என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
மும்பைக்கு கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்- ரசிகர்கள் மகிழ்ச்சி
- மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது.
- மும்பை அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் உள்ளது.
மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொடரில் மும்பை அணிக்கு பேட்டிங் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் மும்பை அணி தடுமாறி வருகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காத மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டகாரர் சூர்யகுமார் யாதவ் அடுத்த போட்டியில் இருந்து களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் தேர்ச்சி பெறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல் தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது. இதனால் அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்