search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கேப்டன்சியில் யார் இடத்தையும் பூர்த்தி செய்ய விரும்பவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்
    X

    கேப்டன்சியில் யார் இடத்தையும் பூர்த்தி செய்ய விரும்பவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்

    • டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.
    • சென்னை கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி கேப்டனாக எம்.எஸ். டோனி விலகிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் சென்னை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், சென்னை அணி கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் டாஸ் சமயத்தில் தனது புதிய பொறுப்பு குறித்து ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ருதுராஜ் கெய்க்வாட், "பெருமையாக உணர்கிறேன். யாருடைய இடத்தையும் பூர்த்தி செய்ய விரும்பவில்லை."

    "கேப்டன் மாறப்போவது பற்றி கடந்த வாரம் எனக்கு தெரியும், ஆனால் எம்.எஸ். டோனி கடந்த ஆண்டே இதை சூசகமாக தெரிவித்தார். இங்கு அனைவரும் அனுபவம் மிக்கவர்கள், வருத்தம் அளிக்கும் வகையில், கான்வே மற்றும் பதிரானா அணியில் இல்லை," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×