search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்: மிரண்ட ரோகித்- வைரலாகும் வீடியோ
    X

    மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்: மிரண்ட ரோகித்- வைரலாகும் வீடியோ

    • இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது.
    • மும்பை அணி பீல்டிங் செய்த போது மைதானத்துக்குள் ரசிகர் ஒருவர் நுழைந்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 125 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் தரப்பில் டிரெண்ட் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த போது ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து ரோகித் சர்மாவை நோக்கி சென்றார். அப்போது பீல்டிங் சரி செய்து கொண்டிருந்த ரோகித் இதனை சற்றும் எதிர்பாராதால் திடுக்கிட்டார்.

    அதன்பிறகு ரோகித் சர்மாவை கட்டியணைத்து ரசிகர் தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் கீப்பர் நின்ற இஷான் கிஷனை கட்டியணைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரோகித் சர்மா பயந்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×