவனத்தில் உயர்த்தப்படுவதாகவும், அவரின் ஏட்டில் இருந்து ஒரு பாவம் அழிக்கப்படுவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
கண்களில் ஈரம் கசிய, நம்முடைய இறைவனுக்கு முற்றிலும் பணியும் நிலை இது. ‘உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லை, உன்னைத் தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேன், நீயே, நீ மட்டுமே எனக்குப் போதுமானவன்’ என்று மனம் உருகி நிற்கும் இந்த நிலை மிகவும் உன்னதமானது.
பின்னர் தலை குனிந்த வண்ணம் அமரும் நிலை. ஒரு விதமான நிம்மதி மனதில் நிறைந்திருக்கும் நிலை. நம்முடைய எல்லாக் காரியங்களையும் நமக்கு பொறுப்பேற்றுக் கொண்டவனிடம் ஒப்படைத்து விட்டோம் என்பதால் ஏற்படும் நிம்மதி அது. அமர்ந்திருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறோம். தொழுகையை முடிக்கும் முன்பாக அமர்ந்திருக்கும் நிலையில் வலது, இடது தோள்களை நோக்கி தலையைத் திருப்பி நம்முடைய நன்மை, தீமைகளை ஏட்டில் பதிவு செய்யும், வானவர்களுக்கு ஸலாம் கூறி தொழுகையை முடிக்கிறோம்.
உடனே எழுந்திருக்காமல் கைகளை உயர்த்தி நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு நம்முடைய தேவைகளைக் கேட்டு, திக்ரு (நினைவு கூருதல்) செய்து தொழுகையை நிறைவு செய்கிறோம்.தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும், அரபியில் வசனங்களை ஓதினாலும், அவற்றின் பொருளை அவரவர் தாய்மொழியில் புரிந்து ஓதுவதால், ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் நம்மால் தொழ முடியும்.
ஆனால் நம்முடைய தொழுகை ஒப்புக்கொள்ளப்பட்ட தொழுகையா என்பதை இறைவனே மிக அறிந்தவன். நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. இன்னும் அவனின் கட்டளைபடியும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழி முறைப்படியும் தொழுவதற்கு அறிவையும், வழிகாட்டுதலையும் வல்ல இறைவன் நமக்குத் தந்தருள்வானாக, ஆமின்.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், புரசைவாக்கம், சென்னை-84.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அல் குத்பு மகான் செய்யது முகம்மது அப்பா, கீது ஒலியுல்லா பாதுஷா நாயகத்தின் 844-வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டு மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்பட்டது.
உலக மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக மாவட்ட அரசு காஜி சலாஹீதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து 14 நாட்களுக்கு தர்கா மண்ட பத்தில் தினந்தோறும் இரவு மவுலீது ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்படும். வருயீஜீஷ் 19-ந் தேதி இரவு 12 மணிக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக் கானவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படும்.
தர்ஹா நிர்வாகிகள் சகாப்தீன், ஹபீப் முகமது தம்பி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மக்பூல் சுல்தான், ஜலாலுதீன், ஜகுபர், முத்துவேல், அபூபக்கர் சித்தீக், அடுமை உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்று விழாவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
உலக மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக மாவட்ட அரசு காஜி சலாஹீதீன் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து 14 நாட்களுக்கு தர்கா மண்ட பத்தில் தினந்தோறும் இரவு மவுலீது ஓதப்பட்டு நேர்ச்சி வழங்கப்படும். வருயீஜீஷ் 19-ந் தேதி இரவு 12 மணிக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக் கானவர்களுக்கு நெய் சோறு வழங்கப்படும்.
தர்ஹா நிர்வாகிகள் சகாப்தீன், ஹபீப் முகமது தம்பி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மக்பூல் சுல்தான், ஜலாலுதீன், ஜகுபர், முத்துவேல், அபூபக்கர் சித்தீக், அடுமை உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர். கொடியேற்று விழாவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ்.
முதல் பாவத்தின் பரிகாரம்
அல்லாஹ், ஆதிபிதா ஆதம் (அலை) அவர் களைப் படைத்து, அவர்களை எல்லாப் படைப்பினங்களையும் விட உயர்ந்த தன்மையுடையவராக உருவாக்கி, சொர்க்கத்தில் வாழ்ந்திருக்கச் செய்தான்.
ஆதம் (அலை) உயிர் பெற்று கண் விழித்து பார்த்த போது, அவர்கள் அருகில் ஒரு உருவம் வெண்மையான ஒளிப்பிழம்பாய் நிற்பதை கண்ணுற்றார்கள்.
“என் இறைவனே! இது என்ன ஒளிரும் வெண்மையில் ஒரு உருவம்” என்று வினவிய போது, ‘இது தான் உங்கள் சந்ததியில் சில ஆயிரம் காலங்கள் கடந்து தோன்றப் போகின்ற தாவூது நபிகள். அவர் அறுபது ஆண்டுகள் உலகில் உயிர் வாழ்வார்’ என்று அல்லாஹ் பதில் சொன்னான்.
ஆதம் நபிகள் அல்லாஹ்வை நோக்கி, “எனக்கு ஆயிரம் ஆண்டுகளை ஆயுளைத் தந்த என் இறைவனே, என்னுடைய வயதில் நாற்பது ஆண்டுகளை தாவூது நபிகளுக்கு கொடுத்து அவர்களை நூறு ஆண்டுகள் வாழச்செய் ரஹ்மானே” என்று வேண்டிக்கொண்டார்.
அல்லாஹ்வும் மனம் மகிழ்ந்தவனாக, “சரி அப் படியே ஆகட்டும்” என்றான்.
ஆதம் நபி முதன் முதலாக செய்த நன்மையான காரியம் ‘தர்மம்’ என்ற கொடைத்தன்மை ஆகும். தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தன்னுடைய ஆயுளில் இருந்து தர்மம் செய்தார்கள்.
ஒரு மனிதன் தர்மம் என்ற நல்லறத்தை செய் வதற்கு எதுவுமே தடையில்லை. தன்னிடம் எது இருக்கின்றதோ அதைக்கொண்டு தர்மம் செய்யலாம். பொருளாக இல்லை என்றால் தன்னிடம் உள்ள அறிவு, ஞானம் இவற்றை எல்லாம் கொண்டு தர்மம் செய்ய வேண்டும் என்கின்ற உண்மையை இது புலப்படுத்துகின்றது.
இறைவனின் மாபெரும் கருணையால், ஆதம் நபிகள் சொர்க்கத்தில் சிறந்த நிலையில் வாழ்ந்து வந்தார்கள். இதனால், அவர்கள் மீது பொறாமை கொண்டான் இப்லீஸ். அல்லாஹ் தடை செய்திருந்த கனியை ஆதம் நபிகளை புசிக்கச் செய்ய சதி ஆலோசனை செய்தான்.
அதை திருக்குர்ஆன் (7:20) இவ்வாறு குறிப்பிடுகிறது:
“தவறான எண்ணத்தை அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து; அவர்களை நோக்கி, ‘அந்த கனியைப் புசித்தால் நீங்கள் இருவரும் வானவர்களாகவோ, அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகி விடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை’ என்று கூறியதுடன், ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருது கிறேன்’ என்று அவ்விருவரிடமும் சத்தியம் செய்து, அவர்களை மயக்கி, அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான்”.
ஆதம் நபியின் எண்ணங்கள் தூய்மையாக இருந்த போதிலும், அவரை வழிகெடுத்து பாவத்தில் வீழ்ந்து விடும்படி செய்து விட்டான், சைத்தான்.
இந்த நிகழ்வை திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு பதிவு செய்கின்றான்:
“முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை”. (திருக்குர்ஆன் 20:115)
“எனினும் இப்லீஸாகிய சைத்தான் அதை காரணமாக வைத்து அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து சொர்க்கத்திலிருந்தும், அவர்கள் இருந்த மேலான நிலையிலிருந்தும் அவர்களை வெளியேறும் படி செய்து விட்டான்” (திருக்குர்ஆன் 2:36).
சைத்தானின் சூழ்ச்சியால் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அந்த கனியைப் புசிக்கவே, அதுவரை அவர்களைக் காத்து நின்ற புனித தன்மை அவர்களை விட்டு விலகியது.
“அவ்விருவரும் அந்த மரத்தின் பழத்தை சுவைக்கவே அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக் கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன், ‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக சைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்கு கூறவில்லையா’ என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.” (திருக்குர்ஆன் 7:22).
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு சொல்லும் பாடம் என்னவெனில் மனிதன் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து முதல் பாவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அதற்கான தண்டனை என்று எதுவும் தரப்படவில்லை. இருந்தாலும் அதனை ஆழமாக சிந்திக்கும் போது தண்டனைக்கெல்லாம் சிகரமாய் அமையக் கூடிய மானபங்கம் என்ற பெரும் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். உயிரினும் பெரிது மானம். அதற்கு அங்கே ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது. அந்தரங்க பகுதியை மறைத்துக் கொள்வதற்கு இலை தழைகளை தேடி ஓடுகிறார்கள். மானத்தை காக்க வேண்டும் என்ற உணர்வையும் மேலோங்கச் செய்கின்றான்.
திருக்குர்ஆனின் மற்றொரு இடத்திலே கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் போது, “கணவன்-மனைவிக்கு ஆடை, மனைவி-கணவனுக்கு ஆடை” என்பதாக குறிப்பிடுக்கின்றான். அதாவது, ‘ஒருவர் மானத்தை ஒருவர் கட்டிக் காத்து வாழ வேண்டும்’ என்று கட்டளையிடுகின்றான்.
அல்லாஹ்வின் கட்டளைக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆதம் (அலை) மாறு செய்து விட்டார். அதனால் சொர்க்கத்தில் வாழும் அந்தஸ்த்தையும் இழந்து விட்டார்.
இந்தியாவும் இலங்கையும் ஒன்றாய் இணைந் திருந்த நிலப்பரப்பில் ஆதம் (அலை) இறக்கி விடப்பட்டார். அவர் இறங்கிய மலை “ஆதம் பாவா மலை” என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அது போன்று ஹவ்வா (அலை) சவுதி அரேபியா நாட்டில் ஜித்தாவில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்பட்டார். எத்தனையோ ஆண்டுகள் இருவரும் கஷ்டங்கள் பல அனுபவித்து ஒருவரை ஒருவர் தேடி அலைந்து கடைசியில் மக்கா நகரில் அரபாவில் “ஜபலே ரஹ்மத்” எனும் மலைக்குன்றில் ஒன்றிணைந்தார்கள். அதன் பின் அவர்களின் உலக வாழ்க்கை ஆரம்பம் ஆனது.
அவர்கள் ஒருவரை ஒருவர் தேடி அலைந்த கால கட்டத்தில் தங்கள் தவறை நினைத்து வருந்தி பாவமன்னிப்பு கேட்டு வந்தார்கள் என்பதையும் அல்லாஹ் தெளிவு பெற கூறுகின்றான்.
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள்புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி விடுவோம்” என்று பிரார்த்தித்து கூறினார். (திருக்குர்ஆன் 7:23)
அது போன்று தான் நம் வாழ்க்கையிலும் பாவம் செய்யும் எண்ணம் இல்லை என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் அல்லது பாவம் நடைபெறும் இடம் என தெரிந்தும், அது போன்ற இடங்களுக்கு சிலரின் வற்புறுத்தலால் செல்லும் போது, நாமும் பாவ வலையில் சிக்கிக்கொள்கிறோம். இதை அறிந்து அவற்றை தவிர்த்து வாழ வேண்டும்.
கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ்.
பாவங்கள் செய்வது மனித இயல்பு. பாவங்களை எண்ணி மனம் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அது எத்தனை பெரிய பாவமாயிருந்தாலும், இணை வைத்தலைத் தவிர்த்து விபச்சாரம், கொலை போன்ற பாவங்களையும் மன்னிக்கின்றேன் என்கிறான் அல்லாஹ்.
இந்த வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம் இதுவே.
மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
அல்லாஹ், ஆதிபிதா ஆதம் (அலை) அவர் களைப் படைத்து, அவர்களை எல்லாப் படைப்பினங்களையும் விட உயர்ந்த தன்மையுடையவராக உருவாக்கி, சொர்க்கத்தில் வாழ்ந்திருக்கச் செய்தான்.
ஆதம் (அலை) உயிர் பெற்று கண் விழித்து பார்த்த போது, அவர்கள் அருகில் ஒரு உருவம் வெண்மையான ஒளிப்பிழம்பாய் நிற்பதை கண்ணுற்றார்கள்.
“என் இறைவனே! இது என்ன ஒளிரும் வெண்மையில் ஒரு உருவம்” என்று வினவிய போது, ‘இது தான் உங்கள் சந்ததியில் சில ஆயிரம் காலங்கள் கடந்து தோன்றப் போகின்ற தாவூது நபிகள். அவர் அறுபது ஆண்டுகள் உலகில் உயிர் வாழ்வார்’ என்று அல்லாஹ் பதில் சொன்னான்.
ஆதம் நபிகள் அல்லாஹ்வை நோக்கி, “எனக்கு ஆயிரம் ஆண்டுகளை ஆயுளைத் தந்த என் இறைவனே, என்னுடைய வயதில் நாற்பது ஆண்டுகளை தாவூது நபிகளுக்கு கொடுத்து அவர்களை நூறு ஆண்டுகள் வாழச்செய் ரஹ்மானே” என்று வேண்டிக்கொண்டார்.
அல்லாஹ்வும் மனம் மகிழ்ந்தவனாக, “சரி அப் படியே ஆகட்டும்” என்றான்.
ஆதம் நபி முதன் முதலாக செய்த நன்மையான காரியம் ‘தர்மம்’ என்ற கொடைத்தன்மை ஆகும். தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தன்னுடைய ஆயுளில் இருந்து தர்மம் செய்தார்கள்.
ஒரு மனிதன் தர்மம் என்ற நல்லறத்தை செய் வதற்கு எதுவுமே தடையில்லை. தன்னிடம் எது இருக்கின்றதோ அதைக்கொண்டு தர்மம் செய்யலாம். பொருளாக இல்லை என்றால் தன்னிடம் உள்ள அறிவு, ஞானம் இவற்றை எல்லாம் கொண்டு தர்மம் செய்ய வேண்டும் என்கின்ற உண்மையை இது புலப்படுத்துகின்றது.
இறைவனின் மாபெரும் கருணையால், ஆதம் நபிகள் சொர்க்கத்தில் சிறந்த நிலையில் வாழ்ந்து வந்தார்கள். இதனால், அவர்கள் மீது பொறாமை கொண்டான் இப்லீஸ். அல்லாஹ் தடை செய்திருந்த கனியை ஆதம் நபிகளை புசிக்கச் செய்ய சதி ஆலோசனை செய்தான்.
அதை திருக்குர்ஆன் (7:20) இவ்வாறு குறிப்பிடுகிறது:
“தவறான எண்ணத்தை அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து; அவர்களை நோக்கி, ‘அந்த கனியைப் புசித்தால் நீங்கள் இருவரும் வானவர்களாகவோ, அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகி விடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை’ என்று கூறியதுடன், ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருது கிறேன்’ என்று அவ்விருவரிடமும் சத்தியம் செய்து, அவர்களை மயக்கி, அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான்”.
ஆதம் நபியின் எண்ணங்கள் தூய்மையாக இருந்த போதிலும், அவரை வழிகெடுத்து பாவத்தில் வீழ்ந்து விடும்படி செய்து விட்டான், சைத்தான்.
இந்த நிகழ்வை திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு பதிவு செய்கின்றான்:
“முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை”. (திருக்குர்ஆன் 20:115)
“எனினும் இப்லீஸாகிய சைத்தான் அதை காரணமாக வைத்து அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து சொர்க்கத்திலிருந்தும், அவர்கள் இருந்த மேலான நிலையிலிருந்தும் அவர்களை வெளியேறும் படி செய்து விட்டான்” (திருக்குர்ஆன் 2:36).
சைத்தானின் சூழ்ச்சியால் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அந்த கனியைப் புசிக்கவே, அதுவரை அவர்களைக் காத்து நின்ற புனித தன்மை அவர்களை விட்டு விலகியது.
“அவ்விருவரும் அந்த மரத்தின் பழத்தை சுவைக்கவே அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக் கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன், ‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக சைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்கு கூறவில்லையா’ என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.” (திருக்குர்ஆன் 7:22).
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு சொல்லும் பாடம் என்னவெனில் மனிதன் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து முதல் பாவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அதற்கான தண்டனை என்று எதுவும் தரப்படவில்லை. இருந்தாலும் அதனை ஆழமாக சிந்திக்கும் போது தண்டனைக்கெல்லாம் சிகரமாய் அமையக் கூடிய மானபங்கம் என்ற பெரும் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். உயிரினும் பெரிது மானம். அதற்கு அங்கே ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது. அந்தரங்க பகுதியை மறைத்துக் கொள்வதற்கு இலை தழைகளை தேடி ஓடுகிறார்கள். மானத்தை காக்க வேண்டும் என்ற உணர்வையும் மேலோங்கச் செய்கின்றான்.
திருக்குர்ஆனின் மற்றொரு இடத்திலே கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் போது, “கணவன்-மனைவிக்கு ஆடை, மனைவி-கணவனுக்கு ஆடை” என்பதாக குறிப்பிடுக்கின்றான். அதாவது, ‘ஒருவர் மானத்தை ஒருவர் கட்டிக் காத்து வாழ வேண்டும்’ என்று கட்டளையிடுகின்றான்.
அல்லாஹ்வின் கட்டளைக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆதம் (அலை) மாறு செய்து விட்டார். அதனால் சொர்க்கத்தில் வாழும் அந்தஸ்த்தையும் இழந்து விட்டார்.
இந்தியாவும் இலங்கையும் ஒன்றாய் இணைந் திருந்த நிலப்பரப்பில் ஆதம் (அலை) இறக்கி விடப்பட்டார். அவர் இறங்கிய மலை “ஆதம் பாவா மலை” என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அது போன்று ஹவ்வா (அலை) சவுதி அரேபியா நாட்டில் ஜித்தாவில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்பட்டார். எத்தனையோ ஆண்டுகள் இருவரும் கஷ்டங்கள் பல அனுபவித்து ஒருவரை ஒருவர் தேடி அலைந்து கடைசியில் மக்கா நகரில் அரபாவில் “ஜபலே ரஹ்மத்” எனும் மலைக்குன்றில் ஒன்றிணைந்தார்கள். அதன் பின் அவர்களின் உலக வாழ்க்கை ஆரம்பம் ஆனது.
அவர்கள் ஒருவரை ஒருவர் தேடி அலைந்த கால கட்டத்தில் தங்கள் தவறை நினைத்து வருந்தி பாவமன்னிப்பு கேட்டு வந்தார்கள் என்பதையும் அல்லாஹ் தெளிவு பெற கூறுகின்றான்.
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள்புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி விடுவோம்” என்று பிரார்த்தித்து கூறினார். (திருக்குர்ஆன் 7:23)
அது போன்று தான் நம் வாழ்க்கையிலும் பாவம் செய்யும் எண்ணம் இல்லை என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் அல்லது பாவம் நடைபெறும் இடம் என தெரிந்தும், அது போன்ற இடங்களுக்கு சிலரின் வற்புறுத்தலால் செல்லும் போது, நாமும் பாவ வலையில் சிக்கிக்கொள்கிறோம். இதை அறிந்து அவற்றை தவிர்த்து வாழ வேண்டும்.
கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ்.
பாவங்கள் செய்வது மனித இயல்பு. பாவங்களை எண்ணி மனம் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அது எத்தனை பெரிய பாவமாயிருந்தாலும், இணை வைத்தலைத் தவிர்த்து விபச்சாரம், கொலை போன்ற பாவங்களையும் மன்னிக்கின்றேன் என்கிறான் அல்லாஹ்.
இந்த வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம் இதுவே.
மு.முஹம்மது யூசுப், உடன்குடி.






