என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
டோனி அல்ல...கேப்டன்சியில் அவரது டெம்ப்ளேட்டைதான் ரோகித் சர்மா பின்பற்றுகிறார்- கவுதம் கம்பீர்
- என்னை கேட்டால் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தினார்.
- வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 - 0 (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி உருவாக்கிய அணியை வைத்து விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை பயன்படுத்தி தான் வெற்றிகரமாக செயல்படுவதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை உறுதியாக நம்புகிறேன். இருப்பினும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடைய கேப்டன்ஷிப் இடையே குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வித்தியாசமில்லை. ஏனெனில் விராட் கோலி தான் இந்த டெம்ப்ளேட்டை உருவாக்கினார்.
என்னை கேட்டால் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தினார். ரோகித் சர்மா அவருடைய டெம்ப்ளேட்டை மட்டுமே பின்பற்றி வருகிறார். அந்த வகையில் உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா தனது ஸ்டைலில் தனக்காக எந்த ஒரு புதிய டெம்ப்ளேட்டையும் உருவாக்கவில்லை. குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி எப்படி பயன்படுத்தினாரோ அதே நிலைமை தான் தற்போதும் நீடிக்கிறது.
எனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனால் அங்கே விராட் கோலி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய இந்த அணியை விராட் கோலி தான் உருவாக்கினார்.
என்று கவுதம் கம்பீர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்