search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பைக்கு கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்- ரசிகர்கள் மகிழ்ச்சி
    X

    மும்பைக்கு கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்- ரசிகர்கள் மகிழ்ச்சி

    • மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது.
    • மும்பை அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் உள்ளது.

    மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடரில் மும்பை அணிக்கு பேட்டிங் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் மும்பை அணி தடுமாறி வருகிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காத மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டகாரர் சூர்யகுமார் யாதவ் அடுத்த போட்டியில் இருந்து களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் தேர்ச்சி பெறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல் தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது. இதனால் அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×