search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இனி அதிரடி சரவெடிதான்.. மும்பை அணியுடன் நாளை இணைகிறார் சூர்யகுமார் யாதவ்
    X

    இனி அதிரடி சரவெடிதான்.. மும்பை அணியுடன் நாளை இணைகிறார் சூர்யகுமார் யாதவ்

    • இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை.
    • அவர் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி:

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா முதல் இடத்திலும் ராஜஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளது. அதேபோல் கடைசி 2 இடங்களில் ஆர்சிபி, மும்பை அணிகள் உள்ளன.

    இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை. அவர் 3-வது போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் உடல் நலம் சரியாகவில்லை என என்சிஏ நிராகரித்தது.

    இந்நிலையில் நேற்று அவர் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சூர்யகுமார் நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையவுள்ளார்.

    வரும் 7-ந் தேதி டெல்லி அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Next Story
    ×