டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2023-08-19 17:05 GMT   |   Update On 2023-08-19 17:05 GMT
  • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி போட்டிகள் நடந்தன.
  • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ், ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் மெக்ஸ் பர்செலுடன் மோதினார்.

இதில் அல்காரஸ் முதல் செட்டை 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், உலகின் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-0 6-4 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், ஸ்வெரேவ், ஹர்காக்ஸ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Tags:    

Similar News