என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஊரடங்கு நிறைவுற்றதும் இது நடக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நம்பிக்கை
Byமாலை மலர்4 May 2020 11:24 AM GMT (Updated: 4 May 2020 11:24 AM GMT)
ஊரடங்கு நிறைவுற்றதும் இது நடக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் நாட்டில் ஊரடங்கு நிறைவுற்றதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று சரியான பின் உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் வாகன உள்கட்டமைப்பு வசதிகள் பலமடங்கு அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2021 ஆம் ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்பு சந்தை 41 லட்சம் யூனிட்களாக அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இது வருடாந்திர அடிப்படையில் 22.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் காற்று மாசு 60 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. இது போன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X