என் மலர்
கிறித்தவம்
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் இந்த மாதத்துக்கான (ஆகஸ்டு) புதுமை இரவு வழிபாடு நடந்தது. இதில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதந்தோறும் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் இந்த வழிபாடு நடக்கிறது. இந்த மாதத்துக்கான (ஆகஸ்டு) புதுமை இரவு வழிபாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
புளியங்குடி உலக மீட்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
புளியங்குடி உலக மீட்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் உள்ள தூய ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் தூய ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.15 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார். ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். 11-ந் தேதி திருப்பலிக்கு எடிசன் தலைமை தாங்குகிறார். அந்தோணி பிச்சை மறையுரையாற்றுகிறார். 12-ந் தேதி மதன் தலைமையில் திருப்பலியும், ஸ்டீபன் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.
13-ந் தேதி அருட்பணியாளர் கிளாட்ஸ்டன் திருப்பலியும், சேம் மேத்யூ மறையுரையும் நிறைவேற்றுகிறார்கள். 14-ந் தேதி திருப்பலியை அருட்பணியாளர் அருளானந் நிறைவேற்றுகிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். 15-ந் தேதி மரியன்னையின் விண்ணேற்பு மற்றும் சுதந்திர தின சிறப்பு திருப்பலி பஸ்காலிஸ் தலைமையில் நடக்கிறது. இதனையடுத்து நெல்சன் மறையுரையாற்றுகிறார்.
16-ந் தேதி அருட்பணியாளர் அருள் தலைமையில் திருப்பலியும், செல்வராஜ் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.
17-ந் தேதி திருப்பலிக்கு அருள்சீலன் தலைமை தாங்குகிறார். ஸ்டேன்லி மறையுரையாற்றுகிறார். 18-ந் தேதி பெர்பெச்சுவல் தலைமையில் திருப்பலி நடக்க இருக்கிறது. டன்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். அதன் பிறகு இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்ல முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் மறையுரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் மற்றும் இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார். ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். 11-ந் தேதி திருப்பலிக்கு எடிசன் தலைமை தாங்குகிறார். அந்தோணி பிச்சை மறையுரையாற்றுகிறார். 12-ந் தேதி மதன் தலைமையில் திருப்பலியும், ஸ்டீபன் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.
13-ந் தேதி அருட்பணியாளர் கிளாட்ஸ்டன் திருப்பலியும், சேம் மேத்யூ மறையுரையும் நிறைவேற்றுகிறார்கள். 14-ந் தேதி திருப்பலியை அருட்பணியாளர் அருளானந் நிறைவேற்றுகிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். 15-ந் தேதி மரியன்னையின் விண்ணேற்பு மற்றும் சுதந்திர தின சிறப்பு திருப்பலி பஸ்காலிஸ் தலைமையில் நடக்கிறது. இதனையடுத்து நெல்சன் மறையுரையாற்றுகிறார்.
16-ந் தேதி அருட்பணியாளர் அருள் தலைமையில் திருப்பலியும், செல்வராஜ் தலைமையில் மறையுரையும் நடக்கிறது.
17-ந் தேதி திருப்பலிக்கு அருள்சீலன் தலைமை தாங்குகிறார். ஸ்டேன்லி மறையுரையாற்றுகிறார். 18-ந் தேதி பெர்பெச்சுவல் தலைமையில் திருப்பலி நடக்க இருக்கிறது. டன்ஸ்டன் மறையுரையாற்றுகிறார். அதன் பிறகு இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் திருப்பலிக்கு ஆயர் இல்ல முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் மறையுரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் மற்றும் இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயத்தின் 215-வது ஆண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருக்கொடி பவனியாக கொண்டு வரப்பட்டது. வடக்கன்குளம் பாதிரியார் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெரால்டுரவி, காவல்கிணறு மிக்கேல் மகிழன், ஜேம்ஸ், கலைச்செல்வன், மகிழன், கிங்ஸ்டன், சூசைமணி, கிளைட்டன் உள்பட பாதிரியார்கள், இறை மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
விழா வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 12 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு ஜெபமாலையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு பாதிரியார் செல்வராயர் தலைமையில் திருமுழுக்கு திருப்பலியும், 8-ம் திருநாளான 13-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு திசையன்விளை பாதிரியார் பன்னீர்செல்வம் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு முதன்மை செயலர் நார்பர்ட் தாமஸ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது.
14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காவல்கிணறு பாதிரியார் மகிழன் தலைமையில் திருப்பலி, 9 மணிக்கு ஜான் பிரிட்டோ தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
15-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் மின்னொளியில் அன்னையின் தேர் பவனி நடக்கிறது. காலை 5 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 6.45 மணிக்கு மலையாள திருப்பலி, 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடு தேரில் வைத்து நடைபெறும்.
விழா வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 12 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு ஜெபமாலையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு பாதிரியார் செல்வராயர் தலைமையில் திருமுழுக்கு திருப்பலியும், 8-ம் திருநாளான 13-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு திசையன்விளை பாதிரியார் பன்னீர்செல்வம் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு முதன்மை செயலர் நார்பர்ட் தாமஸ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது.
14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காவல்கிணறு பாதிரியார் மகிழன் தலைமையில் திருப்பலி, 9 மணிக்கு ஜான் பிரிட்டோ தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
15-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் மின்னொளியில் அன்னையின் தேர் பவனி நடக்கிறது. காலை 5 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 6.45 மணிக்கு மலையாள திருப்பலி, 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடு தேரில் வைத்து நடைபெறும்.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. முன்னதாக நற்கருணை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
6-ம் திருநாளான 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு நடக்கிறது. 7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. 9-ம் திருநாளான 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
10-ம் திருநாளான 15-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் தேரடி திருப்பலி நடக்கிறது.
தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெறும். பின்னர் காலை முதல் மாலை வரையிலும் தொடர் திருப்பலிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது.
மதுரை மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. முன்னதாக நற்கருணை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
6-ம் திருநாளான 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு நடக்கிறது. 7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. 9-ம் திருநாளான 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
10-ம் திருநாளான 15-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் தேரடி திருப்பலி நடக்கிறது.
தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெறும். பின்னர் காலை முதல் மாலை வரையிலும் தொடர் திருப்பலிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது.
தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமய மாதா ஆலய சப்பர பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பனிமயமாதா ஆலயத்தின் 436-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன. கடந்த 29-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பிஷப் நசரேன் சூசை தலைமையில் 2-ம் திருப்பலியும் நடந்தது. காலை 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. 10 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது.
இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது கூடியிருந்த திரளான மக்கள் ‘மரியே வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
பனிமயமாதா ஆலய சப்பர பவனியையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாவட்ட போலீசார் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் சாதாரண உடையில் பணியில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதாவை வழிபட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆலய உபகாரிகள் மற்றும் திருவிழா நன்கொடையாளர்களுக்கான முதல் திருப்பலி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.
விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன. கடந்த 29-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பிஷப் நசரேன் சூசை தலைமையில் 2-ம் திருப்பலியும் நடந்தது. காலை 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. 10 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது.
இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது கூடியிருந்த திரளான மக்கள் ‘மரியே வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
பனிமயமாதா ஆலய சப்பர பவனியையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாவட்ட போலீசார் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் சாதாரண உடையில் பணியில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதாவை வழிபட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆலய உபகாரிகள் மற்றும் திருவிழா நன்கொடையாளர்களுக்கான முதல் திருப்பலி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னை ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடந்தது.
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னை ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 133-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. மதுரை மறை மாநிலம் அருட்தந்தை ஆனந்தம் மறையுரை வழங்கினார்.
10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருநாள் காலையில் வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கோட்டாறு மறை மாவட்ட இளைஞர் இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரை வழங்கினார். 9-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனி நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் பங்குத்தந்தை ஜோசப் இசிதோர் மறையுரை வழங்கினார்.
நேற்று தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குந்தந்தை ஜாண்சன்ராஜ், உதவி பங்கு தந்தை கலைச்செல்வன், தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. மதுரை மறை மாநிலம் அருட்தந்தை ஆனந்தம் மறையுரை வழங்கினார்.
10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருநாள் காலையில் வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கோட்டாறு மறை மாவட்ட இளைஞர் இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரை வழங்கினார். 9-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனி நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் பங்குத்தந்தை ஜோசப் இசிதோர் மறையுரை வழங்கினார்.
நேற்று தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குந்தந்தை ஜாண்சன்ராஜ், உதவி பங்கு தந்தை கலைச்செல்வன், தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.
இமயமாகும் இறைநம்பிக்கையை உள்ளத்தில் வைத்து புதைக்காமல், செயல் வடிவத்தில் உலாவ விடுங்கள், வாழ்வு வளமாகும் பிறருக்கும், நமக்கும்.
நம்முடைய சமுதாயத்தின் அடிப்படை சக்தி நம்பிக்கை. இந்த சக்தியை எதன் மீது விரயம் செய்கிறோம் என்பதில் தான் நாம் செழிப்படைவதும், செல்லாக்காசாவதும் இருக்கிறது. எதன் மீது நம் நம்பிக்கை இருக்க வேண்டும்? யாரை சார்ந்து நம் வாழ்வு இருக்க வேண்டுமென்பதை இன்றைய எரோமியாவின் இறைவார்த்தைகள் புலப்படுத்துகின்றன. மனிதரில் நம்பிக்கை வைப்பதை தவிர்க்க வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்கள் நீரோடை அருகில் நடப்பட்ட செழித்து கனி தரும் மரம் போலவும், மனிதரில் நம்பிக்கை வைப்போர் பாலை நிலத்தில் நடப்பட்ட உலர்ந்த மரம் போலவும் ஆவர் என்றும் தெரியப்படுத்துகிறார் இறைவன்.
ஆகவே! நாம் பெற போகின்ற தீர்ப்பு, நமது செயல் சார்ந்தவையாக தான் இருக்கும். இறைவன் நம் உள்ளத்தை ஊடுருவி பார்ப்பவர். அவரிடம் மறைத்து, எதையும் நம்மால் செய்ய முடியாது. இதனால் தான் இறைவன் நம் இதயங்களை சோதித்தறிவது போல நாம் இத்தவக்காலத்தில் நம் இதயத்தை சோதித்தறிந்து இருளிலிருந்து ஒளிமயமான வாழ்விற்கு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இத்தகைய செயல் வடிவம் பெறுகின்ற இறைநம்பிக்கை எப்படி இருக்கும்? இருக்க வேண்டுமென்பதை லாசர், பணக்காரர் கதை வழியாக நமக்கு விளக்குகிறார். ஏழைகளுக்கு உதவுவது நம் எல்லோருடைய கடன் அல்லது கடமை என்பதை இந்த கதை உணர்த்துகின்றது. ஏசுவின் காலத்திற்கு மட்டும் பொருந்திய கதையல்ல, நம் லாசருடைய கதை. இன்று நாம் காணும் சமுதாயத்தின் அவல நிலையை சுட்டிக் காட்டும், நீதியின் அளவு கோலாகவும், இக்கதை நமக்கு பாடம் புகட்டுகின்றது.
இன்றும் உணவின்றி, உடையின்றி நிற்கும் கூட்டம் ஒரு புறம். தேவைக்கு மிஞ்சியவற்றை குப்பையில் வீசும் கூட்டம் மறுபுறம். இந்த சவாலை சமாளிப்பதே இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்த உதவும் சூழ்நிலை. இமயமாகும் இறைநம்பிக்கையை உள்ளத்தில் வைத்து புதைக்காமல், செயல் வடிவத்தில் உலாவ விடுங்கள், வாழ்வு வளமாகும் பிறருக்கும், நமக்கும்.
- கிருபாகரன், மறைப்பணி நிலையம், கும்பகோணம்.
ஆகவே! நாம் பெற போகின்ற தீர்ப்பு, நமது செயல் சார்ந்தவையாக தான் இருக்கும். இறைவன் நம் உள்ளத்தை ஊடுருவி பார்ப்பவர். அவரிடம் மறைத்து, எதையும் நம்மால் செய்ய முடியாது. இதனால் தான் இறைவன் நம் இதயங்களை சோதித்தறிவது போல நாம் இத்தவக்காலத்தில் நம் இதயத்தை சோதித்தறிந்து இருளிலிருந்து ஒளிமயமான வாழ்விற்கு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இத்தகைய செயல் வடிவம் பெறுகின்ற இறைநம்பிக்கை எப்படி இருக்கும்? இருக்க வேண்டுமென்பதை லாசர், பணக்காரர் கதை வழியாக நமக்கு விளக்குகிறார். ஏழைகளுக்கு உதவுவது நம் எல்லோருடைய கடன் அல்லது கடமை என்பதை இந்த கதை உணர்த்துகின்றது. ஏசுவின் காலத்திற்கு மட்டும் பொருந்திய கதையல்ல, நம் லாசருடைய கதை. இன்று நாம் காணும் சமுதாயத்தின் அவல நிலையை சுட்டிக் காட்டும், நீதியின் அளவு கோலாகவும், இக்கதை நமக்கு பாடம் புகட்டுகின்றது.
இன்றும் உணவின்றி, உடையின்றி நிற்கும் கூட்டம் ஒரு புறம். தேவைக்கு மிஞ்சியவற்றை குப்பையில் வீசும் கூட்டம் மறுபுறம். இந்த சவாலை சமாளிப்பதே இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்த உதவும் சூழ்நிலை. இமயமாகும் இறைநம்பிக்கையை உள்ளத்தில் வைத்து புதைக்காமல், செயல் வடிவத்தில் உலாவ விடுங்கள், வாழ்வு வளமாகும் பிறருக்கும், நமக்கும்.
- கிருபாகரன், மறைப்பணி நிலையம், கும்பகோணம்.
“கடவுளோடு கடவுளாய் இருந்த வாக்கு மனிதராகி, நமக்காக சிலுவையில் இறந்து உயிர்த்தார்” என்பதே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை நம்பிக்கை.
“கடவுளோடு கடவுளாய் இருந்த வாக்கு மனிதராகி, நமக்காக சிலுவையில் இறந்து உயிர்த்தார்” என்பதே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை நம்பிக்கை.
கடவுளின் வாக்கே இவ்வுலகில் மனிதராக பிறந்து நம்மோடு வாழ்ந்ததால் அவரை ‘இறைமகன்’ என்று அழைக்கிறோம். தமது இறைத்தன்மையை இழக்காமல் மனிதராக தோன்றிய இயேசு, தம்மைப் பற்றி சீடர்களிடம் பேசிய நேரங்களில் ‘மானிட மகன்’ (மனுஷ குமாரன்) என்று குறிப்பிட்டார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.
அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.
ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.
இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.
தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.
இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.
நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.
மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.
இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.
இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).
மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.
மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.
இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.
டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
கடவுளின் வாக்கே இவ்வுலகில் மனிதராக பிறந்து நம்மோடு வாழ்ந்ததால் அவரை ‘இறைமகன்’ என்று அழைக்கிறோம். தமது இறைத்தன்மையை இழக்காமல் மனிதராக தோன்றிய இயேசு, தம்மைப் பற்றி சீடர்களிடம் பேசிய நேரங்களில் ‘மானிட மகன்’ (மனுஷ குமாரன்) என்று குறிப்பிட்டார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.
அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.
ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.
இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.
தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.
இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.
நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.
மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.
இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.
இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).
மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.
மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.
இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.
டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.
உலகைப் படைத்தவர் இறைவன். உயிர்களைப் படைத்தவர் இறைவன். பயிர்களைப் படைத்தவர் இறைவன்.
அவரன்றி எதுவும் உருவாகவில்லை என்பதே விவிலியம் சொல்லும் பாடம். படைத்தவருக்கு எப்போதும் முதலிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த விழா வலியுறுத்தும் பாடம்.
முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.
“அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின் வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.
ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக் காலில், பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப்பழ ரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணி க்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது.
இந்த விழாவுக்கான விதிமுறை களாக இறைவன் கொடுத்தவை இது. அதை இஸ்ரவேல் மக்கள் தவறாமல் நிறைவேற்றி வந்தார் கள். நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15-ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16-ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடினார்கள் இஸ்ரே வலர்கள்.
எகிப்தியரின் அடிமைத்தனத் திலிருந்து மீண்ட அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பிறகே இந்த விழா ஆரம்பமாகிறது. அலைந்து திரிந்த காலத்தில் அவர்கள் பயிர் செய்ய இயலாது என்பதே அதன் காரணம்.
இறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதால் அல்ல. இறைவன் நம் வாழ்வின் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதால்.
இந்த விழாவும் இறைமகன் இயேசுவை குறிப்பிடுகின்ற விழாவாகவே அமைந்திருக்கிறது. ‘முதற்பயன்’ என்பது இறைமகன் இயேசுவைக் குறிக்கிறது. அவர் தந்தையின் தலைமகன். அவர் மரணமடைந்து உயிர்த்த முதல் மனிதர்.
“இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 15:20)” எனும் இறைவார்த்தை அதை நமக்கு புரிய வைக்கிறது.
அந்தக்காலத்தில் விளைந்த முக்கிய தானியமான பார்லி இறைவனின் முன்பு வருகின்ற முதல் தானியமாக இருந்தது. ஏழைகளின் தானியமான பார்லி இயேசுவைக் குறிக்கிறது.
இறைமகன் இயேசு ஏழையிலும் ஏழையாய் வந்தவர். விண்ணகத்தில் கடவுளாக இருந்தவர், பூமியில் அனைத்தையும் துறந்து எளிமையாய் வந்தார். பணிவு எனும் குணத்திலும் அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டவராய் இருந்தார்.
பார்லியானது ஆலயத்தில் அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, கடைசியில் அதிலிருந்து மாவு பெறப்படும். பெறப்படும் மாவு தூய்மையானதாய் இருக்கும். அதை குரு பலியாய் செலுத்துவார்.
இறைமகன் இயேசுவும் அடிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார், ஆனாலும் தூய்மை விலகாமல் இருந்தார். கடைசியில் அவர் பலியாய் மாறினார்.
உயிர்த்த இயேசுவை மகதலேன் மரியா அன்பினால் தொட முயல்கிறார். அப்போது இயேசு, ‘என்னை தொடாதே, நான் இன்னும் தந்தையிடம் செல்லவில்லை’ என்றார். அதன் பின் விண்ணகம் சென்று தந்தையை சந்தித்தார். தந்தையை அடைந்த முதல் உயிர்ப்பு, இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். அவரே நமக்கெல்லாம் முதல் சகோதரராய் இருக்கிறார்.
“இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர், தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்” எனும் திருவெளிப்பாடு வசனமும் இதை தெளிவாக்குகிறது.
இப்படி இறைமகன் இயேசுவின் வாழ்க்கை முதற்பலன் பண்டிகையோடு பின்னிப் பிணைந்ததாய் மாறிவிடுகிறது.
இன்றைய சூழலில் நாம் இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும். இறைமகன் இயேசு ஏற்கனவே பூமியில் பிறந்து, வாழ்ந்து போதித்து, இறந்து, உயிர்த்து நம்மை மீட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் இந்த முதற்பலன் விழா புதிய பரிமாணம் பெறுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, முதலிடத்தை எப்போதும் இறைவனுக்கே வழங்கு, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கே மரியாதை செலுத்து, என்பது போன்ற சிந்தனைகளே இந்த முதற்பலன் விழாவின் அடிப்படையாய் இன்றைக்கு இருக்கிறது.
நமது வாழ்வும், நமது வளமும் இறைவன் நமக்குத் தந்தவை என்பதை உணரும் போது அதை அவருக்கே சமர்ப்பிப்பதில் சஞ்சலம் இருக்காது.
“வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும், பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் இயேசு.
அந்த இறைவனிடம் நம்மை ஒப்படைப்பதில் இந்த விழா முழுமையடைகிறது.
அவரன்றி எதுவும் உருவாகவில்லை என்பதே விவிலியம் சொல்லும் பாடம். படைத்தவருக்கு எப்போதும் முதலிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த விழா வலியுறுத்தும் பாடம்.
முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.
“அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின் வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.
ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக் காலில், பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப்பழ ரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணி க்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது.
இந்த விழாவுக்கான விதிமுறை களாக இறைவன் கொடுத்தவை இது. அதை இஸ்ரவேல் மக்கள் தவறாமல் நிறைவேற்றி வந்தார் கள். நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15-ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16-ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடினார்கள் இஸ்ரே வலர்கள்.
எகிப்தியரின் அடிமைத்தனத் திலிருந்து மீண்ட அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பிறகே இந்த விழா ஆரம்பமாகிறது. அலைந்து திரிந்த காலத்தில் அவர்கள் பயிர் செய்ய இயலாது என்பதே அதன் காரணம்.
இறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதால் அல்ல. இறைவன் நம் வாழ்வின் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதால்.
இந்த விழாவும் இறைமகன் இயேசுவை குறிப்பிடுகின்ற விழாவாகவே அமைந்திருக்கிறது. ‘முதற்பயன்’ என்பது இறைமகன் இயேசுவைக் குறிக்கிறது. அவர் தந்தையின் தலைமகன். அவர் மரணமடைந்து உயிர்த்த முதல் மனிதர்.
“இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 15:20)” எனும் இறைவார்த்தை அதை நமக்கு புரிய வைக்கிறது.
அந்தக்காலத்தில் விளைந்த முக்கிய தானியமான பார்லி இறைவனின் முன்பு வருகின்ற முதல் தானியமாக இருந்தது. ஏழைகளின் தானியமான பார்லி இயேசுவைக் குறிக்கிறது.
இறைமகன் இயேசு ஏழையிலும் ஏழையாய் வந்தவர். விண்ணகத்தில் கடவுளாக இருந்தவர், பூமியில் அனைத்தையும் துறந்து எளிமையாய் வந்தார். பணிவு எனும் குணத்திலும் அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டவராய் இருந்தார்.
பார்லியானது ஆலயத்தில் அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, கடைசியில் அதிலிருந்து மாவு பெறப்படும். பெறப்படும் மாவு தூய்மையானதாய் இருக்கும். அதை குரு பலியாய் செலுத்துவார்.
இறைமகன் இயேசுவும் அடிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார், ஆனாலும் தூய்மை விலகாமல் இருந்தார். கடைசியில் அவர் பலியாய் மாறினார்.
உயிர்த்த இயேசுவை மகதலேன் மரியா அன்பினால் தொட முயல்கிறார். அப்போது இயேசு, ‘என்னை தொடாதே, நான் இன்னும் தந்தையிடம் செல்லவில்லை’ என்றார். அதன் பின் விண்ணகம் சென்று தந்தையை சந்தித்தார். தந்தையை அடைந்த முதல் உயிர்ப்பு, இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். அவரே நமக்கெல்லாம் முதல் சகோதரராய் இருக்கிறார்.
“இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர், தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்” எனும் திருவெளிப்பாடு வசனமும் இதை தெளிவாக்குகிறது.
இப்படி இறைமகன் இயேசுவின் வாழ்க்கை முதற்பலன் பண்டிகையோடு பின்னிப் பிணைந்ததாய் மாறிவிடுகிறது.
இன்றைய சூழலில் நாம் இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும். இறைமகன் இயேசு ஏற்கனவே பூமியில் பிறந்து, வாழ்ந்து போதித்து, இறந்து, உயிர்த்து நம்மை மீட்டுக்கொண்டார். அந்த அடிப்படையில் இந்த முதற்பலன் விழா புதிய பரிமாணம் பெறுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, முதலிடத்தை எப்போதும் இறைவனுக்கே வழங்கு, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கே மரியாதை செலுத்து, என்பது போன்ற சிந்தனைகளே இந்த முதற்பலன் விழாவின் அடிப்படையாய் இன்றைக்கு இருக்கிறது.
நமது வாழ்வும், நமது வளமும் இறைவன் நமக்குத் தந்தவை என்பதை உணரும் போது அதை அவருக்கே சமர்ப்பிப்பதில் சஞ்சலம் இருக்காது.
“வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும், பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் இயேசு.
அந்த இறைவனிடம் நம்மை ஒப்படைப்பதில் இந்த விழா முழுமையடைகிறது.
இறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர்.
இறைவனுக்கு உகந்த மக்களாக, பிள்ளைகளாக வாழ் வதற்கு நம்மை தகுதியாக்கி கொள்ள இறைவன், மோசே வழியாக கொடுத்த சட்டங்களும், முறைகளும், நியமங்களும் தான் அடிப்படை தேவைகள். அன்றில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ சமூகம், இஸ்ரேல் மக்களை மாதிரியாக கொண்டே அதன் தலைவரை பின்பற்றுகின்றது.
இறைவாக்கினர் கூற்று இறைவனின் கூற்று என்பதை அன்றைய திருச்சபையும், இன்றைய திருச்சபையும் உணர்ந்து உள்வாங்கி செயல்படுகின்றது. இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் புதிய இனமாக, புதிய மக்களாக, இறைவனோடு வாழ, மோசேயின் சட்டங்கள் உதவி செய்தன. இப்்போது நமது திருச்சபையில் திருத்தந்தையின் அறிவுரைகளும், திருத்தங்களும், நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ வழிவகை செய்கிறது.
இறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர். இஸ்ரேல் மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும், பின்னி ஒன்றிணைந்து வாழ்ந்த இறைவன், இன்று நம்முடனும், நமது திருச்சபையுடனும் ஒன்றித்து வாழ்கிறார். இறைவன் நம் அருகில் உள்ளார் என்கிற தெய்வபயம,் நமக்கு அவரின் சட்டங்களை கடைப்பிடிக்க உதவி செய்யும்.
இயேசு கிறிஸ்துவே! இந்த சட்டங்கள், நியமங்கள், அனைத்தின் முழுமை என்று நற்செய்தியில் சான்று அளிக்கிறார். அவரை பின்பற்றுவதே, சட்டம் அனைத்தையும் பின்பற்றுவது ஆகும். இந்த சட்டங்களையும், நியமங்களையும் நிறைவேற்ற, ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது. சுதந்திரம் என்பது விரும்பிய எதையும் செய்வதன்று.
விரும்பியதெல்லாம் செய்வது சுதந்திரம் அல்ல. அது கட்டுப்பாடற்ற தன்மையாகும். சட்டங்கள் அனைத்தையும் உதறிதள்ளுவது உண்மையான சுதந்திரம் அல்ல. மாறாக சின்னஞ் சிறு கட்டளைகள் ஒவ்வொன்றையும,் இயேசுவின் பெயரால் கடைபிடித்து அன்போடு வாழ்வது தான் உண்மையான சுதந்திரம். அன்பிற்காக சட்டங்களுக்கு அடிமையாய் இருப்பதில் தவறில்லை.
கிருபாகரன்,மறைப்பணி நிலையம், குடந்தை.
இறைவாக்கினர் கூற்று இறைவனின் கூற்று என்பதை அன்றைய திருச்சபையும், இன்றைய திருச்சபையும் உணர்ந்து உள்வாங்கி செயல்படுகின்றது. இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் புதிய இனமாக, புதிய மக்களாக, இறைவனோடு வாழ, மோசேயின் சட்டங்கள் உதவி செய்தன. இப்்போது நமது திருச்சபையில் திருத்தந்தையின் அறிவுரைகளும், திருத்தங்களும், நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ வழிவகை செய்கிறது.
இறைவன் கொடுக்கும் எந்த ஒரு சட்டத்தையும், கூர்ந்து கவனிக்க வேண்டும். அச்சட்டத்தின் படி நடக்க வேண்டும். இவ்வாறு இருப்பவர்களே இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்பர். இஸ்ரேல் மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும், பின்னி ஒன்றிணைந்து வாழ்ந்த இறைவன், இன்று நம்முடனும், நமது திருச்சபையுடனும் ஒன்றித்து வாழ்கிறார். இறைவன் நம் அருகில் உள்ளார் என்கிற தெய்வபயம,் நமக்கு அவரின் சட்டங்களை கடைப்பிடிக்க உதவி செய்யும்.
இயேசு கிறிஸ்துவே! இந்த சட்டங்கள், நியமங்கள், அனைத்தின் முழுமை என்று நற்செய்தியில் சான்று அளிக்கிறார். அவரை பின்பற்றுவதே, சட்டம் அனைத்தையும் பின்பற்றுவது ஆகும். இந்த சட்டங்களையும், நியமங்களையும் நிறைவேற்ற, ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் தரப்படுகின்றது. சுதந்திரம் என்பது விரும்பிய எதையும் செய்வதன்று.
விரும்பியதெல்லாம் செய்வது சுதந்திரம் அல்ல. அது கட்டுப்பாடற்ற தன்மையாகும். சட்டங்கள் அனைத்தையும் உதறிதள்ளுவது உண்மையான சுதந்திரம் அல்ல. மாறாக சின்னஞ் சிறு கட்டளைகள் ஒவ்வொன்றையும,் இயேசுவின் பெயரால் கடைபிடித்து அன்போடு வாழ்வது தான் உண்மையான சுதந்திரம். அன்பிற்காக சட்டங்களுக்கு அடிமையாய் இருப்பதில் தவறில்லை.
கிருபாகரன்,மறைப்பணி நிலையம், குடந்தை.
நிலையற்ற சோதனைகள் வரும்போது நாம் நிலையான தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது சோதனைகளைத் தாண்டும் வலிமை கிடைக்கும்.
பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான மன்னன் தாவீது. அவரது வம்சா வழியில் வந்தவர் தான் இறைமகன் இயேசு.
‘தாவீது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது.
ஆனால் அவரது உயிரைப் பறிக்க சவுல் வீரமாய் முயன்றார். காரணம் சவுல் மன்னனை விட தாவீது அதிகம் புகழ் பெற்றது தான்.
பொறாமை அவருக்குள் தீய எண்ணங்களை விதைத்தது.
“...எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற ரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” (1 சாமுவேல் 19:5) என சவுலிடம் அறிவுரை கூறுகின்றனர்.
புதிய ஏற்பாட்டில் அவரது வழியில் வந்த மீட்பர் இயேசு கிறிஸ்து குற்றமற்றவர். ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
பிலாத்து அதிகாரம் பொருந்திய தலைவராக அங்கே நிற்கிறார். இயேசுவை விடுவிக்கவும், கொல்லவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
ஆனால் அவரோ தனது ‘கைகளைக் கழுவி’, ‘எனக்கு இந்த ரத்தத்தோடு பங்கில்லை’ என கூறுகிறார். கை கழுவுவது மிக எளிது. ஆனால், ரத்தப்பழி அவர் மீது விழாமல் இருக்க முடியாது.
தனது பதினாறாம் வயதில் அரசராய் அமர்ந்து, பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செலுத்திய தாவீதைக் கொல்ல இருபத்தோரு முயற்சிகள் நடந்தன. எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தன்னைக் காத்துக்கொள்ள அவர் அலைந்து திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சூழ்ச்சி, ரத்தப்பழியைக் கொண்டு வரும்.
வீழ்ச்சி, அதன் விளைவாக வரும்.
சவுலின் வாழ்வில் இருந்த சூழ்ச்சி பொறாமை, சோதனை அனைவருக்கும் பொதுவானது. அதில் யாரும் தப்ப முடியாது. சவுலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. தாவீதின் வளர்ச்சி அவருக்குள் பொறாமையை விதைத்தது.
தனது சாயலாய் படைக்கப்பட்ட முதல் மனிதனாலேயே சோதனையை தாண்ட முடியவில்லை. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைத் தின்றனர்.
ஆபிரகாமும் லோத்தும் பயணித்த போது லோத்தின் முன்னால் நின்ற சோதனை நல்ல செழிப்பான நாட்டை நான் எடுத்துக் கொள்வதா? அல்லது அதை ஆபிரகாமுக்கு விட்டுக் கொடுப்பதா? என்பது. சோதனையில் லோத்து விழுந்து விட்டார்.
யாக்கோபு, ஏசா வாழ்வில் பசி சோதனையாய் வருகிறது, அதில் வீழ்கிறார் ஏசா. உணவுக்காய் தலைமகன் உரிமையை இழக்கிறார்.
சவுலும் விதிவிலக்கல்ல, அவரும் சோதனைக்குள் விழுந்து விடுகிறார்.
கடவுள், சாத்தான் எனும் இரண்டு துருவங்களைப் பற்றிப் பார்க்கும் போது, சாத்தான் கடவுளை வெற்றி கொள்ள நினைக்கிறான். ஆதாம் ஏவாள் எனும் குற்றமற்ற தூய படைப்பு, குற்றமாய் மாறிப்போகிறது. சோதனையை அவர்கள் வெற்றி கொள்ளாததால் வீழ்ச்சியே விளைவாகிறது.
சோதனையில் விழும்போது பல விளைவுகள் தோன்றுகின்றன.
1. இறைவனுக்கு முன்னால் நிற்க முடியாத அளவுக்கு எழுகின்ற வெட்கம். தகுதியற்ற நிலை.
2. உள்ளுக்குள் எழுகின்ற பயம். ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிகின்றனர்.
3. குழப்பங்களும் குற்றச்சாட்டுகளும். ஆதாம் ஏவாளைப் பழி சொல்ல, ஏவாள் பாம்பைப் பழி சொல்ல, எல்லோரும் அடுத்தடுத்து வழுக்குகின்றனர்.
4. வேதனைகள். அந்த பாவத்தின் விளைவாக இறைவனை விட்டு விலக வேண்டிய சூழல். அது வேதனைகளை விளைவிக்கிறது.
5. இறைவனால் வரமாய் கிடைத்தவை விலக்கப்பட, வியர்வையால் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலை.
6. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த அன்னியோன்யமான உறவு முறிகிறது. சக மனிதனோடு இருந்த உறவும் உடைகிறது.
சோதனையிலிருந்து மனிதன் தப்ப முடியாது, ஆனால் எதிர்க்க முடியும். அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்?
“நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை. நான் எதையும் ஏற்றுக்கொள்வேன்” என்று சொன்ன எலிசா சோதனையைத் தாண்டினார்.
“உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்” என அன்பளிப்பை மறுத்த ஆபிரகாம் சோதனையைத் தாண்டினார்.
“நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?” என சொன்ன யோபு சோதனையைத் தாண்டினார்.
“திராட்சை ரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது” என்று முடிவெடுத்த தானியேல் சோதனையைத் தாண்டினார்.
சோதனைகள் என்பவை நிலையானவை அல்ல.
இறைமகன் தரும் மீட்பே நிலையானது.
அழகு, செல்வம், பெருமை, சுயநலம், பொறாமை என பல சோதனைகள் நம் வாழ்வில் வரலாம். சோதனைகள் நிலையற்றவை. நிலையற்ற சோதனைகள் வரும்போது நாம் நிலையான தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது சோதனைகளைத் தாண்டும் வலிமை கிடைக்கும்.
அருட்பணி,
வெலிங்டன் ஜேசுதாஸ்
‘தாவீது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது.
ஆனால் அவரது உயிரைப் பறிக்க சவுல் வீரமாய் முயன்றார். காரணம் சவுல் மன்னனை விட தாவீது அதிகம் புகழ் பெற்றது தான்.
பொறாமை அவருக்குள் தீய எண்ணங்களை விதைத்தது.
“...எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற ரத்தத்திற்கு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்?” (1 சாமுவேல் 19:5) என சவுலிடம் அறிவுரை கூறுகின்றனர்.
புதிய ஏற்பாட்டில் அவரது வழியில் வந்த மீட்பர் இயேசு கிறிஸ்து குற்றமற்றவர். ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
பிலாத்து அதிகாரம் பொருந்திய தலைவராக அங்கே நிற்கிறார். இயேசுவை விடுவிக்கவும், கொல்லவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
ஆனால் அவரோ தனது ‘கைகளைக் கழுவி’, ‘எனக்கு இந்த ரத்தத்தோடு பங்கில்லை’ என கூறுகிறார். கை கழுவுவது மிக எளிது. ஆனால், ரத்தப்பழி அவர் மீது விழாமல் இருக்க முடியாது.
தனது பதினாறாம் வயதில் அரசராய் அமர்ந்து, பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செலுத்திய தாவீதைக் கொல்ல இருபத்தோரு முயற்சிகள் நடந்தன. எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தன்னைக் காத்துக்கொள்ள அவர் அலைந்து திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சூழ்ச்சி, ரத்தப்பழியைக் கொண்டு வரும்.
வீழ்ச்சி, அதன் விளைவாக வரும்.
சவுலின் வாழ்வில் இருந்த சூழ்ச்சி பொறாமை, சோதனை அனைவருக்கும் பொதுவானது. அதில் யாரும் தப்ப முடியாது. சவுலும் அதற்கு விதிவிலக்கு அல்ல. தாவீதின் வளர்ச்சி அவருக்குள் பொறாமையை விதைத்தது.
தனது சாயலாய் படைக்கப்பட்ட முதல் மனிதனாலேயே சோதனையை தாண்ட முடியவில்லை. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைத் தின்றனர்.
ஆபிரகாமும் லோத்தும் பயணித்த போது லோத்தின் முன்னால் நின்ற சோதனை நல்ல செழிப்பான நாட்டை நான் எடுத்துக் கொள்வதா? அல்லது அதை ஆபிரகாமுக்கு விட்டுக் கொடுப்பதா? என்பது. சோதனையில் லோத்து விழுந்து விட்டார்.
யாக்கோபு, ஏசா வாழ்வில் பசி சோதனையாய் வருகிறது, அதில் வீழ்கிறார் ஏசா. உணவுக்காய் தலைமகன் உரிமையை இழக்கிறார்.
சவுலும் விதிவிலக்கல்ல, அவரும் சோதனைக்குள் விழுந்து விடுகிறார்.
கடவுள், சாத்தான் எனும் இரண்டு துருவங்களைப் பற்றிப் பார்க்கும் போது, சாத்தான் கடவுளை வெற்றி கொள்ள நினைக்கிறான். ஆதாம் ஏவாள் எனும் குற்றமற்ற தூய படைப்பு, குற்றமாய் மாறிப்போகிறது. சோதனையை அவர்கள் வெற்றி கொள்ளாததால் வீழ்ச்சியே விளைவாகிறது.
சோதனையில் விழும்போது பல விளைவுகள் தோன்றுகின்றன.
1. இறைவனுக்கு முன்னால் நிற்க முடியாத அளவுக்கு எழுகின்ற வெட்கம். தகுதியற்ற நிலை.
2. உள்ளுக்குள் எழுகின்ற பயம். ஆதாமும் ஏவாளும் ஓடி ஒளிகின்றனர்.
3. குழப்பங்களும் குற்றச்சாட்டுகளும். ஆதாம் ஏவாளைப் பழி சொல்ல, ஏவாள் பாம்பைப் பழி சொல்ல, எல்லோரும் அடுத்தடுத்து வழுக்குகின்றனர்.
4. வேதனைகள். அந்த பாவத்தின் விளைவாக இறைவனை விட்டு விலக வேண்டிய சூழல். அது வேதனைகளை விளைவிக்கிறது.
5. இறைவனால் வரமாய் கிடைத்தவை விலக்கப்பட, வியர்வையால் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலை.
6. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த அன்னியோன்யமான உறவு முறிகிறது. சக மனிதனோடு இருந்த உறவும் உடைகிறது.
சோதனையிலிருந்து மனிதன் தப்ப முடியாது, ஆனால் எதிர்க்க முடியும். அதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்?
“நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை. நான் எதையும் ஏற்றுக்கொள்வேன்” என்று சொன்ன எலிசா சோதனையைத் தாண்டினார்.
“உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்” என அன்பளிப்பை மறுத்த ஆபிரகாம் சோதனையைத் தாண்டினார்.
“நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?” என சொன்ன யோபு சோதனையைத் தாண்டினார்.
“திராட்சை ரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது” என்று முடிவெடுத்த தானியேல் சோதனையைத் தாண்டினார்.
சோதனைகள் என்பவை நிலையானவை அல்ல.
இறைமகன் தரும் மீட்பே நிலையானது.
அழகு, செல்வம், பெருமை, சுயநலம், பொறாமை என பல சோதனைகள் நம் வாழ்வில் வரலாம். சோதனைகள் நிலையற்றவை. நிலையற்ற சோதனைகள் வரும்போது நாம் நிலையான தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அப்போது சோதனைகளைத் தாண்டும் வலிமை கிடைக்கும்.
அருட்பணி,
வெலிங்டன் ஜேசுதாஸ்
நேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.
நேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.
கிறிஸ்தவத்தில் நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் எப்படி செலுத்தவேண்டும் என்பதை விவிலியம் இவ்வாறு விளக்குகிறது.
“வரவேண்டிய புனிதப் பொருட்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்”. (இணைச்சட்டம் 12:26-27) என விவிலியம் நேர்ச்சை பற்றி பேசுகிறது.
இறைவன் சொல்கின்ற பொருட்களை மட்டுமல்ல, இறைவன் சொல்கின்ற இடமும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பயணித்தார்கள். நாற்பது ஆண்டு பாலை நில பயணம் முடியப் போகிறது. எகிப்திலிருந்து காதேஸ் பர்னேயா வரை இரண்டு ஆண்டுகள், காதேஸ் பர்னேயா முதல் கானான் வரை முப்பத்தெட்டு ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். கி.மு. 1451-ல் அவர்கள் கானான் நாட்டில் நுழைகிறார்கள் என வரலாறு குறிப்பிடுகிறது.
இன்னும் எழுபது நாட்களில் கானான் நாட்டுக்குள் நுழையலாம் எனும் சூழலில் மோசே நாற்பது நாட்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
நாற்பது என்பது விவிலியத்தில் முக்கியமான ஒரு எண். நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் நீடித்தது.
மோசே, சீனாய் மலையில் கடவுளோடு இருந்து கட்டளைகளைப் பெற்றது, நாற்பது நாட்கள்.
வாக்களிக்கப்பட்ட நாடான கானானை ஒற்றர்கள் நோட்டம் விட்டது நாற்பது நாட்கள்.
இவையெல்லாம் ஒரு புதிய வாழ்க்கைக்கு முன் நிகழ்ந்த நாற்பதுகளின் சில உதாரணங்கள். இங்கும், புதிய நாடான கானானுக்குள் நுழையும் முன் நாற்பது நாட்கள் அறிவுரைகள் நிகழ்த்தப்படுகின்றன. (இணைச்சட்டம் 7:1-11) “நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்” என மோசே மக்களிடம் உரையாற்றினார்.
புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மீட்பின் காலத்தில் இது நமக்கு ஒரு புதிய சிந்தனையைத் தருகிறது. ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழையப் போகிற நாம், நமது பாவங்களை ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.
எப்போதெல்லாம் இறைவனை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நாம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் மீட்பு என்பது நாம் சம்பாதித்ததல்ல, நமக்கு பரிசாய் கிடைத்தது. நாம் உழைத்ததல்ல, நமக்கு இலவசமாய்க் கிடைத்தது. அதற்கான ஆயத்தத்தை நாம் செய்ய வேண்டும்.
காணிக்கை, பொருத்தனை, நேர்ச்சை என்பதெல்லாம் இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவின், அன்பின், உரிமையின் வெளிப்பாடுகள்.
கடவுளை மையமாக்கு
நேர்ச்சைகளெல்லாம் கடவுளை மையப்படுத்துபவனவாக இருக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்க உணர்த்துகின்ற ஒன்றாக அவை இருக்க வேண்டும். நமது அந்தஸ்தைச் சொல்லும் இடமாக அது இருக்கக் கூடாது.
பாவத்தை புலப்படுத்து
காணிக்கைகளெல்லாம் பாவத்தைப் புலப்படுத்துபவையாக இருக்க வேண்டும். என்னிடம் மிகுதியானவற்றைப் போடுவதல்ல காணிக்கை. என்னிடம் பாவம் மிகுதியாய் இருக்கிறதே எனும் உணர்வைத் தருவதற்காய் போடுவது. அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டேன், அதற்காக நேர்ச்சை செலுத்துகிறேன் என நேர்ச்சை செலுத்தவேண்டும்.
மீட்பின் முறையை வெளிப்படுத்து
மீட்பின் முறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நேர்ச்சை இருக்க வேண்டும். தங்களுக்காக இன்னொருவர் பலியானார், அவரே இறைமகன் இயேசு. அதனால் தான் விடுதலை கிடைத்தது எனும் உண்மையை உணர வேண்டும்.
சமூக ஐக்கியத்தை வெளிப்படுத்து
வெறுமனே நமக்கும் கடவுளுக்கும் இடையேயான ஒரு விஷயம் மட்டுமல்ல இந்த நேர்ச்சை. சகமனிதனோடு இருக்கின்ற ஒற்றுமையை, பிணைப்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். சகோதர உறவை சரிசெய்த பின்பே இறைவன் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.
பலி செய்கின்ற பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என பழைய ஏற்பாடு கூறுவது, புதிய ஏற்பாட்டில் இயேசுவை மறைமுகமாய்ச் சுட்டுகின்றன.
தாமதமின்றி எருசலேமுக்கு பலிப்பொருள் கொண்டு வரவேண்டும். தேவாலயத்தில் மட்டுமே பலியிடப்பட வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் வெளியே இருந்தாலும் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். பரிசுத்தமாய் இருக்க வேண்டும். ஊனமானவை மீட்கப்பட வேண்டும்... என்றெல்லாம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இறைமகன் இயேசுவின் பலியோடு நேரடியாக இணைகின்றன.
இன்று இறைவன் நம்மிடம் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறார்.
1. உங்கள் பண்டிகைகளில் நான் விருப்பமடைவதில்லை. பழைய பாவம் இடிக்கப்படட்டும், புதிய இருதயம் உருவாகட்டும். பலியல்ல, இதயமே வேண்டும்.
2. தான்தோன்றித் தனமாய் அல்ல, கடவுள் நாமம் விளங்கவே அனைத்தையும் செய்ய வேண்டும்.
3. பலியல்ல, பலியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அருட்பணி. வெலிங்டன் ஜேசுதாஸ்
கிறிஸ்தவத்தில் நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் எப்படி செலுத்தவேண்டும் என்பதை விவிலியம் இவ்வாறு விளக்குகிறது.
“வரவேண்டிய புனிதப் பொருட்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்”. (இணைச்சட்டம் 12:26-27) என விவிலியம் நேர்ச்சை பற்றி பேசுகிறது.
இறைவன் சொல்கின்ற பொருட்களை மட்டுமல்ல, இறைவன் சொல்கின்ற இடமும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பயணித்தார்கள். நாற்பது ஆண்டு பாலை நில பயணம் முடியப் போகிறது. எகிப்திலிருந்து காதேஸ் பர்னேயா வரை இரண்டு ஆண்டுகள், காதேஸ் பர்னேயா முதல் கானான் வரை முப்பத்தெட்டு ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். கி.மு. 1451-ல் அவர்கள் கானான் நாட்டில் நுழைகிறார்கள் என வரலாறு குறிப்பிடுகிறது.
இன்னும் எழுபது நாட்களில் கானான் நாட்டுக்குள் நுழையலாம் எனும் சூழலில் மோசே நாற்பது நாட்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
நாற்பது என்பது விவிலியத்தில் முக்கியமான ஒரு எண். நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் நீடித்தது.
மோசே, சீனாய் மலையில் கடவுளோடு இருந்து கட்டளைகளைப் பெற்றது, நாற்பது நாட்கள்.
வாக்களிக்கப்பட்ட நாடான கானானை ஒற்றர்கள் நோட்டம் விட்டது நாற்பது நாட்கள்.
இவையெல்லாம் ஒரு புதிய வாழ்க்கைக்கு முன் நிகழ்ந்த நாற்பதுகளின் சில உதாரணங்கள். இங்கும், புதிய நாடான கானானுக்குள் நுழையும் முன் நாற்பது நாட்கள் அறிவுரைகள் நிகழ்த்தப்படுகின்றன. (இணைச்சட்டம் 7:1-11) “நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்” என மோசே மக்களிடம் உரையாற்றினார்.
புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மீட்பின் காலத்தில் இது நமக்கு ஒரு புதிய சிந்தனையைத் தருகிறது. ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழையப் போகிற நாம், நமது பாவங்களை ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.
எப்போதெல்லாம் இறைவனை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நாம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் மீட்பு என்பது நாம் சம்பாதித்ததல்ல, நமக்கு பரிசாய் கிடைத்தது. நாம் உழைத்ததல்ல, நமக்கு இலவசமாய்க் கிடைத்தது. அதற்கான ஆயத்தத்தை நாம் செய்ய வேண்டும்.
காணிக்கை, பொருத்தனை, நேர்ச்சை என்பதெல்லாம் இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவின், அன்பின், உரிமையின் வெளிப்பாடுகள்.
கடவுளை மையமாக்கு
நேர்ச்சைகளெல்லாம் கடவுளை மையப்படுத்துபவனவாக இருக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்க உணர்த்துகின்ற ஒன்றாக அவை இருக்க வேண்டும். நமது அந்தஸ்தைச் சொல்லும் இடமாக அது இருக்கக் கூடாது.
பாவத்தை புலப்படுத்து
காணிக்கைகளெல்லாம் பாவத்தைப் புலப்படுத்துபவையாக இருக்க வேண்டும். என்னிடம் மிகுதியானவற்றைப் போடுவதல்ல காணிக்கை. என்னிடம் பாவம் மிகுதியாய் இருக்கிறதே எனும் உணர்வைத் தருவதற்காய் போடுவது. அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டேன், அதற்காக நேர்ச்சை செலுத்துகிறேன் என நேர்ச்சை செலுத்தவேண்டும்.
மீட்பின் முறையை வெளிப்படுத்து
மீட்பின் முறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நேர்ச்சை இருக்க வேண்டும். தங்களுக்காக இன்னொருவர் பலியானார், அவரே இறைமகன் இயேசு. அதனால் தான் விடுதலை கிடைத்தது எனும் உண்மையை உணர வேண்டும்.
சமூக ஐக்கியத்தை வெளிப்படுத்து
வெறுமனே நமக்கும் கடவுளுக்கும் இடையேயான ஒரு விஷயம் மட்டுமல்ல இந்த நேர்ச்சை. சகமனிதனோடு இருக்கின்ற ஒற்றுமையை, பிணைப்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். சகோதர உறவை சரிசெய்த பின்பே இறைவன் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.
பலி செய்கின்ற பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என பழைய ஏற்பாடு கூறுவது, புதிய ஏற்பாட்டில் இயேசுவை மறைமுகமாய்ச் சுட்டுகின்றன.
தாமதமின்றி எருசலேமுக்கு பலிப்பொருள் கொண்டு வரவேண்டும். தேவாலயத்தில் மட்டுமே பலியிடப்பட வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் வெளியே இருந்தாலும் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். பரிசுத்தமாய் இருக்க வேண்டும். ஊனமானவை மீட்கப்பட வேண்டும்... என்றெல்லாம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இறைமகன் இயேசுவின் பலியோடு நேரடியாக இணைகின்றன.
இன்று இறைவன் நம்மிடம் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறார்.
1. உங்கள் பண்டிகைகளில் நான் விருப்பமடைவதில்லை. பழைய பாவம் இடிக்கப்படட்டும், புதிய இருதயம் உருவாகட்டும். பலியல்ல, இதயமே வேண்டும்.
2. தான்தோன்றித் தனமாய் அல்ல, கடவுள் நாமம் விளங்கவே அனைத்தையும் செய்ய வேண்டும்.
3. பலியல்ல, பலியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அருட்பணி. வெலிங்டன் ஜேசுதாஸ்






