search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் கோப்பையை வெல்வது எப்படி இருக்கும் என்பதை உணர வேண்டும்- விராட் நெகிழ்ச்சி
    X

    ஐபிஎல் கோப்பையை வெல்வது எப்படி இருக்கும் என்பதை உணர வேண்டும்- விராட் நெகிழ்ச்சி

    • பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆர்சிபி வெற்றி பெற்றதை பார்த்தோம்.
    • அந்த கோப்பையை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புகிறேன்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் மகுடம் சூடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் கவுரவிக்கப்பட்டனர். மந்தனா கோப்பையுடன் மைதானத்திற்குள் நுழைந்த போது இரு புறமும் பெங்களூரு அணி வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர்.

    இதில் ஆண்கள் ஆர்சிபி அணிகள் பங்கேற்று அவர்களை கவுரவித்தனர். பின்னர் வீராங்கனைகள் மைதானத்தில் கோப்பையுடன் உற்சாகமாக வலம் வந்தனர். அப்போது ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது.

    இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கூறியதாவது:-

    பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றதை பார்த்தோம். அந்த கோப்பையை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புகிறேன். அதை செய்தால் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஐ.பி.எல். கோப்பையை வென்று, அதை உணர்வுபூர்வமாக அனுபவிக்க வேண்டும் என்பது எனது கனவு.

    இங்குள்ள அந்த அணி (பெங்களூரு) முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. களத்தில் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன். மேலும் அவர் கிங் என்று கூற வேண்டாம். விராட் என்றே கூறுங்கள்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    Next Story
    ×