என் மலர்
கிறித்தவம்
அன்னை தெரசாவிற்குப் பிறகு சாரிட்டி மிஷன்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் சகோதரி நிர்மலா.
அன்னை தெரசாவிற்குப் பிறகு சாரிட்டி மிஷன்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் சகோதரி நிர்மலா. 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய சவால்கள் நிறைந்த இந்த பணியை அவர் ஏற்றார். இந்த பதவி சகோதரி நிர்மலாவுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை.
இரண்டு மாதமாக பல்வேறு தேர்வுகள் வைக்கப்பட்டு அதன்பின் 132 மூத்த கன்னியாஸ்திரிகள் மூலம் தலைமைப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்னை தெரசா தனது 86-வது வயதில் முதுமை காரணமாக நிர்வாகப் பணிகளில் இருந்து விலகி, அந்த பொறுப்புகளை நிர்மலா ஏற்றுக்கொண்ட போதும் ‘அன்னை’ என்ற பட்டத்தை மட்டும் அவருக்கு அளிக்கவில்லை. ‘நிர்மலா’ என்றால் சமஸ்கிருதத்தில் தூய்மை என்று அர்த்தம்.
சகோதரி நிர்மலாவின் இயற்பெயர் நிர்மலா தோஷி என்பது. இவர் ராஞ்சியில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோரின் பூர்வீகம் நேபாளம். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். இவரது பெற்றோருக்கு 10 குழந்தைகள். அதில் முதல் குழந்தை நிர்மலா.
படித்ததெல்லாம் பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் தான். இருந்தாலும் 24 வயது வரை இந்துவாக இருந்தார். கிறிஸ்தவராக மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் கூட அவர் மனதில் தோன்றியதில்லை. அதன்பின் தொழு நோயாளிகளிடம் அன்னை தெரசா காட்டும் அன்பு, பரிவு, பாசம், ஏழைகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றை அறிந்த சகோதரி நிர்மலா, அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு ரோமன் கத்தோலிக்கராக மாறினார்.
நிர்மலா அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், வழக்கறிஞராகவும் பயிற்சிப் பெற்றவர். பனாமா நாட்டில் உள்ள சாரிட்டி மிஷனை தலைமை ஏற்று நடத்திய முதல் கன்னியாஸ்திரி என்ற பெருமை இவருக்கு உண்டு. அதன்பின் இவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிஷன்களையும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிஷன்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று இருந்தார்.
அன்னை தெரசா வகித்த பதவியை அடைவதற்கு முன் இவர் கொல்கத்தாவில் உள்ள கண்டேம்ப்லேட்டிவ் விங் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார். இந்த பிரிவில் இருக்கும் கன்னியாஸ்திரிகள் அனைவரும் தங்கள் வாழ்வை தியாகம் செய்வதில் அர்ப்பணிப்பார்கள்.
அன்னை தெரசாவிற்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்ற சகோதரி நிர்மலா 2009 மார்ச் 25-ல் அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார். முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார்.
இரண்டு மாதமாக பல்வேறு தேர்வுகள் வைக்கப்பட்டு அதன்பின் 132 மூத்த கன்னியாஸ்திரிகள் மூலம் தலைமைப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்னை தெரசா தனது 86-வது வயதில் முதுமை காரணமாக நிர்வாகப் பணிகளில் இருந்து விலகி, அந்த பொறுப்புகளை நிர்மலா ஏற்றுக்கொண்ட போதும் ‘அன்னை’ என்ற பட்டத்தை மட்டும் அவருக்கு அளிக்கவில்லை. ‘நிர்மலா’ என்றால் சமஸ்கிருதத்தில் தூய்மை என்று அர்த்தம்.
சகோதரி நிர்மலாவின் இயற்பெயர் நிர்மலா தோஷி என்பது. இவர் ராஞ்சியில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோரின் பூர்வீகம் நேபாளம். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். இவரது பெற்றோருக்கு 10 குழந்தைகள். அதில் முதல் குழந்தை நிர்மலா.
படித்ததெல்லாம் பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் தான். இருந்தாலும் 24 வயது வரை இந்துவாக இருந்தார். கிறிஸ்தவராக மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் கூட அவர் மனதில் தோன்றியதில்லை. அதன்பின் தொழு நோயாளிகளிடம் அன்னை தெரசா காட்டும் அன்பு, பரிவு, பாசம், ஏழைகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றை அறிந்த சகோதரி நிர்மலா, அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்டு ரோமன் கத்தோலிக்கராக மாறினார்.
நிர்மலா அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், வழக்கறிஞராகவும் பயிற்சிப் பெற்றவர். பனாமா நாட்டில் உள்ள சாரிட்டி மிஷனை தலைமை ஏற்று நடத்திய முதல் கன்னியாஸ்திரி என்ற பெருமை இவருக்கு உண்டு. அதன்பின் இவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிஷன்களையும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிஷன்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று இருந்தார்.
அன்னை தெரசா வகித்த பதவியை அடைவதற்கு முன் இவர் கொல்கத்தாவில் உள்ள கண்டேம்ப்லேட்டிவ் விங் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார். இந்த பிரிவில் இருக்கும் கன்னியாஸ்திரிகள் அனைவரும் தங்கள் வாழ்வை தியாகம் செய்வதில் அர்ப்பணிப்பார்கள்.
அன்னை தெரசாவிற்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்ற சகோதரி நிர்மலா 2009 மார்ச் 25-ல் அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார். முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார்.
அழகப்பபுரம் அருகே உள்ள திருமூலநகர் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா தொடங்கியது
அழகப்பபுரம் அருகே உள்ள திருமூலநகரில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் பெரியசாமிபுரம் பங்கு அருட்பணியாளர் செல்வ ஜார்ஜ் கொடியேற்றினார். தொடர்ந்து அழகப்பபுரம் பங்கு அருட்பணியாளர் மைக்கிள் ஜெகதீஸ் தலைமையில் திருப்பலி நடந்தது.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனையும், தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.
திருவிழா இறுதி நாளான 23-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், பிற்பகல் 2.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜோசப் ஸ்டார்லின் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனையும், தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.
திருவிழா இறுதி நாளான 23-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், பிற்பகல் 2.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜோசப் ஸ்டார்லின் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
தீய ஆவிகளை இயேசு வெளியேற்றிய பின்னர் மகதலா மரியாள் இயேசுவின் இறை பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மகதலா மரியாள், மகதலேனா மரியாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஏழு அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டிருந்த பெண். இவரிடமிருந்த தீய ஆவிகளை இயேசு வெளியேற்றிய பின்னர் மகதலா மரியாள் இயேசுவின் இறை பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இயேசு தனது பணிவாழ்வின் நிறைவாக, எதிரிகளால் பிடிக்கப்பட்டு கொலை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டவேளையிலும் மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகவில்லை. சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டிருக்கையிலும் கூட மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகாமல் உடைந்த இதயத்தோடு அவர் பாதத் தருகே நின்றிருந்தார்.
இயேசுவின் சீடர்கள் எல்லாரும் இயேசுவை விட்டு விலகி ஓடிவிட்டனர். ஆனால் இவர் ஓடவில்லை. அதிகாரிகள், படை வீரர்கள், மத தலைவர்கள், இயேசுவின் எதிராளிகள் எவரைப்பற்றியும் கவலைப்படாமல் மகதலா மரியாள் இயேசுவின் அருகே நின்றிருந்தார். அவருடைய துணிச்சலும், இயேசுவின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டன.
இயேசு இறந்து போனதை அவரால் நம்ப முடியவில்லை. இயேசு இறந்து கல்லறைக் குகையில் அடக்கப்பட்டு, குகை மூடப்பட்ட பின்னரும் அதன் எதிரே துயரத்துடன் அமர்ந்திருந்தார் அவர்.
அரசு அந்தக் குகைக்கு சீல் வைத்து காவலரை நியமித்தது. மூன்றாவது நாள், இயேசு உயிர்த்தெழுந்தார். மகதலா மரியாள் அதை அறியவில்லை. இயேசுவின் இழப்பு அவரை அலைக்கழித்தது.
அதிகாலையிலேயே கல்லறைக்குச் சென்றார். அதிர்ந்தார். கல்லறைக் குகையின் வாசலில் இருந்த சீல் உடைந்திருந்தது. கல் புரட்டப்பட்டிருந்தது. உள்ளே இயேசுவின் உடலைக் காணோம்.
அலறி அடித்துக் கொண்டு ஓடிய மரியாள் சீடர்கள் இருவரிடம் சென்று, ‘இயேசுவைக் காணோம். யாரோ எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்றார்.
அவர்கள் கல்லறைக்கு ஓடி வந்துப் பார்த்தபோது அங்கே இயேசுவின் உடல் இல்லை. அவர் உயிர்த்தெழுவார் எனும் மறைநூல் வாக்கு அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை. அவர்கள் அப்படி நிகழும் என நினைக்கவும் இல்லை.
மகதலா மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று கதறி அழுதார். பின்னர் கல்லறைக்குள் எட்டிப் பார்த்தபோது இரண்டு வானதூதர்கள் அவர் உடல் இருந்த இடத்தில் தலைப்பாகத்திலும், கால் பாகத்திலும் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் அவரிடம், ‘அம்மா, ஏன் அழுகிறீர்?’ என்று கேட்டார்கள்.
‘என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை’ என்றார் மரியாள்.
சொல்லிவிட்டுத் திரும்பும் போது இயேசு அவளுக்குக் காட்சியளித்தார். முதலில் அவரை இயேசு என மகதலா மரியாள் அடையாளம் காணவில்லை. அவர், ‘மரியாளே’ என அழைத்ததும் சட்டென இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு பரவசமடைந்தார்.
இயேசு அவரிடம், ‘‘நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும், உங்கள் தந்தையும், என் கடவுளும், உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக் கிறேன்’ எனச் சொல்’’ என்றார். அவள் விரைந்து மற்றவர் களிடம் சென்று, ‘‘நான் ஆண்டவரைக் கண்டேன்’’ என்றார். அந்த சொற்றொடர் உலகப் புகழ் பெற்றுவிட்டது.
இயேசு உயிர்த்தெழுந்தபின்னர் காட்சி கொடுத்த முதல் நபர் மகதலா மரியாள் தான். இயேசு உயிர்த்தெழுந்தார் எனும் நற்செய்தியை அறிவித்த முதல் நபர் மகதலா மரியாள் தான். அதன்பின்னர் மகதலா மரியாளைப் பற்றிய செய்திகள் எதுவும் விவிலியத்தில் இல்லை.
எபேசுக்குச் சென்று அங்கே அவர் மரண மடைந்தார் என்கிறது ஆதித்திருச்சபையின் வரலாறு. கி.பி 886–ல் அவருடைய எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு கான்ஸ்டான்டிநோபிளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவர் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டு நினைவுகூரப்படுகிறார். ஜூலை 22–ந் தேதி புனித மகதலா மரியாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ‘மகதலா மரியாள் நற்செய்தி’ எனும் ஒரு நூல் எழுதப்பட்டது. எல்லா பெண் களையும் விட இயேசு மகதலா மரியாளை நேசித்தார் என்கிறது அந்த நூல். ‘கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்’ போன்ற இயேசுவின் பிரபலமான சொற்றொடர்கள் பல இதில் காணப்படுகின்றன.
‘ஆண்டவரே, நான் உம்மை ஒரு காட்சியில் கண்டேன் என அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார், என்னை விட்டுப் பார்வையை விலக்காதவர்கள் பாக்கியவான்கள். எங்கே உங்கள் மனம் இருக்கிறதோ அதுவே பொக்கிஷத்தின் இடம்’ என்பது அந்த நூலிலுள்ள ஒரு முக்கியமான வசனம்.
மகதலா மரியாளின் வாழ்க்கை நமக்கு சில முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகிறது.
1. நமது பழைய வாழ்க்கையை இறைவன் மாற்றியபின்பு அவருக்காகவே நமது புதிய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.
2. கூட இருப்பவர்கள் அனைவருமே ஓடிப் போனால் கூட இறைவனின் பாதத்தருகே நிற்க அச்சமோ, தயக்கமோ காட்டக் கூடாது.
3. இயேசு இறந்தபின்பும் கூட பிரதிபலன் எதிர்பாராமல் நேசத்தைக் கொட்டிய மகதலா மரியாளைப் போல, பிரதிபலன் எதிர்பாராமல் இறைவனை அன்பு செய்ய வேண்டும்.
இயேசு தனது பணிவாழ்வின் நிறைவாக, எதிரிகளால் பிடிக்கப்பட்டு கொலை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டவேளையிலும் மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகவில்லை. சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டிருக்கையிலும் கூட மகதலா மரியாள் இயேசுவை விட்டு விலகாமல் உடைந்த இதயத்தோடு அவர் பாதத் தருகே நின்றிருந்தார்.
இயேசுவின் சீடர்கள் எல்லாரும் இயேசுவை விட்டு விலகி ஓடிவிட்டனர். ஆனால் இவர் ஓடவில்லை. அதிகாரிகள், படை வீரர்கள், மத தலைவர்கள், இயேசுவின் எதிராளிகள் எவரைப்பற்றியும் கவலைப்படாமல் மகதலா மரியாள் இயேசுவின் அருகே நின்றிருந்தார். அவருடைய துணிச்சலும், இயேசுவின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டன.
இயேசு இறந்து போனதை அவரால் நம்ப முடியவில்லை. இயேசு இறந்து கல்லறைக் குகையில் அடக்கப்பட்டு, குகை மூடப்பட்ட பின்னரும் அதன் எதிரே துயரத்துடன் அமர்ந்திருந்தார் அவர்.
அரசு அந்தக் குகைக்கு சீல் வைத்து காவலரை நியமித்தது. மூன்றாவது நாள், இயேசு உயிர்த்தெழுந்தார். மகதலா மரியாள் அதை அறியவில்லை. இயேசுவின் இழப்பு அவரை அலைக்கழித்தது.
அதிகாலையிலேயே கல்லறைக்குச் சென்றார். அதிர்ந்தார். கல்லறைக் குகையின் வாசலில் இருந்த சீல் உடைந்திருந்தது. கல் புரட்டப்பட்டிருந்தது. உள்ளே இயேசுவின் உடலைக் காணோம்.
அலறி அடித்துக் கொண்டு ஓடிய மரியாள் சீடர்கள் இருவரிடம் சென்று, ‘இயேசுவைக் காணோம். யாரோ எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்றார்.
அவர்கள் கல்லறைக்கு ஓடி வந்துப் பார்த்தபோது அங்கே இயேசுவின் உடல் இல்லை. அவர் உயிர்த்தெழுவார் எனும் மறைநூல் வாக்கு அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை. அவர்கள் அப்படி நிகழும் என நினைக்கவும் இல்லை.
மகதலா மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று கதறி அழுதார். பின்னர் கல்லறைக்குள் எட்டிப் பார்த்தபோது இரண்டு வானதூதர்கள் அவர் உடல் இருந்த இடத்தில் தலைப்பாகத்திலும், கால் பாகத்திலும் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் அவரிடம், ‘அம்மா, ஏன் அழுகிறீர்?’ என்று கேட்டார்கள்.
‘என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை’ என்றார் மரியாள்.
சொல்லிவிட்டுத் திரும்பும் போது இயேசு அவளுக்குக் காட்சியளித்தார். முதலில் அவரை இயேசு என மகதலா மரியாள் அடையாளம் காணவில்லை. அவர், ‘மரியாளே’ என அழைத்ததும் சட்டென இயேசுவை அடையாளம் கண்டுகொண்டு பரவசமடைந்தார்.
இயேசு அவரிடம், ‘‘நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும், உங்கள் தந்தையும், என் கடவுளும், உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக் கிறேன்’ எனச் சொல்’’ என்றார். அவள் விரைந்து மற்றவர் களிடம் சென்று, ‘‘நான் ஆண்டவரைக் கண்டேன்’’ என்றார். அந்த சொற்றொடர் உலகப் புகழ் பெற்றுவிட்டது.
இயேசு உயிர்த்தெழுந்தபின்னர் காட்சி கொடுத்த முதல் நபர் மகதலா மரியாள் தான். இயேசு உயிர்த்தெழுந்தார் எனும் நற்செய்தியை அறிவித்த முதல் நபர் மகதலா மரியாள் தான். அதன்பின்னர் மகதலா மரியாளைப் பற்றிய செய்திகள் எதுவும் விவிலியத்தில் இல்லை.
எபேசுக்குச் சென்று அங்கே அவர் மரண மடைந்தார் என்கிறது ஆதித்திருச்சபையின் வரலாறு. கி.பி 886–ல் அவருடைய எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு கான்ஸ்டான்டிநோபிளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவர் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டு நினைவுகூரப்படுகிறார். ஜூலை 22–ந் தேதி புனித மகதலா மரியாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ‘மகதலா மரியாள் நற்செய்தி’ எனும் ஒரு நூல் எழுதப்பட்டது. எல்லா பெண் களையும் விட இயேசு மகதலா மரியாளை நேசித்தார் என்கிறது அந்த நூல். ‘கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்’ போன்ற இயேசுவின் பிரபலமான சொற்றொடர்கள் பல இதில் காணப்படுகின்றன.
‘ஆண்டவரே, நான் உம்மை ஒரு காட்சியில் கண்டேன் என அவரிடம் சொன்னேன். அவர் சொன்னார், என்னை விட்டுப் பார்வையை விலக்காதவர்கள் பாக்கியவான்கள். எங்கே உங்கள் மனம் இருக்கிறதோ அதுவே பொக்கிஷத்தின் இடம்’ என்பது அந்த நூலிலுள்ள ஒரு முக்கியமான வசனம்.
மகதலா மரியாளின் வாழ்க்கை நமக்கு சில முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகிறது.
1. நமது பழைய வாழ்க்கையை இறைவன் மாற்றியபின்பு அவருக்காகவே நமது புதிய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.
2. கூட இருப்பவர்கள் அனைவருமே ஓடிப் போனால் கூட இறைவனின் பாதத்தருகே நிற்க அச்சமோ, தயக்கமோ காட்டக் கூடாது.
3. இயேசு இறந்தபின்பும் கூட பிரதிபலன் எதிர்பாராமல் நேசத்தைக் கொட்டிய மகதலா மரியாளைப் போல, பிரதிபலன் எதிர்பாராமல் இறைவனை அன்பு செய்ய வேண்டும்.
பிலாத்துவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்.
இயேசுவை அறிந்த பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒரு பெயர் பிலாத்து. இயேசுவின் மீது பொய் குற்றம் சாட்டி அவரை பிலாத்துவின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் தான் அப்போதைய ஆளுநர்.
தனக்கு முன்னால் நின்றிருந்த இயேசுவை விசாரணை செய்தான் பிலாத்து. ஆனால் இயேசுவிடம் குற்றம் எதையும் காண அவனால் முடியவில்லை.
'இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை' என மக்களைப் பார்த்துச் சொன்னான். அவன் இயேசுவை அப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.
அவன் நீதி இருக்கையில் அமர்ந்திருந்த போது அவனுடைய மனைவியும் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினார்.
'இயேசுவை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் நேர்மையாளர். அவர் குறித்து ஒரு கனவு கண்டேன்' என்பதே அந்த செய்தி.
கூட்டமோ இயேசுவைக் கொன்றே ஆகவேண்டுமென கொந்தளித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதென தலையைச் சொறிந்தான். அப்போது அவனது நினைவுக்கு வந்தது இன்னொரு ஐடியா.
விழா நாளில் ஒரு கைதியை விடுதலை செய்யும் அதிகாரம் அவனுக்கு உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் இயேசுவை விடுதலை செய்ய நினைத்தான். அதை நேரடியாகச் செய்யவில்லை.
'இயேசுவையா? படுகொலைக்காரன் பரபாவையா? யாரை நான் விடுதலை செய்ய வேண்டும்?' என கேட்டான்.
கூடியிருந்தவர்கள் இயேசுவின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே. அவர்கள் இயேசுவை விடுதலை செய்ய வேண்டும் என கனவிலும் விரும்பமாட்டார்கள்.
'பரபாவை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் அறை' என்றது கூட்டம்.
இயேசுவை விடுதலை செய்யும் வாய்ப்புகளும், அதிகாரங்களும் அவனுக்குப் போதுமான அளவில் இருந்தன. அவனுடைய விசாரணை இயேசுவை நிரபராதி என்றது. கனவில் கிடைத்த தரிசனமும் இயேசு நேர்மையாளர் என்றது. ஆனால் பிலாத்துவோ கைகளைக் கழுவினான்.
'இவரது ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை' என ஒதுங்கிக் கொண்டான். அங்கே நீதி வெளிப்படவில்லை, பிலாத்துவின் பீதியே வெளிப்பட்டது.
மக்களின் முன்னிலையில் தனது பெயர் கெட்டுப் போகுமோ, பதவி போய்விடுமோ எனும் பயமே அவனுக்கு இருந்தது. எனவே மக்களின் மிரட்டலுக்குப் பணிந்தான்.
யூதேயாவை கி.பி. 26 முதல் 36 வரையிலான பத்து வருடங்கள் ஆட்சி செய்தான் இந்த பிலாத்து. கி.பி. 39-ல் மரணமடைந்தான் என்கிறது வரலாறு. அதாவது இயேசுவின் மரணத்துக்குப் பின் வெகு சில ஆண்டுகளே அவனது வாழ்க்கை இருந்தது. அந்த வாழ்க்கையின் மீதான வெறியே அவனை இயேசுவின் விரோதியாக மாற்றியது.
ஆனால் இந்த நிகழ்வு பல தீர்க்க தரிசனங்கள் நிறைவேற்றும் விதமாக அமைந்தது.
'அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை' (ஏசாயா 50:6) என இயேசுவின் பிறப்புக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்ட இறைவாக்கு-
'அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்' (மத்தேயு 26: 67,68) என இயேசுவின் படுகொலை நிகழ்ச்சியோடு நிறைவேறியது.
'அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்' (ஏசாயா 53:7) எனும் இறைவார்த்தை-
'அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை' (மத்தேயு 27 : 12,13,14) என நிறை வேறியது.
'அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நம் குற்றங் களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்' (ஏசாயா 53: 4,5) எனும் வார்த்தைகள்-
'சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்' (1 பேதுரு 2 :24) என நிறைவேறியது.
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின் மேல் சீட்டுப் போடுகின்றனர் (சங் 22:18) எனும் இறை வார்த்தை-
'அதைக்(இயேசுவின் ஆடை) கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்' என்று படை வீரர்கள் சொன்னபோது நிறைவேறியது.
இப்படி இன்னும் பல தீர்க்கத் தரிசனங்கள் இயேசுவின் மரணத்தோடு நிறைவேறின.
மக்கள் என்ன நினைப்பார்களோ எனும் கவலையிலும், சுயநல சிந்தனைகளுடனும் வாழ்ந்தால் இறைவனுக்கு எதிராக பெரும் பாவம் செய்தவர்களாக மாறுவோம் என்பதே பிலாத்துவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடமாகும்.
தனக்கு முன்னால் நின்றிருந்த இயேசுவை விசாரணை செய்தான் பிலாத்து. ஆனால் இயேசுவிடம் குற்றம் எதையும் காண அவனால் முடியவில்லை.
'இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை' என மக்களைப் பார்த்துச் சொன்னான். அவன் இயேசுவை அப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.
அவன் நீதி இருக்கையில் அமர்ந்திருந்த போது அவனுடைய மனைவியும் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினார்.
'இயேசுவை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் நேர்மையாளர். அவர் குறித்து ஒரு கனவு கண்டேன்' என்பதே அந்த செய்தி.
கூட்டமோ இயேசுவைக் கொன்றே ஆகவேண்டுமென கொந்தளித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதென தலையைச் சொறிந்தான். அப்போது அவனது நினைவுக்கு வந்தது இன்னொரு ஐடியா.
விழா நாளில் ஒரு கைதியை விடுதலை செய்யும் அதிகாரம் அவனுக்கு உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் இயேசுவை விடுதலை செய்ய நினைத்தான். அதை நேரடியாகச் செய்யவில்லை.
'இயேசுவையா? படுகொலைக்காரன் பரபாவையா? யாரை நான் விடுதலை செய்ய வேண்டும்?' என கேட்டான்.
கூடியிருந்தவர்கள் இயேசுவின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே. அவர்கள் இயேசுவை விடுதலை செய்ய வேண்டும் என கனவிலும் விரும்பமாட்டார்கள்.
'பரபாவை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் அறை' என்றது கூட்டம்.
இயேசுவை விடுதலை செய்யும் வாய்ப்புகளும், அதிகாரங்களும் அவனுக்குப் போதுமான அளவில் இருந்தன. அவனுடைய விசாரணை இயேசுவை நிரபராதி என்றது. கனவில் கிடைத்த தரிசனமும் இயேசு நேர்மையாளர் என்றது. ஆனால் பிலாத்துவோ கைகளைக் கழுவினான்.
'இவரது ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை' என ஒதுங்கிக் கொண்டான். அங்கே நீதி வெளிப்படவில்லை, பிலாத்துவின் பீதியே வெளிப்பட்டது.
மக்களின் முன்னிலையில் தனது பெயர் கெட்டுப் போகுமோ, பதவி போய்விடுமோ எனும் பயமே அவனுக்கு இருந்தது. எனவே மக்களின் மிரட்டலுக்குப் பணிந்தான்.
யூதேயாவை கி.பி. 26 முதல் 36 வரையிலான பத்து வருடங்கள் ஆட்சி செய்தான் இந்த பிலாத்து. கி.பி. 39-ல் மரணமடைந்தான் என்கிறது வரலாறு. அதாவது இயேசுவின் மரணத்துக்குப் பின் வெகு சில ஆண்டுகளே அவனது வாழ்க்கை இருந்தது. அந்த வாழ்க்கையின் மீதான வெறியே அவனை இயேசுவின் விரோதியாக மாற்றியது.
ஆனால் இந்த நிகழ்வு பல தீர்க்க தரிசனங்கள் நிறைவேற்றும் விதமாக அமைந்தது.
'அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை' (ஏசாயா 50:6) என இயேசுவின் பிறப்புக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்ட இறைவாக்கு-
'அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்' (மத்தேயு 26: 67,68) என இயேசுவின் படுகொலை நிகழ்ச்சியோடு நிறைவேறியது.
'அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்' (ஏசாயா 53:7) எனும் இறைவார்த்தை-
'அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை' (மத்தேயு 27 : 12,13,14) என நிறை வேறியது.
'அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நம் குற்றங் களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்' (ஏசாயா 53: 4,5) எனும் வார்த்தைகள்-
'சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்' (1 பேதுரு 2 :24) என நிறைவேறியது.
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின் மேல் சீட்டுப் போடுகின்றனர் (சங் 22:18) எனும் இறை வார்த்தை-
'அதைக்(இயேசுவின் ஆடை) கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்' என்று படை வீரர்கள் சொன்னபோது நிறைவேறியது.
இப்படி இன்னும் பல தீர்க்கத் தரிசனங்கள் இயேசுவின் மரணத்தோடு நிறைவேறின.
மக்கள் என்ன நினைப்பார்களோ எனும் கவலையிலும், சுயநல சிந்தனைகளுடனும் வாழ்ந்தால் இறைவனுக்கு எதிராக பெரும் பாவம் செய்தவர்களாக மாறுவோம் என்பதே பிலாத்துவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடமாகும்.
கிறிஸ்துவ வரலாற்றில் ‘இறை நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு மறு உருவமாய் நிற்பவர் ‘தோமா’ எனப்படும் புனித தோமையார்.
இயேசுவின் இறப்பின் போது இறை நம்பிக்கை குறைந்தவராகவும், உயிர்த்தெழுந்த இயேசு தன் முன் காட்சியளித்ததும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவராகவும் மாறி இறை மாட்சிமையை உலகிற்கு பரப்பினார். இவரது நம்பிக்கை வாழ்வில் நாமும் இணைய வேண்டும்.
இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு அவருடைய சீடர்களுக்கு காட்சியளித்தார், என வேதத்தில் வாசிக்கிறோம். அவ்வேளையில், பன்னிருவரில் ஒருவரான தோமா அவர்களுடன் இல்லை.
அதனால் இயேசுவைக் கண்ட சீடர்களைப் பார்த்து தோமா கூறும்போது ‘‘அவருடைய கைகளில் ஆணியினால் உண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்திலே என் விரலை இட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன்’’ எனக் கூறினார் என (யோவான் 20:24–25) விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமிருந்த பதினொரு சீடர்களில் தோமாவே அவ்விசுவாசம் நிறைந்தவராய் இருந்தார். விசுவாசிக்காத தோமாவை இயேசு புறக்கணிக்காமல், எட்டு நாளைக்குப் பின்பு அவருக்கு முன் தோன்றினார்.
‘‘தோமா, நீ உன் விரலை இங்கு நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவ்விசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு!’’ என்றார்.
தோமா உள்ளம் உடைந்தவராய் ‘‘என் ஆண்டவனே! என் தேவனே!’’ என இயேசுவை சரணடைந்து, அவர்மீது நம்பிக்கை கொண்டார்.
இறை மாட்சிமையை பரப்ப இந்தியாவிற்குள் வந்தவர், தமிழ்நாட்டிலே தங்கியிருந்து தனது பணியை தொடர்ந்தார். தமிழக மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்தார். அவருடைய இறை பரப்பு பயணம் இறப்பு வரை தொடர்ந்தது. இயேசுவின் மகிமைகளை போதித்ததற்காகவே கொல்லப்பட்டார்.
தமிழக மக்களின் நம்பிக்கை சின்னமாக விளங்கும் தோமாவின் கொள்கைகள் இயேசுவின் மீது ஆழமான பற்றுக்கொண்டவை.
‘உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாகயிரு: அவரே காரியத்தை வாய்க்க பண்ணுவார்’ (சங்: 37:5) என்ற விவிலிய மொழிகளை அடிப்படையாக கொண்டே தோமாவின் இறை பயணம் அரங்கேறியது.
நம்முடைய வழியை தினமும் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவர் மீது நம்பிக்கை வைத்தால், அதற்கான உரிய பதிலை கொடுப்பார் என்பதை உறுதியாக நம்பினார்.
மேலும் ‘நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்’ என்ற இறை வாசகத்தை அடிக்கடி முணுமுணுத்துள்ளார்.
‘உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரின் நம்பிக்கையாக இருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதை களைச் செம்மைப்படுத்துவார்’ என்ற நீதிமொழிகளிலும் (நீதி 3:56) நாட்டம் மிக்கவராய் இருந்துள்ளார்.
தோமாவின் வாழ்க்கை இறை நம்பிக்கை என்ற பெரும் கொடையை நமக்கு பாடமாக கொடுக்கிறது. இன்று பெரும்பாலான இறைமக்கள் இறை விசுவாசமற்றவர்களாய் வாழ்ந்து வருகின்றோம். தோமாவை போன்று இறை நம்பிக்கை குறைந்த வர்களாய் இருப்பதோடு, இறைவனை நேரில் கண்டால் மட்டுமே விசுவாசிப்பது என்ற முடிவுடன் இருக்கிறோம். இதற்கான பதில் தோமாவின் வாழ்க்கையிலே அமைந்திருக்கிறது.
தோமாவின் அவ்விசுவாசத்தினால் மனவேதனைக்குள்ளான இயேசு, தோமாவின் கண்களுக்கு தோன்றினார். தோமாவும் இயேசுவை நம்பினார். அந்தசமயத்தில் இயேசு என்னை கண்டு விசுவாசிப்பவர்களை காட்டிலும் காணாமல் விசுவாசிப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறியதும், தோமா மனவேதனையுடன் மன்னிப்பு வேண்டினார்.
ஆம்...! இயேசுவை நேரில் கண்டு விசுவாசிப்பவர்களை விட அவரை மனதளவில் உணர்ந்து விசுவாசிப்பவர்களே பேறுபெற்ற வர்கள். தோமா தன்னுடைய தவறுகளை வாழ்க்கையின் இறுதி காலம் வரையிலும் நினைத்து மனவேதனைப்பட்டார்.
ஆகவே தான் தோமா இறை நம்பிக்கைக்கு சிறந்த பாடமாக திகழ்கிறார். இறை நம்பிக்கை எப்படி அமைந்திருக்க வேண்டும், எப்படி அமைந்துவிடக்கூடாது என்பதற்கான சிறந்த இலக் கணமாகவும் திகழ்கிறார்.
தவக்காலம் நடந்துக்கொண்டிருக்கும் சமயம் என்பதால் சிலுவை பாதை, உயிர்ப்பு சடங்குகள் போன்றவற்றில் அறைகுறை நம்பிக்கையுடன் பங்குகொள்ளாமல் முழு மனதுடனும், இறைநம்பிக்கையுடனும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் காணாமல் விசுவாசிப்பவரே பேறுபெற்றோர்.
இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு அவருடைய சீடர்களுக்கு காட்சியளித்தார், என வேதத்தில் வாசிக்கிறோம். அவ்வேளையில், பன்னிருவரில் ஒருவரான தோமா அவர்களுடன் இல்லை.
அதனால் இயேசுவைக் கண்ட சீடர்களைப் பார்த்து தோமா கூறும்போது ‘‘அவருடைய கைகளில் ஆணியினால் உண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்திலே என் விரலை இட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன்’’ எனக் கூறினார் என (யோவான் 20:24–25) விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமிருந்த பதினொரு சீடர்களில் தோமாவே அவ்விசுவாசம் நிறைந்தவராய் இருந்தார். விசுவாசிக்காத தோமாவை இயேசு புறக்கணிக்காமல், எட்டு நாளைக்குப் பின்பு அவருக்கு முன் தோன்றினார்.
‘‘தோமா, நீ உன் விரலை இங்கு நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவ்விசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு!’’ என்றார்.
தோமா உள்ளம் உடைந்தவராய் ‘‘என் ஆண்டவனே! என் தேவனே!’’ என இயேசுவை சரணடைந்து, அவர்மீது நம்பிக்கை கொண்டார்.
இறை மாட்சிமையை பரப்ப இந்தியாவிற்குள் வந்தவர், தமிழ்நாட்டிலே தங்கியிருந்து தனது பணியை தொடர்ந்தார். தமிழக மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்தார். அவருடைய இறை பரப்பு பயணம் இறப்பு வரை தொடர்ந்தது. இயேசுவின் மகிமைகளை போதித்ததற்காகவே கொல்லப்பட்டார்.
தமிழக மக்களின் நம்பிக்கை சின்னமாக விளங்கும் தோமாவின் கொள்கைகள் இயேசுவின் மீது ஆழமான பற்றுக்கொண்டவை.
‘உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாகயிரு: அவரே காரியத்தை வாய்க்க பண்ணுவார்’ (சங்: 37:5) என்ற விவிலிய மொழிகளை அடிப்படையாக கொண்டே தோமாவின் இறை பயணம் அரங்கேறியது.
நம்முடைய வழியை தினமும் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவர் மீது நம்பிக்கை வைத்தால், அதற்கான உரிய பதிலை கொடுப்பார் என்பதை உறுதியாக நம்பினார்.
மேலும் ‘நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்’ என்ற இறை வாசகத்தை அடிக்கடி முணுமுணுத்துள்ளார்.
‘உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரின் நம்பிக்கையாக இருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதை களைச் செம்மைப்படுத்துவார்’ என்ற நீதிமொழிகளிலும் (நீதி 3:56) நாட்டம் மிக்கவராய் இருந்துள்ளார்.
தோமாவின் வாழ்க்கை இறை நம்பிக்கை என்ற பெரும் கொடையை நமக்கு பாடமாக கொடுக்கிறது. இன்று பெரும்பாலான இறைமக்கள் இறை விசுவாசமற்றவர்களாய் வாழ்ந்து வருகின்றோம். தோமாவை போன்று இறை நம்பிக்கை குறைந்த வர்களாய் இருப்பதோடு, இறைவனை நேரில் கண்டால் மட்டுமே விசுவாசிப்பது என்ற முடிவுடன் இருக்கிறோம். இதற்கான பதில் தோமாவின் வாழ்க்கையிலே அமைந்திருக்கிறது.
தோமாவின் அவ்விசுவாசத்தினால் மனவேதனைக்குள்ளான இயேசு, தோமாவின் கண்களுக்கு தோன்றினார். தோமாவும் இயேசுவை நம்பினார். அந்தசமயத்தில் இயேசு என்னை கண்டு விசுவாசிப்பவர்களை காட்டிலும் காணாமல் விசுவாசிப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறியதும், தோமா மனவேதனையுடன் மன்னிப்பு வேண்டினார்.
ஆம்...! இயேசுவை நேரில் கண்டு விசுவாசிப்பவர்களை விட அவரை மனதளவில் உணர்ந்து விசுவாசிப்பவர்களே பேறுபெற்ற வர்கள். தோமா தன்னுடைய தவறுகளை வாழ்க்கையின் இறுதி காலம் வரையிலும் நினைத்து மனவேதனைப்பட்டார்.
ஆகவே தான் தோமா இறை நம்பிக்கைக்கு சிறந்த பாடமாக திகழ்கிறார். இறை நம்பிக்கை எப்படி அமைந்திருக்க வேண்டும், எப்படி அமைந்துவிடக்கூடாது என்பதற்கான சிறந்த இலக் கணமாகவும் திகழ்கிறார்.
தவக்காலம் நடந்துக்கொண்டிருக்கும் சமயம் என்பதால் சிலுவை பாதை, உயிர்ப்பு சடங்குகள் போன்றவற்றில் அறைகுறை நம்பிக்கையுடன் பங்குகொள்ளாமல் முழு மனதுடனும், இறைநம்பிக்கையுடனும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் காணாமல் விசுவாசிப்பவரே பேறுபெற்றோர்.
புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்காலை சேர்ந்த தருமபுரம் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலையில் சிறிய தேர்பவனி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 5 தேர் பவனி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காரைக்கால் பங்குத்தந்தை அந்தோணி லூர்து ராஜ், உதவி பங்குத்தந்தை ஜான்சிரில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தி, தேர்களை மந்திரித்து புனிதநீர் தெளித்து தேர்பவனியை தொடங்கி வைத்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய தேர் உள்ளிட்ட 5 தேர்களும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நள்ளிரவு ஆலயத்தை வந்தடைந்தது. நேற்று இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், கிராம பஞ்சாயத்தார்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் காரைக்கால் பங்குத்தந்தை அந்தோணி லூர்து ராஜ், உதவி பங்குத்தந்தை ஜான்சிரில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தி, தேர்களை மந்திரித்து புனிதநீர் தெளித்து தேர்பவனியை தொடங்கி வைத்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய தேர் உள்ளிட்ட 5 தேர்களும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நள்ளிரவு ஆலயத்தை வந்தடைந்தது. நேற்று இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், கிராம பஞ்சாயத்தார்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு 104-ம்ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி திருப்பலி மறையுரை நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 10 மணிளயவில் திருவிழா திருப்பலி தேர் பவனி வந்தது. மறுநாள் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், 8 மணியளவில் புதுநன்மை திருப்பலியும் நடைபெற்றது.
திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பாதிரியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். தேர்பவனி திருநாளன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதையொட்டி அரசு பஸ் வசதி மதுரை பெரியார், வாடிப்பட்டி மற்றும் சோழவந்தானில் இருந்து செய்யப்பட்டு இருந்தது.
ரிஷபம் ஊராட்சி மன்றத் தலைவர் மனோண்மணி பழனியப்பன் மற்றும் பணியாளர்கள் சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணிவெள்ளைச்சாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசித்ரா, பிரகாஷ், கேசவராமசந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிளயவில் திருவிழா திருப்பலி தேர் பவனி வந்தது. மறுநாள் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், 8 மணியளவில் புதுநன்மை திருப்பலியும் நடைபெற்றது.
திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பாதிரியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். தேர்பவனி திருநாளன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதையொட்டி அரசு பஸ் வசதி மதுரை பெரியார், வாடிப்பட்டி மற்றும் சோழவந்தானில் இருந்து செய்யப்பட்டு இருந்தது.
ரிஷபம் ஊராட்சி மன்றத் தலைவர் மனோண்மணி பழனியப்பன் மற்றும் பணியாளர்கள் சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணிவெள்ளைச்சாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசித்ரா, பிரகாஷ், கேசவராமசந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 285-வது ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பக்தர்கள் புனித அடைக்கல அன்னையின் திருஉருவ படம் பொருந்திய திருக்கொடியை ஆலய வளாகத்திலிருந்து ஊர்வலமாக ஏலாக்குறிச்சி கடைவீதி வழியாக எடுத்து வந்து ஆலய வளாகத்தில் உள்ள திருக்கொடி கம்பத்திற்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து பங்கு தந்தை லூர்துசாமி தலைமையில் தஞ்சாவூர் பங்கு தந்தை தார்சிஸ், புதுக்கோட்டை ராபர்ட் தனராஜ் ஆகியோர் முன்னிலையில், தஞ்சாவூர் பிரான்சிஸ் சேவியரால் திருக்கொடி மந்திரித்து புனிதப்படுத்தப்பட்டு பக்தர்களின் மரியே வாழ்க என்ற பக்திகோஷத்துடன் அன்னையின் திருக்கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து ஆலயத்தில் தொடக்க திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு தந்தை ஆல்பர் சேவியர் மற்றும் ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, மேல வரப்பன்குறிச்சி மற்றும் பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நேற்று மாலை பங்குதந்தை லூர்துசாமி தலைமையில் திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெற்றது. இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை மைக்கேல் பட்டி பங்குதந்தை அந்தோணி ஜோசப், வேளாங்கண்ணி அதிபர் பிரபாகர், புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ், சென்னை ராயப்பன், தஞ்சாவூர் டெரென்ஸ், வரதராஜன் பேட்டை வின்சென்ட் ஆகியோர் தலைமையில் திருப்பலிநடக்கிறது.
அதைதொடர்ந்து சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி மாலை 6 மணிக்கு பெங்களூர் உயர் மறை மாவட்ட குருக்கள் அமர்நாத், ஜான்சுதீப், கில்பர்ட், மோசஸ் ஆகியோரால் திருவழிபாடும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் மலர் மற்றும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல அன்னை எழுந்தருளும் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
தொடர்ந்து 17-ந் தேதி காலை 6 மணியளவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் விழா சிறப்பு திருப்பலியும், மதியம் 12 மணியளவில் மலையாள திருப்பலியும், மாலை 6 மணியளவில் திருவழிபாடும் நடைபெறுகிறது. இரவு 11 மணியளவில் அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. 18-ந் தேதி காலை 8 மணியளவில் பங்கு தந்தை லூர்துசாமி தலைமையில் விழா நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
முன்னதாக பக்தர்கள் புனித அடைக்கல அன்னையின் திருஉருவ படம் பொருந்திய திருக்கொடியை ஆலய வளாகத்திலிருந்து ஊர்வலமாக ஏலாக்குறிச்சி கடைவீதி வழியாக எடுத்து வந்து ஆலய வளாகத்தில் உள்ள திருக்கொடி கம்பத்திற்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து பங்கு தந்தை லூர்துசாமி தலைமையில் தஞ்சாவூர் பங்கு தந்தை தார்சிஸ், புதுக்கோட்டை ராபர்ட் தனராஜ் ஆகியோர் முன்னிலையில், தஞ்சாவூர் பிரான்சிஸ் சேவியரால் திருக்கொடி மந்திரித்து புனிதப்படுத்தப்பட்டு பக்தர்களின் மரியே வாழ்க என்ற பக்திகோஷத்துடன் அன்னையின் திருக்கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து ஆலயத்தில் தொடக்க திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு தந்தை ஆல்பர் சேவியர் மற்றும் ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, மேல வரப்பன்குறிச்சி மற்றும் பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நேற்று மாலை பங்குதந்தை லூர்துசாமி தலைமையில் திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெற்றது. இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை மைக்கேல் பட்டி பங்குதந்தை அந்தோணி ஜோசப், வேளாங்கண்ணி அதிபர் பிரபாகர், புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ், சென்னை ராயப்பன், தஞ்சாவூர் டெரென்ஸ், வரதராஜன் பேட்டை வின்சென்ட் ஆகியோர் தலைமையில் திருப்பலிநடக்கிறது.
அதைதொடர்ந்து சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி மாலை 6 மணிக்கு பெங்களூர் உயர் மறை மாவட்ட குருக்கள் அமர்நாத், ஜான்சுதீப், கில்பர்ட், மோசஸ் ஆகியோரால் திருவழிபாடும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் மலர் மற்றும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல அன்னை எழுந்தருளும் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
தொடர்ந்து 17-ந் தேதி காலை 6 மணியளவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் விழா சிறப்பு திருப்பலியும், மதியம் 12 மணியளவில் மலையாள திருப்பலியும், மாலை 6 மணியளவில் திருவழிபாடும் நடைபெறுகிறது. இரவு 11 மணியளவில் அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. 18-ந் தேதி காலை 8 மணியளவில் பங்கு தந்தை லூர்துசாமி தலைமையில் விழா நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
சைதாப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 465-வது ஆண்டு பெருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சென்னை மயிலை உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கொடியேற்றுகிறார். அதைத்தொடர்ந்து திருப்பலியும் நடைபெறுகிறது.
ஆண்டு பெருவிழா 14-ந்தேதி(வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு வெவ்வேறு தலைப்புகளில் நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. அதில், வருகிற 23-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் தலைமை தாங்குகிறார்.
24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்னையின் மாபெரும் விழா நடக்க இருக்கிறது. அதையொட்டி, காலை 8 மணிக்கு சென்னை மயிலை உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் புதுநன்மை வழங்குதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு கிண்டி மறைவட்ட முதன்மை குரு என்.ஏ.சார்லஸ்குமார், தரமணி பங்கு தந்தை போஸ்கோ ஆகியோர் தலைமையில் கொடி இறக்க விழாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் அதிபரும், பங்கு தந்தையுமான எம்.வி.ஜேக்கப், உதவி பங்கு தந்தை தே.ஜீவா, ஆலய மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஆண்டு பெருவிழா 14-ந்தேதி(வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு வெவ்வேறு தலைப்புகளில் நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. அதில், வருகிற 23-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் தலைமை தாங்குகிறார்.
24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்னையின் மாபெரும் விழா நடக்க இருக்கிறது. அதையொட்டி, காலை 8 மணிக்கு சென்னை மயிலை உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் புதுநன்மை வழங்குதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு கிண்டி மறைவட்ட முதன்மை குரு என்.ஏ.சார்லஸ்குமார், தரமணி பங்கு தந்தை போஸ்கோ ஆகியோர் தலைமையில் கொடி இறக்க விழாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் அதிபரும், பங்கு தந்தையுமான எம்.வி.ஜேக்கப், உதவி பங்கு தந்தை தே.ஜீவா, ஆலய மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பைபிள் அறிவோ, சட்டங்களின் அறிவோ நம்மை இயேசுவின் பிள்ளைகளாக மாற்றாது என்பதை உணர்த்தும் கதை.
லாசர் என்றொருவர் இறந்து விட்டார். அவரைக் கல்லறைக் குகையில் வைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இயேசு அந்த இடத்துக்குச் சென்றார். ‘லாசரே வெளியே வா’ என்றார். லாசர் உயிர்பெற்று வெளியே வந்தார். கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி யடைந்தார்கள். பலர் இயேசுவின் மீது விசுவாசம் கொண்டனர்.
சிலர் இந்த அற்புதச் செயலைப் பரிசேயர்களுக்குத் தெரிவித்தனர். பரிசேயர்கள் ஏற்கனவே இயேசுவின் போதனைகளாலும், மக்கள் செல்வாக்கினாலும் எரிச்சலடைந்து கிடந்தனர். இப்போது இந்தச் செய்தியும் வந்து விட்டது.
பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் எல்லோருடைய மனதிலும் கோபம். இயேசுவினால் தங்கள் புகழும், வருமானமும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது, என்ன செய்யலாம் என கூடிப் பேசினார்கள்.
கயபா அப்போது அங்கே தலைமைக் குரு. இயேசுவை ஒரு கிளர்ச்சிக்காரனாகப் பார்த்தான் அவன். காரணம் அப்போதைய மத குருக்களின் சட்டங்களுக்கு எதிராக இயேசு போதித்தார். ஆலயத்தை வியாபாரக் கூடமாக்கிய கயபாவின் ஆதரவாளர்களை கோவிலை விட்டே அடித்துத் துரத்தினார்.
இப்போது கயபா எழுந்தான், ‘இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது’ என்று சொன்னான். ஒரு குழப்பவாதியை ஒழித்துக் கட்டினால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்பது அவன் சொன்னதன் அர்த்தம். ஆனால், ‘இயேசு அழிந்து போகும் இனத்துக்காக தனது உயிரைப் பலியாகக் கொடுப்பார்’ எனும் தீர்க்கதரிசன வார்த்தையாய் அது ஒலித்தது.
தலைமைக்குருவின் அந்த வார்த்தை கூடியிருந்த பரிசேயர்கள், மதவாதிகள் அனைவருக்கும் ஒரு மாபெரும் புத்துணர்ச்சி ஊட்டியது. அன்று முதல் அனைவருடைய ஒட்டு மொத்த சிந்தனையும் ‘இயேசுவை எப்படித் தீர்த்துக்கட்டலாம்’ என்பதில் தான் இருந்தது.
இயேசுவைப் பிடிக்க செய்த சதி ஆலோசனையில் கயபாவின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. அவர்கள் சதியாலோசனை செய்யும் இடமே கயபாவின் வீடாகத்தான் இருந்தது. அவர்கள் இயேசுவைக் கொலை செய்வதுடன், கூடவே இயேசு உயிர்கொடுத்த லாசரையும் கொலை செய்ய வேண்டும் என தீர்மானம் செய்தார்கள்.
கடைசியில் இயேசு பிடிக்கப்பட்டு கயபாவின் முன்னால் கொண்டு வரப்பட்டார்.
இரண்டு பேருடைய சாட்சிகள் இருந்தால் தான் இயேசுவைக் கொலை செய்வது சட்டப்படி சாத்தியமாகும். ஆனால் சாட்சிகளோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசி குழப்பினார்கள்.
கயபா மனதுக்குள் திட்டமிட்டான். ஏன் சாட்சிகளை அழைக்கவேண்டும். இயேசுவையே விசாரிக்கலாமே. அவர் மூலமாகவே அவருடைய குற்றத்தை நிரூபிக்கலாமே. இறைவாக்கினர் என்றால், பெரிய வல்லமையுடையவர் என்றால் அவர் பொய் சொல்லப் போவதில்லையே. கயபா எண்ணினான்.
‘சரி.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ கடவுளின் மகனாகிய மெசியாவா?’ கயபா துருப்புச் சீட்டுக் கேள்வியை எடுத்து இயேசுவின் முன்னால் விரித்தான்.
இயேசு அவன் கண்களைப் பார்த்தார்.
‘நீர் தான் சொல்லுகிறீர்’.
‘தெளிவாகச் சொல்லுங்கள். நீர் மெசியாவா?’
‘ஆம், நான் கடவுளின் மகனாகிய மெசியா தான். மானிட மகன் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானமேகங்களின் மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள்’ இயேசுவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
கயபா தன்னுடைய மேலுடையைக் கிழித்தான். ‘இதோ... நீங்களே கேட்டீர்களே. நம்முடைய கடவுளை இவன் பழித்துரைத்ததை நீங்களே கேட்டீர்களே. இனிமேல் சாட்சிகள் எதற்கு? இவனை என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்’.
சாட்சிகளால் நிரூபிக்கப்படாமல் போன குற்றத்தை இயேசுவே ஒப்புக்கொண்டதில் கூட்டத்தினர் அதிர்ந்தனர். வழக்கத்துக்கு மாறான காட்சி!.
‘இப்போது என்ன சொல்கிறீர்கள்’ கயபா அவையைப் பார்த்துக் கேட்டான்.
‘இயேசு குற்றவாளி தான்’ அவை ஒத்துக்கொண்டது.
வாக்கெடுப்பு நடந்தது. அதிலும் கயபா தன்னுடைய வஞ்சக மூளையைப் பயன்படுத்தினான். முதியவர்கள் தொடங்கி இளையவர் வரை வாக்கெடுப்பு நடத்துவது தான் முறை. ஆனால் ஒருவேளை முதியவர்கள் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களித்தால், பின்பு வருபவர் களும் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று பயந்தான். எனவே இளையவர்களிடமிருந்து வாக்கு ஆரம்பமானது. இளையவர்கள் எல்லாம் கயபாவின் ஆட்கள்!
இயேசு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இயேசு கொலை செய்யப்பட்டார்.
இயேசு உயிர்த்தெழுந்தபின்பும் கயபா அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைக் கொல்ல வேண்டுமென மிகுந்த தீவிரம் காட்டினான்.
இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தாலும், சட்டங்களை நன்கு அறிந்திருந்தாலும், இயேசு உயிர்த்த நிகழ்வை அனுபவித்திருந்தாலும் கயபா மனம் மாறவில்லை.
பைபிள் அறிவோ, சட்டங்களின் அறிவோ நம்மை இயேசுவின் பிள்ளைகளாக மாற்றாது. அவர் மேல் கொள்ளும் ஆழமான விசுவாசமே முக்கியமானது எனும் மிகப்பெரிய பாடத்தை கயபாவின் வாழ்வில்இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
சிலர் இந்த அற்புதச் செயலைப் பரிசேயர்களுக்குத் தெரிவித்தனர். பரிசேயர்கள் ஏற்கனவே இயேசுவின் போதனைகளாலும், மக்கள் செல்வாக்கினாலும் எரிச்சலடைந்து கிடந்தனர். இப்போது இந்தச் செய்தியும் வந்து விட்டது.
பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் எல்லோருடைய மனதிலும் கோபம். இயேசுவினால் தங்கள் புகழும், வருமானமும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது, என்ன செய்யலாம் என கூடிப் பேசினார்கள்.
கயபா அப்போது அங்கே தலைமைக் குரு. இயேசுவை ஒரு கிளர்ச்சிக்காரனாகப் பார்த்தான் அவன். காரணம் அப்போதைய மத குருக்களின் சட்டங்களுக்கு எதிராக இயேசு போதித்தார். ஆலயத்தை வியாபாரக் கூடமாக்கிய கயபாவின் ஆதரவாளர்களை கோவிலை விட்டே அடித்துத் துரத்தினார்.
இப்போது கயபா எழுந்தான், ‘இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது’ என்று சொன்னான். ஒரு குழப்பவாதியை ஒழித்துக் கட்டினால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்பது அவன் சொன்னதன் அர்த்தம். ஆனால், ‘இயேசு அழிந்து போகும் இனத்துக்காக தனது உயிரைப் பலியாகக் கொடுப்பார்’ எனும் தீர்க்கதரிசன வார்த்தையாய் அது ஒலித்தது.
தலைமைக்குருவின் அந்த வார்த்தை கூடியிருந்த பரிசேயர்கள், மதவாதிகள் அனைவருக்கும் ஒரு மாபெரும் புத்துணர்ச்சி ஊட்டியது. அன்று முதல் அனைவருடைய ஒட்டு மொத்த சிந்தனையும் ‘இயேசுவை எப்படித் தீர்த்துக்கட்டலாம்’ என்பதில் தான் இருந்தது.
இயேசுவைப் பிடிக்க செய்த சதி ஆலோசனையில் கயபாவின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. அவர்கள் சதியாலோசனை செய்யும் இடமே கயபாவின் வீடாகத்தான் இருந்தது. அவர்கள் இயேசுவைக் கொலை செய்வதுடன், கூடவே இயேசு உயிர்கொடுத்த லாசரையும் கொலை செய்ய வேண்டும் என தீர்மானம் செய்தார்கள்.
கடைசியில் இயேசு பிடிக்கப்பட்டு கயபாவின் முன்னால் கொண்டு வரப்பட்டார்.
இரண்டு பேருடைய சாட்சிகள் இருந்தால் தான் இயேசுவைக் கொலை செய்வது சட்டப்படி சாத்தியமாகும். ஆனால் சாட்சிகளோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசி குழப்பினார்கள்.
கயபா மனதுக்குள் திட்டமிட்டான். ஏன் சாட்சிகளை அழைக்கவேண்டும். இயேசுவையே விசாரிக்கலாமே. அவர் மூலமாகவே அவருடைய குற்றத்தை நிரூபிக்கலாமே. இறைவாக்கினர் என்றால், பெரிய வல்லமையுடையவர் என்றால் அவர் பொய் சொல்லப் போவதில்லையே. கயபா எண்ணினான்.
‘சரி.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ கடவுளின் மகனாகிய மெசியாவா?’ கயபா துருப்புச் சீட்டுக் கேள்வியை எடுத்து இயேசுவின் முன்னால் விரித்தான்.
இயேசு அவன் கண்களைப் பார்த்தார்.
‘நீர் தான் சொல்லுகிறீர்’.
‘தெளிவாகச் சொல்லுங்கள். நீர் மெசியாவா?’
‘ஆம், நான் கடவுளின் மகனாகிய மெசியா தான். மானிட மகன் கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பதையும், வானமேகங்களின் மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள்’ இயேசுவின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
கயபா தன்னுடைய மேலுடையைக் கிழித்தான். ‘இதோ... நீங்களே கேட்டீர்களே. நம்முடைய கடவுளை இவன் பழித்துரைத்ததை நீங்களே கேட்டீர்களே. இனிமேல் சாட்சிகள் எதற்கு? இவனை என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்’.
சாட்சிகளால் நிரூபிக்கப்படாமல் போன குற்றத்தை இயேசுவே ஒப்புக்கொண்டதில் கூட்டத்தினர் அதிர்ந்தனர். வழக்கத்துக்கு மாறான காட்சி!.
‘இப்போது என்ன சொல்கிறீர்கள்’ கயபா அவையைப் பார்த்துக் கேட்டான்.
‘இயேசு குற்றவாளி தான்’ அவை ஒத்துக்கொண்டது.
வாக்கெடுப்பு நடந்தது. அதிலும் கயபா தன்னுடைய வஞ்சக மூளையைப் பயன்படுத்தினான். முதியவர்கள் தொடங்கி இளையவர் வரை வாக்கெடுப்பு நடத்துவது தான் முறை. ஆனால் ஒருவேளை முதியவர்கள் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களித்தால், பின்பு வருபவர் களும் இயேசுவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று பயந்தான். எனவே இளையவர்களிடமிருந்து வாக்கு ஆரம்பமானது. இளையவர்கள் எல்லாம் கயபாவின் ஆட்கள்!
இயேசு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இயேசு கொலை செய்யப்பட்டார்.
இயேசு உயிர்த்தெழுந்தபின்பும் கயபா அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களைக் கொல்ல வேண்டுமென மிகுந்த தீவிரம் காட்டினான்.
இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தாலும், சட்டங்களை நன்கு அறிந்திருந்தாலும், இயேசு உயிர்த்த நிகழ்வை அனுபவித்திருந்தாலும் கயபா மனம் மாறவில்லை.
பைபிள் அறிவோ, சட்டங்களின் அறிவோ நம்மை இயேசுவின் பிள்ளைகளாக மாற்றாது. அவர் மேல் கொள்ளும் ஆழமான விசுவாசமே முக்கியமானது எனும் மிகப்பெரிய பாடத்தை கயபாவின் வாழ்வில்இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
திருமானூர் தூய மங்கள மாதா ஆலயத்தில் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் பழமை வாய்ந்த தூய மங்கள மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை நல்லாயன் பெருமடம் பேராசிரியர் மைக்கேல் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. 5-ம் நாள் திரு விழாவில் பங்குதந்தை பெஞ்சமின் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது.
6-ம் நாள் விழாவில் புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து இரவு இன்னிசை நிகழ்ச்சியும், மின்னொளி அலங்காரத்தில் வேண்டுதல் தேர்ப்பவனியும், சம்மனசு தேருக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் மற்றும் மறை மாவட்ட அருட்பணியாளர்கள் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய மங்கள மாதா எழுந்தருளி அலங்கார ஆடம்பர தேர்ப்பவனி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் வீடுகள் தோறும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் தூய மங்கள மாதா அன்னையை வழிபட்டு அன்னையின் அருளை பெற்றனர். அப்போது வாணவேடிக்கையும் நடைபெற்றது.
நேற்று காலை 11 மணியளவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பாடற் திருப்பலியும், மாலையில் கிறிஸ்தவர்கள் முன்னிலையில் ஆலய கொடியிறக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து ஏலாக்குறிச்சி உதவி பங்கு தந்தை சந்தனம் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை பெஞ்சமின் மற்றும் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகள் செய்திருந்தனர்.
6-ம் நாள் விழாவில் புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து இரவு இன்னிசை நிகழ்ச்சியும், மின்னொளி அலங்காரத்தில் வேண்டுதல் தேர்ப்பவனியும், சம்மனசு தேருக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் மற்றும் மறை மாவட்ட அருட்பணியாளர்கள் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய மங்கள மாதா எழுந்தருளி அலங்கார ஆடம்பர தேர்ப்பவனி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் வீடுகள் தோறும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் தூய மங்கள மாதா அன்னையை வழிபட்டு அன்னையின் அருளை பெற்றனர். அப்போது வாணவேடிக்கையும் நடைபெற்றது.
நேற்று காலை 11 மணியளவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பாடற் திருப்பலியும், மாலையில் கிறிஸ்தவர்கள் முன்னிலையில் ஆலய கொடியிறக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து ஏலாக்குறிச்சி உதவி பங்கு தந்தை சந்தனம் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை பெஞ்சமின் மற்றும் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகள் செய்திருந்தனர்.
உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூரப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண தினம் மட்டுமே, 'புனித வெள்ளி' என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர்.
இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் அவர்கள் பின்பற்றவில்லை.
பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34-வது வயதில் பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க, தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.
இயேசு தனது முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும், ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். 'பஸ்கா' பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்.
பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர். மறுநாள் ரோம் அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல், கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை.
இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது, என கைகளை கழுவி, 'இவரை இஷ்டப்படி செய்யுங்கள்', என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூதமத குருக்கள் அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, 'கபாலஸ்தலம்' எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர்.
இதுவே... பெரிய வியாழன் தொடங்கி புனித வெள்ளி வரை இயேசு கிறிஸ்துவிற்கு நடைபெற்ற வேதனை கால அனுபவங்கள். கிறிஸ்துவ வழிபாட்டின் முக்கியமான நிகழ்வுகளும் இதுவே. இத்தகைய கொடூரமான சிலுவை பயணத்தின் வழியாகவே நம்மை பாவங்களில் இருந்து மீட்டுள்ளார்.
இயேசுவின் உயிர் பிரிவதற்கு முன்பாக கேலி-கிண்டல், அவமானம், நரக வேதனையான சித்திரவதைகள் என சாவிற்கு அழைத்து செல்லும் எல்லா வழிகளிலும் அவரை இழுத்து சென்று இறுதியாக சிலுவையில் அறைந்து உயிரை குடித்தனர். அவர் சிந்திய குருதியில் உலக மக்களின் பாவமே அடங்கி இருந்தது. அப்படியான வேதனையிலும், நமக்காகவே மன்றாடினார்.
இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்:
1. கடவுளே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது, இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
2. தனது வலது பக்கத்தில் இருந்த கள்ளனை பார்த்து, நீ இன்றைக்கும் என்னுடனே பரதீசிலிருப்பாய்.
3. தன் தாயை நோக்கி, இதோ உன் மகன் என்றும், சீசன் யோவானை நோக்கி, இதோ உன் தாய் என்றார்.
4. கடவுளே, கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்.
5. தாகமாயிருக்கிறேன்.
6. எல்லாம் முடிந்தது.
7. கடவுளே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
என்று கூறி உயிரை இறைவனின் கையில் ஒப்படைத்தார். உலகில் மனிதாக பிறந்து, நற்செயல்கள் புரிந்து, சிலுவை மரணத்தைச் சந்தித்து, மனித குலத்துக்காக, இயேசுநாதர் பாவமன்னிப்பை பெற்ற நாளே 'புனித வெள்ளி' தினமாகும்.
இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் அவர்கள் பின்பற்றவில்லை.
பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34-வது வயதில் பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க, தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.
இயேசு தனது முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும், ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். 'பஸ்கா' பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்.
பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர். மறுநாள் ரோம் அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல், கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை.
இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது, என கைகளை கழுவி, 'இவரை இஷ்டப்படி செய்யுங்கள்', என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூதமத குருக்கள் அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, 'கபாலஸ்தலம்' எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர்.
இதுவே... பெரிய வியாழன் தொடங்கி புனித வெள்ளி வரை இயேசு கிறிஸ்துவிற்கு நடைபெற்ற வேதனை கால அனுபவங்கள். கிறிஸ்துவ வழிபாட்டின் முக்கியமான நிகழ்வுகளும் இதுவே. இத்தகைய கொடூரமான சிலுவை பயணத்தின் வழியாகவே நம்மை பாவங்களில் இருந்து மீட்டுள்ளார்.
இயேசுவின் உயிர் பிரிவதற்கு முன்பாக கேலி-கிண்டல், அவமானம், நரக வேதனையான சித்திரவதைகள் என சாவிற்கு அழைத்து செல்லும் எல்லா வழிகளிலும் அவரை இழுத்து சென்று இறுதியாக சிலுவையில் அறைந்து உயிரை குடித்தனர். அவர் சிந்திய குருதியில் உலக மக்களின் பாவமே அடங்கி இருந்தது. அப்படியான வேதனையிலும், நமக்காகவே மன்றாடினார்.
இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்:
1. கடவுளே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது, இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
2. தனது வலது பக்கத்தில் இருந்த கள்ளனை பார்த்து, நீ இன்றைக்கும் என்னுடனே பரதீசிலிருப்பாய்.
3. தன் தாயை நோக்கி, இதோ உன் மகன் என்றும், சீசன் யோவானை நோக்கி, இதோ உன் தாய் என்றார்.
4. கடவுளே, கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்.
5. தாகமாயிருக்கிறேன்.
6. எல்லாம் முடிந்தது.
7. கடவுளே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
என்று கூறி உயிரை இறைவனின் கையில் ஒப்படைத்தார். உலகில் மனிதாக பிறந்து, நற்செயல்கள் புரிந்து, சிலுவை மரணத்தைச் சந்தித்து, மனித குலத்துக்காக, இயேசுநாதர் பாவமன்னிப்பை பெற்ற நாளே 'புனித வெள்ளி' தினமாகும்.






