search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனியா? விராட் கோலியா? இன்ஸ்டாகிராமில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் யார் தெரியுமா?
    X

    டோனியா? விராட் கோலியா? இன்ஸ்டாகிராமில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் யார் தெரியுமா?

    • ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கோலி 11.45 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
    • டோனி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதில்லை இருந்தும் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் வீரர்கள் இப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ஒரு பதிவுக்கு பெரிய தொகையை பெற்று வருகின்றனர்.

    இந்தப் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கோலி 11.45 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி உள்ளார். இவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் 1.44 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதில்லை இருந்தும் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்.

    இவர்களை அடுத்து ரோகித் சர்மா 76 லட்சம், ரெய்னா 34 லட்சம், ஹர்திக் பாண்ட்யா 65 லட்சமும் சம்பாதிக்கின்றனர்.

    இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இவர் ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 26.75 கோடியை பெற்று வருகிறார். மற்றொரு புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி ஒரு பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 21 கோடியே 49 லட்சத்தை பெற்று வருகிறார்.

    உலக அளவில் இன்ஸ்டாகிராம் வலைதளம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் முதல் 20 இடங்களில் இடம்பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார்.

    Next Story
    ×