search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மும்பையிலும் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு: ரசிகர்களை கண்டித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்- வைரலாகும் வீடியோ
    X

    மும்பையிலும் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு: ரசிகர்களை கண்டித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்- வைரலாகும் வீடியோ

    • இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது.
    • சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    மும்பை:

    மும்பை அணி 6-வது ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பாக பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது.

    அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்தது. இதற்கு மும்பை அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மும்பை அணி விளையாடிய முதல் போட்டியில் சொந்த மண்ணான அகமதாபாத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நிலையில், ஐதராபாத் மண்ணிலும் ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனால் சொந்த மண்ணில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது.

    இதனால் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினால், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது ஹர்திக் பாண்டியா களமிறங்கும் போதே ரோகித் சர்மா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வர்ணனையாளராக செயல்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரசிகர்களை ஓழுங்காக நடந்து கொள்ளுங்கள் என கண்டித்தார்.

    முதல் முறையாக சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கேகேஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×