என் மலர்
கிறித்தவம்
வில்லியனூர் லூர்து மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
புதுவை மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து மாதா பேராலயம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த 6-வது நாளில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலை 5-30 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. இதனைதொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் தேர்பவனி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. 10-ந்தேதி அன்று காலை 7-30 மணிக்கு புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7-30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. மறுநாள் காலை 6-30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல பங்குத்தந்தை ரிச்சர்ட் அடிகளார் தலைமையில் விழாக்குழு வினர், பங்குப்பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ குழுவினர் செய்துள்ளனர்.
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கென்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும். உலகிலேயே ஒரு சில சொரூபங்கள்தான் போப் ஆண்டவரால் முடி சூடப்பட்டுள்ளன. இதில் வில்லியனூர் மாதா சொரூபமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பு இயற்கையாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. பக்தர்களின் தேவையை முன்னிட்டு தற்போது இங்கு அரைவட்ட வடிவில் இந்தியா விலேயே பெரிய பிரமாண்டமான புதிய ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலை 5-30 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. இதனைதொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் தேர்பவனி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. 10-ந்தேதி அன்று காலை 7-30 மணிக்கு புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7-30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. மறுநாள் காலை 6-30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல பங்குத்தந்தை ரிச்சர்ட் அடிகளார் தலைமையில் விழாக்குழு வினர், பங்குப்பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ குழுவினர் செய்துள்ளனர்.
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கென்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும். உலகிலேயே ஒரு சில சொரூபங்கள்தான் போப் ஆண்டவரால் முடி சூடப்பட்டுள்ளன. இதில் வில்லியனூர் மாதா சொரூபமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பு இயற்கையாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. பக்தர்களின் தேவையை முன்னிட்டு தற்போது இங்கு அரைவட்ட வடிவில் இந்தியா விலேயே பெரிய பிரமாண்டமான புதிய ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
எனக்கன்பானவர்களே! இப்பூமியில் நடந்த மூன்று மகாப்பெரிய சரித்திரப்பூர்வமான சம்பவங்கள் உண்டு.
1. உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் உன்னதமான பிறப்பு.
2. ஒவ்வொரு மனிதனையும் மீட்கும் பொருளாக தன்னைத்தானே சிலுவையில் ஜீவபலியாக ஒப்புக் கொடுத்து மரித்த சம்பவம்.
3. மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்று கூறி மரணத்திலிருந்து மூன்றாவது நாள் உயிரோடெழுந்த ஒப்பற்ற சம்பவம்.
இச்சம்பவங்கள் அனைத்தும் என்றென்றும் மாறாத, காலத்தால் அழிக்கப்படாத மகிமையான சம்பவங்கள் ஆகும்.
அன்பானவர்களே, இதில் ஒரு சம்பவம் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்காக, எனக்காக, சிலுவையில் தன்னைத்தானே ஜீவபலியாக அர்ப்பணித்தது ஆகும்.
அவர் ஜீவனுள்ள தெய்வமாயிருந்தார். அவரை எப்படி சிலுவையில் அறைந்து கொலை செய்ய முடியும்? என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.
உண்மையிலேயே அவரை ரோம சேவகர்கள் தங்கள் பெலத்தினால் அவரை கொலை செய்யவில்லை. உலகத்தின் மனுக் குலத்திற்காக தம்மைத் தாமே சிலுவையில் ஜீவபலியாக அர்ப்பணித்தார். அவருடைய மரணத்தினால் நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை தொடர்ந்து வாசியுங்கள்.
பாவங்களிலிருந்து விடுதலை
ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்றால் நம் ஒவ்வொருவருக்கும் பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே. வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’. ஏசா 53:5
தேவனுடைய பிள்ளையே! நம் அனைவருடைய பாவங்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார் என்று வேதம் கூறுகிறதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். மாத்திரமல்ல தேவன் அருளுகிற இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், சங்கீதத்தில் தாவீது ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன் என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன் தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ (சங் 32:5) என தெளிவாக கூறுகிறார்.
ஆகவே நாம் செய்கிற அனைத்து தேவன் விரும்பாத காரியங்களையும் கர்த்தருடைய சமூகத்தில் அறிக்கையிட வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்திலிருந்து விடுதலையை கர்த்தர் கட்டளையிடுவார்.
நோய்களிலிருந்து விடுதலை
‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’. மத் 8:17
ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற் காகவே. நம்முடைய சரீரத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு பெலவீனங்களையும் ஒவ்வொரு நோய்களையும் சிலுவையில் சுமந்து விட்டார் என வேதம் சொல்லுகிறது.
அப்படியானால் இனி நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலாவது நாம் விசுவாசிக்க வேண்டும். இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளே தீராத நோய்களும் பெலவீனங் களும் இருக்குமானால் கட்டாயம் ஆண்டவர் உங்களை சுகமாக்கி, உங்களுக்கு விடுதலைத் தரவல்லவராயிருக்கிறார்.
ஆனால் இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார் என்றும், அவர் சிந்தின விலையேறப்பெற்ற ரத்தம் என்னுடைய வியாதிகளைப் போக்கும் என்றும் மனதார நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது கட்டாயம் அவரது தெய்வீக சுகத்தை அனுபவிக்க முடியும்.
வாழ்நாளெல்லாம் வியாதியோடும், பெலவீனத்தோடும் இருப்பதுதான் தேவனுடைய சித்தம் என அநேகர் தவறான கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.
‘பிரியமானவனே, உன் ஆத்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’. (3 யோவான் 2)
மேற்கண்ட வசனத்தை கவனித்தீர்களா?. நாம் ஆரோக்கியமாகவும், சுகமாகவும் இருப்பதுதான் தேவனுடைய விருப்பம். இதை மனப்பூர்வமாக விசுவாசியுங்கள். மாத்திரமல்ல ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’ (ஏசா 53:5) என வேதம் தெளிவாகக் கூறுகிறது.
ஆகவே, எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சிலுவையில் சிந்தின தம்முடைய ரத்தத்தின் வல்லமையினால் பிசாசின் கிரியைகளை அழித்து தெய்வீக சுகத்தை கட்டாயம் இயேசு தருவார். ஏனெனில் அவர் இன்றும் ஜீவிக்கிறார்.
2. ஒவ்வொரு மனிதனையும் மீட்கும் பொருளாக தன்னைத்தானே சிலுவையில் ஜீவபலியாக ஒப்புக் கொடுத்து மரித்த சம்பவம்.
3. மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்று கூறி மரணத்திலிருந்து மூன்றாவது நாள் உயிரோடெழுந்த ஒப்பற்ற சம்பவம்.
இச்சம்பவங்கள் அனைத்தும் என்றென்றும் மாறாத, காலத்தால் அழிக்கப்படாத மகிமையான சம்பவங்கள் ஆகும்.
அன்பானவர்களே, இதில் ஒரு சம்பவம் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்காக, எனக்காக, சிலுவையில் தன்னைத்தானே ஜீவபலியாக அர்ப்பணித்தது ஆகும்.
அவர் ஜீவனுள்ள தெய்வமாயிருந்தார். அவரை எப்படி சிலுவையில் அறைந்து கொலை செய்ய முடியும்? என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.
உண்மையிலேயே அவரை ரோம சேவகர்கள் தங்கள் பெலத்தினால் அவரை கொலை செய்யவில்லை. உலகத்தின் மனுக் குலத்திற்காக தம்மைத் தாமே சிலுவையில் ஜீவபலியாக அர்ப்பணித்தார். அவருடைய மரணத்தினால் நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை தொடர்ந்து வாசியுங்கள்.
பாவங்களிலிருந்து விடுதலை
ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்றால் நம் ஒவ்வொருவருக்கும் பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே. வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’. ஏசா 53:5
தேவனுடைய பிள்ளையே! நம் அனைவருடைய பாவங்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார் என்று வேதம் கூறுகிறதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். மாத்திரமல்ல தேவன் அருளுகிற இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், சங்கீதத்தில் தாவீது ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன் என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன் தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ (சங் 32:5) என தெளிவாக கூறுகிறார்.
ஆகவே நாம் செய்கிற அனைத்து தேவன் விரும்பாத காரியங்களையும் கர்த்தருடைய சமூகத்தில் அறிக்கையிட வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்திலிருந்து விடுதலையை கர்த்தர் கட்டளையிடுவார்.
நோய்களிலிருந்து விடுதலை
‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’. மத் 8:17
ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற் காகவே. நம்முடைய சரீரத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு பெலவீனங்களையும் ஒவ்வொரு நோய்களையும் சிலுவையில் சுமந்து விட்டார் என வேதம் சொல்லுகிறது.
அப்படியானால் இனி நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலாவது நாம் விசுவாசிக்க வேண்டும். இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளே தீராத நோய்களும் பெலவீனங் களும் இருக்குமானால் கட்டாயம் ஆண்டவர் உங்களை சுகமாக்கி, உங்களுக்கு விடுதலைத் தரவல்லவராயிருக்கிறார்.
ஆனால் இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார் என்றும், அவர் சிந்தின விலையேறப்பெற்ற ரத்தம் என்னுடைய வியாதிகளைப் போக்கும் என்றும் மனதார நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது கட்டாயம் அவரது தெய்வீக சுகத்தை அனுபவிக்க முடியும்.
வாழ்நாளெல்லாம் வியாதியோடும், பெலவீனத்தோடும் இருப்பதுதான் தேவனுடைய சித்தம் என அநேகர் தவறான கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.
‘பிரியமானவனே, உன் ஆத்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’. (3 யோவான் 2)
மேற்கண்ட வசனத்தை கவனித்தீர்களா?. நாம் ஆரோக்கியமாகவும், சுகமாகவும் இருப்பதுதான் தேவனுடைய விருப்பம். இதை மனப்பூர்வமாக விசுவாசியுங்கள். மாத்திரமல்ல ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’ (ஏசா 53:5) என வேதம் தெளிவாகக் கூறுகிறது.
ஆகவே, எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சிலுவையில் சிந்தின தம்முடைய ரத்தத்தின் வல்லமையினால் பிசாசின் கிரியைகளை அழித்து தெய்வீக சுகத்தை கட்டாயம் இயேசு தருவார். ஏனெனில் அவர் இன்றும் ஜீவிக்கிறார்.






