டென்னிஸ்

துபாய் சாம்பியன்ஷிப்: ரூப்லெவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பப்ளிக்

Published On 2024-03-01 16:06 GMT   |   Update On 2024-03-01 16:06 GMT
  • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
  • இன்று நடந்த அரையிறுதியில் ரஷியாவின் ரூப்லெவ் தோலவி அடைந்தார்.

துபாய்:

துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ரூப்லெவ் 7-6 (7-4) என வென்றார். 2வது செட்டை அலெக்சாண்டர் பப்ளிக் 7-6 (7-5) என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பப்ளிக் 6-5 என இருந்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இறுதியில், பப்ளிக் 6-7 (4-7), 7-6 (7-5), 6-5 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பப்ளிக் மெத்வதேவ் அல்லது யூகோ ஹம்பர்ட்டை சந்திக்க உள்ளார்.

Tags:    

Similar News