என் மலர்
ஆன்மிகம்

தவக்காலத்தில் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன
இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதிலும், உண்ணா நோன்பு இருப்பதிலும், கடன் திருநாட்களை கடைப்பிடிப்பதிலும் அடங்கியிருப்பதில்லை.
தவக்காலம் தொடங்கியதும், கடவுளுக்காக என்று கூறி, நாம் நோன்பு இருக்க ஆரம்பித்து விடுகிறோம். நம்முடைய தவக்கால நோன்பு, இறைமகன் ஏசுவுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா? தவக்காலத்தில் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
உண்மையான வழிபாடு எது? தூய நோன்பு எத்தகையது? கடவுள் விரும்பும் செயல்கள் எவை? கடவுளை வழிபடுபவர்களுக்கு விடுதலையையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தருபவை எவை? என்ற கேள்விகளுக்கு விடைதருகிறார் தீர்க்கதரிசி ஏசாயா. ' ஒருவன் நாணலைப்போல் தன் தலையை தாழ்த்தி சாக்கு உடையையும், சாம்பலையும் அணிந்துகொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நோன்பு என்றும், ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் நீங்கள் அழைக்கிறீர்கள்? கொடுமை தடைகளை அவிழ்ப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தடியை உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு' (ஏசாயா 58:5-6).
இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதிலும், உண்ணா நோன்பு இருப்பதிலும், கடன் திருநாட்களை கடைப்பிடிப்பதிலும் அடங்கியிருப்பதில்லை. மாறாக, நல்லதைசெய்வதிலும், ஏழைகள், எளியவர்கள் மீது இரக்கம் காட்டுவதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களுக்கு உதவி புரிவதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
'பசித்தோர்க்கு உங்கள் உணவை பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரை காணும்போது அவர்களுக்கு உடுக்க கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்து கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு ' (ஏசாயா 58:7) என்கிறார் கடவுள்.
நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது இதுதான். ஆனால் நாம் இவைகளை பின்பற்றாமல், நம்மை வருத்திக்கொண்டு நோன்பு இருக்கிறோம். இறைவனின் விருப்பப்படி சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்காக நோன்பு இருப்போம். அடுத்தவர் மீது அக்கறை இல்லாமல் ஆண்டவரை வழிபடுவது வெற்று வழிபாடு என்பதையும், பகிராத உண்ணா நோன்பு பொருளற்றது என்பதையும் உணர்ந்துகொள்வோம்.
ஏழை, எளியவர்கள் ஏற்றம் பெறுவதற்கும், ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட நிலைகளில் வாழும் மனிதர்களுக்கு விடுதலையை பெற்று தருவதற்காகவும் நம்மை நாம் முழுவதுமாய் அர்ப்பணிப்போம். இதுதான் அர்த்தமுள்ள நோன்பு என்பதை புரிந்து கொண்டு, இந்த தவக்காலத்தில் இறைவனோடு இணைந்து வாழ்வோம். உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.
-சகோதரி.சகாயம்
உண்மையான வழிபாடு எது? தூய நோன்பு எத்தகையது? கடவுள் விரும்பும் செயல்கள் எவை? கடவுளை வழிபடுபவர்களுக்கு விடுதலையையும், மகிழ்ச்சியான வாழ்வையும் தருபவை எவை? என்ற கேள்விகளுக்கு விடைதருகிறார் தீர்க்கதரிசி ஏசாயா. ' ஒருவன் நாணலைப்போல் தன் தலையை தாழ்த்தி சாக்கு உடையையும், சாம்பலையும் அணிந்துகொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நோன்பு என்றும், ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் நீங்கள் அழைக்கிறீர்கள்? கொடுமை தடைகளை அவிழ்ப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தடியை உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு' (ஏசாயா 58:5-6).
இறை வழிபாடு என்பது கோவிலுக்குச் செல்வதிலும், உண்ணா நோன்பு இருப்பதிலும், கடன் திருநாட்களை கடைப்பிடிப்பதிலும் அடங்கியிருப்பதில்லை. மாறாக, நல்லதைசெய்வதிலும், ஏழைகள், எளியவர்கள் மீது இரக்கம் காட்டுவதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களுக்கு உதவி புரிவதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
'பசித்தோர்க்கு உங்கள் உணவை பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரை காணும்போது அவர்களுக்கு உடுக்க கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்து கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு ' (ஏசாயா 58:7) என்கிறார் கடவுள்.
நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது இதுதான். ஆனால் நாம் இவைகளை பின்பற்றாமல், நம்மை வருத்திக்கொண்டு நோன்பு இருக்கிறோம். இறைவனின் விருப்பப்படி சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்காக நோன்பு இருப்போம். அடுத்தவர் மீது அக்கறை இல்லாமல் ஆண்டவரை வழிபடுவது வெற்று வழிபாடு என்பதையும், பகிராத உண்ணா நோன்பு பொருளற்றது என்பதையும் உணர்ந்துகொள்வோம்.
ஏழை, எளியவர்கள் ஏற்றம் பெறுவதற்கும், ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட நிலைகளில் வாழும் மனிதர்களுக்கு விடுதலையை பெற்று தருவதற்காகவும் நம்மை நாம் முழுவதுமாய் அர்ப்பணிப்போம். இதுதான் அர்த்தமுள்ள நோன்பு என்பதை புரிந்து கொண்டு, இந்த தவக்காலத்தில் இறைவனோடு இணைந்து வாழ்வோம். உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.
-சகோதரி.சகாயம்
Next Story






