search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ராஜ்கோட் டெஸ்ட்: சொந்த மாநிலத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜடேஜா
    X

    ராஜ்கோட் டெஸ்ட்: சொந்த மாநிலத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜடேஜா

    • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.
    • 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. அதில், 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில், 112 ரங்களும், 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜடேஜா, 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று ஜடேஜா அசத்தியுள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    இந்த வெற்றியை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    Next Story
    ×