search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல்.-ல் கூட விளையாட முடியாது- இஷான் கிஷனை எச்சரிக்கும் பி.சி.சி.ஐ.
    X

    ஐ.பி.எல்.-ல் கூட விளையாட முடியாது- இஷான் கிஷனை எச்சரிக்கும் பி.சி.சி.ஐ.

    • தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
    • பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே இஷான் கிஷனுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக டிராவிட் தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பொய் சொல்லிவிட்டு நன்னடத்தையின்றி நடந்து கொண்ட காரணத்தாலேயே இஷான் கிஷன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

    பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக டிராவிட் தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் முழு உடற்தகுதியை பெற்ற நிலையிலும் ரஞ்சி கோப்பை தொடரை இளம் வீரர்கள் புறம்தள்ளுகிறார்கள். இதனால் இந்திய அணியில் உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் ரஞ்சி கோப்பை விளையாடுவதை கட்டாயமாக்க பிசிசிஐ பரிசீலனை செய்து வருதவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×