search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.ரகுமான், சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இணைந்த மணிரத்னம்
    X

    ஏ.ஆர்.ரகுமான், சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இணைந்த மணிரத்னம்

    • ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
    • 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.


    இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

    Next Story
    ×